Jul 31, 2012

மருத்துவ டிப்ஸ்!


தொண்டைக் கட்டிக் கொண்டு குரலே எழாமல் சிரமப்படுபவர்கள், கற்பூரவல்லி இலையை பிழிந்து சாறெடுத்து, பனங்கற்கண்டு கலந்து பருகவும். தொண்டைக் கமறல் இருக்காது. எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரை சேர்த்து உட்கொண்டால், நீர்க்கடுப்பு நோய் நீங்கும். கொண்டைக்கடலையை தினமும், 50 கிராம் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு குறையும். கசகசாவை அரைத்து, பால், பனங்கற்கண்டுடன் சேர்த்து குடிக்க உடல் வலிமை பெறும். தேன், சர்க்கரை, மிளகுத்தூள் மூன்றையும் கலந்து குடித்து வர வாயு தொல்லை நீங்கும்.

இளம் பெண்களின் உடல் பருமனை...ஹெல்த் ஸ்பெஷல்,


நீர்ச்சுருக்கு லிவிலக....இய‌ற்கை வைத்தியம்,

விஷக்கடி... விரட்டி அடி! -


விஷக்கடி... விரட்டி அடி




விமானத்தில் ஒருவரை தேள் கொட்டியதால், அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்ட செய்தியை சமீபத்தில் படித்திருப்பீர்கள். பூரான், குளவி, தேனீ, தேள் போன்றவற்றால் கொட்டுப்படாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. குறிப்பாக நாட்டு ஓடு வேய்ந்த கூரைகள் உள்ள கிராமத்து வீடுகளில் இந்த ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். தேள்களின் குடியிருப்பே ஓடுகளுக்கு இடையில் உள்ள இடைவெளிகள்தான். அதேபோல் ஈரமும் - இருட்டும் இருக்கும் குளியல் அறைகள் என்றால் பூரான்களுக்குக்

இளநரை - ஏன்?--இய‌ற்கை வைத்தியம்,

The official Google Code blog: Image results now available from the Custom Search...

The official Google Code blog: Image results now available from the Custom Search...: By Nam Nguyen, Software Engineer Last year we added image results to Google Custom Search Engines to enable sites to offer image-only re...

The official Google Code blog: See you at the Game Developers Conference

The official Google Code blog: See you at the Game Developers Conference: By Amy Walgenbach, Developer Marketing Team We’re returning to the Game Developers Conference (GDC) in San Francisco this year with 2 De...

The official Google Code blog: Image results now available from the Custom Search...

The official Google Code blog: Image results now available from the Custom Search...: By Nam Nguyen, Software Engineer Last year we added image results to Google Custom Search Engines to enable sites to offer image-only re...

Jul 30, 2012

நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!!




உடலில் காணப்படும் நகங்களை அழகுப்படுத்த மட்டும் தான் இருக்கின்றன என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இது மிகவும் முக்கியமான உறுப்பு. சிலர் நகங்களில் அதிகமாக அடிக்கடி அழுக்குகள் நுழைந்து நகங்களின் அழகைக் கெடுக்கிறது என்று வண்ணம் தீட்டுகின்றனர். மேலும் சிலரின் நகங்கள் நன்றாக பொலிவோடு இருக்கும், திடீரென்று நகங்களின் பழைய அழகு மாறி, நிறம் மாறி காணப்படும். இவ்வாறு ஏற்பட்டால் உடலில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஏனெனில் நாம் இந்த நகங்களை வைத்து உடலில் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்ள முடியும்.
நகத்தின் அமைப்பு, நிறம் வைத்து மருத்துவர்கள் உடலில் உள்ள பிரச்சனைகளை எளிதில் கண்டறிவார்கள். அகத்தின் அழகு முகத்தில்


தேங்காயில் உள்ள "பேட்டி ஆசிட் " (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.உடல் எடையைக் குறைகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

"தேங்காயில்,தேங்காய் எண்ணையில் கொழுப்புச் சத்து அதிகம்.அது உடலுக்கு ஆகாது.குறிப்பாக சர்க்கரை நோயாளிகள்,இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக் கூடாது" என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

"பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று தென்னையையும்,அதன் முத்தான தேங்காயையும்

இதயத் துடிப்பு உயிருக்கு முக்கியம்

இதயத் துடிப்பு உயிருக்கு முக்கியம். இதயம் நன்றாக வேலை செய்ய வேண்டுமானால், இதயத் தசைகள் நன்றாக வேலை செய்வது அவசியம். வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இதய நோய் பிரச்னை பல பெயோருக்கு உள்ளது.

வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இன்றைய இளைஞர்களும் இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகத் தொடங்கியுள்ளனர். பெயவர்களுக்கு ரத்தக் குழாயின் குறுக்கு விட்ட அளவு குறையத் தொடங்கி, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடுகிறது.

இந்த இடத்தில்தான் இதய நோயாளிகளுக்கு கொழுப்புச் சத்து குறைவான உணவு முக்கியத்துவம் பெறுகிறது. சர்க்கரை நோயாளிகளும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

குளிர் பானங்கள், சர்க்கரை உள்ளிட்ட இனிப்பு வகைகள், கொழுப்புச் சத்து நிறைந்த சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து சாப்பிடும் நிலையில் கார்போஹைட்ரேட் சத்து அதிகமாகி, கொழுப்புச் சத்தாக உருமாறும்.
இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகச் சேரும் கொழுப்புச் சத்து ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்த ஆரம்பிக்கும். இவ்வாறு ரத்தக் குழாய்களில் அடைப்பு --அதைத் தடுப்புதற்கு உணவு முறை முக்கியப்

பெண்களுக்கு இதயப் பிரச்சனை எப்போது வரும்


இதயத்தின் வடிவமைப்பு ஆண், பெண் இரு பாலருக்கும் ஒன்று என்றாலும், ஆண்களைவிட பெண்களின் இதயம் சிறியது.
 பெண்ணின் இதயத்தின் எடை 224 கிராம், ஆணின் இதயத்தின் எடை 280 கிராம் ஆகும். மேலும் இதயத் துடிப்புத் திறன் பெண்களுக்கு 10 சதவீதம் அதிகமாகவும், உடற்பயிற்சியின்போது ஆக்ஸிஜன் பயன்படுத்தும் திறன் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு 15 முதல் 20 சதவீதம் குறைவாகவும் உள்ளது.
மாதவிடாய் நின்றவுடன்...:   பொதுவாக பெண்களைவிட ஆண்கள் 10 ஆண்டு முன்னதாகவே இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் நிலை வரும்போது இதயநோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
  மாதவிடாய் நிற்கும்போது பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்ற

Jul 29, 2012

என்றென்றும் இளமையாக இருக்க


என்றென்றும் இளமையாக இருக்க சில டிப்ஸ்!பொதுவாக அனைவருக்குமே தாம் எப்பொழுதும் இளமையோடும், அழகாகவும் இருக்கவேண்டும் என்ற ஆசையிருக்கும். குறிப்பாக பெண்களுக்கு இது ஒரு கனவாகவே இருக்கும். சரி இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்? ரொம்ப ஈஸி!
தினமும் காலை 5 மணிக்கு எழுந்து பழகுங்கள். எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். பின்பு அரை மணி நேரம் யோகாசனம் செய்யுங்கள். மிகவும் எளிதான உங்களுக்குத் தெரிந்த யோகாசனம் செய்தால் போதும். காலை 8 மணிக்குள் ஆவியில் வேகவைத்த உணவை சாப்பிடுங்கள்.
பின்பு 11 மணிக்கு ஏதாவது ஒருவகை கீரை சூப் சாப்பிடுங்கள். மதியம் 12 முதல் ஒரு மணிக்குள் மதிய உணவு சாப்பிடுங்கள். கொஞ்சம் சாதம், நிறைய

Jul 28, 2012

2012 மே இல் தான் உலக வரலாற்றில் அதி கூடிய வெப்பநிலை பதிவுசெய்யப்பட்டுள்ளது


இந்த வருடத்தின் மே மாதம் தான் உலக வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவாகிய மாதமாக கணிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் இந்த மே மாதம் தான் அதிக சூடாக இருந்ததாம்.
1880 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக வெப்பம் இந்த வருட மே யில் தான் பதிவாகியுள்ளது.இதனை அமெரிக்காவின் (NCDC) தேசிய காலநிலை தரவு மையம் (National Climatic Data Centre) உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலும் இதற்கு ஒரு காரணம் எனத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் தேசிய காலநிலை தரவு மையம் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை, விவசாயம் போன்றன கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக

நலம் தரும் ஜாதிக்காய்---இய‌ற்கை வைத்தியம்


முகத்தை அழகாக்கும்:

ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.


அம்மை கொப்புளங்கள் சரியாகும்:


அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி

தேள் கடி விஷம் நீங்க அரும் மருந்து



1) தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்க வில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.

2) எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேலின் விஷம் இறங்கும்.

3) நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.

21 இயற்கை மருத்துவக் குறிப்புகள்


21 இயற்கை மருத்துவக் குறிப்புகள்

வணக்கம் நண்பர்களே..! மனிதர்கள் சந்திக்கும் நோய்கள் பல. அவற்றை தீர்க்க எத்தனையோ வித மருத்துவ முறைகளை கையாள்கிறோம். சில நோய்கள் விரைவில் குணமடையும். சில நோய்கள் குணமடைய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். ஒரு சில நோய்கள் தீர்க்கப்படாமலேயே இருக்கும். இதைத் தீராத வியாதிகள் என்பர். நமது முன்னோர்கள் வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் எளிதாக கிடைக்கக்கூடிய இயற்கை மூலிகைகளிலிருந்து உடலில் ஏற்படும் நோய்களுக்கு தீர்வு கண்டுள்ளனர். அவற்றில் 21 வகையான மருத்துவமுறைகளை இங்கு பதிந்துள்ளேன். படித்துப் பயன்பெறுங்கள். நன்றி..!

அருகம் புல் சாறின் அருமை:
ஆபத்துக்கு உதவுவது அருகம்புல். திடீர் வண்டுக்கடி, அலர்ஜி(Allergy) என்ற

நீரிழிவுக்கு கறிவேப்பிலை!!! சிறந்த மருந்து


நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்.

உடல் சிலிம் ஆக வேண்டுமா


உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இஞ்சி பிரியர் ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு இல்லை.இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறுசுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடல் இளமை பெறும்.

வழுக்கை தலயில் முடிவளர சித்தவைத்திய முறை.---அழகு குறிப்புகள்.,


வழுக்கை தலையில் முடிவளர:சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் நரை போக்க:1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே

Jul 27, 2012

தொண்டைக்கட்டு, எரிச்சல்



நம் முன்னோர்கள் சளி, ஜுரம், தலைவலி போன்றவை தம்மை அணுகாமல் ஆரோக்கியமாக உடலையும், மனதையும் காக்கும் வழி முறைகளை அறிந்திருந்தனர். உடலுழைப்பின் சிறப்பை செவ்வனே அறிந்திருந்த அவர்கள் நவீன உலகில் நாம் சந்திக்கும் அனேக பிரச்சினைகளையும் , இன்னல்களையும் அறிந்திருக்கவில்லை. சமையலறையில் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களுடன், கடைகளில் எளிதாகக் கிடைக்கும் ஆயுர்வேத மூலிகைகளையும் உணவில் சேர்த்துக்கொண்டு மருத்துவரிடம் செல்வதை கூடுமானவரையில் தவிர்த்து வந்தனர். அவற்றில் அடுத்து வரும் தலைமுறையினருக்குப் பயன்படும் என்று நினைத்து சில குறிப்புகளை எழுதுகிறேன்.

கண்டந்திப்பிலி பொடிகண்டந்திப்பிலி எனப்படும் இக்குச்சிகள் ' தாசவரம்

ஆயுளை அதிகரிக்கும் ஆலிவ்


சின்ன சின்ன உணவுப் பொருட்கள் மூலம் நாம் சிறப்பான பலன்களை பெறமுடியும். நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மகத்துவத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.
* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

* சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும்.
* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக்

பித்தத்திலிருந்து விடுதலை பெற

பித்தத்திலிருந்து விடுதலை பெற


விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்கிக்கெண்டே இருக்குமா இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்பேம்...
* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

Jul 25, 2012

ஆயுள் அதிகரிக்க வேண்டுமா?--உபயோகமான தகவல்கள்


தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, “டிவி’ பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும். மாறாக, தினமும், 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், அவரது ஆயுள், மூன்று ஆண்டுகள் கூடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது, “டிவி!’
“டிவி’ நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பது, தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகள் மூலம் புரிந்து கொள்ள இயலும்.
ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற குயின்ஸ்லேண்ட் பல்கலைக் கழகத்தில் மக்கள் தொகை நலன் குறித்தான பள்ளி ஆய்வு மாணவர்கள், 2000ம் ஆண்டு, 11 ஆயிரம் பேரிடம், “டிவி’ பார்ப்பது குறித்த ஆய்வு நடத்தினர். இவர்கள் அனைவரும், 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த ஆய்வின்

நரை முடியை த‌வி‌ர்‌க்க…மருத்துவ டிப்ஸ்


நரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் சேர்‌த்துக் கொண்டால் போதும்.
தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது.
தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து இரண்டு வேளை குடித்து வந்தால் முகம் வட்ட நிலவாக மின்னும்.
ஆர‌ஞ்சு பழசாறை ‌ஃ‌பீ‌ரிஸ‌ரி‌ல் வை‌த்து அதனை வெ‌ள்ளை‌த் து‌ணி‌யி‌ல் க‌ட்டி க‌ண்ணு‌க்கு மே‌ல் வை‌‌த்த‌ல் ந‌ல்லது.
தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌யை சூடு செ‌ய்து அ‌தி‌ல் ‌ஓம‌த்தை‌ப் போ‌‌ட்டு அதனை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு தீரும்.
துவரம் பருப்பு, மருதாணி இலை ஆகியவற்றை தயிரில் ஊறவைத்து அரைத்து பாதத்தில் பூசினா‌ல் ‌பி‌த்த வெடி‌ப்பு குறையு‌ம்.
குளிர் காலத்தில் பாதங்களில் சீரக எண்ணெயை கொதிக்க வைத்து தடவி

வெற்றிக்கு ஒரு புத்தகம் – சந்தோஷ வழி…உபயோகமான தகவல்கள்!


வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “தி வே டு ஹேப்பினெஸ்’ இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
“தி வே டு ஹேப்பினஸ்’ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். “இவற்றை உணர்ந்து பின்பற்றத்

தீப்பற்றிக் கொண்டால்…உபயோகமான தகவல்கள்!



ல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்கள் உடமை, உயிர், உறவினர்கள் யாவரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்….
* நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள்.
* எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.
* விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால்

பிரண்டையின் மருத்துவ குணங்கள்.2--மருத்துவ டிப்ஸ்


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பிரண்டையின் மருத்துவ குணங்கள்!

பிரண்டை என்ற மூலிகையைப் பற்றியும் அதன் சிறந்த மருத்துவ குணங்களைப் பற்றியும், பிரண்டை உப்பு என்ற அதன் ஆண் - Bi - product பற்றியும் அதை எப்படித் தயாரிப்பது, சாப்பிட வேண்டிய அளவு ஆகியவற்றைக் கூறவும். நீரிழிவு, உடல் வலி,   H-Pylori போன்றவை பிரண்டையின் உபயோகத்தால் சரியாகிவிடும் என்று பலரும் சொல்கிறார்கள். இது சரியா?  

. கொடி இனத்தைச் சேர்ந்தது பிரண்டை. இதில் கணு நிறைய இருக்கும். சுவையில் இனிப்பும் கார்ப்புமுள்ளது. வீரியத்தில் சூடானது. ஜீரணத்தின் இறுதியில் புளிப்பாக மாறக் கூடியது. கப - வாத தோஷங்களைக் குறைக்கக்

பிர‌ண்டை தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் -3 ---இய‌ற்கை வைத்தியம்


பிரண்டை


பிரண்டை. 17


1) வேறுபெயர்கள் -: வச்சிரவல்லி.

2) தாவரப்பெயர் -: VITIS QUADRANGULARIS.

3) தாவரக்குடும்பம் - :VITACEAE.

4) வகைகள் -:முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, மூங்கில்பிரண்டை அல்லது கோப்பிரண்டை, உருண்டைப்பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை, தீப்பிரண்டை.

5) வளரும் தன்மை -: பொதுவாக இது வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக்

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் சின்ன சின்ன உணவு மருத்துவம்--உணவே மருந்து


நீரிழிவு நோயை எளிதில் கட்டுப்படுத்த அறுபது கிராம் கொத்து மல்லிக் கீரையைக் காலையில் சாறாக மாற்றி வெறும் வயிற்றில் அருந்தி வரவும். முப்பது நாட்கள் இதைப் பின்பற்றினால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இந்தச் சாறை அருந்தியதும் அடுத்த அரைமணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. இரத்த அழுத்த நோயாளிகள் எனில் இந்தச் சாறில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தி வரவும். இதனால் இவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
சோரியாசிஸ் குணமாகும்!

சோரியாசிஸ் என்னும் கடுமையான தோல் வியாதி மற்றும் மஞ்சள்காமாலை நோயாளிகள் குணமாக 15 மிளகைப் பொடியாக்கி, இரண்டு தேக்கரண்டி கற்கண்டு சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். பத்து நாட்கள் இதே முறையில் அருந்திப் பிறகு அடுத்த

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்---உணவே மருந்து,

நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

இன்று உடல் நலனுக்கு நலம் பயக்கும் எண்ணெயாக கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய் முதலிய எண்ணெய் வகைகள் பயன்படுகின்றன. இப்போதெல்லாம் இதய நோய் அதிகரித்து வருவதால், எண்ணெயைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. இந்த மூன்றிலும் சிறந்தது நல்லெண்ணெய்யே. அடுத்து சஃபோலா, மூன்றாவதாக சூரியகாந்தி.
சூரியகாந்தியில் 65%ம், நல்லெண்ணெயில் 85%ம் நன்மை தரும் அமிலங்கள் உள்ளன. இன்றும்

காரட் சாதம்--சமையல் குறிப்புகள்,



காரட் சாதம்தேவையானவை
பச்சரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பெரிய சைஸ் காரட் - 3
தனியா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை
 
* அரிசியை வேக வைத்து சாதத்தை உதிரியாக ஆற வைக்கவும்.
 
* வாணலியில் எண்ணைய் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம் பொடியாக நறுக்கியது போட்டு வதக்கவும் காரட்டை துருவி அதையும் சேர்த்து வதக்கவும்.
 
* பச்சை வாசனை போகும்வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும். சிறிதுஎண்ணையில் தனியா, சீரகம், வரமிளகாய், தேங்காய் துருவலை வறுத்து பொடியாக்கவும்.
 
* ஆறிய சாதத்துடன் வதக்கிய காரட் மசாலா பொடி உப்பு சேர்த்து அனலில் சில நிமிடங்கள் வைத்து சூடாகப் பரிமாறவும். வெங்காய தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

வீட்டுக்குறிப்புக்கள்!



பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.


வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து

வினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்---உபயோகமான தகவல்கள்



வினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்

உங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை
வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்துமே பளிச் பளிச் என்றுதான் இருக்கும். 
பித்தளைச் சாமான்கள் பளிச்சிட சிறிது வினிகரை உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீருடன் கலந்து அந்தப்பொருட்களின் மேல் அழுத்தித் தேய்க்கவும், ஆனால் எந்தப் பொருளை சுத்தப்படுத்த வினிகரைப் போட்டாலும் அதிக நேரம் ஊறவைக்காது உடனே கழுவி விடுங்கள்.

குளியலறையில் உள்ள மார்பிள் தரையை சுத்தமாக்க ஒரு கப் வினிகரை

புதினா சட்னி & துவையல்--சமையல் குறிப்புகள்,




தேவையானவை:
புதினா - 1  கட்டு 

வெங்காயம் - 2 

புண்டு -2 பல் 

கடுகு,உளுந்து - தேவையானவை

எண்ணெய் - வதக்க தேவையானவை 

உப்பு - தேவையானவை 

பச்சைமிளகாய் - 4 

தேங்காய் துருவல் - 1  கப் 



செய்முறை:

புதினா இலைகளை  தனியாக பிரித்து பின் நன்கு கழுவி வைக்கவும். 

பானில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து போட்டு சிவந்ததும் பூண்டு , இஞ்சி விழுது ,பச்சைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி அதனுடன்

உடல் பலம் பெற--உணவே மருந்து


உடல் மெலிந்து காணப்படுவோர் குண்டாக வேண்டுமானால், வேப்பம்பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து காலையில் பருகி வந்தால் சிறுகச்சிறுக உடல் மெலிவு நீங்கி உடல் குண்டாகத் தொடங்கும்.
பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. எந்த காரணத்தினால் உடல் இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும். போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.
முருங்கை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால்கள் உடல் அசதிகள் நீங்கும். உடலில் பலமும் ஏறும். உடலைத் தேற்றும் நல்ல உணவாகும்.
அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து, சிறிது தண்ணீர் சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து, காலை மாலை என நீண்ட நாட்கள் சாப்பிட்டு வர உடலில் பலம் ஏறும்.
வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரி சிறங்கை அகற்றும் மேலும் அஜீரணத்தை போக்கும்.
வேப்பம்பூ, நிலவேம்பு ஒரு அவின்ஸ் எடுத்து இரண்டையும் நன்றாக நசுக்கி அதில் 1 டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைத்து விட்டு, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வடிகட்டி வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர பலஹீனங்களும் காய்ச்சலுக்கு பின் உண்டாகும் பலஹீனங்களும்

யோகாசனத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் யோகா செய்வதற்கு வயதில்லை


யோகாசனத்தின் கட்டுப்பாடுகள் 
• சாப்பிட்டு குறைந்தது 4 மணி நேரம் சென்ற பிறகும். காபி, டீ, குடித்தால் 1 மணி நேரம் கழிந்த பின்பும் ஆசனங்கள் செய்யலாம்.

• இரவில் நீண்ட நேரம் விழித்திருத்தல், நீண்ட தூரம் பயணம் செய்த நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள் மற்றும் உடல் சோர்வு, தலைவலி, இருக்கும் போதும் ஆசனங்கள் செய்யாது சாந்தி ஆசனம் மட்டும் செய்யலாம்.

• யோகப் பயிற்சி செய்பவர்கள் உருளைக் கிழங்கு மசாலா உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

• வெறும் தரையில் யோகா பயிற்சி செய்யக் கூடாது . பாய் (அ) விரிப்பு

பொடுதலை---மூலிகைகள் கீரைகள்


             கிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.
இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் வரப்புகளில் இந்த கீரைகள் அதிகம் காணப்படும். பெரும்பாலானோர் இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது தென்னிந்தியா முழுவதும் அதிகம் காணப்படுகிறது.

இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.

ஒற்றைத் தலைவலி நீங்க

தலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில்

Jul 24, 2012

டென்மார்க்கில் தலை நிமிர்ந்த தமிழன்.



டென்மார்க்கில் வாழும் 11.000 தமிழர்களும் பெருமைப்படக்கூடிய செய்தி இன்றைய கிறிஸ்லி டவ்பிலத பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
டென்மார்க்கில் வாழும் சிறுபான்மை இனங்களில் முத்திரை பதித்த வெற்றி வாழ்வு வாழும் இனமாக ஈழத் தமிழர்கள் தேர்வாகியுள்ளனர்.
எத்தனையோ இனங்கள் எல்லாம் டென்மார்க்கில் வாழ்ந்தும் சுமார் 25 வருடங்களில் அனைவரையும் வென்று இவர்கள் டேனிஸ்காரருக்கு இணையான இனமாக முன்னேறியது எப்படி ?
முதலாவது வேலை செய்யும் பண்பு..
டென்மார்க்கில் பொருளாதார நெருக்கடி நிலவினாலும் பெருந்தொகையான தமிழர்கள் வேலைச் சந்தையில் இன்றும் இருக்கிறார்கள்.
அவர்களை வேலைத்தலத்தில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்று தொழில் வழங்குவோர் கருதுமளவுக்கு கடும் உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்.
நாடு முழுவதும் தமிழர்கள் பரந்து வாழ்ந்தாலும் பெரும்பாலான தமிழர்கள் யூலன்ட் பகுதியில் வாழ்கிறார்கள் என்றும் அது எழுதியுள்ளது.
மேலும் தமிழ் இளையோரின் உயர் கல்வி முயற்சிகளும் தமிழர்களை சிறந்ததோர் இனமாக மாற்றியிருக்கிறது.
18 – 24 வயதுக்குட்பட்ட தமிழரில் 56 வீதமான இளைஞர்கள் மேற்படிப்பு படிப்பதற்கு சென்றுள்ளார்கள், கல்வி மீது இவர்கள் கொண்ட நாட்டம் இதே வயதுள்ள டேனிஸ் இளைஞர்களுக்கே பெரும் சவாலாக இருக்கிறது.
மேலும் பொருளாதார ரீதியாகவும் சொந்த வீடுகள், வாகனங்களை வைத்து சிறந்த வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் டேனிஸ்காரருக்கு அடுத்தபடியாக சிறந்த இனமாக வந்த தமிழர்கள் இப்போது மேலும் ஒரு படி உயர்வைக் கண்டுள்ளார்கள்.
புதிய டேனிஸ்காரர் அமைப்பின் தலைவர் ரோபன் மூலர் கூறும்போது வேலை செய்வது, சொந்தக்காலில் நிற்பது, ஜனநாயக முறையை புரிந்து அதன்படி வாழ்வது, கல்வியில் நாட்டம் கொள்வது இவைகள்
Regions with significant populations
Canada ~300,000 (2011)
United Kingdom ~165,000 (2011)
India ~90,000 (2011)
France ~86,000 (2011)
Germany ~84,000 (2011)
Switzerland ~70,000 (2012)
Malaysia ~45,000 (2011)
Netherlands ~21,000 (2011)
Norway ~14,000 (2011)
Denmark ~11,000 (2011)
ஓரினத்திடம் சரியாக அமைந்தால் அந்த இனம் இணைவாக்கமடைந்துவிட்ட இனமாகும் என்று குறிப்பிட்டார்.
ஆகவே வெளிநாட்டவரை இணைவாக்கம் அடையச் செய்ய வேண்டும் என்ற பிரச்சாரங்களில் தமிழரை இணைக்க வேண்டிய தேவையில்லை அவர்கள் இணைவாக்கமடைந்துவிட்டார்கள் என்பது கருத்தாகும்.
தமிழர்கள் மட்டுமே டென்மார்க்கில் குடியேறி 25 வருடங்களாகிவிட்டது என்று வெள்ளிவிழா கொண்டாடிய ஒரேயொரு உலக இனமாகும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த செய்தி டென்மார்க் தொலைக்காட்சி சேவை ஒன்றின் ரெக்ஸ் ரீ.வி 161ம் இலக்கத்திலும் வெளியாகி முழு டென்மார்க்கிற்கும் சென்றடைந்துள்ளது.
ஆனால் தமிழர்கள் தரப்பில் சிந்திக்க வேண்டிய விடயங்களும் உள்ளமை கவனிக்கத்தக்கது.
56 வீதமான இளையோர் உயர் கல்விக்கு சென்றால் மிகுதி 44 வீதமானவர்களுக்கு என்ன நடந்தது என்பது முக்கிய கேள்வியாகும்.
ஆகவே வரும் பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 75 வீதமாக உயர்த்த பாடுபட வேண்டிய சமுதாயக் கடமை இருக்கிறது.
ஜனநாயகப் புரிதல் தமிழரிடையே எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதும் ஆய்வுக்குரிய விடயமாக உள்ளது.
ஆனால் அடுத்த தலைமுறைத் தமிழர் இதை மேலும் சிறப்பாக கொண்டு செல்வர் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
டென்மார்க்கில் தமிழர் பெற்றுள்ள வெற்றி புலம் பெயர்ந்த அத்தனை நாடுகளுக்கும் பெருமை தருவதாகும், டென்மார்க்கைப் போலவே மற்றைய ஐரோப்பிய நாடுகளிலும் தமிழர் உயர்வு உள்ளதை மறுக்க இயலாது.
File:Sri Kamadchi Ampal temple 6039530.jpg
கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிஸ், அவுஸ்திரேலியா, ஜேர்மனி போன்ற நாடுகளில் தமிழர்கள் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரீசில் லா சப்பேல் என்கிறன்ற வர்த்தக சாம்ராஜ்ஜியத்தையே தமிழன் கட்டியிருக்கிறான், யாழ்ப்பாண நகரத்தையே தூக்கிச் சாப்பிடுமளவிற்கு உயர்வு கண்டுள்ளான்.
கனடாவில் தமிழன் கண்டுள்ள உயர்வு வானுயர்ந்த சாதனையாகும், இங்கிலாந்தில் நீண்ட வரலாற்றோடு வாழ்கிறான்.
இதுபோல நோர்வே, சுவீடன், கொலன்ட், இத்தாலி, பின்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் அவன் கொடி பறக்கிறது.
இதை முன்னுதாரணமாக வைத்து இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள தமிழ் மக்கள் கல்வியிலும் உழைப்பிலும் முன்னேற வேண்டும் என்பதையும் மறுக்க இயலாது.
யாழ். குடாநாடு, கல்வியிலும் உழைப்பிலும் இலங்கையிலேயே பின்தங்கிய பகுதியாக இருப்பதை மறுக்க இயலாது, அதில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

மன அழுத்த பிரச்னைக்கு தீர்வாகும் ஏலக்காய்





வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.
1. குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...