Oct 13, 2012

டெங்கு அறிகுறிகள் என்ன?


அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்ணின் பின்பகுதியில் வலி, தலை சுற்றல், வாந்தி, தோல் சிவந்து போவது, ரத்த போக்கு மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், உடலில் ரத்த புள்ளிகள் தோன்றுதல், அடி மூட்டுகளில் அரிப்போ, உடல் முழுவதும் அரிப்போ ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். காய்ச்சல் முற்றும் வரை காத்திருக்காமல் உடனடியாக  மருத்துவமனைக்கு செல்வதே நல்லது.
டெங்குவை தடுக்க வழிமுறைகள்


டெங்கு அறிகுறி தோன்றினால் உடனே டாக்டரை அணுக வேண்டும். வீட்டை

அழகான பெண்கள் மட்டும்தான் ஜெயிக்கப் பிறந்தவங்களா?


ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொரியன், தாய், சைனீஸ் என அத்தனை மொழிப் படங்களையும் தமிழில் மொழிமாற்றம் செய்து, கதை, வசனம் எழுதி, டப்பிங் பேசி, புது வடிவம் தருவதில் நம்பர் ஒன் ஜான்சி. திறமைசாலிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஜான்சி பொருத்தமான உதாரணம். கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிற ஒவ்வொரு கணமும், கண்ணீர் முட்டுகிறது ஜான்சிக்கு.

‘‘நான் உண்டு, என் கால் சென்டர் வேலை உண்டுன்னு இருந்தேன். ‘உன் குரல் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு. நீ ஏன் டப்பிங் பேசக்கூடாது’ன்னு நிறைய பேர்

பெற்றோர்களே டீன் ஏஜ் பிள்ளைகளை எப்படிப் கையாள்வது சில டிப்ஸ்


‘உங்கள் வாழ்க்கையின் மிக தர்மசங்கடமான காலகட்டம் எது?’ - இந்தக் கேள்வியை எந்தப் பெற்றோரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்.
டீன் ஏஜ் பிள்ளைகளை வளர்த்த வருடங்களைக் குறிப்பிடுவார்கள்.

யெஸ்... டீன் ஏஜ் பிள்ளைகளுடன் பெற்றோர் படும் அந்த அவஸ்தைகளை சொன்னா புரியாது... சொல்லுக்குள்ளே அடங்காது!
நீங்கள் எதைச் சொன்னாலும், அதை எதிர்த்துப் பேசினால்தான் அவர்களுக்குத் திருப்தியே! அதையும் மீறி நீங்கள் ஏதேனும் சொன்னால்... ‘மொக்கை போடாதீங்கப்பா... லெக்சர் அடிக்காதீங்கம்மா... உங்களுக்கென்ன தெரியும்?’

தவறான உணவு பழக்கத்தாலும் மூட்டு வலி வரும் வாய்ப்பு


மூட்டுகளில் தேய்மானம் அடைவதால் ஏற்படுவது மூட்டு வாதம். பொதுவாக மூட்டு வாதம் எனப்பட்டாலும், இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்த நோய் பெரும்பாலும் வயதானவர்களையே தாக்குகிறது. தற்கால உணவு பழக்க வழக்கங்கள் உடலில் பலவீனத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் பாஸ்ட் புட் கலாசாரம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பெயரில்தான் பாஸ்ட் இருக்கிறதே தவிர, இதை உண்பதால் உடலில் சுறுசுறுப்பு குறைந்து விடுகிறது என்பது என்னவோ நிஜம்தான். அதுபோல் தற்போதைய வேலை முறைகளும், உடல் உழைப்புக்கு

பாகிஸ்தானில் மீண்டும் அத்துமீறல் அமெரிக்க டிரோன் தாக்குதல் 18 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அமெரிக்க டிரோன்கள் நேற்று மீண்டும் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை ஒடுக்க, ஆளில்லாத உளவு விமானம் டிரோன் மூலம் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அப்பாவி மக்கள், ராணுவ வீரர்கள் பலர் கொல்லப்படுகின்றனர். மேலும், பாகிஸ்தான் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா செயல்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், டிரோன் தாக்குதலை அமெரிக்கா நிறுத்தவில்லை. பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் நேற்று டிரோன் தாக்குதல் நடந்தது.



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperமாஸ்கோ: சர்வதேச நோபல் பரிசுக்கு போட்டியாக, முஸ்லிம் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளை கவுரவிக்கும் வகையில் போட்டி நோபல் பரிசை ஈரான் அரசு அறிவித்துள்ளது. இயற்பியல், வேதியியல் உள்பட 6 அறிவியல் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, சுவீடன் அகடமி ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த சில நாட்களாக

அமெரிக்காவில் பயங்கர தீ சீக்கிய கோயில், பள்ளி தீக்கிரை: சதி நடந்ததா? போலீஸ் விசாரணை


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக கட்டப்பட்டு வரும் சீக்கிய கோயில் மற்றும் பள்ளி கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாயின. இதனால் சீக்கியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வான்கூவர் நகரில் சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இங்குள்ள 17,000 சதுர அடி கொண்ட ஒரு இடத்தை விலைக்கு வாங்கிய சீக்கியர்கள், அங்கு புதிய குருத்வாரா மற்றும் பள்ளி அமைக்க திட்டமிட்டனர். இதற்காக கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வந்தது. இரண்டு கான்ட்ராக்டர்கள்

கூகுளின் 500+ அழகிய எழுத்துருக்களை MS Word, Photoshop-களில் உபயோகிப்பது எப்படி?----கணிணிக்குறிப்புக்கள்,


கூகுளின் 500+ அழகிய எழுத்துருக்களை MS Word, Photoshop-களில் உபயோகிப்பது எப்படி?

உங்கள் கணினியில் ஒரே மாதிரியான எழுத்துருக்களை உபயோகித்து போர் அடிக்குதா? நீங்கள் உபயோகிக்கும் டிசங்களுக்கு புது வகையான எழுத்துருக்கள் தேவை படுகிறதா அதுவும் இலவசமாக? ஆம் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. கூகுள் இணையதளம் Web Fonts என்ற ஒரு அருமையான சேவையினை வழங்கி வருகிறது. இதில் சுமார் 500 க்கும் அதிகமான புதுவகையான எழுத்துருக்கள் நிறைந்து காணப்படுகின்றன.  இதனை எப்படி உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து வேர்ட், போட்டோஷாப் போன்ற மென்பொருட்களில் உபயோகிப்பது என பார்ப்போம்.


முதலில் கூகுளின் Web fonts தளத்தை ஓபன் செய்து கொள்ளவும். அதில் கூகுளின் அனைத்து எழுத்துருக்களும் இருக்கும் அதில் ஒவ்வொரு எழுத்துருக்களின் அருகிலும் Add to Collection என்ற என்ற நீல நிற பட்டன் இருக்கும் அதன் மீது கிளிக் செய்யவும். இதே முறையில் உங்களுக்கு பிடித்த அனைத்து எழுத்துருக்களையும் தேர்வு செய்து கொள்ளவும்.

உங்களுக்கு தேவையான அனைத்து எழுத்துருக்களையும் தேர்வு செய்த பின்னர் மேலே வலது புறத்தில்

வேர்கடலையும் சில சந்தேகங்களும்!

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான

ருத்துவக் குணங்கள் -மஞ்சள், மிளகு

ருத்துவக் குணங்கள் -மஞ்சள், மிளகு















நாள்பட்ட சளி மற்றும் இருமலுக்கு அருமருந்து மஞ்சள் மற்றும் மிளகு தூள் எனலாம்.
  • ஒரு தம்ளர் பாலில் ஒரு கரண்டி மஞ்சள் தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து தினந்தோறும் இரவில் குடித்து வந்தால், நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடிவிடும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மஞ்சள், உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடி விரட்டியடிக்கிறது. அதீத மருத்துவ சக்திகொண்ட மிளகு, சளியை கரைத்து காணாமல் போகச் செய்கிறது.
  • தினந்தோறும் உணவில் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கொள்வதற்கு காரணம் இதுதான்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த...


உடலுக்கும், உள்ளத்துக்கும் அவஸ்தை தரும் நோய்களில் முக்கியமானது சர்க்கரை நோய்.

பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவரது 2 மகன்களில் ஒருவரை இந்த நோய் தாக்க அதிக வாய்ப்புள்ளது.

முறையான உணவு கட்டுப்பாட்டுகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் இதை கட்டுப்படுத்த முடியும்.

இந்த நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்.

நோய்க்கான காரணங்கள்:

* உடல் உழைப்பு இல்லாதது.

கொலஸ்ட்ரால் பற்றி தெரிந்துகொள்வோம்

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol
80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும்

புவியின் நிலத்துக்கு அடியில் எவ்வளவு தூரம் செல்லலாம்? : புதிய முயற்சியில் மனிதன்

மனிதன் சந்திரனுக்கு சென்று வந்துள்ளான். செவ்வாய்க் கிரகத்திலிருந்தும் சில மாதிரிகளை சேகரிக்கவும் திட்டம் தீட்டியுள்ளான்.
ஆனால் சொந்த பூமியில் நிலத்துக்கடியில் எவ்வளவு தூரம் சென்றுள்ளான்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடையாது. ஆனால் இக்கேள்விக்குப் பதில் காண்பதற்கான செயற்திட்டம் சுமார் $1 பில்லியன் டாலர்கள் செலவில் வெகு விரைவில் நடைபெறவுள்ளது,

அதாவது கடலுக்கு அடியில் சுமார் 6 Km தூரத்துக்கு நிலத்தைத் தோண்டி பூமியின் சூடான அடர்ந்த சிலிக்கேட் பாறைகளால் சூழப்பட்ட பகுதி (mantle) அதாவது பூமியின் மையத்துக்கும் மேலோட்டுக்கும் இடையில் (interior between the

சென்னையில் பரவுகிறது: டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் பலி- மேலும் 23 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

சென்னையில் பரவுகிறது: டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் பலி-
 மேலும் 23 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஈடிஸ் என்ற வகை கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவியது. தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. மத்திய சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வு மூலம், தமிழ்நாட்டில் கடந்த சீசனை விட இந்த சீசனில் 4 மடங்கு அதிகமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து ஈடிஸ் கொசுக்களை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை

மத்திய தரைக்கடல் பகுதியில் ஈரான் போர்க்கப்பல்கள்: போர் மூளும் அபாயம்





ஈரான் நாட்டைச் சேர்ந்த போர்க்கப்பல்கள் சூயஸ் கால்வாயைக் கடந்து மத்திய தரைக் கடல் பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து ஈரான், இஸ்ரேல் இடையேயான பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு, மத்திய ஆசியாவில் பனிப் போரை உருவாக்கும் என பிரிட்டன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் எச்சரித்துள்ளார்.
இந்தியா, தாய்லாந்தில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்கள் ஜார்ஜியாவில் தாக்குதலுக்கான முயற்சி ஆகியவற்றின் பின்னணியில் ஈரான்

ரஷ்யா: எண்ணை கிணறு கடலில் மூழ்கி 53 பேர் பலி
ரஷ்யாவில் எண்ணை கிணறு கடலில் மூழ்கி 53 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவில் வடமேற்கு பகுதியில் முர்மானஸ் மாகாணத்தில் ஒகாட்ஸ்க் கடல் உள்ளது.இங்கு கொல்ஸ்கயா என்ற இடத்தில் கடலுக்குள் எண்ணை கிணறு உள்ளது.

இந்த எண்ணை துரப்பன பணியில் அதில் 67 பேர் பணிபுரிந்தனர். அவர்களில் 53 பேர் நிபுணர்கள், 14 பேர் தொழிலாளர்கள்.வழக்கம் போல் இவர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் கடும் புயல் வீசியதில், எண்ணெய் கிணற்றின் மேடை கடலுக்குள் விழுந்தது. இதில் பணியில் இருந்த 67 பேரும் கடலில் மூழ்கினர். அவர்களில் 14 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.இவர்கள் தவிர 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 49 பேரை காணவில்லை.

அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உத்தரவிட்டுள்ளார்

600 அடி கிணற்றில் விழுந்த குழ‌ந்தை மீ‌‌ண்ட அ‌திசய‌ம்!



கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை குணா சுமா‌ர் நா‌ன்கரை ம‌ணி நேர‌ம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்ட ச‌ம்பவ‌ம் பெ‌ற்றோ‌ர் ம‌ட்டு‌மி‌ன்‌றி அ‌ந்த மாவ‌ட்ட ம‌க்களை ச‌ந்தோச‌த்‌தி‌ல் ஆ‌ழ்‌த்‌தியு‌ள்ளது.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மந்தையூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் - பத்மா த‌ம்ப‌தி‌‌க்கு பூஜா என்ற மூ‌ன்றரை வயது பெண் குழந்தையும், குணா என்ற இர‌ண்டரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.
ஆன‌ந்தனு‌க்கு சொந்தமான நிலத்தில் 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை

பூமியை விட பெரிய வைரங்கள் நிறைந்த நட்சத்திரம் கண்டுபிடிப்பு

October 13, 2012
வானில் ஏராளமான நட்சத்திரக் கூட்டங்கள் உள்ளன. அவை இரவில் வைரம் போல் ஜொலிப்பதை காணலாம். இந்த நட்சத்திரங்கள் எல்லாம் கால்பந்து போன்ற சிறிய வடிவிலானவை. ஆனால் சமீபத்தில் அமெரிக்க பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பூமியின் அளவை விட பெரிதான வைரங்கள் நிறைந்த புதிய நட்சத்திர கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
மற்ற நட்சத்திரங்கள் தண்ணீர், கிரானைட் கொண்ட கலவைகளாகவும், கிரானைட் கலவைகளாகவும், இரும்பு, தாதுக்கள் கொண்டதாகவும் உள்ளன. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நட்சத்திரத்தில் கிராபைட்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...