Apr 24, 2012

ப்ரிட்ஜில் வைத்த அசைவ உணவா? -சாப்பிடாதீங்க!

உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே ஃப்ரிட்ஜ். ஆனால் சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது ஃப்ரிட்ஜ். நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என சகலத்தையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை கதற அடித்துவிடுவார்கள். இது மிகவும் தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
காய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் பிரிட்ஜில் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். குறிப்பாக ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியை பயன்படுத்துவது வேண்டவே வேண்டாம் என்பதுதான் அவர்களின் முக்கிய அறிவுரை.

நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் மாமிசத்தில் பாக்டீரியா உருவாகிவிடும் .அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் உண்டுவிட்டால், இரைப்பையில் நோய் தாக்கிவிடும். இதுபோன்ற இறைச்சியை உண்பதினால் இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, ஈரல், சிறு நீரகம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

விஷமாகும் உணவு

இறைச்சியை உடனடியாக கடைகளில் வாங்கிய உடனே வெட்டி வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினால்தான் அதில் உள்ள புரத சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அவ்வாறு இல்லாமல் வார கணக்கில் இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து, பின்னர் அதனை சமைப்பதினால் அதிலுள்ள புரத சத்துக்கள் அழிந்துவிடுவதோடு மட்டுமல்லாது, அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு, சமயங்களில் அது விஷ உணவாக மாறவும் வாய்ப்புண்டு என்கின்றனர்

உணவியல் வல்லுநர்கள். மொத்தத்தில் ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியே சமைக்கப்படுவதால், ஓட்டல்கள், சிற்றுண்டியகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்களில் வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கைவிடுவதே நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்!

எளிதில் நோய் தாக்கும்

அதேபோன்று நோய் தாக்கிய ஆடு, மாடு அல்லது கோழி போன்ற இறைச்சியில் வைட்டமின், புரத சத்துக்கள் சிதைந்து போயிருக்கலாம். எனவே இத்தகைய இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைத்து உண்பதனால் நோய் எளிதில்

மவுஸை பயன்படுத்தும் வழிமுறைகள்

கணணியுடன் இணைந்து நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுசும் மாறிவிட்டது.
நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்குக் காரண மாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கைகளில் குறிப்பாக மணிக்கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் musculoskeletal injury என்று அழைக்கின்றனர்.

இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன்படுத்தும் விதத்தில் நாம் சரியாக அக்கறை காட்டாததுதான். இங்கு மவுஸைப் பிடித்துப் பயன்படுத்தும் வழிகளில் பின்பற்ற வேண்டிய சில மருத்துவ அறிவுரைகளை இங்கு காணலாம்.

1.முதலாவதாக மவுஸ் பிடித்திருக்கும்

நார் சத்துன்னா…? என்ன தான் இருக்கு


நோஞ்சானாக இருந்தாலும், அடிக்கடி எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக எண்ணினாலும், ரத்த சோகை ஆபத்து உள்ளதாக தெரிந்தாலும், டாக்டர் சொல்லும் ஒரே அட்வைஸ்,”நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்க’ என்பது தான்.
அதென்ன, நார்ச்சத்து உணவுகள்? இப்போதெல்லாம், இட்லி முதல் சாம்பார் வரை எல்லாமே, பாக்கெட் உணவு தானே. நல்லவேளை, காய்கறிகளை பதப்படுத்தி, கூட்டு, கறி என்று பாக்கெட் போட்டு விற்பனை செய்யவில்லை. அப்படி வந்து விட்டால் போதும், காய்கறி கடைப்பக்கமே பலரும் போக மாட்டார்கள்.
உணவு வகைகளில் உள்ள பல சத்துக்கள், சமைப்பதன் மூலமும், எண்ணெய் விட்டு “ப்ரை’ ஆக்குவதன் மூலமும் சத்துக்கள் குறைந்தும், அடியோடு போயும் விடுகின்றன. ஆனால், நார்ச்சத்துள்ள உணவுகளில் உள்ள சத்துக்கள், உடலுக்கு கிடைப்பதுடன்

முள்ளங்கியின் மகத்துவம்


முள்ளங்கியின் சில விஷேச தன்மைகளை இந்த பதில்வில் பார்ப்போம். யுனானி மருத்துவத்தின் அடிப்படையே நமது இரத்தம் சுத்தமாக இல்லாமைதான். அதில் உள்ள நச்சு பொருட்களை சரிவர நீக்காவிட்டால் தான் நோய் வருகிறது என்கிறது.

முள்ளங்கி நம் உடலில் உள்ள அசுத்த காற்றான கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றி பிராணவாயு ஈர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் அடங்கி உள்ள மூல கூறுகள் நிறைய நோய்களுக்கு மருந்தாகத் திகழ்கிறது.

முள்ளங்கியை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், கண் பார்வையின் கூர்மை அதிகரிக்கும்

நன்னாரி

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.

பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.

வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள்,
செரியாமை, பித்த குன்மம்

ரத்தத்தை சுத்திகரிக்கும் உணவுப் பொருட்கள்

னித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம் ஆக்சிஜனை மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்புவதோடு மட்டுமல்லாமல் மனித நடமாட்டத்திற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது.

ரத்தம் சுத்தமானதாக இருந்தால் தான் நம்மால் ஆரோக்கியமாக நடமாட முடியும். அசுத்தக் கலப்பில்லாமல் ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே உள்ளது.

எலுமிச்சை: ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரித்து அவற்றை கழிவுகளாக வெளியேற்றும் சக்தி எலுமிச்சைக்கு

Bharatserials - Watch Tamil Serials,Live Tamil TVs, TV Shows online

Bharatserials - Watch Tamil Serials,Live Tamil TVs, TV Shows online

“வாதபித்த மையமோடி னை சிறு வருக்கும் மின்னும் செப்பி லறிவு தரும் அறுகம்புல்”

            அறுகம்புல் இறந்தாலும் உயித்தொழும் தன்மை உடையது. அது விநாயகனுக்கு அர்ப்பணிக்கும் பொருளாகும். விக்கினம் தீர்ப்பவன் விநாயகன் விக்கினம் ஏற்பட காரணம் ஸ்திமான மனம் இல்லாமை இதனால் ஆய்ந்து அலசி ஆராய்யும் திறனை இழந்து தவிக்கின்றான் மனிதன் இதற்கு அடிப்படையான காரணம் உடல் சமநிலை இன்மை உடல் முக்குணங்களால் வழிநடாத்தப்படுகின்றது. அவை வாத, பித்த, கபம் என்பன இவற்றின் சமநிலை மாறுமானால் மனமும்  சமநிலையை இழக்கின்றது இதனால் விக்கினம் ஏற்படும் இதை அறுகம் புல் அவற்றுக்கிடையிலான ஏற்ற இறக்கத்தை சீர்செய்து

Apr 23, 2012

மலர்களின் மருத்துவ குணங்கள்


மலர்களின் மருத்துவ குணங்கள்

06 Aug 2011

இப்பூவுலகெங்கும் மரம், செடி, கொடி, சமுத்திரம், மலை, பறவைகள், மனித இனம், விலங்குகள் என்பன இயற்கையில் பரிணமித்துள்ளன. இவைகள் அனைத்தையும் விட மிகவும் அழகான தோற்றத்தை தன்னகத்தே கொண்டுள்ளவைதான் மலர்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. மரம், செடி, கொடிகளில் பூக்கும் மலர்களின் நிறம், அதன் மருத்துவ குணம், சுகந்தம், கவர்ச்சியான தோற்றம் என்பன இவ்வுலகில் உள்ளோரை பிரமிக்க வைக்கின்றன என்பது நிதர்சனமாகும்.


மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் கூட வீட்டுத் தோட்டங்கள், பூஞ்சோலைகள், பூங்காவனங்கள் என்பவற்றில் கோடானு கோடி பூக்கள் தினமும் மலர்வதை அவதானிக்கலாம். இதனாலன்றோ ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்று இயற்கையைப் போற்றினர் நமது முன்னோர்கள்.அதேவேளை ‘எத்தனை கோடி பூமலரும்’ என்றார் கவிஞர் கண்ணதாஸன். மேலும் எமது பண்டைய இலக்கியம்கூட பெண்களை மலருக்கு ஒப்பிடுவதைக் கண்டோம். மங்கையரின் கூந்தலை அலங்காரம் செய்வதில் மலர்கள் பிரதான பங்கினை வகிக்கின்றன என்றும் கூறலாம்.

பூக்கள் நமக்கு இயற்கை நல்கிய கொடை, அவைகளில் தான் எத்தனை எத்தனை வர்ணங்கள், பல்வேறுபட்ட வடிவங்கள், விதம் விதமான நறுமணங்கள், மருத்துவ குணங்கள் என்று அதன் தாற்பரியங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.கண்ணுக்கு கவர்ச்சியாகவும், மனதுக்கு சாந்தியையும், கிளர்ச்சியையும் நல்குவது பூக்கள்தான் என்பது வெள்ளிடைமலை. மலர்கள் புனிதமானவை. இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடியது. மணமக்கள் கழுத்தில் மாலையாகப் பொலிவது மலர்கள் தான் என்பதையும் நாம்அறிவோம். மகரந்தங்களால் இனிக்கும் தேனை வழங்கிவருவதும் பூக்களே.

பல்வேறு சிறப்பு மிக்க அத்தகைய மலர்கள் மனித குலத்திற்கு பிணி நீக்கும் ஒளடதமாகவும் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர் என்றும் அறிய முடிகின்றது. சித்த மருத்துவ நூலை புரட்டிப் பார்த்தோமாகில் பல்வேறு வகையான மலர்களின் மருத்துவ குணங்களை சிறப்புறக் கூறப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. இன்றுகூட தென் இந்திய கிராமங்கள் சிலவற்றில் நோய்களுக்கு பூக்களை மருந்தாகப் பயன்படுத்தி எளிய முறையில் சிகிச்சை பெறுகின்றனர். இது செலவில்லா சுலப மருத்துவம் என்பது கண்கூடு.
பலகோடி மலர்கள் உலகில் உள்ளன என்பதை ஆரம்பத்தில் பார்த்தோம். இருப்பினும் நமது அனுபவம் மற்றும் பழக்கத்தில் உள்ள மலர்களின் மருத்துவ குணம் பற்றி அறிந்து கொள்வது இங்கு உசிதமாகும்.முதலில் நாம் தெரிவு செய்வது மருதோன்றிப் பூவாகும். மருதாணி என்ற சிறிய செடியில் கிடைப்பது மருதோன்றிப்பூ. இந்த மருதாணி இலையை மங்கையர் தங்கள் அழகிற்காக கால்களிலும், கைகளிலும், அரைத்துப் பூசுவார்கள்.

இது வண்ண வண்ண அழகையும் குளிர்ச்சியையும் தருகின்றது. மருதாணி மரத்தில் மலரும் பூக்கள் மருதோன்றிப் பூக்களாகும். இந்தப் பூக்கள் மருத்துவ தன்மை வாய்ந்தவை. மருதாணி இலைக்கு உள்ளதைப் போன்று பூக்களுக்கும் உடல் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை உண்டு.மருதோன்றிப் பூவைப் படுக்கைக்கு செல்லுமுன் தலையில் வைத்துக் கொண்டால் அல்லது தலைக்கு அடியில் வைத்துக் கொண்டால் நன்றாகத் தூக்கம் வரும். குடும்பக் கவலை, தீர்க்க முடியாத பிரச்சினை, மன அலைச்சல் உள்ளவர்கள் மற்றும் ஹிஸ் யரியர் நோய் உள்ள மங்கையர் இந்தப் பூவை தலையில் சூடிக் கொணடால் நோய் அகன்றுவிடும்.
சில பெண்களுக்கு மருதோன்றிப் பூவின் மணம் பிடிப்பதில்லை. ஆகவே அவர்கள் இம்மலரைக் காய வைத்தபின் உபயோகிக்கலாம். காய வைத்த மருதோன்றிப் பூவுடன் எலுமிச்சைப் பழச் சாறு சேர்த்து தலையில் தேய்த்து ஸ்நானம் செய்தால் உடல் உஷ்ணம் குறைவதுடன் தலையில் உள்ள பொடுகு போய்விடும்.மற்ற மலர்களைவிட மிகவும் மாறுபட்ட நறுமணத்தைக் கொண்டது மருதோன்றிப் பூ. அடுத்து கமகமவென்று நறுமணத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கும் மல்லிகைப் பூவைப் பார்ப்போம். மல்லிகைப் பூவை விரும்பி வைக்காத பெண்களே இல்லையெனலாம். மல்லிகையிலும் பல ரகங்கள் உள்ளன.

அவற்றை அடுக்குமல்லி, ஒற்றை மல்லி, ஊசிமல்லி, குண்டுமல்லி, நித்திய மல்லி, காட்டுமல்லி என வகுக்கலாம். மல்லிகைப் பூவிலும் சில மருத்துவ குணம் இருப்பது பலருக்குத் தெரியாது. மல்லிகைப்பூ தலைவலியைப் போக்கும் தன்மை கொண்டது. சில பெண்களுக்கு மல்லிகையின் மணம் பிடிக்காது.
அதனை ஒவ்வாமையென்று கூறலாம். மல்லிகை மலர்கள் களைப்பைப் போக்கும் அதேவேளை மோக இச்சையையும் அதிகரிக்கும் வல்லமை கொண்டது. இதனாலன்றோ திருமணம் நடந்து முதல் இரவு அன்று கட்டிலில் மல்லிகை மலர்களைப் பரப்புவதோடு கட்டிலைச் சுற்றி மல்லிகைப் பூக்களைக் கொண்டு அலங்காரமும் மேற்கொள்கின்றனர்.

குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியினர் தொடர்ந்து மல்லிகைத் தோட்டத்தில் உலாவினால் நல்ல பலன் ஏற்பட வாய்ப்பு உண்டு. மல்லிகைப் பூவின் மணத்தை ‘காதல் மணம்’ என்று கூடச் கூறுவர். மன்மதன் – ரதி ஆகியோர் மல்லிகைத் தோட்டத்தில் தான் வசித்தார்களென்று புராணங்கள் கூறுகின்றன. மல்லிகைப் பூ தைலம் எடுக்கப்பட்டு வாசனைத் திரவியங்களில் கலந்து பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

இனி எல்லோரும் விரும்பும் ரோஜா மலரின் தாற்பாரியங்கள் சிலவற்றை நோக்குவோம். பொதுவாக இதனை மலர்களின் ராஜா என்றும் அழைப்பதுண்டு. மனதுக்கு இதமான பலவித வர்ணங்களில் காட்சி தருகின்ற ரோஜாப் பூவைப் பறிப்பதற்கு கூடிய கவனம் செலுத்தியே ஆகவேண்டும். ஏனெனில் ரோஜாச் செடியில் அதிக அளவில் முட்கள் காணப்படுவதேயாகும்.

ரோஜாவை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தலாம். ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறுநீர் சுலபமாகப் போகும். குடல்புண், தொண்டைப் புண் குணமாக்குவதற்கும் ரோஜா மலர் பயன்படுத்தப்படுகின்றது.ரோஜாப் பூவின் மணம் சளியைக் குணப்படுத்தும் ஆற்றலும், வயிற்றை சுத்தமாக்கும் இயல்பும் கொண்டது. ரோஜாவிலிருந்து தைலம் எடுக்கலாம். காது வலி, காது குத்தல், காதில் ரோகம், காதுப்புண் என்பவற்றுக்கு இத்தைலம் பயன்படுத்தப்படுகின்றது. ரோஜா இதழ்களைக் கொண்டு குல்கந்து தயார் செய்யலாம்.
இதனைச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெருகும், அத்துடன் அழகான உடல் அமைப்பையும் பெறலாம். அத்துடன் குருதி சுத்தமடைந்து தோலின் நிறம் பளபளப்புடன் விளங்கும். ரோஜா இதழ்களிலிருந்து சர்பத் தயார் செய்யலாம். இதை அருந்தினால் மூலச்சூடுஇ மலச்சிக்கல் குடலில் உண்டாகும் புண் இவைகளைக் குணப்படுத்தும். வாயிலுள்ள துர்நாற்றத்தை ரோஜா இதழ்கள் போக்கும் தன்மையுடையது.

பொதுவாக தாம்பூலம் தரிக்கும் பொழுது அத்துடன் இரண்டு அல்லது மூன்று ரோஜா இதழ்களை சேர்த்துக் கொள்வது நல்லது. அது ஜீரணத்தைப் போக்கும். வீட்டு முற்றத்தில் ரோஜா செடிகளை வளர்ப்பது உத்தமம். அவற்றைப் பதியம் போட்டு பூச்சாடிகளிலும் உண்டு பண்ணலாம். அடுத்ததாக நாம் பவள மல்லிகைப் பூவை எடுத்துக் கொள்வோம். பவள மல்லிகைச்செடி மரம் வகையைச் சேர்ந்தது.

இதனை வளர்ப்பதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. கோடையில் பூத்துக் குலுங்கும் இந்தமலரை ‘பாரிஜ மலர்’ என்றும் கூறுவர். ‘பாரிஜம்’ என்ற பதம் சமஸ்கிரதச் சொல்லாகும். இந்தப் பூ சுகந்தத்தைக் கொடுக்கக் கூடியது. இதன் வாசனை அலாதியானது. இந்தப் பூ மிகச் சிறிதாக இருக்கும். இவை இந்திரனின் தோட்டத்தில் காணப்பட்டன என்று ‘அமர கோசம்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

இனி பவள மல்லிகைப் பூ பற்றிப் பார்ப்போம். இதனை கண் சம்பந்தமான நோய்களுக்கும் பயன்படுத்தலாம்.பெரும்பாலும் பெருமாள் கோயில்களில் இந்தப் பவள மல்லிகை மரங்கள் அதிகமாக இருக்கும். இதன் வாசனை ஞானத்தை அளிக்கக் கூடியது. அத்துடன் இந்த மரத்தின் கீழேதான் வாயுபுத்திரன் தவம் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் தான் ஆஞ்சநேயர் சன்னதியில் பவள மல்லிகை மரம் வளர்க்கப்படுகிறது.

அடுத்து நாம் இலுப்பைப் பூவைப் பற்றி சிறிது ஆராய்வோம். இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூ இலுப்பைப் பூ ஆகும். இந்தப் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். இலுப்பை பூவை ஒத்தடம் கொடுத்தால் உடலில் உள்ள வீக்கம் குறையும்.

ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும். இலுப்பை எண்ணெய்யை உடலின் உறுப்புக்கள் சிலவற்றில் தேய்த்துக் கொள்வது முண்டு. சிலர் அவ்வப்போது உணவிற்காகவும் பயன்படுத்துகின்றனர்.
இனி தூதுவளைப் பூ பற்றிப் பார்ப்போம். தூதுவளைப் பூ

மருந்து.கொம் - ஆயுர்வேதம்

மருந்து.கொம் - ஆயுர்வேதம்

Health Benefits of Maize Corn


Indian Sweet Corn

Types of Corn – Nutrition & Health Benefits
Whenever we go out on evenings to beach or outskirts of the city first we see vendors roasting maize corns and selling them. People usually purchase and eat them for a time pass or an uncontrollable fresh aroma of the roasting maize corns. Maize corns are healthy food to eat because they are nutritious and with low calories. They contain fiber essential to control cholesterol and also an anticancer agent. Maize is eaten in several ways as corns burnt, steam cooked, as chips, corn powder and as a vegetable in the

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...