Apr 27, 2014

கணினி வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகள்

Photo: கணினி வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகள்

1623 – ஷிக்கார்ட் என்பவர் உருவாக்கிய முதல் மெக்கானிக்கல் கால்குலேட்டர்
 
1823 – சார்லஸ் பேபேஜ் உருவாக்கிய அனலிடிக்கல் இயந்திரம். இந்த இயந்திரமே இன்றைய கணினிகளின் முன்னோடி என்று கூறலாம். சார்லஸ் பேபேஜை கணினியின் தந்தை என்று சிறப்பு பெயர் பெற்றவர்.
 
1957 – இன்றைய அனைத்து மொழிகளின் முன்னோடியான ஃபோர்ட்ரான் கணினி மொழி வெளியிடப்பட்ட ஆண்டு.
 
1971 – ஸ்மால் டாக் எனப்படும் கணினி மொழி உருவானது. இது முழுக்க முழுக்க OOPS என்ற கொள்கையின் அடிப்படையில் உருவானது. 

இந்த கொள்கையின் அனைத்து சிறப்பமசங்களையும் இதில் பயன்படுத்தலாம். 

இன்றைய ஜாவா மற்றும் சி++ OOPS ன் அனைத்து சிறப்பம்சங்களையும் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது . 

இதனால் ஜாவா மற்றும் ,சி++ யை ஸ்மால் டாக்குக்கு குறைவாக எடைபோட முடியாது. 

OOPS ன் விரிவாக்கம் Object Oriented Programming System.
 
1972 – சி என்ற மொழி உருவானது இதுவே இன்றை நவீன மொழிகளின் முன்னோடி என்று கூறலாம். 
இதை உருவாக்கியவர் டென்னிஸ் ரிட்ச்சி (Dennis Ritchie).
 
 1975 – கணினி உலகின் மிக பெரிய நிருவனமான மைக்ரோ சஃவ்ட் உருவான வருடம்.
 
1976 – கணினி உலகின் மற்றொரு மிக பெரிய நிருவனமான ஆப்பிள் உருவான வருடம்.
 
1983 – ஆப்பிள் நிருவனம் மெளசை உருவாக்கிய வருடம்.
 
1990 – இனையதளம் உருவான வருடம். கணினி உலகில் தவிர்க்க முடியாத ஒன்று.
 
1995 – இன்றைய நவீன கணினி உலகின் மிக பிரபலமான மொழியான ஜாவா உருவான வருடம். 

ஜாவாவை உருவாக்கியவர் ஜேம்ஸ் காஸ்லிங் (James Gosling) அன்று ஜாவா மொழியின் சொந்தக்கார நிருவனம் சன் மைக்ரோ ஸிஸ்டம்(Sun Microsystems) இன்று ஆரக்கல் (Oracle Corporation ). 

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 95யை அறிமுகப்படுத்திய வருடம்.
 
1998 – அன்று கணினி உலகின் மிக பெரும் ஜாம்பவானாகிய கூகுல் நிருவனம் உதயமான வருடம்.
 
2000 – உலகின் மிக பெரிய தகவல் களஞ்சியமான விக்கிபீடியா வெளியிடப்பட்ட வருடம். 

விக்கிபீடியா உல்கின் மிக பெரிய தகவல் பெட்டகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
2004 – சமூக இனையதளங்களில் முக நூல் (Facebook) பெரும் புரட்ச்சியை செய்த வருடம். 
இன்று முக நூல் கணக்கு இல்லாதவர்கள் மிக சிலரே.
கணினி வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகள்

1623 – ஷிக்கார்ட் என்பவர் உருவாக்கிய முதல் மெக்கானிக்கல் கால்குலேட்டர்

1823 – சார்லஸ் பேபேஜ் உருவாக்கிய அனலிடிக்கல் இயந்திரம். இந்த இயந்திரமே இன்றைய கணினிகளின் முன்னோடி என்று கூறலாம். சார்லஸ் பேபேஜை கணினியின் தந்தை என்று சிறப்பு பெயர் பெற்றவர்.

1957 – இன்றைய அனைத்து மொழிகளின் முன்னோடியான ஃபோர்ட்ரான் கணினி மொழி வெளியிடப்பட்ட ஆண்டு.

1971 – ஸ்மால் டாக் எனப்படும் கணினி மொழி உருவானது. இது முழுக்க முழுக்க OOPS என்ற கொள்கையின் அடிப்படையில் உருவானது.

உல‌ர் அன்னாசி பழமு‌ம் இர‌த்த உ‌ற்ப‌த்‌தியு‌ம்!

Photo: உல‌ர் அன்னாசி பழமு‌ம் இர‌த்த உ‌ற்ப‌த்‌தியு‌ம்!

உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிபழம் ஒரு சிறந்த சத்து பொருளாக அமைகிறது என்றால் அது மிகையாகாது. 
முதலில் நன்கு பழுத்த அன்னாசி பழத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அதன் மேல்புறம் உள்ள தடிமனான தோலினை செதுக்கி எடுத்துவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தூசி படாமல் அதனை வெயிலில் நன்கு காயவைத்து உலார்ந்த நிலையில் உள்ள அன்னாசி பழ வற்றலை பாத்திரத்தில் வைத்து மூடிவைத்து கொள்ள வேண்டும்.
 
 தினம்தோறும் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு டம்ளர் பாலில் பத்து துண்டு அன்னாசி வற்றலை போட்டு ஊற வைக்க வேண்டும். பின்பு ஊறிய வற்றலை எடுத்து முதலில் சாப்பிட்டு விட்டு அதன்பிறகு பாலையும் குடித்து விடவேண்டும். 

இவ்வாறாக இர‌ண்டு மாத காலத்திற்கு தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல முறையில் இரத்தம் உற்பத்தியாகும். மேலும் உடல் சக்தி பெறும். பித்த மயக்கம் சம்பந்தபட்ட அனைத்தும் முற்றிலுமாக நீங்கும் 
 
பொதுவாகவே அன்னாசிபழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு நாவறட்சி நீங்கி தாகம் தணியும் சுறுசுறுப்பு உண்டாகும். குறிப்பாக மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மை அனைத்தும் அன்னாசிபழத்திற்கு உள்ளது.உல‌ர் அன்னாசி பழமு‌ம் இர‌த்த உ‌ற்ப‌த்‌தியு‌ம்!

உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிபழம் ஒரு சிறந்த சத்து பொருளாக அமைகிறது என்றால் அது மிகையாகாது.
முதலில் நன்கு பழுத்த அன்னாசி பழத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அதன் மேல்புறம் உள்ள தடிமனான தோலினை செதுக்கி எடுத்துவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தூசி படாமல் அதனை வெயிலில் நன்கு காயவைத்து உலார்ந்த நிலையில் உள்ள அன்னாசி பழ வற்றலை பாத்திரத்தில் வைத்து மூடிவைத்து கொள்ள வேண்டும்.

தினம்தோறும் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு டம்ளர் பாலில் பத்து துண்டு அன்னாசி வற்றலை போட்டு ஊற வைக்க வேண்டும். பின்பு ஊறிய வற்றலை எடுத்து முதலில் சாப்பிட்டு விட்டு அதன்பிறகு பாலையும் குடித்து விடவேண்டும்.

இவ்வாறாக இர‌ண்டு மாத காலத்திற்கு தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல முறையில் இரத்தம் உற்பத்தியாகும். மேலும் உடல் சக்தி பெறும். பித்த மயக்கம் சம்பந்தபட்ட அனைத்தும் முற்றிலுமாக நீங்கும்

பொதுவாகவே அன்னாசிபழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு நாவறட்சி நீங்கி தாகம் தணியும் சுறுசுறுப்பு உண்டாகும். குறிப்பாக மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மை அனைத்தும் அன்னாசிபழத்திற்கு உள்ளது.

Apr 25, 2014

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்


தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்


  • அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.
  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  • அகல உழுகிறதை விட ஆழ உழு.
  • அகல் வட்டம் பகல் மழை.
  • அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்.
  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

Apr 24, 2014

இந்தியாவைத் தீர்மானிக்கும் 25 பேர்!

இந்தியாவைத் தீர்மானிக்கும் 25 பேர்!
தேர்தல் ஸ்கேன்
ப.திருமாவேலன்
நுங்ரா, காலாகாலி, மாராமாரி, கந்தாகோல், விஷம் - இந்த ஐந்தும் வங்காளி வார்த்தைகள். இந்தியா வின் அரசியலை, தேர்தல்களை ஆய்வு செய்ய வந்த நார்வே மானுடவியல் ஆய்வாளர் ஒருவர் மேற்கு வங்கக் கிராமத்துக்குப் போனபோது, ஒரு கிராமவாசி இந்த ஐந்து வார்த்தைகளையும் சொல்லியிருக்கிறார்.
'அரசியல் என்றாலே அழுக்கு (நுங்ரா), அரசியல்வாதிகள் தவறுகளை ஊக்குவிப்பவர்கள் (காலாகாலி), தேவை இல்லாமல் சண்டை போடுபவர்கள் (மாராமாரி), பிரச்னைகளை வளர்ப்பவர்கள் (கந்தாகோல்). மொத்தத்தில் அவர்கள் சமூகத்தின் 'விஷம்’ போன்றவர்கள்’ என்றாராம் அந்தக் கிராமவாசி.
அரசியல் எவ்வளவு கீழானதாக மாறிப்போனாலும், தேர்தல்தான் ஜனநாயகத்துக்கு உயிர் செலுத்தும். அம்பானிக்கும் ஒரே ஓட்டு; அய்யாசாமிக்கும் ஒரே ஓட்டு. வாக்குச்சாவடிக்கு வெளியே இவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தாலும், ஓட்டின் மரியாதை ஒன்றுதான். அதனால்தான் அதிகார மமதை கொண்டவர்கள்கூட சந்து பொந்துகளுக்கு வந்து வாக்குப் பிச்சை கேட்கிறார்கள்.
இந்தியா எனப்படும் பரந்த பரப்பில், சமீப 'தெலங்கானா’வையும் சேர்த்து 29 மாநிலங்கள். ஆனால், 543 உறுப்பினர்கள் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தை ஆறு பெரியண்ணன்கள்தான் ஆட்சி செலுத்துகிறார்கள்.
ஆறு பெரியண்ணன்கள்!
பிரதமர்களை தனது உதிரத்தில் உற்பத்தி செய்யும் பிரதேசம்,

தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வு இதுதான் தமிழன் கண்டுபுடிப்பு



தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வு இதுதான் தமிழன் கண்டுபுடிப்பு

தயவு செய்து படித்துவிட்டு ஷேர் பண்ணவும் ..!

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.... இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.

Apr 23, 2014

விமான பயணத்தில் மொபைல், லேப்டாப்களை இனி சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை

விமான பயணத்தில் மொபைல், லேப்டாப்களை இனி சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை
புதுடெல்லி, ஏப்.23-

பயணிகள் விமானத்தில் போகும் போது, விமான பணிப்பெண்கள் மொபைல் மற்றும் லேப்-டாப்களை சுவிட்ச் செய்து விடுங்கள் என்று இதுவரை கூறி வந்தனர். ஆனால் இனி பணிப்பெண்கள் இவற்றை ப்ளைட் மோடில் போடுமாறு உங்களுக்கு கூறுவார்கள். 

இதனால் இந்த உபகரணங்களை பயணிகள் சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை. எனவே விமான பயணத்தின் போது இனி பயணிகள் தங்கள் மொபைல், லேப்டாப்களை ப்ளைட் மோடில் போட்டால் மட்டும் போதும். இதன் மூலம் பயணிகள் விமான பயணத்தின் போது ஈ மெயில் டைப் செய்து கொள்ள முடியும். பின்னர் தரையிறங்கிய உடன் அதை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி கொள்ளலாம். 

அதே போல் கேம்ஸ் விளையாடவும், மியூசிக் கேட்கவும், சேமித்து வைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும் வசதி ஏற்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் இந்த அறிவிப்பு விமான பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Apr 22, 2014

புலி ஒன்று இந்தியாவின் சந்ரபூர் கிராம மக்கள் மீது தாக்குதல்


புலி ஒன்று இந்தியாவின் சந்ரபூர் கிராம மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மஹராஸ்ட்ரா மாநிலத்தில் உள்ளது சந்ரபூர் கிராமம், கிராமத்திற்குள் நுழைந்த புலி ஒன்று மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதையும், கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவதையும் கிராமவாசி ஒருவர் ஔிப்பதிவு செய்துள்ளார். 

வீடொன்றிக்குள் நுழைந்த புலி கூரை ஊடாக மேலே வருவதும் பின்னர் அங்கிருந்த மனிதர்களை தாக்குவதும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.  - See more at: f

Kanavinilum Thedukinrean கனவினிலும் தேடுகின்றேன் (Even




Kanavinilum Thedukinrean கனவினிலும் தேடுகின்றேன் (Even


Apr 20, 2014

தொழில்நுட்பக் கோளாறால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்

தொழில்நுட்பக் கோளாறால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்
தொழில்நுட்பக் கோளாறால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்கோலாலம்பூர், ஏப்.21-

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 'எம்.எச்.192' என்ற மலேசிய பயணிகள் விமானம் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்தும் 'கியர்' செயலிழந்ததால் தொடர்ந்து நான்கு மணி நேரமாக வானத்தில் வட்டமிட்டபடி சுற்றிக்கொண்டிருந்தது.

போயிங் 737 ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் வலது பக்க 'லேண்டிங் கியர்' திடீரென செயலிழந்ததால் தரையிறங்க முடியாமல் தவித்து வந்தது. மலேசிய நேரப்படி நேற்றிரவு 10.09 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் பெங்களூருக்கு 166 பயணிகளுடன் கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கோலாலம்பூர் விமான நிலையத்தையே சுற்றி சுற்றி வந்தது.

இந்நிலையில், இதை கவனித்த விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அந்த விமானம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தகவல் வழங்கியதை தொடர்ந்து, தீயணைப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் தயார் நிலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

சமீபத்தில் எம்.எச்.370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பயணிகளுடன் மாயமான நிலையில், மலேசிய விமானங்களில் இதுபோன்று அடிக்கடி இயந்திர கோளாறு ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனிதன் எங்கிருந்து வந்தான்? (வீடியோ இணைப்பு)

மனிதன் எங்கிருந்து வந்தான்? (வீடியோ இணைப்பு)

வரலாற்றில் இன்றைய தினம்: 1882 - பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை கண்டறிந்த சார்லஸ் டார்வின் இறந்த நாள்.1587 - ஸ்பானிய போர்க் கப்பலை சேர் பிரான்சிஸ் டிரேக் மூழ்கடித்தார்.
1904 - கனடாவின் டொரோண்டோ நகரத்தின் பெரும் பகுதிகள் தீயினால் அழிந்தது.
1918 - உலகிலேயே முதன்முதலாக போக்குவரத்து சிக்னல் விளக்குகள் நியூயார்க் நகரில் செயல்படத் துவங்கின.
1975 - இந்தியாவின் முதலாவது செய்மதி ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
1882 - பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை கண்டறிந்த சார்லஸ் டார்வின் இறந்த நாள்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...