Jul 8, 2012

உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி தரும் யோகா பயிற்சி--ஆசனம்


* யோகா பயிற்சி உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும்.

* யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்களது இளமையின் காலம் நீடிக்கும்!

* நாம் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கி செல்லும் ஆற்றலை நமக்கு கொடுக்கிறது யோகா பயிற்சி. தினமும் தவறாமல் பயிற்சி செய்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் கட்டுப்படும்.

* யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறையாது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அது மிகவும் தவறு. உடல் எடை குறைவு மற்றும் உடல் கட்டுக்கோப்புக்கு யோகா மிகவும் அத்தியாவசியமானது. மேலும்

மூச்சுப் பயிற்சி--உடற்பயிற்சி


உடற்பயிற்சிகளைச் செய்யும் போதே மூச்சுப் பயிற்சியும் கிடைத்து விடுகிறது. எடுத்துக் காட்டாக ஓடும் போது இதயத் துடிப்பு அதிகரித்து நிமிடத்திற்கு 72 துடிப்பு என்பது 150 துடிப்புகள் வரை செல்கிறது. இதனால் இதயம் மற்றும் நுரையீரல் வேகமாகச் செயலாற்றுகின்றன. இதுவும் ஒரு வகையான மூச்சுப்பயிற்சிதான்.
 
மூச்சுப்பயிற்சி மூலம் இரத்தத்தில் ஆக்சிஜனேற்றம் மிக வேகமாக நடைபெறுகிறது. உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும் தனியாக தினமும் மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. யோகாவில் ‘பிராணயாமம்’ என்ற தனி மூச்சுப் பயிற்சி உண்டு. சிலவற்றை இங்கு விளக்குகின்றேன்.
 
1. ஒரு நாசியை மூடுங்கள். இன்னொரு நாசி வழியாக முழுமையாக மூச்சை இழுத்து நான்கு வினாடிகள் வைத்திருங்கள். பிறகு அதே நாசி வழியே வெளியே மெதுவாக விட்டுவிடுங்கள். அடுத்த நாசியில் இதே பயிற்சி.

எளிய அழகுக் குறிப்புகள்





சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.

* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.


* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.


* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.


* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி,

நன்றி சொல்ல வேண்டும் உங்கள் கண்களுக்கு



அதிகமாக வேலை செய்த பின், கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ, கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும். கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று நோக்கக் கூடாது.
கண்ணில்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. ஆனால், அந்தக் கண்ணுக்கு, நாம் ஏதாவது நல்லது செய்கிறோமா? இல்லை. பார்வையில் ஏதாவது சிக்கல் ஏற்படும் போது மட்டும் தான், கண்ணைப் பற்றி நாம் அக்கறை கொள்கிறோம். கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.
அதற்கு சில ஆலோசனைகள்:
* காலையில், சூரிய உதயத்துக்கு முன், எழுந்து கொள்ளுங்கள். வாய் நிறைய தண்ணீரை நிரப்பி, கண்களை இறுக்கி மூடிக் கொள்ளுங்கள். 15 நிமிடத்திற்கு, கைகளால் தண்ணீரை, கண்களில் அடித்துக் கொள்ளுங்கள். தண்ணீர், சூடாகவும் இருக்கக் கூடாது; குளிர்ச்சியாகவும் இருக்கக் கூடாது.
* வெயிலில் அதிக நேரம் நின்றிருந்த பிறகு, உடனே கண்களைக் கழுவக் கூடாது. நீங்கள் நிற்கும் இடத்தின் வெப்ப நிலைக்கேற்ப, உடல் ஆசுவாசப்பட்ட பிறகே, கண்ணையும், முகத்தையும், தண்ணீரால் கழுவலாம்.
* தூரத்தில் இருக்கும் பொருட்களைப் பார்க்கும் பொருட்டு, அதிக நேரம் அதை உற்றுப் பார்க்காதீர்கள். கண்களுக்குத் தேவை யான அளவு, கண் சிமிட்டுவது அவசியம்.
* கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று நோக்கக் கூடாது.
* அதிகமாக வேலை செய்த பின், கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ, கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும்.
* இரவு அதிக நேரம் கண் விழித்திருத்தல், சூரிய உதயத்துக்குப் பின்னும் தூங்கிக் கிடத்தல் ஆகியவை, கண்ணுக்கு ஊறு விளைவிக்கும்.
* தூசி, புகை, அதிக சூரிய வெளிச்சம், அடர் காற்று ஆகியவற்றிலிருந்து கண்ணைப் பாதுகாப்பது அவசியம்.
* கண்ணை மேல், கீழ், பக்கவாட்டுகளில், நாளொன்றுக்கு 10 முறை அசைத்து, பயிற்சி செய்தால், கண் தெளிவாக இருக்கும். 10 முறை, கண்ணைச் சுழற்றவும் வேண்டும்.
* கண்ணுக்கு அதிகம் வேலை கொடுக்கும் சமயங்களில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், இடையில், ஐந்து நிமிடம், உள்ளங்கையால், இரு கண்ணையும் மூடியபடி அமர்ந்து, கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
* ஒரு ஸ்பூன் திரிபலா சூர்ணத்தில், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, இரவு முழுதும் ஊற வைக்க வேண்டும். காலையில், தண்ணீரை வடிகட்டி எடுத்து, அந்தத் தண்ணீர் மூலம் கண்ணைக் கழுவினால், கண் பிரகாசமாக இருக்கும்.
* குடல் சுத்தமாக இருந்தால், கண் பார்வையும் தெளிவாக இருக்கும். படபடப்பு, மன உளைச்சல், சோகம், கோபம், கவலை ஆகி யவை, கண்ணையும் பதம் பார்க்கக் கூடியவை. எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை, உணவில் அதிகம் சேர்த்துக்

Jul 7, 2012

இறந்தாரை உயிர்ப்பிற்கும் மருத்துவ முயற்சி!

How does a dead body get alive after deathநண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென நெஞ்சைப் பொத்திக் கொண்டு துடிக்கிறார். அவருக்கு ஏற்கனவே இருதய வருத்தம் இருப்பது உங்களுக்குத் தெரியும். இது மாரடைப்பு என்பது புரிகிறது. அம்பியூலன்சைக் கூப்பிடுவதற்கு முன்னரே சரிந்து விடுகிறார். முதல் உதவிச் சிகிச்சையில் பரிச்சியம் உள்ள நீங்கள் அவரின் நாடித் துடிப்பைப் பார்க்கிறீர்கள், அது நின்று விட்டது. மூக்கில் கை வைத்துப் பார்க்கிறீர்கள், சுவாசமும் நின்று விட்டது. அவசர அவசரமாக இருதய மசாஜ் செய்து செயற்கை சுவாசமும் கொடுக்கிறீர்கள். பிரயோசனமில்லை. வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது ஏற்கனவே மரணித்து விட்டதாக

Jul 6, 2012

உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி


உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள். ஆக்ஸ்போர்டு (Oxford) அகரமுதலி ஒரு பக்கத்தில் இந்த கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர்.20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 171,476 சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம்.
சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (750,000) இருக்கலாம். ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 500,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.
இந்த அகர முதலியில் மொத்தம் 31 தொகுதிகள். 37 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கப்பட்ட தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் (Tamil etymological Dictionary project) அண்மையில் முழுமையடைந்தது.
பாவாணர் தொடங்கிய இத்திட்டம். பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது.
உலகில் வேறெந்த மொழிகளுக்காவது இத்தனை (ஏறத்தாழ 500,000) சொற்களின் சொற்பிறப்பியலோடு அகராதிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

Jul 3, 2012

மசாலா பொருட்களைப் பயன்படுத்துவது எப்படி?--சமையல் குறிப்புகள்


ளதள தக்காளி குருமா, கமகமக்கும் கறிக்குழம்பு, பெப்பர் பீஸ் மசாலா... நினைக்கும்போதே, நாக்கில் எச்சில் ஊறும்தானே! வாய்க்கு ருசியையும் சுண்டி இழுக்கும் மணத்தையும் ஒருசேர அளிப்பவை மசாலாப் பொருட்கள். ஆனால், இவை எந்த அளவுக்கு உடலுக்கு நல்லவை?

''பொதுவாக மசாலா சேர்த்த உணவு வகைகளைக் பகல் பொழுதில் சாப்பிடுவதுதான் நல்லது. அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். இதில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் உள்ள நார்ச்சத்து உடலில் கொழுப்பைச் சேரவிடாமல் வெளியே தள்ளிவிடும். அதே சமயம், மசாலாப் பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும். உமிழ்நீர் சுரப்பை அதிகப்படுத்தி உணவு ஜீரணத்துக்கு மசாலா

சர்க்கரையைக் கரைக்கும் ஓமக்களி --சமையல் குறிப்புகள்


ர்க்கரை விலை எகிறும் வேகத்தில்... சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் எகிறுவதுதான் வேதனை. சர்க்கரை நோயாளிகளின் பட்டியலில் உலக அளவில் சீனாவுக்கு முதல் இடம். இந்தியாவுக்கு இரண்டாவது இடம். நினைத்துப் பாருங்கள்... நம் முன்னோர்களில் இவ்வளவு பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது கிடையாது. காரணம், அவர்களின் உணவுப் பழக்கம். நாம் மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் சில இங்கே...

மாம்பருப்புத் துவையல்

தேவையானவை: மாம்பருப்பு - 200 கிராம், மிளகு, சீரகம், மஞ்சள் தூள் - தலா அரை தேக்கரண்டி, பூண்டு - 6 பல், கடலைப் பருப்பு, கறுப்பு உளுந்து - 4 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2, தேங்காய் - ஒரு துண்டு, உப்பு, எண்ணெய் -

விளாம்பழத்தில் மருத்துவ மகத்துவங்களும் அதிகம்-பழங்களின் பயன்கள்



ணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கு மிகச் சரியான உதாரணம், விளாம்பழம். இனிப்பும் புளிப்பும் கலந்த ருசியோடு, இனிய மணத்தோடு இருக்கும் விளாம்பழத்தில் மருத்துவ மகத்துவங்களும் அதிகம். விளா மரத்தின் ஒவ்வொரு பாகமும் அபூர்வமான மருத்துவ குணங்கள் அடங்கியதே.
மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி

செல்லும் சாலையில் உள்ள திருநின்றியூர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் தல விருட்சம் இதுதான். இந்த மரத்தின் பழங்களைக் குரங்குகள் விரும்பிச் சாப்பிடுவதால், வட மொழியில் 'கபி ப்ரியா’ என்றும் ஆங்கிலத்தில், 'மங்கி ட்ரீ’ என்றும் விளா மரத்துக்குப் பெயர்கள் உண்டு. சுத்தியால் உடைத்துத்தான் விளாம்பழத்தின் ஓட்டை உடைக்க முடியும். உள்ளே இருக்கும் பிசின் போன்ற சதைப் பகுதியை அப்படியே சாப்பிடலாம். சிலர் சர்க்கரை அல்லது தேங்காய்ப் பால் மற்றும் வெல்லத்துடன் பானமாக்கி, குடிப்பதும் உண்டு. விளா மரத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி பட்டுக்கோட்டை சித்த மருத்துவர் பாலசங்கரியிடம் கேட்டோம். அத்தனைவிதமான பலன்களையும் ஆர்வத்தோடு விவரித்தார்.
விளா மரத்தின் இலை, காய், பழம், பழத்தின் ஓடு, பட்டை, பிசின், வேர்

பயமே விஷம் ஆகலாமா? --உபயோகமான தகவல்கள்



'ஒரு விஷயம் தெரியுமா? பாம்பு கடித்த ஒருவர் அதன் விஷத்தால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் 'பாம்பு கடித்துவிட்டதே’ என்ற அதிர்ச்சி காரணமாகப் பாதிப்படைகின்ற நிகழ்வுகளே இங்கு அதிகம்.
ஆம், எல்லாப் பாம்புகளுமே விஷத்தன்மை கொண்டவை அல்ல. இந்தியாவில் காணப்படும் சுமார் 200 வகைப் பாம்புகளில் நச்சுத்தன்மை கொண்டவை வெறும் 52 வகை மட்டுமே. தமிழ்நாட்டில் உள்ள பாம்புகளில் கட்டு விரியன், கண்ணாடி விரியன், ரம்பச் செதில் கொண்ட விரியன், நாகப் பாம்பு, பவழப் பாம்பு, ராஜநாகம் போன்றவைதான் கொடிய விஷம் கொண்டவை.
கடித்த பாம்பைப் பொருத்து பாதிப்பு ஏற்படும். உரிய தருணத்தில் சரியான முதல்

வேர் உண்டு வினை இல்லை! --இய‌ற்கை வைத்தியம்

சங்குப்பூக்கொடிக்கு மாமூலி, கன்னிக்கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இலை, வேர், மலர்கள், விதை ஆகியவற்றை மருத்துவத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.

கீழாநெல்லியின் முழுச் செடி, யானை நெருஞ்சில் இலை, அருகம்புல்,  சங்குப்பூக்கொடியின் வேர் என அனைத்திலும் வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றோடு ஐந்து மிளகையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். 10 நாட்களுக்குத் தினமும் காலையில், இந்தக்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...