Jan 31, 2013

வளமான வாழ்வு தரும் வலம்புரி சங்கு

இயற்கையாய் கிடைக்கும் பொருள்களில் இறைஅம்சம் பொருந்தியது மூன்று.  
1 .  ருத்ராட்ச்சம்  - இது சிவனுக்கு உரியது.
2 .  சாலக்கிராமம் - இது மகாவிஷ்ணுவுக்கு உரியது.
3 . வலம்புரி சங்கு - மகாலட்சுமிக்கு உரியது.
மகாலக்ஷ்மி வாசம் செய்யும் மங்கள பொருள்களில் வலம்புரி சங்கு முதலிடம் பெறுகிறது.    
 சங்கு என்னவோ  கடலில் வாழும் மெல்லுடளிகள் தான். என்றாலும் ஹிந்துக்கள் பூஜை அறையிலும்,  கோவில்களில் வணங்கும்  பொருளாகவும் வலம்புரி சங்கு இருக்கிறது.

எங்கெல்லாம் வலம்புரி சங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் அந்த திருமகள் இருப்பாளாம்.

எங்கெல்லாம் சங்கின் ஓசை கேட்கிறதோ அங்கெல்லாம் மகாலட்சுமி நித்திய வாசம் செய்வாளாம்.

மகாலக்ஷ்மி.......

இந்த செல்வ திருமகளின் அருள் பார்வை மட்டும் கிடைத்து விட்டால்,  குப்பையில் இருப்பவன் கூட கோபுர உச்சிக்கு   போய் விடலாம்.  அன்றாட சோத்துக்கே அல்லாடும் குடும்பத்தில் பிறந்து இருந்தாலும், அரசன் போல் வாழலாம்.

செல்வம் இழந்து, செல்வாக்கிழந்து, செல்லாகாசாகி போனவர்கள் கூட,  எதை இழந்தார்களோ,  எங்கே இழந்தார்களோ,  அதை அங்கேயே பெறலாம்.

முயற்சித்த  காரியங்களில் முழுத்தடை, தொழில் உத்தியோக ரீதியாக வருமான குறைவு,  குடும்பத்தில் வம்பு சண்டைகள் இருக்கவே இருக்காது.

கடன் கொடுக்கும் அளவுக்கு வருமானம் உயரும்.  புரிந்து கொள்ளாமல் புறம் பேசியவர்கள், அறிந்து கொள்ளாமல் அலச்சியம் செய்தவர்கள் எல்லாம் தேடி வரும் நிலை உருவாகும்.

வலம்புரி சங்கின் ஓம் என்னும் ஓங்கார பிரணவ மந்த்திரத்தை மைல் கணக்கில் ரீங்காரம் செய்யும் தன்மை படைத்தது.  இந்த சங்கை தான் மகாவிஷ்ணு கையில் வைத்திருக்கிறார்.  சூரிய பகவான் வைத்திருக்கிறார்.  துர்க்கை அம்மனின் கையில் வலம்புரி சங்கு தான் இருக்கிறது.

1000 சிப்பிகள் சேர்ந்தது ஒரு இடம்புரி சங்கு.
1000 இடம்புரி சங்குகள் சேர்ந்தது ஒரு வலம்புரி சங்கு.

  • இந்த வலம்புரி சங்கை அவரவர்கள் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் சுத்தமாக வைத்து பூஜித்தால் நீங்காத செல்வம் பெருகும்.

  • ஆடி மாதம் பூர நட்ச்சத்திரம்,  புரட்டாசி பவுர்ணமி,  ஆணி மாதம் வளர் பிறையுடன் கூடிய அஷ்டமி,  அல்லது சித்திரா பவுர்ணமி அன்றும் வலம்புரி சங்கில் பால் வைத்து,  மகாலட்சுமிக்கு  வேண்டிய நெய்வேத்தியங்களை படைத்து பூஜை செய்தால் தன பாக்கியமும், பொன்,  பொருள், ஆடை, ஆபரணம் சேர்வதுடன்,  இதை செய்கிற தம்பதிகள் தீர்க்க ஆயுளுடன் நோய் இல்லாமல் வாழ்வார்கள்.

  • ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் வைத்து துளசியை அதில் போட்டு அந்த நீரை பருகினால் ஆயுள் விருத்திக்கும்.

  • புத்திரகானான குருவுக்கு பஞ்சமி திதியன்று வலம்புரி சங்கில் பசும் பால் வைத்து பூஜித்தால் பிள்ளை இல்லாத தம்பதியர்க்கு பிள்ளை பிறக்கும்.

  • பிறந்த பிள்ளைக்கு வலம்புரி சங்கில் பால் வைத்து, அந்த பாலை புகட்டினால் குழந்தை ஆரோக்கியத்தோடு இருக்கும். அதோடு கண்திருச்ட்டி, முடி மாந்த்தம், பாலரிஷ்ட்டம் அணுகாது. 

  • செய்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த சங்கில் பசும் பால் வைத்து 27 செவ்வாய் கிழமைகள் அம்மனை பூஜித்தால் எல்லா தோஷங்களும் விலகி  திருமணம்  நடைபெறும்.

  • பில்லி,  , செய்வினை கோளாறுகள் சங்கிருக்கும் வீட்டை அணுகாது. 

  • வீட்டில் பூஜை அறையில் வலம்புரி சங்கை வைத்து வழிபடுபவர்களுக்கு சில வழி காட்டிகள். 

1 . தட்டு அல்லது வாழை இலையில் வைக்க வேண்டும்.
2 . தட்டு அல்லது இலையின் மீது பச்சை அரிசி அல்லது நெல் பரப்ப வேண்டும்.
3 .  சங்கு வடக்கு அல்லது தெற்கு முகமாக இருக்க வேண்டும்.
4 . சங்கில் தண்ணிர் வைத்து துளசி போடலாம்.
5 . பணம், நாணயங்கள், தங்கம் அல்லது நவரத்திங்கள் வைக்கலாம்.
6 .  அல்லது பூக்கள் வைக்கலாம்.

வலம்புரி சங்கின் மந்திரம்.

பாஞ்ச ஜன்யாய வித்மஹே
சங்க ராஜாய தீமஹி 
தந்தோ சங்கப் பரசோதயாத் 

மகாலக்ஷ்மி வாசம் செய்யும் வலம்புரி சங்கை பூஜித்து வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துகிறோம்.

தாஜ் மஹால் பழைய சிவன் கோவில், அதிர்ச்சி உண்மை அம்பலம்

tajmahal old hindu shiva temple


தாஜ் மஹால் காதல் சின்னம் அல்ல – பழைய சிவன் கோவில், அதிர்ச்சி உண்மை அம்பலம்
காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச் சமாதிதான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன் கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
தாஜ் மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டு உள்ளது, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி. என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார்.
ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக் கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கைக் குறிப்பான பாத்ஷா நாமாவில் ஆகராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்ந்தெடுத்தமை குறித்து குறிப்புக்கள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறுகின்றார்.
இச்சிவன் கோவிலை கையளிக்க சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய் சிங் ராஜாவுக்கு அனுப்பப்பட்ட இரு ஆணைகள் இன்றும் பத்திரமாகவே உள்ளன என்கிறார் பேராசிரியர். கைப்பற்றிக் கொள்கின்ற கோயில்கள், பெரிய மாளிகைகள் ஆகியவற்றில் முகாலய மன்னர்கள் மற்றும் இராணிகள் ஆகியோரின் உடல்களை வழக்கமாக புதைத்து வந்திருக்கின்றனர் முகாலய மன்னர்கள், ஹுமாயூன், அக்பர், எத்மத் உத் தவுலா, சப்தர் ஜங் ஆகியோரின் உடல்கள் புகைக்கப்பட்ட இடங்கள் இதற்கு சான்று என்கிறார் பேராசிரியர்.
தாஜ் மஹால் என்கிற பெயரை எடுத்துக் கொள்கின்றபோது ஆப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் மஹால் என்கிற பெயர் எந்தக் கட்டிடத்துக்கும் கிடையாது, மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பது. மும்தாஜ் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டி இருப்பாரானால் மும்தாஜ் என்கிற பெயரில் இருந்து மும் என்பதை அப்புறப்படுத்தி விட்டு தாஜ் என்பதை மாத்திரம் நினைவுச் சின்னத்துக்கான பெயரில் ஏன் பயன்படுத்தி இருக்க வேண்டும்? என்று பேராசிரியர் ஒரு நியாயமான கேள்வியை கேட்கின்றார்.
தாஜ் மஹாலின் உண்மையான வரலாற்றை மறைக்க பிற்காலத்தில் புனையப்பட்ட பொய்தான் சாஜகான் – மும்தாஜ் காதல் கதை என்கின்றார். நியூயோர்க்கை சேர்ந்த பேராசிரியரான மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப்படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். மில்லரின் கருத்துப்படி தாஜ் மஹாலின் வயது 300 வருடங்களுக்கு மேல். இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கின்றார். ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணியான அல்பேர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638 ஆம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் ஆக்ரா பற்றி விதந்து எழுதப்பட்டு இருக்கின்றன, ஆனால் தாஜ் மஹால் கட்டப்படுகின்றமை சம்பந்தமாக எக்குறிப்புக்களும் இடம்பெற்று இருக்கவில்லை.
ஆனால் மும்தாஜ் இறந்து ஒரு வருடத்துக்குள் ஆங்கில பயணியான பீட்டர் மண்டி ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் தாஜ் மஹாலின் கலை நயம் பற்றி விதந்து எழுதப்பட்டு இருக்கின்றது. ஆனால் இன்று சொல்லப்படுகின்ற வரலாற்றின்படி மும்தாஜ் இறந்து 20 வருடங்களுக்கு பிறகல்லவா தாஜ் மஹால் கட்டப்பட்டு இருக்கின்றது? இவற்றையும் ஆதாரங்களாக முன்வைக்கின்றார் பேராசிரியர் ஓக்.
தாஜ் மஹாலின் பெரும்பகுதி பொதுமக்களின் பாவனைக்கு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை, காரணம் கேட்டால் பாதுகாப்பு என்று சொல்லப்படுகின்றது, தாஜ் மஹாலினுள் தலையில்லாத சிவன் சிலையும், இந்துக்கள் பூசைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் இருக்கின்றன என்கிற பேராசிரியர் தாஜ் மஹாலின் கட்டிட கலை நுட்பங்களை பார்க்கின்றபோதும் இது ஒரு இந்துக் கோவில் என்பது தெளிவாக தெரிகின்றது என்கிறார்.
பேராசிரியர் இவ்வளவு விபரங்களையும் தாஜ் மஹால் – உண்மையான வரலாறு என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் இந்திரா காந்தி தலைமையிலான அரசால் தடை செய்யப்பட்டு உள்ளது.
உண்மை இனியாவது வெளி வர வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர் கொண்ட குழுவால் தாஜ் மஹாலில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் பேராசிரியர்.

மியன்மாரில் பண்டைய சூளாமணி கோயில் (A-D 1174-1211

myanmar Hindu Temple

மியன்மாரில் பண்டைய கலாசார நகரமான பகான் நகரத்தில் தமிழ் கட்டிட கலைஞர்களால் கட்டப்பட்டுள்ள சூளாமணி கோயில் (A-D 1174-1211)....உலகத்தை ஆண்டவன் தமிழன்.. தமிழர் கட்டடகலையை உலகத்திற்கு பகிர்ந்துதந்த நாம் எம் மூதாதையர்களை நினைத்து தமிழராய் பெருமைகொள்வோம்

விண்டோஸ் 7 ஷார்ட் கட் கீகள்


[ வியாழக்கிழமை, 31 சனவரி 2013,
கணனியில் வேலைகளை மிக சுலபமாகவும், துரிதமாகவும் செய்வதற்கு ஷார்ட் கட் கீகள் பயன்படுகின்றன.விண்டோஸ் கீயுடன் சேர்த்து கீழ்க்கண்ட கீகளை அழுத்தினால் குறிப்பிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
H: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.
I: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்கிறது அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது.
Shft+ Arrow: அப்போதைய விண்டோவினை அடுத்த திரைக்கு மாற்றுகிறது.
D: அனைத்து விண்டோக்களையும் மினி மைஸ் செய்து, டெஸ்க்டொப் திரையைக் காட்டுகிறது.
E: விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும், My Computer Folder காட்டப்படும்.
F: தேடல் விண்டோ காட்டப்படும்.
G: உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சுற்றிக் காட்டும்.
L: டெஸ்க்டொப்பினை லாக் செய்திடும்.
M: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்திடும்.
R: ரன் விண்டோவினை இயக்கும்.
TAB: முப்பரிமாணக் காட்சி.
Pause: சிஸ்டம் ஆப்லெட் இயக்கப்படும்.

Jan 30, 2013

பெப்ரவரி 15இல் அதிவேக விண்கல் பூமியை மிக அருகே கடந்து செல்லும்!





images47.jpgஎதிர்வரும் பெப்ரவரி 15ம் திகதி ஒரு அதிவேக விண்கல் பூமியை மிக அருகே கடந்து செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 DA14 என்று பெயரிடப்பட்ட இந்த விண்கல் பூமிக்கு சுமார் 25,500 கி.மீ. தூரத்தில் வரவுள்ளது. 143,000 டன் எடையும் 148 அடி நீளமும் கொண்ட இந்த விண்கல் ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் அளவில் பாதியளவுக்கு உள்ளது
.
25,000 கி.மீ. தூரம் என்ன ரொம்ப பக்கமா என்று கேள்வி கேட்கலாம். அண்டவெளியின் விஸ்தீரணத்தை நாம் உணர்ந்தால் இது எவ்வளவு சிறிய இடைவெளி என்பது புரியும்.
நமது தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள் பூமியிலிருந்து சுமார் 36,000 கி.மீ. உயரத்தில் தான் பறந்து கொண்டுள்ளன. இந்த செயற்கைக் கோள்களைவிடப் பக்கமாக பூமியை நெருங்கிச் செல்லப் போகிறது இந்த விண்கல்.

1908ம் ஆண்டு இதே போன்ற ஒரு விண்கல் தான் ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் விழுந்து பல்லாயிரம் சதுர கி.மீ. பரப்புள்ள வனப் பகுதியை தரைமட்டமாக்கிவிட்டு, பேரழிவை ஏற்படுத்திவிட்டுப் போனது என்பது நினைவுகூறத்தக்கது என்கிறார் நாஸா அமைப்பின் விண்கல் எக்ஸ்பர்ட்டான டோன் இயோமேன்ஸ்.

“Tunguska Event” என்று அழைக்கப்படும் இந்த விண்கல் தாக்குதலால் சைபீரியாவின் அந்தப் பகுதி இன்னும் பனி படர்ந்து கிடக்கும் வெறும் தரையாகவே உள்ளது. அங்கு இன்னும் புல், பூண்டு முளைக்கவில்லை.

ஆனால், இந்த 2012 DA14 விண்கல் நம்மை எட்டிப் பார்த்துவிட்டுப் போகப் போகிறதே தவிர, பூமியில் மோதப் போவதில்லை என்று நாஸா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

விட்டமின் ஈ அதிகம் உள்ள 10 உணவுகள்!



  • 14
     
விட்டமின் ஈவைட்டமின்கள் குறைபாட்டினால் நிறைய பிரச்சனைகள் உடலும் வரும். அதிலும் சரியான உடல் வளர்ச்சிக்கு, வைட்டமின்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும். வைட்டமின்களில் நிறைய உள்ளன. அவை வைட்டமின் ஏ, சி, ஈ, டி, பி12, பி11. இத்தகைய வைட்டமின்கள் நிறைய நன்மைகளை உள்ளடக்கியுள்ளன. இருப்பினும் அதில் வைட்டமின் ஈ மிகவும் முக்கியமான ஒன்று. வைட்டமின் ஈ சத்துக்கள் உடலில் அதிகம் இருந்தால், உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம்.
ஏனெனில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், கிருமிகள் உடலில் தங்காமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல், வைட்டமின் ஈ சத்து சருமத்திற்கும் சிறந்தது. இந்த வைட்டமின் ஈ- நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், முதுமை தோற்றத்தை தள்ளிப் போடலாம். மேலும் உடலில்

அல்கஹோல் உள்ளெடுப்பதால் ஏற்படும் 5 வகையான பாதிப்புக்கள்!




  • 39
     
Beer splash in shape of heart isolated on whiteஇன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் ஆல்கஹால் பருகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் ஆல்கஹால் அருந்திக்கொண்டிருந்தனர். தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர். அத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால், அவர்கள் இல்லை, அது ஃபேஷன் நான் அவ்வளவாக அருந்தமாட்டேன் என்று சொல்வார்கள்.
ஆனால் என்ன தான் ஃபேஷனாக இருந்தாலும். அவற்றை குடிப்பதால், உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையைச் சொன்னால், நம்பவேமாட்டீர்கள். அந்த அளவு நோயானது ஏற்படும். இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாது. ஆனால் வயதுக்கு ஏற்றவாறு குறைத்துக் கொண்டு வந்தால், நல்லது. ஒரு வேளை அவ்வாறு செய்யாவிட்டால், பின்

Jan 29, 2013

அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் மிதக்கும் மாகாணங்கள்

அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் மிதக்கும் மாகாணங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013
அவுஸ்திரேலியாவில் வீசிய கடும் சூறாவளி மற்றும் மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவின் குயின்ஸ் லேன்ட் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரமாக கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதுடன், வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது.
இதனையடுத்து குயின்ஸ் லேன்ட் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசுகள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளன.
மேலும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க 20க்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் உயிர்ச்சேதம், பொருட்சேதம் குறித்து எவ்வித தகவல்களும் இல்லை.

பிரபலமான சமூக வலைத்தளங்களின் வரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்தது கூகுள் பிளஸ்




[ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013,
இணையத்தள வளர்ச்சியின் பயனாக உருவான சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுவருகின்றன. இதனால் காலத்திற்கு காலம் பல்வேறு புதிய சமூகவலைத்தளங்கள் உருவெடுத்து வருகின்றன.இவ்வாறு தோன்றிய கூகுளின் கூகுள் பிளஸ் சமூகவலைத்தளமானது தற்போது இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது.
லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் இணையத்தளங்களுக்கான ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களின் படியே கூகுள் பிளஸ் ஆனது உலகின் பிரபல்யமான சமூகவலைத்தளங்களின் வரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதேவேளை 1 பில்லியனிற்கும் மேற்பட்ட பாவனையாளர்களுடன் பேஸ்புக் தளமானது தொடர்ந்தும் முன்நிலையில் காணப்படுவதுடன், வீடியோக்களை பகிரும் வலைத்தளமாகிய YouTube ஆனது Twitter சமூக வலைத்தளத்தினை

Jan 28, 2013

MS Power Point மென்பொருளுக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய ஒன்லைன் சேவைகள்!Top News


News Service Presentation என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது PowerPoint தான். ஆனால் அதை விரும்பாதவர்களும் இங்கே இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் சில மாற்று மென்பொருட்களை விரும்புவார்கள். அத்தகையவர்கள் பயன்படுத்த சில மென்பொருட்களை காண்போம்.
Prezi
ஆன்லைன் மூலம் Presentation உருவாக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தளம். உதாரணமாக நாம் ஒரு மேப் போன்றவற்றை விளக்கும் போது, மேப்பை முதலில் மொத்தமாகவும், பின்பு அடுத்த Slide - களில் அதன் பகுதிகளை காட்டுவோம், இதில் அவ்வாறு இல்லாமல் ஒரே Slide - இல் Zoom in, Zoom out வசதிகள் உள்ளன. கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
  
SlideRocket
ஆன்லைன் மார்க்கெட்டிங் Presentation , ஒரு தளம் குறித்த Presentation போன்றவற்றை உருவாக்க இது ஒரு சிறந்த தளம். Twitter, Facebook, YouTube போன்ற Plugin வசதிகள் உட்பட பல வசதிகளை இது கொண்டுள்ளது.
Google Docs Presentation (Google Drive)
MS PowerPoint போன்று எளிதாக வேண்டும் என்பவர்களின் சாய்ஸ் இது தான். மிக எளிதாக செய்ய வேண்டும் என்பவர்கள் இதில் முயற்சி செய்யலாம்.


கைவிரல் நகங்களைப்போன்றே கால்விரல் நகங்களும் கவர்ச்சியானதாக விளங்க கடைப்பிடிக்கவேண்டியவை...

News Service கைவிரல் நகங்களைப் போல போலவே கால்விரல் நகங்களையும் கவனிக்க வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். பாதங்களை அழகு படுத்த அழகு நிலையங்களில் பெடிக்யூர் செய் யப்படுகிறது. இதற்கு அதிகம் செல வழிக்க வேண்டியிருக்கும். ஆனால் வீட்டிலேயே நகத்தை அழகுபடு த்த ஆலோசனை கூறுகின்றனர் நிபுணர்கள் பின்பற்றிப் பாருங்களேன். கைவிரல் நகங்களுக்கு காட்டும் அக்கறையை பெரும்பாலோ னோர் பாத விரல் நகங்களுக்கு காட்டுவதில்லை. இதற்கு காரணம் அது யார் கண்ணிலும் படாமல் மறைவாக இருப்பதுதான்.
அதிகம் வளர்ந்தால் ஆபத்து :பாத நகங்களை அதிகம் வளரவிடக்கூடாது. ஏனெனில் அவை அடர் த்தியாக வளர்ந்து திக்காகிவிடும். எனவே விரலை தாண்டி வளர்ந் தாலே அவற்றை வெட்டி ஷேப் செய்துவிட வேண்டும். இல் லையெ னில் சதையில் குத்தி காயம் ஏற்படுத்திவிடும்.
  
கால் நகங்கள் அதிக கடினத் தன்மையுடன் இருக்கும் அவற் றை எளி தில் வெட்ட முடியாது. நகத்தை வெட்டுவத ற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...