கடந்த 1963ம் ஆண்டு கம்ப்யூட்டரை மக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில், சக இன்ஜினியர் பில்லுடன் சேர்ந்து மவுசை கண்டுபிடித்தார் டக்ளஸ். மரத்தில் செய்யப்பட்டு 2 உலோக வீல்கள், 3 பட்டன்களுடன் கூடிய மவுஸ் உருவாக்கப்பட்டது. 1968ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் நடந்த பிரமாண்ட கம்ப்யூட்டர் மாநாட்டில் மவுசை அறிமுகப்படுத்தி அதன் பயன்பாட்டை விளக்கினார். ஆனால், 1970ம் ஆண்டுதான் இதற்கு அவரால் காப்புரிமை பெற முடிந்தது. 1980களில் சிறிய மானிட்டருடன் கூடிய கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகுதான் மவுசின் பயன்பாடும் அதிகரிக்க தொடங்கியது.
கலிபோர்னியாவில் உள்ள ஆதர்டன் நகரில் மனைவி கரன் லியாரி மற்றும் 4 பிள்ளைகளோடு வசித்த டக்ளஸ், மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment