Sep 2, 2012

இருதய நோய் சம்மந்தமான ஒரு விழிப்புணர்வு!!! பிப். 22: இந்தியாவில் இதய நோய் அதிகரித்து வருகிறது. இதயநோய், நீரிழிவு, மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த ரூ.11,37,600 கோடி (237 பில்லியன் யு.எஸ் டாலர்) தேவை. இந்தியாவில் எச்.ஐ.வி., மலேரியா உள்ளிட்ட பரவக்கூடிய நோய்கள் குறைந்து வருகிறது. தற்போதுள்ள 36.2 சதவீதத்திலிருந்து 2030-ல் 21 சதவீதமாக குறைந்துவிடும். ஆனால் இதய நோய் 29 சதவீதத்திலிருந்து 2030-க்குள் 36 சதவீதமாக உயர்ந்துவிடும். ஆனால் அமெரிக்க, ரஷ்யா போன்ற நாடுகளில் இதயநோய் சதவீதம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் 35 வயது முதல் 64 வயது வரையிலானவர்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது. பொருளாதார அளவில் நாம் வளர்ச்சி ஊற்றுள்ளதால் உயர்தர சிகிச்சை பெற்று வாழ்நாள் நீடித்துள்ளது. தற்போது 75 முதல் 80 வயது வரை வாழ்கின்றனர். வருமானம் அதிகமானதால் அதிகம் உண்ணுகின்றனர். இதனால் சமையல் எண்ணெய் உபயோகம் அதிகரித்துள்ளது. இதனால் இதய நோய், கொழுப்பு, உயர் ரத்த அழுத்த நோய்கள் ஏற்படுகிறது. 1983-ல் எண்ணெய் உபயோகம் 31 லட்சம் டன்னாக இருந்தது. இது 1993-ல் 51 லட்சம் டன்னாகவும், 2003-ல் 1 கோடியே 50 லட்சம் டன்னாகவும் உயர்ந்துள்ளது. இதய நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் புகையிலை உபயோகத்தை நிறுத்தவும், உப்பு உபயோகத்தை குறைக்கவும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் மக்கள் பழங்கள், காய்கறிகள் அதிகம உபயோகிக்க அரசு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் காய்கறி, பழங்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி அதிக உற்பத்தி செய்ய ஊக்கம் அளிக்க வேண்டும். நமது கலாசார நடைமுறை பழக்க வழக்க உணவு முறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

இருதய நோய் சம்மந்தமான ஒரு விழிப்புணர்வு

பிப். 22: இந்தியாவில் இதய நோய் அதிகரித்து வருகிறது. இதயநோய், நீரிழிவு, மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த ரூ.11,37,600 கோடி (237 பில்லியன் யு.எஸ் டாலர்) தேவை. இந்தியாவில் எச்.ஐ.வி., மலேரியா உள்ளிட்ட பரவக்கூடிய நோய்கள் குறைந்து வருகிறது. தற்போதுள்ள 36.2 சதவீதத்திலிருந்து 2030-ல் 21 சதவீதமாக குறைந்துவிடும். ஆனால் இதய நோய் 29 சதவீதத்திலிருந்து 2030-க்குள் 36 சதவீதமாக உயர்ந்துவிடும்.

ஆனால் அமெரிக்க, ரஷ்யா போன்ற நாடுகளில் இதயநோய் சதவீதம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் 35 வயது முதல் 64 வயது வரையிலானவர்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது. பொருளாதார அளவில் நாம் வளர்ச்சி ஊற்றுள்ளதால் உயர்தர சிகிச்சை பெற்று வாழ்நாள் நீடித்துள்ளது. தற்போது 75 முதல் 80 வயது வரை வாழ்கின்றனர். வருமானம் அதிகமானதால் அதிகம் உண்ணுகின்றனர். இதனால் சமையல் எண்ணெய் உபயோகம் அதிகரித்துள்ளது. இதனால் இதய நோய், கொழுப்பு, உயர் ரத்த அழுத்த நோய்கள் ஏற்படுகிறது. 1983-ல் எண்ணெய் உபயோகம் 31 லட்சம் டன்னாக இருந்தது. இது 1993-ல் 51 லட்சம் டன்னாகவும், 2003-ல் 1 கோடியே 50 லட்சம் டன்னாகவும் உயர்ந்துள்ளது.

இதய நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் புகையிலை உபயோகத்தை நிறுத்தவும், உப்பு உபயோகத்தை குறைக்கவும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் மக்கள் பழங்கள், காய்கறிகள் அதிகம உபயோகிக்க அரசு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
அதோடு மட்டுமல்லாமல் காய்கறி, பழங்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி அதிக உற்பத்தி செய்ய ஊக்கம் அளிக்க வேண்டும். நமது கலாசார நடைமுறை பழக்க வழக்க உணவு முறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

இருதய நோய் (மாரடைப்பு) – ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை


நான் கடந்த 10.11.2011அன்று காலை ஏழே கால் மணி அளவில் செய்தித்தாள்கள் படித்து கொண்டிருந்தேன்.  இடது  தோளில் வலி இருந்து முன் கை வரை பரவியது.  உடல் முழுக்க வேர்த்த்து.  உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனை சென்று ஊசி போட்டு இ.சி.ஜி. எடுத்தோம்.  அந்த மருத்துவர் உடனடியாக இருதய மருத்துவ மனைக்கு செல்ல சொன்னார்.  நாங்கள் எங்களது குடும்ப மருத்துவரும் இருதய மருத்துவருமான டாக்டர் திரு கே.காமராஜ். எம்.டி. சிவகாசி அவர்களை பார்க்க சென்றோம்.  காலை ஒன்பதே கால் மணிக்கு சிவகாசி சென்று விட்டோம்.  (அந்த இரண்டு மணி நேரங்கள் – Golden Hours).  அவரது சிகிச்சையால் என்னை பிழைக்க வைத்து விட்டார்.  நான் இன்று உங்கள் முன்னே இருக்கிறேன்.
திரு ரவி நாக் அவர்களின் கட்டுரை இதை தான் பெரிதும் விளக்குகிறது.  திரு ரவி நாக் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகளும்,  மனமார்ந்த வாழ்த்துகளும்.  அவரது சேவை பெரிதும் பெருகட்டும். 

வணக்கம் - இந்த ஒர் நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். ஆம்
 மாரடைப்பு எனும் ஒரு கொடிய நோய் முன்பெல்லாம் பணக்காரர்களின் நோயாக இருந்து,  இப்போது ஏழை பணக்காரன்,  ஜாதி, மதம், சின்னவர்,

இருதய ரத்தக்குழாய் நோய் ஓர் அறிமுகம்!



இருதய நோயிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்று நம்மில் பலர் அறிந்திருப்போம்,
ஆனால் இருதய நோய் என்றால் என்ன என்பது பற்றி நமக்கு துல்லியமாக தெரிந்திருக்காது. அதனை கார்டியோ வாஸ்குலர் டிஸீஸ் என்பார்கள், கரோனரி ஆர்டெரி டிஸீஸ் என்றும், மயோகார்டியல் இன்ஃபார்க்ஷன், இஸ்கீமியா என்றெல்லாம் இருதய நோய்களை குறிப்பிடுவார்கள். இவை எல்லாம் ஒன்றுதானா? அல்லது இதில் எது அபாயகரமானது போன்ற நுணுக்கமான விவரங்கள் பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இருதய மற்றும் ரத்தக் குழாய்கள் தொடர்பாக எண்ணிலடங்கா மருத்துவ பெயர்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இவற்றில் அடிப்படையான சில பதங்களுக்கு விளக்கம் கிடைத்தாலே போதுமானது அல்லவா? மருத்துவரை நீங்கள் அணுகும்போது கீழ் வரும் தகவல்கள் தெரிந்திருந்தால் அவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இருதய ரத்தக்குழாய் நோய்
கார்டியோ வாஸ்குலர் டிஸீஸ் என்ற இருதய ரத்தக் குழாய் நோய் என்பது மிகவும் பரந்து பட்ட ஒரு பதம். இதன் பெயர் ஒரு குறிப்பிட்ட நோய் நிலைமையை குறிப்பிடுவதாக இருந்தாலும் சில பல நோய்களின் தொகுப்பு என்று கூறுவதே பொருத்தமாகும்.

Sep 1, 2012

IBM இன் புதிய அதி உயர் தொழில்நுட்ப கட்டடம் இத்தாலியில்!







முன்னனி கணினி தயாரிப்பு நிறுவனமான IBM, தனது அதி உயர் தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய நவீன கிளையை இத்தாலி, ரோம் நகரில் நிறுவியுள்ளது.
Iosa Ghini Associati என்ற நிறுவனத்தால் குறித்த கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு மரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன? தப்பிக்க வழி உண்டா?




பெண்களுக்கும் ஆண்களைப்போலவே மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாரடைப்பு குறித்த அறிகுறிகளை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இருதய நோய்: கண்டறியும் பரிசோதனைகள்.


இதயம் எப்படி இருக்கிறது என்று பரிசோதிப்பதற்கு இன்று விஞ்ஞானம் பல உபாயங்களைத்தந்திருக்கிறது.
அதில் மிக எளிய வழி காதுகொடுத்துக்கேட்டல் என்று முந்தைய பதிவில் பார்த்திருந்தோம்.
அதற்கு அடுத்ததாக மேலும் பல இதயச்சோதனைகள் வந்திருக்கின்றன.
இரத்தப்பரிசோதனை, ஈசிஜி(ECG), எக்ஸ்ரே(X-Ray),எக்கோகாடியோகிராம்(Echo cardiogram),எக்சர்சைஸ் ஈசிஜி(Exercise-ECG), அஞ்சியோகிறாம்(Angiogram),சீடி ஸ்கான் (CT Scan),MRI ஸ்கான்,கதிர்வீச்சு ஸ்கான்(Radio Nuclide)., என பலவகையான பரிசோதனை முறைகள் இருக்கின்றன.
   மருத்துவம் என்பது மந்திர தந்திர மல்ல.நோயொன்றை கண்டறிவதற்கு முன்னர் பல தகவல்கள் திரட்டப்படும்.இந்தத்தகவல்கள் ஆராயப்பட்டுத்தான் நோய் பற்றிய தீர்மானம் எடுக்கப்படுகிறது.

நல்ல அம்மாவாக 20 வழிகள்



 
உலகிலேயே தனது அம்மாவைப் போல சிறந்தவர் இருக்க முடியாது. சிறந்த அறிவாளி யாரும் இருக்க முடியாது என்றுதான் ஒவ்வொரு குழந்தையும் நினைக்கும். தனது குழந்தையிடம் அதிக நெருக்கமாகவும், பாசமாகவும் இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு அம்மாவும் விரும்புவார். குழந்தைக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டிய தாய், அந்தக் குழந்தையுடன் நெருக்கமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, தனது குழந்தையிடம் நெருக்கமாக இருக்க பல்வேறு வல்லுநர்களும், புத்தக ஆசிரியர்களும் 20 வழிகளை பட்டியலிட்டு உள்ளனர்.

பூமியின் புதிர்கள்


 
சூரிய மண்டலத்தில் உள்ள 8 கிரகங்களில் பூமிதான் அற்புதமானது.
இங்குதான், விதம்விதமான உயிரினங்கள் வாழ்கின்றன. வகைவகையான தாவரங்கள் வளர்கின்றன. காற்று இருக்கிறது. அது தென்றலாகவும் புயலாகவும் வீசுகிறது. எரிமலைகள் இருக்கின்றன. பல்வேறு வடிவங்களில் தண்ணீர் இருக்கிறது.
உயிரினங்களில் பறப்பவை இருக்கின்றன. அவற்றில் எத்தனையோ விதம்.
நீந்துகிறவை இருக்கின்றன. அவையும் பலவிதம்.
படிக்கிறவை எழுதுகிறவையும் இருக்கின்றன. ஆம். மனிதர்களைத்தான் கூறுகிறேன். மனிதர்கள் இயற்கையை ஆள்கிறார்கள். அல்லது ஆள முயற்சி செய்கிறார்கள்.
பூமி தோன்றிய கதை நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகிக் கொண்டே போகிறது. ஆம். புதிது புதிதாய் வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகின்றன.

பெண்கள் தினசரி இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம்.

தூக்கம் என்பது பகலில் நாம் செலவிடும் ஆற்றலை மீண்டெடுக்கும் நிலை என்னும் எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால் விஞ்ஞானம் அதை  மறுக்கிறது. ஒரு நாள் இரவு எட்டு மணி நேரம் நன்றாகத் தூங்கினால் உடல் சேமிக்கும் ஆரோக்கியமும் ஒரு துண்டு ரொட்டியில் கிடைக்கும்  ஆரோக்கியமும் ஒரே அளவே எனக் கூறி விஞ்ஞானம் வியக்க வைக்கிறது.

தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் டாக்டர்கள் எச்சரிக்கை




பெண்களுக்கு தினமும் 6 மணி நேர தூக்கம் அவசியம். சரியாக தூங்காவிட்டால் மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம் என்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். பெண்களின் தூக்கம் குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செரில் தாம்சன் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 40-50 வயது பெண்கள் 412 பேரின் மருத்துவ விவரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முக்கியமாக,

விண்வெளியில் 5வது முறையாக நடந்து சுனிதா வில்லியம்ஸ் சாதனை



வாஷிங்டன் : அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து 5வது முறையாக விண்வெளியில் நடந்து பணிகளை செய்தார். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவானது ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து சர்வதேச ஆராய்ச்சி மையத்தை விண்வெளியில் அமைத்துள்ளது. அங்கு தங்கி சுனிதா ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் சுனிதா, சக விண்வெளி வீரரான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அகிஹிகோ ஹாஸ்ஹைடு டன் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி மாலை 5.46க்கு விண்வெளியில் நடந்து பணிகளை மேற்கொண் டார். மீண்டும் நேற்று அதிகாலை 2.03 நிமிடத்துக்கு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...