Feb 3, 2013

நிலவில் வீடுகட்டும் முயற்சி : முப்பரிமாணப் படங்கள் வெளியீடு!



நிலவின் தரையில் காணப்படும் மூலப் பொருட்களைக் கொண்டே அங்கு எதிர்காலத்தில் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள கட்டடங்களின் முப்பரிமாண வடிவமைப்பு படங்களைப் பொறியியல் ஊக்குவிப்பாளர்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதாவது முதலில் பூமியில் இருந்து இக்கட்டடங்களின் கட்டமைப்பு நிலவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து 3D பிரிண்டர்கள் மூலம் பெறப்பட்ட ஷெல் (Shell) மூலம் வடிவமைக்கப் படவுள்ளது.

இந்த 3D பிரிண்டர்கள் நிலவில் ரோபோட்டுக்கள் மூலம் இயக்கப் படவுள்ளதுடன், இவை ரெகொலித் (regolith) என அழைக்கப்படும் நிலவில் உள்ள மண்ணைப் பயன்படுத்தி கட்டமைப்பைச் சுற்றியுள்ள cover ஐயும் ஆக்கவுள்ளன. இக்கட்டடம் அமைப்பதற்கு நிலவின் தென் முனையில் உள்ள துருவப் பகுதி மும்மொழியப் பட்டுள்ளது. மேலும் வருங்காலத்தில் நிலவில் தங்கி விண்வெளி ஆராய்ச்சி செய்யக் கூடிய குறைந்தது 4 விண்வெளி வீரர்களுக்கான வீடாக இக்கட்டடங்கள் ஆரம்பத்தில் பயன்படுவதுடன் இது மேலும் விரிவு படுத்தப் படலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிலவில் உள்ள செயற்கை regolith மண் சிலிக்கன், அலுமினியம், கல்சியம், இரும்பு மற்றும் மக்னீசியம் ஒக்ஸைட்டு ஆகிய மூலகங்களைக் கொண்டிருப்பதுடன் இவை 3D பிரிண்டர்கள் மூலம் உபயோகப் படுத்தப் பட்டு திண்ம நிலையிலான கட்டமைப்புக்களை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். இச் செயற்திட்டத்தில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகமான ESA உம் பங்களிப்புச் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வருங்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் 3D பிரிண்டர்களின் தொழிநுட்ப உதவியுடன் சந்திரன் மற்றும் வேற்றுக்கிரகங்களில் கட்டட நிர்மாணங்கள் மேற்கொள்ளப் படவுள்ளது என்பதுடன் இது மிகவும் பிரயோசனம் மிக்க வளர்ந்து வரும் துறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில் வெளியான டேப்லெட் கணினிகள்






கடந்த மாதம் 2013ன் ஆரம்பம் என்பதால் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களது டேப்லெட் கணினிகளை இந்தியாவில்சந்தைப்படுத்தின. விலையுயர்ந்த, சாதாரண விலையுடைய டேப்லெட்களும் விற்பனைக்கு வந்தன.
எந்தெந்த டேப்லெட்கள் கடந்த மாதம் வெளியானது மற்றும் அவற்றின் நுட்பக்கூறுகள் ஆகியவற்றின் விவரங்களை கீழேவிரிவாகக்கொடுத்துள்ளோம்.

மதுரை திடீர் நகரில் பயங்கர தீவிபத்து - 200 கடைகள் எரிந்து சாம்பல் - பல கோடி சேத


 More Than 200 Shops Gutted Madurai Fire Accident ம் மதுரை: மதுரை திடீர் நகர் பகுதியில் இன்று அதிகாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 200 மரக் கடைகள் தீயில் கருகி சாம்பலாயின. ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் சேர்ந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தன. இந்த தீவிபத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே திடீர் நகரில் முத்துப்பாலத்தின் கீழே நாயடிசந்தை பகுதி உள்ளது. இங்கு 200 மரக்கடைகள், இரும்பு கடைகள் உள்ளிட்ட 400க்கும் அதிகமான கடைகள் உள்ளன. கட்டிடங்களுக்கு தேவையான நிலை, கதவு, ஜன்னல்கள், சட்டங்கள் உள்ளிட்ட மரச்சாமான்கள் வாங்க தென் மாவட்ட மக்கள் இங்கு வருகின்றனர். பழைய ரெடிமேடு மரப்பொருட்களும் அதிகளவில் இங்கு விற்கப்படுகின்றன. மரங்களுக்கான பூ வேலைப்பாடுகளையும் தொழிலாளர்கள் செய்து

திருமதி பரமேஸ்வரி இரத்தினசபாபதி

திருமதி பரமேஸ்வரி இரத்தினசபாபதி

இளமைக் காலத்தை மகிழ்ச்சியாக கழிக்காதவர்களை இதய நோய் தாக்கும்!

இளமைக் காலத்தை மகிழ்ச்சியாக கழிக்காதவர்களை இதய நோய் தாக்கும்!


February 3, 2013  10:40 am
இளமைக் காலத்தை மகிழ்ச்சிகரமானதாக கழிக்காத பொரும்பாலானோர் பிற்காலத்தில் இதய நோய்களுக்கு உட்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அமெரிக்கா ஆய்வாளர்கள் இந்த தகவல்களினை வெளியிட்டுள்ளனர். இத்தகைய இதய நோய்த்தாக்கம் பெண்களுக்கே அதிகம் ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

337 பேரை கொண்டு அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ஏழு வயதில் உளவியல் ரீதியாக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த பெண்கள் இதய நோய்த் தாக்கத்திற்கு உட்படுதல் நூற்றுக்கு 31 வீதமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறான ஆண்கள் இதய நோய்த்தாக்கத்திற்கு உட்படுதல் நூற்றுக்கு 17 வீதமாகவும் உள்ளது.

நான்கு புறமும் திரும்பும் ஆந்தையின் கழுத்தின் இரகசியம் - கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்!

News Service ஆந்தை தன் கழுத்தை நாலாபுறமும் திருப்ப முடிவது எப்படி என்ற கேள்விக்கு, அமெரிக்க விஞ்ஞானிகள் விடை கண்டுள்ளனர்.இரவில் வேட்டையாடும் பறவையான ஆந்தை, தன் கழுத்தை, 270 டிகிரி வரை திருப்பும் அபூர்வமான திறமை கொண்டது. இதே அளவுக்கு மனிதன் தன் கழுத்தை திருப்பினால், ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலை ஏற்படும். இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த அமெரிக்காவின், "ஜான்ஸ் ஹாப்கின்' பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் அபூர்வ சக்தி பற்றிய ரகசியத்தை கண்டறிந்து உள்ளனர்.
  
இறந்த ஆந்தைகளை பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் தலையை கைகளால் நன்கு திருப்பி சோதனை செய்தபோது, அதன் தலையின் அடியில், தாடை எலும்புக்கு சற்று கீழே உள்ள ரத்த நாளங்கள் விரிவடைவது தெரியவந்தது.இதன் மூலம்

Feb 2, 2013

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் - 6.9 ரிக்டர் ஆக பதிவு

 ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் - 6.9 ரிக்டர் ஆக பதிவு

February 3, 2013  12:04 pm
ஜப்பானின் ஹொக்கைடோ தீவை யைமாக கொண்டு ஒபிஹிரோ நகரை நேற்று பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ஒபிஹிரோ நகரின் தென்மேற்கே 15 கி.மீட்டர் தூரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 103 கி.மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. 


உயிர்சேதம், பொருட்சேதம் குறித்த தகவல்கள் ஏதும இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

சொந்த நாட்டின் தொழில் நுட்பத்தில் தயாரித்த புதிய அதிநவீன போர் விமானம்! சொந்த நாட்டின் தொழில் நுட்பத்தில் தயாரித்த புதிய அதிநவீன போர் விமானம்!

சொந்த நாட்டின் தொழில் நுட்பத்தில் தயாரித்த புதிய அதிநவீன போர் விமானம்!
February 3, 2013


ஈரான் ஒரு சர்ச்சைக்குரிய நாடாக திகழ்கிறது. அங்கு சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகவும், நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகளை தயாரிப்பதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.




இந்த நிலையில் தற்போது தனது சொந்த நாட்டின் தொழில் நுட்ப உதவியுடன் அதி நவீன போர் விமானத்தை ஈரான் தயாரித்துள்ளது. அதற்கு குயாகப் எப்-31 (வெற்றியாளர்) என பெயரிட்டுள்ளனர். இந்த தகவலை அந்நாட்டு அதிபர் முகமது அகமதினேஜத் நேற்று அறிவித்தார்.



மேலும், அந்த விமானத்தை பார்வையிட்ட அவர் அதன் தொழில் நுட்பத்தை விமானியிடம் கேட்டறிந்தார். உலக நாடுகளில் இருக்கும் அதிநவீன போர் விமானங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என கூறிய அவர் இதை ஒரு குறுவாள் என வர்ணித்தார். இந்த விமானத்தை பல ஆயிரம் மணி நேரம் விமானிகள் பரிசோதித்ததாகவும் அதன் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறினார்.



1979-ம் ஆண்டு புரட்சி தினத்தின் 34-வது ஆண்டு விழா நேற்று தெக்ரானில் நடந்தது. அதை தொடர்ந்து இந்த புதிய போர் விமானத்தை அவர் வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். அக்காட்சி அரசு டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது.

விலங்குகள் இயற்கை அனர்த்தங்களை எதிர்வுகூறுமா?



By AM. Rizath
2013-02-01

இயற்கையின் செயற்பாடுகளை செயற்கையின் வடிவங்களால் அவதானிக்க முயற்சிக்கும் விஞ்ஞானிகளுக்கும் விஞ்ஞானத்திற்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது இயற்கை. இதன் வெளிப்பாடுகளில் மனிதனுக்கு நன்மை பயக்கும் விடயங்களும் ஏராளம் உண்டு.

இருப்பினும் மனிதர்கள் எம்மால் இயற்கைக்கு எதிரான சில முடிவுகளை எடுக்கும் போது பதிலுக்கு இயற்கையும் எமக்கு எதிரான முடிவுகளையே தருகின்றது. அவையே இயற்கை அனர்த்தங்களாக அமைந்து அவ்வப்போது

கணனி உலகில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள 'PaperTab' !




கணனியுலகில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய கண்டுபிடிப்பொன்று லாஸ் வெகாஸில் நடைபெற்றுவரும் இவ்வருடத்திற்கான நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
'The PaperTab' என்று பெயரிடப்பட்டுள்ள இது கணனிகளின் வரைவிலக்கணத்தையே மாற்றியமைக்குமென தொழிநுட்ப நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
தற்போது சந்தையில் கிடைக்கின்ற டெப்லட்கள் போலன்றி மடியக்கூடிய, மிக மெல்லிய, கீழே விழுந்தாலும் பாதிப்படையாத திரையாக இது உள்ளது.
இத்திரையானது 10.7 அங்குலமானது என்பதுடன் அது துள்ளியமானது. இதன்

இவற்றைக் கண்டுள்ளீர்களா?


http://www.virakesari.lk/image_article/12d2.jpg



கடலில் நாம் இதுவரை கண்டிராத பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன.

குறிப்பாக ஆழ்கடல் உயிரினங்கள் தொடர்பில் எமக்கு அதிகமாக அறியக்கிடைப்பதில்லை.
http://www.virakesari.lk/image_article/article-2270671-173ED402000005DC-999_634x421.jpg
இத்தகைய உயிரினங்களை வெளியுலகிற்கு காட்டும் முயற்சியில் இறங்கினார் பிரித்தானிய  புகைப்படக்கலைஞனாரன ஜேசன் பிரட்லி.
http://www.virakesari.lk/image_article/article-2270671-173ED51E000005DC-857_634x286.jpg
அவரின் அதீத முயற்சியால் வெளியுலகினர் பலர் இதுவரை கண்டிராத, கேள்விப்படாத அரிய உயிரினங்களின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
http://www.virakesari.lk/image_article/article-2270671-173ED5B6000005DC-49_634x421.jpg

http://www.virakesari.lk/image_article/article-2270671-173ED98B000005DC-734_634x421.jpg
http://www.virakesari.lk/image_article/article-2270671-173ED583000005DC-310_634x385.jpg
http://www.virakesari.lk/image_article/marinedadge.jpg
http://www.virakesari.lk/image_article/marine4da.jpg

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...