Jun 16, 2012

முருங்கைக்காய் மருத்துவ குறிப்புகள்


வாரத்தில் ஒருமுறையோ, இரண்டு முறையோ முருங்கைக்காயை உணவாக உபயோகித்து வந்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்திகரிக்கப்படும்.

முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துகள் இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். அதோடு, பல் கெட்டிப்படும்
. தோல் நோய்கள் நீங்கும்.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். மேலும், தாது விருத்தியும் உண்டாகும். முருங்கை இலைச்சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால் ரத்தம் சுத்தமாகும். எலும்புகள் வலுவாகும். கர்ப்பிணிப் பெண்களும் இதை உட்கொண்டு வரலாம்.
முருங்கை இலை காம்புகளை நறுக்கி, மிளகு ரசம் வைத்து, சாப்பாட்டுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும். அதேவேளையில், அது சிறுநீரைப் பெருக்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...