Sep 8, 2012

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பேரழிவு – ரஷியா




அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அது இஸ்ரேலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இதையடுத்து அமெரிக்க ஆதரவோடு ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது.
அணு ஆயுதங்கள் வைத்துள்ள அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்று கூறி வருகின்றன. அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ளதோடு, அந் நாட்டிடமிருந்து கச்சா

இது ரம்புட்டான் சீசன்

http://www.fruitipedia.com/Rambutan1.jpg

 
http://www.nurulrahman.com/blog/wp-content/uploads/2008/01/rambutan1.jpg
இப்போது எல்லோரும் எல்லா இடங்களிலும் காணக் கூடியதாக இருக்கும் பழம் என்றால் அது ரம்புட்டான் பழம் தான் . கடைகள் , தெரு வீதிகள் , பெட்டி கடைகள் என எல்லாவற்றிலும் குவியலாக வைத்து விற்பனை செய்கிறார்கள் வியாபாரிகள்

ருசியான மங்குஸ்தான் பழம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4kpf99aIOHBc1xutKvfeep3EJTB35UV0-kvKwds-SVa87XpQTuUG4addxkyQQWMEGziiYOzuYEFtAYKUVC1KSx8ppXpB3xXpbJNUfGW20YAIF8By6cCY2vJch3CIuHzTemL4lCmpwvi0p/s400/mangosteen.jpg
பொதுவாக பழங்கள் எல்லாம் விட்டமின்கள் நிறைந்தவை . எண்கள் உடம்புக்கும் நல்லது . சாப்பாட்டுக்கு பின் ஒரு பழம் சாப்பிடுங்கோ என்கிறார்கள் பெரியோர் . பழங்களில் இதுவும் ஒரு ருசியான பழம் தான் மங்குஸ்தான் பழம் .
http://nastja.klevze.si/wp-content/uploads/2009/10/Mangosteen_Fruit_Cut_Open.gif
இவை மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிப்பாக  இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும்.
மங்குஸ்தான் பழம் மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். தமிழில் இந்த பழத்தை மங்குஸ்தான் என்று அழைக்கிறோம் . ஆங்கிலத்தில் மங்குஸ்தீன் என்று அழைக்கிறார்கள் .
http://beingplants.com/zen/images/mangosteen.jpg
சிறுவர்கள் முதல் பெரியோர் வரை எல்லோரும் ருசித்து உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம் இந்த மங்குஸ்தான் . இந்த பழத்திலும் பல நன்மைகள் உண்டு .  பல நோய்களுக்கு நிவாரணியாக இருக்கிறது . உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும், வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
http://euforia-nuverus.com/wp-content/uploads/2009/08/euforia-nuverus-mangosteen.jpg
வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
http://en.academic.ru/pictures/enwiki/77/Mangosteen.jpeg
கணனியில்  வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.
திகப்படியான உடல் கொழுப்பைக் குறைத்து மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு  நோய்களைத் தவிர்க்க மங்குஸ்தான் பழச்சாறு குடிக்கலாம் என்று அமெரிக்க ஆய்வில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 http://www.islandteashop.com/images/mangosteen_tree.jpg
மங்குஸ்தான் பழச்சாறு பருகினால்,  சி-ரீயாக்டிவ் புரோட்டினின் அளவு நம் உடலில் கணிசமாகக் குறையும்.  உடல் எடை குறையும்.  நீண்ட ஆயுளும் கைகூடும்.

http://s1.hubimg.com/u/188584_f260.jpg
http://www.myzreality.com/images/1180321477/Mangosteen_Rind.jpg
சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.  இருமலை தடுக்கும்,  சூதக வலியை குணமாக்கும்,  தலைவலியை போக்கும்,  நாவறட்சியை தணிக்கும்.
http://upload.wikimedia.org/wikipedia/commons/a/af/Mangosteen3.jpg
இவ்வாறான பல அரிய குணங்களை  கொண்ட பழம் இந்த மங்குஸ்தான் பழம் . எல்லோரும் சாப்பிட்டு பயம் பெறுங்கள் . இந்த பழத்தை சாப்பிடாதவர்கள் வாங்கி சாப்பிட்டு பாருங்கள் . எல்லா நாட்களும் கடைகளில் கிடைக்காது . ஒரு பருவ காலத்தில் மட்டுமே கிடைக்கும் . மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு பாருங்கள் . அதன் ருசியை அனுபவியுங்கள் .

http://www.simplemalaysian.com/fruits/mangosteen/images/mangosteen4_rz.jpg



ரத்த சோகையை போக்கும் இரும்புச்சத்து காய்கறிகள்!



உடலின் சக்திக்கு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம் தான் ஹீமோகுளோபின். இது தான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. இவை குறைவாக இருந்தால் அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் ஏற்படும். இதனால் உடல் சோர்வடையும், முகம் வெளிறிப்போய்விடும்.
ரத்த சோகை என்பது இந்தியர்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு குறைபாடாக உள்ளது. ஊட்டச்சத்துள்ள, இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடாத காரணத்தினாலே பெரும்பாலோனோர் ரத்த சோகை நோய்க்கு

ஆரோக்கிய வாழ்வுக்கான டாப் 10 உணவுகள்!


உணவு மருந்து’ என்ற வழிமுறையில் சென்ற நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர். இன்றைக்கோ அவசரம் அவசரமாக எதையாவது உண்டு ‘மருந்தே உணவு’ என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய நவீன உலகில் மக்களை பல விதமான நோய்கள் ஆட்டிப் படைக்கின்றன.அதில் இரத்த அழுத்தம் முக்கிய மானதாகும். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. நாம் உண்ணும் உணவே நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

ஆசியாவின் தலைசிறந்த வீராங்கனையாக வளர்ந்த,யாழ்ப்பானத்தை சேர்ந்த தர்சினி!


இலங்கையின் தலை சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டு உள்ளார் தர்சினி சிவலிங்கம்.
நாட்டின் வலைப் பந்தாட்ட அணி தலைவி இவர்தான்.
இவரின் உயரம் ஆறு அடியும் பத்து அங்குலமும்.
கிறிக்கெற் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் அபார பந்து வீச்சு திறமைக்கு இணையானது வலைப் பந்தாட்டத்தில் இவர் கோல் போடுகின்ற திறமை.
முரளிக்கும், இவருக்கும் இன்னொரு ஒற்றுமை இருக்கின்றது. இருவருமே தமிழர்கள்.
தர்சினியின் சொந்த இடம் யாழ்ப்பாணத்தில் புன்னாலைக்கட்டுவான். ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாக பிறந்தவர். இவரது குடும்பத்தில் அநேகர் உயரமானவர்கள்தான்.
அதீத உயரம் காரணமாக இவரது சிறுவயது வாழ்க்கை மிகவும் கசப்பான அனுபுவங்களை இவருக்கு கொடுத்து இருக்கின்றது.
சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா?

ஒரு விருந்து முடிந்ததும் , பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலபேரிடம் இருக்கிறது. இது சரியா? சாப்பிட்டப்பின் பழம் சாப்பிடுவது என்பது ஒரு சரியான செயல் அல்ல.


சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம் ,


வெறும் வயிற்றில் பழம் சாப்பிடும்போது நமது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளிகொண்டு வருகிறது இந்த பழம். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்க வழி வகை செய்கிறது.


சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது முதலில் எளிதாக ஜீரணமாவது இந்தப் பழம்தான். இதனால் உணவுகள் முழுவதும் செரிக்காத நிலையில் அமிலமாகவும், செரித்த பழம் வயிற்றிலுள்ள ஜீரணமாக பயன்படும் அமிலங்களுடன் கலந்து வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். இதனால் வயிற்றுள்ள உணவு கெட்டுப்போகும். எனவேதான் சாப்பாட்டிற்கு பின்பு பழம் சாப்பிடாமல் முன்பு சாப்பிடும்போது அதனுடைய பலன் அதிகம் நம்மை சேருகிறது.




அதேபோல பழத்தை அப்படியே சாப்பிடுவதால் முழுமையான நார்ச்சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். ஜீஸ்(Juice) செய்தோ, வேறுவகைகளிலோ சாப்பிடும்போது முழுவதுமாக பழத்திலுள்ள நார்ச்சத்தானது நமக்கு கிடைக்காமல் போகும்.





சிறு துரும்பும் பல் குத்த உதவுவதுபோல இந்த சின்ன விஷயங்களிலும் நாம் கவனம் எடுக்கும்போது நமது உடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. நீண்ட ஆயுட்காலத்தையும் நாமே நிர்ணயிக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.

Orange Fruit
ஆரஞ்சு


பழங்கள் நமது உடல்நலத்தில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. நோய்வாய்ப் படும் காலங்களில் பழமே மிகவும் பிரதான உணவாக இருக்கிறது. மருத்துவர்கள் இக்காலங்களில் பரிந்துரை செய்வது பழங்கள் தான்.


ஆரோக்கியம் தரும் சில அற்புத பழங்களின் படங்கள்:

madulai
மாதுளை
grapes
திராட்சை பழங்கள்
banana
வாழைப் பழம்
guava
கொய்யாப் பழங்கள்


amla
நெல்லிக் கனிகள்

star fruit
நட்சத்திர பழங்கள்

naval palam
நாவல் பழங்கள்

tomatoes
தக்காளிப் பழங்கள்

apple fruits
ஆப்பிள் பழங்கள்

`


papaya fruit
பப்பாளிப் பழம்


Holy Spirit Fruit
லீச்சிப் பழங்கள்
குறிப்பு: பதிவில் குறிப்பிட்டுள்ள பழம் வாழைப்பழம். நாம் அன்றாட விருந்துகளில் பயன்படுத்தும் பழமாகையால், குறிப்பாக விருந்தில் வாழைப்பழம் வைக்கும் வழக்கம் நம்மிடம் உள்ளதாலும் சாப்பிட்ட பிறகே பலரும் பழத்தை சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்கிறோம். இதைத் தவிர்க்கவே இப்பதிவு.. பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளலாம். நன்றி.

10 ஆண்டுக்கு முன்பே நீரிழிவை நோயை கண்டறியலாம்



05d_S_secvpfரத்தம், சிறுநீர் சோதனைகளின் மூலம் நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது. நோயின் அறிகுறி தெரிந்த பின்னர் தான் அவை அறியப்படுகிறது. தற்போது 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோயின் பாதிப்பை அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் பிரிட்டிஷ் அறிவியல் திருவிழா நடந்தது. இதில் கலந்து கொண்டு முன்னணி விஞ்ஞானி டாக்டர் மானுவேல் மாயர் பேசினார். அப்போது, அவர் கூறும் போது, நீரிழிவு நோய் டைப்-2 பிரிவினருக்கு நீரிழிவு நோய் இருப்பதை 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்க முடியும். அவற்றை ரத்த பரிசோதனை மூலம் அறிய முடியும்.

ரத்தக்குழாய் அடைப்பை தடுக்க



f2_S_secvpf
ரத்த அழுத்தத்திற்கு சரியான மருந்துகள் உட்கொண்டு அதை சீராக வையுங்கள். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். கொழுப்புள்ள பொருட்களான நெய், வெண்ணை, தேங்காய், எண்ணை, முட்டை மஞ்சள்கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவற்றை தவிர்த்திடுங்கள். சிகரெட்டை தூக்கி எறியுங்கள்.
மதுபாட்டில்களை காலி செய்வதை நிறுத்துங்கள். எண்ணையில் பொரித்த உணவுகளையும், நெய், பாலில் செய்த பண்டங்களையும் குறையுங்கள். உப்பு அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

நீரிழிவு-புற்று நோயை விரட்டும் நோய் எதிர்ப்பு சக்தி


old_28ஒவ்வொரு மனிதனையும் வெவ்வேறு விதமான நோய்கள் திடீர் திடீரென தாக்குகிறது. அதற்கு சரியான சிகிச்சை அளிக்கா விட்டால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. சமீப காலமாக திடீர் திடீரென வைரஸ் நோய்கள் நாடெங்கும் பரவி நம்மை பதற வைத்து விடுகின்றன. குறிப்பாக சிக்குன் குனியா, பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்ற அதிபயங்கர வைரஸ் காய்ச்சல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.இந்த வைரஸ் நோய் தாக்கிய பலர் உயிர் இழந்ததால் உலகம்

ஓட்ஸ் மருத்துவ குணம்


ootsa_28
ஓட்ஸ்-ல் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. ஓட்ஸ்-ல் இயற்கை இரும்புசத்து அதிகம் உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால், இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது. இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. அரை கப் சமைத்த ஓட்ஸ்-ல் கிட்டத்தட்ட 4 கிராம் கூழ்மநிலை கரையக்கூடிய நார்பொருள் உள்ளது (பீடா குளுகான்) உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புப் பொருளை குறைக்க உதவுகிறது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...