Oct 10, 2012

பழமொழிகள்

அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
அகல உழுகிறதை விட ஆழ உழு.
அகல் வட்டம் பகல் மழை.
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அடக்கமே பெண்ணுக்கு அழகு

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
அடாது செய்தவன் படாது படுவான்.
அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு
இரைச்சல் இலாபம்.
அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
அந்தி மழை அழுதாலும் விடாது.
அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.


அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
Vertical Green widgetVertical Blue widgetVertical Yellow widgetVertical Silver WidgetVertical Red WidgetVertical Gray Widget

230 px * 65 px

வினோத போட்டியில் விபரீதம் கரப்பான் பூச்சிகளை விழுங்கி முதல் பரிசு பெற்றவர் சாவு



மியாமி: அமெரிக்காவில் போட்டியில் கலந்து கொண்டு கரப்பான் பூச்சிகளை சாப்பிட்டு வெற்றி பெற்ற வாலிபர் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து துடிதுடித்து இறந்தார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் டீர்பீல்டு பீச் நகரில் மிட்நைட் மேடு என்ற பெயரில் உயிருள்ள பூச்சி, புழுக்களை சாப்பிடும் வினோத போட்டி நடந்தது. இதில் 30 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். எட்வர்டு ஆர்ச்போல்ட் (32) என்ற வாலிபரும் ஆர்வத்தோடு பங்கேற்றார். 12 பெரிய சைஸ் கரப்பான் பூச்சிகளை அடுத்தடுத்து வாய்க்குள் போட்டு மென்று விழுங்கினார்.

55 ஆண்டுக்கு முன் தயாரிக்கப்பட்ட ஸ்காட்லாந்து விஸ்கி ரூ.1.5 கோடிக்கு ஏலம்

55 ஆண்டுக்கு முன் தயாரிக்கப்பட்ட ஸ்காட்லாந்து விஸ்கி ரூ.1.5 கோடிக்கு ஏலம்
பல ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட விஸ்கிகளை ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் உள்ள பொன் ஹாம்ஸ் நிறுவனம் ஏலம் விடுகிறது. அதில் 12 வகை விஸ்கிகள் இன்று ஏலத்திற்கு வருகின்றன.

ஜலே தீவில் 55 ஆண்டுக்கு முன்பு அதாவது 1957-ல் தயாரிக்கப்பட்ட விஸ்கி பழமையானது. இந்த விஸ்கி பாட்டில் குறைந்தது ரூ.85 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.1 கோடியே 25 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஸ்கி பலவகை சுவை கொண்டது. இதை குடிக்கும்போது முதலில்

செவ்வாய் கிரகத்தில் ஒளிரும் பொருளை கண்டிபிடித்தது கியூரியாசிட்டி

 செவ்வாய் கிரகத்தில் ஒளிரும் பொருளை கண்டிபிடித்தது கியூரியாசிட்டி


வாஷிங்டன், அக்.10(டி.என்.எஸ்) அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தினால், செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்ட கியூரியாசிட்டி என்ற ஆய்வுக்குட விண்கலம், அங்கு ஒளிரும் ஒரு பொருளை கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழமுடியுமா என ஆய்வு நடத்தும்

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.
மாரடைப்பு என்றால் என்ன?
அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன்

வயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற

9th October, 2012

வயிறு உப்பலாக இருக்கிறது என்று, நன்றாக “கண்டதையும்” சாப்பிட்டவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். “கண் மண் தெரியாமல் சாப்பிட்டால் இப்படித் தான் நேரும்” என்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவர்.
வயிற்றுக்கு வேண்டிய அளவு தான் சாப்பிட வேண்டும்; காய்கறி, “பழங்கள் சாப்பிடுகிறேன்” என்று அதையே மிக அதிகமாக சாப்பிட்டாலும், நார்ச்சத்து அதிகமாகி, வயிறு உப்பிவிடும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் இப்படி ஏற்படும். அடிக்கடி இப்படி ஏற்பட்டால், டாக்டரிடம் காட்டுவது முக்கியம். குடலில் தங்கக்கூடாது! சாப்பிடும் எந்த உணவும், அதிக பட்சம் ஐந்து மணி

இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்

துளசி:-
  • 1. ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது.
  • 2. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.
வில்வம்:-
  • 1. காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது.
  • 2. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.
அருகம்புல்:-
  • 1. எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு

30 பொன் மொழிகள்

  1.  பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
  2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
  3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
  4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என்

இளமையாக இருக்கும்போது ரோஜா மலர்கள் மீது படுத்தால்
முதுமையான காலத்தில் முட்கள் மீது படுக்க நேரிடும்.
இளமையில் தனது தோலை  கடினமாக்கிக் கொண்டவனுக்கு
முதுமையில் முட்கள் குத்தினாலும் வலிக்காது.
********
இசையைக் கேட்டுக் கொண்டே இரவு உணவை உண்பது,உணவை சமைத்த சமையல் காரனையும் ,இசையை இசைத்த கலைஞனையும் அவமானப் படுத்துவதாகும்.
********
சில விவாதங்களுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.ஆனால் முடிவு என்ற ஒன்று இருப்பதில்லை.
********
பணிவு ஒருபோதும் பலவீனம் அல்ல.உங்கள் பலத்தைக் காட்ட நினைப்பதுதான் பலவீனம்.
********
உங்கள் முகத்தில் புன்னகையின் ஒளிக்கீற்று இல்லையென்றால் நீங்கள்

Oct 9, 2012

இயற்பியல்: 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

செர்ஜ் ஹரோச்சி

நடப்பாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்ûஸச் சேர்ந்த செர்ஜ் ஹரோச்சி(68), அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் வைன்லேண்ட்(68) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கணினித் துறையில், குவாண்டம் இயற்பியல் பிரிவில் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...