Sep 18, 2012

குழந்தை இறப்பை தவிர்க்க கர்ப்பிணி பெண்களுக்கு நிபுணர்கள் அறிவுரை

பொதுவாக கர்ப்பிணி தாய்மார்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் நடந்து கொள்ளும் முறையை பொறுத்து குழந்தை பிறப்பு எளிதாக நிகழ்கிறது. எனினும், சில சமயங்களில் கருவில் இருக்கும் குழந்தை, பிறப்பதற்கு முன்பே இறந்து விடும் சூழல் ஏற்படுகிறது. இதனை ஸ்டில்&பெர்த் என்றழைக்கின்றனர். இதற்கு பெண்களின் உடல் எடை அதிகரித்தல், அதிக வயதில் தாய்மையடைதல் மற்றும் தொப்புள் கொடியின் நிலை ஆகியவை காரணமாக கூறப்பட்டாலும் தாய்மார்கள் படுக்கும் விதமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைகழக ஆய்வொன்று தெரிவிக்கிறது. கர்ப்பிணிகள் வலது புறம் படுப்பதால் குழந்தை இறப்பு விகிதம் இரு மடங்காகிற அதே வேளையில், இடது புறம் படுத்துறங்குவதால் 1000க்கு 4 என்ற அளவிலேயே இறப்பு விகிதம் ஏற்படுகிறது. இடது புறம் படுப்பதால் தாயின் இரத்த நாளங்கள் சீராக இருப்பதுடன் குழந்தைக்கும் தாய்க்குமிடையேயான இரத்த ஓட்டம் சீராக அமைவதும் தெரிய வந்துள்ளது. உலகில் இங்கிலாந்து நாட்டில் தான் அதிகமாக குழந்தைகள் இறப்பு விகிதம்(ஸ்டில்&பெர்த்) காணப்படுகிறது. அங்கு வருடத்திற்கு 4,000 குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே இறந்து விடுகின்றன. மேலும் 3ல் 1 பங்கு குழந்தைகள் இறப்பதற்கான மிக சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை என்பது வருத்தத்திற்குரிய விசயம். இதனை தடுப்பதற்காக தூங்கும் முறையில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

நகர வாழ்க்கை, மூளையை பாதிக்கிறது: ஆய்வில் தகவல்


கிராமப்புறத்தில் வாழும் மனிதர்களை விட நகர்ப்புறத்தில் வசிக்கும் மனிதர்கள் அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. நகர்புறத்தில் காணப்படும் வேறுபட்ட சமூக அமைப்பு, அதிக சப்தம் மற்றும் மக்கள் நெருக்கடி ஆகியவை காரணமாக மூளையின் அதிக உணர்வு மிக்கதான மற்றும் மனஅழுத்தத்துடன் தொடர்பு கொண்ட அமைக்டலா என்ற பகுதி அதிகமாக செயல்படுவது தெரிய வந்துள்ளது. மேலும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பகுதியாகவும், சுற்றுப்புறத்தோடு தொடர்பு கொண்டதாகவும் விளங்கும் மூளையின் மற்றொரு பகுதியான சிங்குலேட் கார்டெக்ஸ், நகர்ப்புறத்தில் பிறந்தவர்களிடம் தேவையற்ற வகையில் அதிகமாக செயல்படுவதும் ஆய்விலிருந்து தெரிய வருகிறது. வரும் 2050-ம் ஆண்டிற்குள் ஏறக்குறைய 70 சதம் பேர் நகர்ப்புற வாழ்க்கைக்கு வந்து விடுவர் என கூறப்படுவதால் ஒழுங்கற்ற மனநிலை, எதிலும் அதிக ஆர்வமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க சிறந்த மனநலத்துடன் வாழ்வதற்கு ஏற்ப நகர்ப்புறங்களை தற்போதிருந்தே வடிவமைத்து அதற்கேற்ற வகையில் வாழ்க்கை முறையினை அமைத்து கொள்வது நலம் தரும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஆரோக்கியத்துக்கும் நல்ல தோற்றத்துக்கும் காரட் சாப்பிடுங்கள்



பிரிட்டனின் பிரிஸ்டால் பல்கலை கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு ஒன்றில் மனிதர்களின் தோல் நிறத்திற்கும் அவர்கள் தோற்றத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நல்ல மஞ்சள் நிறமாக இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் நல்ல தோற்றத்துடனும் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 'கேராடெனாய்டுகள்' அடங்கிய பழங்கள், காய்கறிகள் குறிப்பாக கேரட்டுகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர். நல்ல பலன் தர சுமார் இரண்டு மாதங்களாகலாம் என மேலும் கூறப்படுகிறது. மேலும், இருதய நோய் வருவதையும் இது தவிர்க்குமாம்.

உலகளவில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவது இந்தியர்களே: உலக சுகாதார அமைப்பு



இங்கிலாந்தில் பிரபலமாகும் புதிய வகை யோகா



ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் கிறிஸ்டோபர் ஹாரிஸன் (வயது 50) என்பவர் தான் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசைக்கெதிராக மேற்கொள்ளும் யோகா முறையை பிரபலப்படுத்தி வருகிறார். தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில் தொட்டில் போன்ற அமைப்பில் பயிற்சியாளர்கள் தொங்கி கொண்டு கைகளை விரித்து தலையை உயரே தூக்கிய நிலையில் பயிற்சி மேற்கொள்கின்றனர். மற்றும் கூட்டுப்புழு போன்ற பயிற்சியினையும் செய்கின்றனர். இங்கிலாந்தில் கடந்த 10 வருடங்களாக இப்பயிற்சியினை கற்று தேர்ந்து தற்போது பலருக்கும் கற்று தரும் கிறிஸ்டோபர் அயர்லாந்து, இத்தாலி மற்றும் அமெரிக்காவிலும் பயிற்சியினை விரிவுபடுத்த இருக்கிறார்.

படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம்: ஒரு ஆய்வின் தகவல்


படுத்ததும் தூங்கிப்போகிறவர்களுக்கு அது ஒரு வரம். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. சிலருக்கு படுத்ததற்கு நீண்ட நேரத்திற்குப்பின்னரே தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் கெளண்டிங் ஷீப் செய்வதுண்டு. அதாவது, எளிதில் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 100.... 200..... 300 வரை

நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய வியாதிக்கான 29 புதிய மரபணுக்கள் கண்டுபிடிப்பு



மனிதர்களில் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய வியாதி மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ். இந்த வியாதி, நரம்பிழைகளை சூழ்ந்து அதற்கு பாதுகாப்பு அளிக்கும் மைலின் ஷீத் என்ற பாதுகாப்பு வளையத்தை தாக்கி நரம்பின் பணிகளை முடக்குகிறது

இந்திய நறுமண பொருள்கள் புதிய சிகிச்சை முறைகள் உருவாக வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்



இந்திய நறுமண பொருள்கள் மருத்துவ ரீதியாக எவ்வாறு பயன்படுகிறது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. நறுமண பொருள்களில் மஞ்சள் பற்றிய ஆய்வில், குர்குமின் என்ற பொருள் அதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது என்றும் மேலும் டிரைகிளிசரைடு என்ற வேதி பொருளின் தாக்கத்தை

மருந்தாக பயன்படும் காட் மீன்கள் பற்றி சிறப்பு தகவல்கள்



மனிதர்களுக்கு விட்டமின் A, D மற்றும் E குறைவு ஏற்பட்டால் காட் லிவர் ஆயில் தான் மருந்து. இந்த மருந்தை நமக்கு தருவது காட் என்னும் ஒருவகை கடல் வாழ் மீனினம். இந்த மீன்களுக்கு பகைவர்கள் பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள். பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகளிடமிருந்து இவற்றை பாதுகாக்க

வேதனை தரும் பரிசோதனைகளுக்கு குட்பை: அதி நுட்ப பரிசோதனை அறிமுகம்



ஸ்பேஸ் ஏஜ் வகையை சேர்ந்த அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வியாதிகளுக்கான காரணங்களை கண்டறியும் வசதியை பெரும் பொருள் செலவில் இங்கிலாந்து மருத்துவமனை ஒன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த மருத்துவமனையில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலத்தில் இடம் பெற்றிருந்த உடல் பரிசோதனை கருவிகள் உட்பட பல நவீன கருவிகள் உள்ளன. இனி, நோயாளிகளுக்கு வேதனை தரும் பரிசோதனைகளுக்கு குட்பை சொல்லப்படும் என்று இந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஸ்டார் ட்ரெக் விண்கலத்தில் விண்வெளி வீரர்களின் உடல் நலத்தை கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட ட்ரை கார்டர் ஸ்கேனர்களுக்கு இணையான கருவிகள் இதில் இடம் பெற்றுள்ளன. நோயாளிகளின் பார்வை, நுகர்வு மற்றும் உணர்வுகளை மட்டுமே ஆய்ந்து வியாதிகளை இந்த கருவிகள் கண்டுபிடித்துவிடும் திறன் பெற்றவை என்று கூறப்படுகிறது. சாதாரண அமீபியாக்கள் காரணமான வயிற்று வலி முதல் கேன்சர் போன்ற கொடிய வியாதிகள் வரை அனைத்துக்கும் இந்த கருவிகளை பயன்படுத்தலாம் என தெரிகிறது.

அதிக பருமன் என்ற எண்ணமே உடல் எடையை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

 நார்வே,
நார்வே நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் உடல் பருமன் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், தங்களை தாங்களே அதிக பருமன் உள்ளவர்கள் என நினைப்பவர்கள் மற்றவர்களை காட்டிலும் அதிக உடல் எடை கொண்டவர்களாக வளர்கின்றனர். இது உளவியல் அடிப்படையில் ஏற்படும் அழுத்தம் காரணமாக உண்டாவதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் அவர்களின் இடை பகுதி விரிவடைகிறது. மேலும், அவர்கள் மேற்கொள்ளும் சரிவிகிதமற்ற உணவு, காலை உணவை தவிர்த்தல் ஆகியவை காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...