Sep 22, 2012

மம்தா நடவடிக்கைக்கு பதிலடி மே.வங்க காங். அமைச்சர்கள் 6 பேர் இன்று ராஜினாமா



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperகொல்கத்தா: டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அனுமதி ஆகியவற்றை கண்டித்து மத்தியில் ஐமு கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் விலகியது. அக்கட்சியை சேர்ந்த 6 மத்திய அமைச்சர்கள் நேற்று ராஜினாமா செய்தனர். கட்சி தலைவர் மம்தாவின் அதிரடி நடவடிக்கைக்கு பதிலடியாக, மேற்கு வங்கத்தில் அவரது தலைமையிலான கூட்டணி அரசில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் 6 பேர் இன்று தங்கள் பதவியை ராஜினாமா

விமானத்தில் கணவன்மனைவி சண்டை: அவசரமாக தரையிறக்கி வெளியேற்றினர்



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperலண்டன்: விமானத்தில் கணவன்  மனைவி, குழந்தைகள் என 5 பேர் காட்டு கத்தல் கத்தி சண்டை போட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தை அவசரமாக தரையிறக்கி அவர்களை பைலட் வெளியேற்றினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்தின் கிளவ்லேண்ட் பகுதியில் ஹர்டில்புல் நகரை சேர்ந்தவர் டேவிட் லாடன் (39). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 17 வயது டோரம் உள்பட 2 மகன்கள் உள்ளனர். தற்போது சாரா வில்சன் (28) என்பவருடன் இணைந்து வாழ்கிறார். இவர்களுக்கு

அமெரிக்க சினிமாவுக்கு எதிர்ப்பு பாகிஸ்தானில் பயங்கர கலவரம் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஇஸ்லாமாபாத்: நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை கண்டித்து, பாகிஸ்தானின் பல நகரங்களில் நேற்று ஊர்வலங்கள் நடந்தன. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 20 பேர் பரிதாபமாக இறந்தனர். நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை கண்டித்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டன. பாகிஸ்தானிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் நபிகள் நாயகம் தினத்தை

ஐ.நா. உலக அமைதி தினம் ஐஸ்வர்யா ராய் பங்கேற்பு



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஐநா: ஆண்டுதோறும் செப்டம்பர் 21ம் தேதியை உலக அமைதி தினமாக ஐநா கொண்டாடி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமை அலுவலகத்தில் நேற்று உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன், உலக அமைதிக்கான ஐநா தூதர் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ், இங்கிலாந்து மானுடவியல் அறிஞர் ஜேன் குட்டால்,

3 நாள் உலக மாநாடு துவக்கம் இந்தி மொழியை ஐ.நா.வின் அலுவலக மொழியாக்க முயற்சி


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஜோகன்னஸ்பர்க்: சர்வதேச இந்தி மொழி தினம் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இன்று தொடங்கியது. சர்வதேச இந்தி மொழி தினம், கடந்த 1975ம் ஆண்டு இந்தியாவில் முதல் முதலாக கொண்டாடப்பட்டது. அதன்பின் மொரீஷியஸ், டிரினிடாட், இங்கிலாந்து, சுரினாம், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் 9வது சர்வதேச இந்தி தினம் இன்று ஐநா தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. மூன்று நாள் மாநாடு நடக்கிறது. இதில்

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக தூத்துக்குடி துறைமுகத்தை மீனவர்கள் இன்று முற்றுகை: ரோந்து கப்பல்கள், விமானம் மூலம் தீவிர கண்காணிப்பு


 
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperதூத்துக்குடி: கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி துறைமுகத்தை மீனவர்கள் இன்று முற்றுகையிட்டனர். நூற்றுக்கணக்கான படகுகளில் சென்ற அவர்கள் அணுஉலைக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இதையொட்டி ரோந்து கப்பல்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. கூடங்குளம் தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,

கண்ணாடியின் கதை

சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் கண்ணாடிகளை உபயோகப்படுத்தினான். அந்தக் கண்ணாடிகள், எரிமலைக் குழம்பு காய்ந்து கெட்டியாகும்போது உண்டானவை. இந்தக் கட்டிகளைக் கத்தி செய்வதற்கும், அம்புகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொண்டான். கண்ணாடிகளை மனிதனே படைக்கும் முறை கி.மு. மூவாயிரம் ஆண்டளவில் மத்திய கிழக்கு நாடுகளில் உண்டாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கி.மு. ஆயிரம்

பாதுகாப்புக்கு 12,000 போலீசார் 185 விநாயகர் சிலைகள் கரைப்பு


சென்னை: சென்னையில் கடந்த 19ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று, பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. அந்த சிலைகளில் 185 சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. சிவசேனா(குமாரராஜ பிரிவு) கட்சியைச் சேர்ந்தவர்கள்

புளியந்தோப்பு, பெரம்பூர் ஆகிய இடங்களில் வைத்திருந்த விநாயகர் சிலைகளை காசிமேடு

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட கோரி தூத்துக்குடி துறைமுகத்தை 1200 படகுகளில் முற்றுகை

தூத்துக்குடி: கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட கோரி தூத்துக்குடி துறைமுகத்தை 1200 படகுகளில் மீனவர்கள் முற்றுகையிட்டனர். போராட்டத்தையொட்டி ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். படகுகளும் ரோந்து சுற்றி வந்தன. கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும். அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை நிறுத்த வேண்டும். கூடங்குளத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடங்குளம் பகுதியில் போடப்பட்டுள்ள 144 தடை

Sep 21, 2012

தினம் ஒரு கிளாஸ் ஒயின் குடித்தாலே மார்பக புற்றுநோய் ஏற்படும்


ஓராண்டுக்கு தினமும் ஒரு கிளாஸ் ஒயின் குடித்தால், மார்பக புற்றுநோய் உட்பட உடலில் பல கட்டிகள் உருவாகும் அபாயம் உள்ளது என்று சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது. மிலன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு, உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேரிடம் மது குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தியது.

இதுவரையில் ஒயின் குடித்தால் எந்த பாதிப்பு ஏற்படாது, உடலநலனுக்கு மிக நல்லது என்று நம்பப்பட்டு வரும் நிலையில், அது தவறு என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.  மது

இந்தியாவில் 10ல் ஒருவருக்கு நீரிழிவு 4ல் ஒருவருக்கு ரத்த அழுத்தம் ஆய்வில் தகவல்

இந்தியாவில் வசிப்போரில் 4ல் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. 10ல் ஒருவருக்கு சர்க்கரை வியாதி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல்களை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்கிரீன் இன்டியா டுவின் எபிடெக் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த விவரங்கள் வருமாறு:
இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் வசிக்கும் 16 ஆயிரம் மக்களிடம் மூன்று கட்டங்களாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் 23.1 சதவீத ஆண்களுக்கும், 22.6 சதவீத பெண்களுக்கும் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது. 11.1 சதவீத ஆண்களுக்கும் 10.8 சதவீத பெண்களுக்கும் நீரிழிவு (சர்க்கரை நோய்) உள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...