Oct 12, 2012

நைஜர்: 91 பேரை பலிகொண்டது வெள்ளம்


நைஜர்: 91 பேரை பலிகொண்டது வெள்ளம்நியாமி,அக்.13-


மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் பெரும்பாலான பகுதிகளில் பெருகியுள்ள வெள்ளத்தால் 91 பேர் பலியானதாக அந்நாட்டின் அமைச்சரவை இயக்குனர் அகாலி அப்தோல்காடர் தெரிவித்தார். மேலும், வெள்ளம் காரணமாக அங்கு பெரும் பொருட்சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

டில்லாபெரி, டோசோ, நியாமி உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வெள்ளம் காரணமாக நெற்பயிர்கள், பள்ளிக்கூடங்கள், நீர் நிலைகள், சாலைகள், பாலங்கள், அணைகள் உள்ளிட்ட அனைத்தும் சேதமடைந்துள்ளதாகவும் அப்தோல்காடர் மேலும் கூறினார்.

அங்குள்ள நைஜர் ஆற்றுப்பள்ளத்தாக்கில் 12 நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் விவசாயம் செய்யப்பட்டு வரும் 3,050 ஹெக்டேர் விவசாய நிலமும் ஆற்றுவெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளன.

பல நோய்களுக்கு விரைவில் மருந்து: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சென்னையில் பேட்டி

சென்னை,அக்.13-
 
பல நோய்களுக்கு விரைவில் மருந்து: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சென்னையில் பேட்டிபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் ஜூல்ஸ் ஏ.ஹாப்மன். இவர் அங்கு உள்ள ஸ்ட்ராபர்க் பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் ஜெர்மனியில் உயர் படிப்பு படித்து மீண்டும் தான்படித்த அதே பல்கலைக்கழகத்தில் மாலிக்குலர் செல் பயாலஜி துறையில் இயக்குனராக பணி புரிந்து வருகிறார். அவர் பழ ஈயில் புரோட்டீனை எடுத்து ஆராய்ச்சி செய்தார். அதன் மூலம் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதற்கான தொடக்க நிலையை கண்டுபிடித்துள்ளார். இதற்காக அவருக்கு கடந்த வருடம் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 
அவர் இந்தியாவில் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம்

ஜனாதிபதி போட்டியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட ரிபப்ளிக்கன் வேட்பாளர் முன்னிலை

ஜனாதிபதி போட்டியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட ரிபப்ளிக்கன் வேட்பாளர் முன்னிலை
அமெரிக்காவில் வரும் நவம்பர் 6 ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளார்களாக ஆளும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் பராக் ஓபாமாவும், எதிர்கட்சியான ரிபப்ளிக்கன் கட்சிச் சார்பாக மிட் ரோம்னியும் களத்தில் இருக்கின்றனர்.

அவர்கள் இருவரின் நேரிடையான தொலைக்காட்சி விவாதம் அங்கு நடத்தப்பட்டு வருகிறது. விவாத அடிப்படையில்  இணையதளம் மூலம் நடத்தப்படும் வாக்கெடுப்பில், மிட் ரோம்னிக்கு 47% வாக்குகளும், அதிபர் பராக் ஓபாமாவிற்கு 44% வாக்குகளும் கிடைத்துள்ளதாக அந்த கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இதில் ரிபப்ளிக்கன் கட்சியின் வேட்பாளாரான மிட் ரோம்னியே மூன்று புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முன்னிலையில் உள்ளார். இது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

வங்கதேசத்தில் கடும் புயல்: 20 பேர் பலி



தெற்காசிய நாடுகள் புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்களால் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது.தெற்காசிய நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் கடந்த 2 தினங்களாக புயல் காற்றுடன் மழை கொட்டியது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நோகாலி மற்றும் போலோ மாவட்டங்கள் புயலால் பெரிதும் சேதமடைந்தன. இந்த புயல் காரணமாக வங்கதேசத்தில்

அமைதி, ஜனநாயகத்தை வளர்த்ததற்காக ஐரோப்பிய யூனியனுக்கு நோபல் பரிசு



ஆஸ்லோ : ஐரோப்பிய நாடுகளில்  அமைதி, ஜனநாயகத்தை மேம்படுத்தியதற்காக ஐரோப்பிய யூனியனுக்கு இந்த ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம் ஆகிய துறைகளில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து உலக அளவில் பெரும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், மைக்ரோப்சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆகியோரின் பெயர்களும் இதில்

தாஜ் மஹால் பழைய சிவன் கோவில், அதிர்ச்சி உண்மை அம்பலம்

tajmahal old hindu shiva templeதாஜ் மஹால் காதல் சின்னம் அல்ல – பழைய சிவன் கோவில், அதிர்ச்சி உண்மை அம்பலம்
காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச் சமாதிதான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன் கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
தாஜ் மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டு உள்ளது, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி. என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு: அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு


வேதியியல் துறைக்கான நோபல் பரிசு: அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அறிவிப்புஸ்டாக்ஹோம்: வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு, அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது. உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவ விருது, ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் சாதனைப்படைத்த, ஜப்பானின் யமனாகாவுக்கும், பிரிட்டனின் ஜான்குர்டானுக்கும் அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான விருது, ஒளித்துகள் மற்றும் அயனிகள் குறித்து, ஆராய்ச்சி மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செர்ஜி ஹரோச்சிக்கும், அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஒயின்லேண்ட்டுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று, ரசாயனத்துறைக்கான, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. உடல் செல்களில் ஊடுருவும் புரதம்(ஜி-புரோட்டீன்) வெளிப்புற சமிக்கைகளை பெறுவது தொடர்பான, ஆராய்ச்சி மேற்கொண்ட, அமெரிக்க விஞ்ஞானிகள் ராபர்ட் லெப்கோவிட்ஸ், பிரைன் கோபில்காவின் சாதனைகளை பாராட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறைக்கு, இந்த ஆராய்ச்சி, பேருதவியாக இருக்கும் என, கூறப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் 10ம்தேதி, நோபல் பரிசை உருவாக்கிய ஆல்ப்ரெட் நோபலின் நினைவுத்தினத்தன்று, இந்த பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு ஒவ்வொரு துறையிலும் இருவருக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதால், 6.8 கோடி ரூபாய் பரிசு, இரண்டாக பகிர்ந்தளிக்கப்படும்.

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: 2012 ம் ஆண்டு ,அமைதிக்கான நோபல் பரிசுஐரோப்பிய யூனியன் அமைப்பிற்குவழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது. உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது.இந்நிலையில் 2012-ம் ஆண்டின் அமைதி்க்கான நோபல் பரிசுஐரோப்பிய யூனியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.டிசம்பர் 10-ம் தேதி நடக்கும் விழாவில் இந்த பரிசு வழங்கப்படுகிறது.

Oct 11, 2012

சஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் (பாம்பு விஷகடி - முறிவு) பாகம் -1


நமது தமிழகத்தின் கிராமப்புறங்களில் ‘சஞ்சீவி’ மூலிகையைப் பற்றி, செவிவழிச் செய்திகள் பலவற்றை கேள்விப்பட்டிருப்போம். அந்த மூலிகை பல அதிசய சக்திகள் கொண்டது என்றும் கூறப்பட்டிருக்கும். ஆனால், எத்தனைப் பேருக்கு அது பற்றி விவரம் தெரியும்?

அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டும். தாய் கழுகு இதை தேடி செல்லும் வரை நாம் காத்திருந்து, அதன் பின்னர் நாம் கூட்டில் இருக்கும் குஞ்சுக் கழுகின் கால்களில் சிறிய இரும்புச் சங்கிலியைக் கட்டிப் போட்டு விட்டு, மறைந்து கொள்ள வேண்டும். இரையுடன் திரும்பிய தாய்க் கழுகு, தனது குஞ்சுகள் சங்கிலியால் கட்டப்பட்டதை உணர்ந்து, அதிலிருந்து விடுவிப்பதற்காக, சஞ்சீவி மூலிகையை தேடிச் செல்லும். சிறிது நேரத்திலேயே அதைக் கொண்டு வந்து தனது குஞ்சுகள் கட்டப்பட்ட இரும்புச் சங்கிலி மீது வைக்க அவை இரண்டாக தெறித்து விடுபடும். அதன் பிறகு, மீண்டும் அது இரை தேடி புறப்படும் வரை நாம் காத்திருந்து, பின்னர் மேலே ஏறி கூட்டில் பார்த்தால், பச்சை நிறத்தில் ஒரு மூலிகை வேர் இருக்கும். அதை எடுத்து வந்து நெருப்பில் போட்டால் வேகாது எனவும், ஓடும் நீரில் போட்டால் எதிர்த்துச் செல்லும் எனவும், இதை பூட்டிய பூட்டின் மேல் வைக்க அது திறந்து

சஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் -பாம்பு விஷகடி - முறிவு



சஞ்சீவி மூலிகையின் தேடுதலின் போது அதன் இன்னொரு பரிணாமத்தை எனக்கு ஒரு மகான் உபதேசித்தார். நமது புராண காவியங்களில் ஒன்றான ராமாயணத்தில் ஸ்ரீராம பிரான் சீதா தேவியை ராவணனிடமிருந்து மீட்கும் போது நடந்த போரில் ராவணனின் மகன் இந்திரஜித் நாகாஸ்திரம் ஏவியதில் ஸ்ரீராமர், லட்சுமணன் ஆகியோர் மூர்ச்சையாகி விட இதனால் மனம் கலங்கிய ஹனுமனிடம், ஜாம்பவான் சஞ்சீவி மலையினை பெயர்த்து வரச் செய்து இம் மூலிகையினைக் கொண்டு இருவரையும் உயிர் பெறச் செய்தார் என்று ராமாயணம் சஞ்சீவி மூலிகையின் மகிமையை பறை சாற்றுகிறது.

மேற்கண்ட ‘நாகாஸ்திரம்’ என்பது நாகப் பாம்பின் விஷத்தினால் தயார் செய்யப்பட்ட ஒரு ஆயுதம். இதன் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்ட மூலிகையே ‘சஞ்சீவி’ என்பதாகும். இறைவனின் படைப்பில் எங்கெல்லாம் நஞ்சு உள்ளதோ, அதன் அருகிலேயே அமிர்தமும் படைக்கப்பட்டுள்ளது என்பது நிச்சயமான உண்மை. தேவர்கள் சாகாவரம் தரும் அமிர்தம் பெற திருப்பாற்கடலை கடைந்த போது முதலில் விஷம் தான் வெளி

கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி


இரசவாத,காயகற்ப,அதிசய, மூலிகைகள் ஆய்வு -அடையாளம் செய்முறை   விபரம் -பாகம்- 2

புலியடி மூலி

கொல்லிமலை கிரிகை அரியலாம், புலியடி மூலி விபரம் சொல்லக் கேளு அரப்பளீசுவர் கோவிலுக்குப் பின்புறமாய் தென்கிழக்கு மூலையில் வழியே ஒரு நாழிகை தூரம் போனால் அங்கே ரெட்டைக்குண்டு மேடு உள்ளது. அது ரெட்டைக்குண்டு ஓடையென்று சொல்லப்படும்.

அந்த மேட்டில் முலைத்ததெல்லாம் புலியடி மூலிதான் அது குத்துச்செடி போல் முளைத்து ஒரு முள உயரமாயிருக்கும் செடி சுற்றிலும் கிளைகள் படர்ந்து பூமியில் சுற்றி படாந்துயிருக்கும். இலைகள் புலிப்பாதம் போல் இருக்கம். இலையைத் திருப்பிப் பார்த்தால் புலியைப் போலவே சாரை சாரையாய் கோடுகள் இருக்கும் இந்த இலை வெள்ளை, பச்சையாய் இருக்கும்.

இந்த இலையைப் பறித்து சாறு பிழிந்து கொண்டு, இரும்பைத் தகடு தட்டி சுருட்டி பழுக்கக் காய்ச்சி சாற்றில் மூன்றுமுறை துவைக்க (சுருக்கு கொடுக்க) செல்லு அரித்தது போல் இருக்கும் மீண்டும் மூன்றுமுறை சுருக்கு கொடுக்க இரும்பு தகடு கொஞ்சம் சிவந்து இருக்கும் அதை எடுத்துக்கொண்டு வெட்டி மூசையில் போட்டு வெங்காரம் கொடுத்து உருக்கி எடுத்து

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...