Oct 15, 2012

விண்டோஸ் 7 டிப்ஸ் - ட்ரிக்ஸ்


விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. பைல்கள் இடையே எளிதாக:

ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம்.

எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம். இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர, விண்டோஸ் 7 எளிய

விண்டோஸ் 7 சிஸ்டம் ரெஸ்டோர்


விண்டோஸ் கிராஷ் ஆகி, கம்ப்யூட்டர் பயன்பாடு முடங்கிப் போகும் போது, முந்தைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று இயங்க வைத்திட, விண்டோஸ் சிஸ்டம் தனக்குள் கொண்டிருப்பது சிஸ்டம் ரெஸ்டோர் வசதியாகும்.

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இந்த சிஸ்டம் ரெஸ்டோர் இன்னும் கூடுதல் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவது எளிது என்றாலும், புத்திசாலித்தனமாக இதனைப் பயன்படுத்தினால் அதிகம் பயன் கிடைக்கும். அதனை எப்படிப் பயன்படுத்துவது என இங்கு பார்க்கலாம்.

1. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புடன் செயல்பாடு: சிஸ்டம் ரெஸ்டோர், உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்புடன்

விண்டோஸ் 7 வேகமாக இயங்க

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக வேகமாக பயனாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம். நம் கம்ப்யூட்டர் செயல்பாடு களை வேகமாக மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. விரைவாக அப்ளிகேஷனை இயக்க:

கீ போர்டில் விரல்களை இயக்கியவாறே, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க வேண்டுமா? முன்பு இவற்றை இயக்க, மவுஸ் கொண்டு, முகப்பு திரையில் ஐகான் இருந்தால், அதன் மீது கிளிக் செய்திட வேண்டியதிருக்கும்.

அல்லது விண்டோஸ் லோகோ கீ அழுத்தி, கிடைக்கும் பட்டி யலில், ஆல்

விண்டோஸ் 7 வெற்றி


மிக வேகமாக விற்பனை செய்யப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ற பெயரினை விண்டோஸ் 7 பெற்றுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டு 9 மாதங்களில், 17 கோடியே 50 லட்சம் பேர் இதனை வாங்கியுள்ளனர்.

இந்த வேகமான விற்பனைக்குக் காரணம் என்ன? இதற்கு முன்னர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பல பதிப்புகளை வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஏன் விண்டோஸ் 7 மட்டும் கூடுதலாக லாபம் ஈட்டித் தரும் வகையில் விற்பனை ஆகி உள்ளது என்ற கேள்வி பலரிடமிருந்து வந்துள்ளது.

இதற்குக் காரணம் மிக வெளிப்படையான ஒன்றுதான். இந்த சிஸ்டத்தில் தான்

2012ல் கம்ப்யூட்டரும் இணையமும்

  எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், வரும் புத்தாண்டில், 2012ல், பல புதிய சாதனங்கள் தகவல் தொழில் நுட்ப சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை இந்த ஆண்டில் அறிமுகமான, பேசப்படும் சாதனங்கள் உறுதி செய்கின்றன. நிச்சயமாய் மாற்றங் களை ஏற்படுத்தப்போகும் இவற்றைப் பற்றி இங்கு காணலாம்.

1. விண்டோஸ் 8:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் இதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இல்லாத பல புதுமை களைக் கொண்டு வர இருக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட்

கம்ப்யூட்டர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டினை உறுதியிட்டுக் கூற முடியாத வகையில்,

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேப்ளிட் PC

1975 ஆம் ஆண்டு பில் கேட்ஸ், தன் நண்பர் பால் ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தினைத் தொடங்கினார். அப்போதிருந்த மைக்ரோ கம்ப்யூட்டரில் பயன்படுத்த பேசிக் என்னும் புரோகிராமிங் மொழியை அவர்கள் விற்பனை செய்திட முயற்சித்தனர்.

தொடர்ந்து சாப்ட்வேர் புரோகிராம்களையே தயாரித்த இந்நிறுவனம், அவற்றின் மூலம் இந்த உலகை மாற்றி அமைத்தன. மனித இனத்தின் சிந்தனைப் போக்கையே அடியோடு புரட்டிப் போட்டன.


இப்போது முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2012 ஆம் ஆண்டில், மைக் ரோசாப்ட், முற்றிலும் புதிய முயற்சியாக, ஹார்ட்வேர் பிரிவில், டேப்ளட்

2011ல் வெற்றி பெற்ற தொழில் நுட்பங்கள்


சென்ற 2011 ஆம் ஆண்டில், பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில் நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின. ஆனால் சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பத்திற்கு சிறந்த வகையில் வெற்றியும், மக்களிடையே அந்த சாதனங்களுக்கு வரவேற்பும் இருந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Siri):

ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐ போன் 4 எஸ் மக்கள் எதிர்பார்த்த பல மாற்றங்களுடன் வரவேற்பைப் பெற்றது. வேகமாக இயங்கும் ப்ராசசர், சிறந்த அம்சங்களுடன் கூடிய கேமரா ஆகியவை இருந்தன. ஆனால் ஒரு பெரிய மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும் சிரி என்னும் தொழில் நுட்பத்தினை

மொபைல் எண்ணை மாற்றாமல் நிறுவனத்தை மாற்ற

மொபைல் போன் பயன்பாட்டில் எண்கள் நமக்கு மாறா அடையாளத்தைக் கொடுக்கின்றன. இதனால், குறிப்பிட்ட நிறுவனம் வழங்கும் சேவை மோசமாக இருந்தாலும், பலரும் அதனைச் சகித்துக் கொண்டு அதே நிறுவனத்திடமிருந்து மொபைல் சேவை பெற்று வருகின்றனர்.

இந்த சிக்கலைத் தீர்க்கவே, அரசு மொபைல் எண்ணை மாற்றாமல், சேவை தரும் இன்னொரு நிறுவனத்தில் இணைந்து கொள்ளும் வசதியை அனைத்து நிறுவனங்களும் தர வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்து அதற்கான கட்டமைப்பையும் ஏற்படுத்தியது.

சென்ற ஏப்ரலில் மட்டும் எண்ணை மாற்றாமல் நிறுவனத்திற்கு மாறக் கூடிய வசதியைக் கேட்டு 40 லட்சத்து 14 ஆயிரத்து 26 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுடன் இதுவரை இவ்வகையில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சத்து 900 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் அதிக எண்ணிக்கை கொண்டதாக கர்நாடக மாநிலம் உள்ளது.

இந்த பட்டியலில் தமிழகம் ஏழாவது இடத்தில், 26 லட்சத்து 39 ஆயிரத்து 679 விண்ணப்பங்களுடன் உள்ளது.

நூறு கோடி பேருடன் பிரம்மிக்க வைக்கும் Facebook

உங்கள் வீட்டு அழைப்பு மணி, பாலங்கள், விளையாட்டுக்கள், விமானங்கள் மட்டுமா மக்களை இணைக்கிறது? இவற்றைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் இதயங்களை இணைக்கும் தளமாக எங்கள் பேஸ்புக் விளங்குகிறது. 

அண்மையில், செப்டம்பர் 14ல், பேஸ்புக்கின் ஜனத்தொகை நூறு கோடியைத் தாண்டியது. இது எனக்கு மிகப் பெரிய பெருமையாகும்' என்று வெற்றிப் பெருமிதத்துடன் கூறி உள்ளார், இதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க். இந்த செய்தி அக்டோபர் 4ல் தான் வெளியிடப்பட்டது. 


மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் பேஸ்புக் ஜனத்தொகை 17.5 கோடியாக இருந்தது. 36 மாதங்களில், 82.5 கோடி பேர் இணைவது என்பது பெருமைப்படத்தக்க விஷயம் தான். 
நூறு கோடி என்பது, உலகின் 700 கோடி மக்கள் தொகையில் 14%. பதின்மூன்று

Oct 14, 2012

பாகிஸ்தான் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கத் தயார்: யுஏஇ


 பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கத் தயார் என்றும், அதற்காக ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய விமானத்தை அனுப்பி வைப்பதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானுக்கான யுஏஇ தூதர் ஜமில் அஹமது கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், 
 தலிபான்களால் சுடப்பட்ட மலாலா (14) என்ற சிறுமியை மேல் சிகிச்சைக்காக யுஏஇ-க்கு அனுப்ப விரும்பினால் அதற்காக ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய விமானத்தை அனுப்பத் தயாராக உள்ளோம்.
 மலாலாவுடன் உதவிக்காக வரும் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கான விசா

துருக்கி விமானங்களுக்கு சிரியா தடை


தமது வான்பகுதியில் துருக்கி நாட்டின் பயணிகள் விமானங்கள் பறக்க சிரியா அரசு தடை விதித்துள்ளது. தமது பயணிகள் விமானத்துக்கு துருக்கி தடை விதித்ததற்கு பதிலடியாக சிரியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எனினும், சிரியா விமானங்களுக்கு துருக்கி அரசு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கவில்லை.
கடந்த வியாழக்கிழமை ரஷியாவின் மாஸ்கோவிலிருந்து டமாஸ்கஸ் நகருக்கு சென்றுகொண்டிருந்த சிரியா பயணிகள் விமானத்தில் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் துருக்கி விமான நிலைய அதிகாரிகள் அந்த விமானத்தை அங்காராவில் அவசரமாக தரையிறங்க வைத்தனர். இந்தப் புகாரை சிரியாவும் ரஷியாவும் மறுத்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை வழக்கம் போல துருக்கி வான்பகுதியில் சிரியா விமானம் பறக்க அனுமதிக்கப்பட்டது. எனினும், சிரியா வான்வழியில் பறப்பதை துருக்கி விமானங்கள் நிறுத்திக் கொண்டன. இந்நிலையில்தான் துருக்கி விமானங்களுக்கு சிரியா தடை விதித்துள்ளது.
கடந்த வாரம் இவ்விரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் பரஸ்பரம் ராணுவத் தாக்குதல் நடைபெற்ற நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...