Sep 23, 2012

உருவாகிறது தெலுங்கானா மாநிலம்? கூண்டோடு விலகப் போவதாக ராயலசீமா காங். தலைவர்கள் மிரட்டல்


ஹைதராபாத்: ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைத்தால் காங்கிரஸ் கட்சியிலிருந்தே விலகிவிடுவோம் என்று 6 அமைச்சர்கள் உட்பட 32 எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சாதகமான முடிவை அறிவிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
தெலுங்கானா தனி மாநிலம் அமைந்தால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கூண்டோடு காங்கிரசில் ஐக்கியமாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசில் இருந்து திரிணாமுல் வெளியேறிவிட்ட நிலையில் இப்போது சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சிகளையே காங்கிரஸ் நம்பியிருக்கிறது. ஆனாலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை அப்படியே காங்கிரசில் ஐக்கியப்படுத்திக் கொள்வதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்படுத்தியிருக்கும் பேரிழப்பை சற்றேனும் சமாளிக்கலாம் என்பதுதான் காங்கிரஸின் கணக்கு.


மேலும் கடந்த ஒருவார காலமாக ஆந்திர மாநில சட்டப்பேரவையை தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக் கட்சியினர் முடக்கி வைத்திருக்கின்றனர். தனித் தெலுங்கானா மாநிலம் அமையும்வரை ஆந்திர பேரவையை நடத்தவிடமாட்டோம் என்று கூறிவருகிறது. இதனால் எப்படியும் தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
ஆனால் தெலுங்கானாவை எதிர்க்கும் ராயலசீமா பிரதேச காங்கிரஸ் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் கட்சியைவிட தங்களுக்கு மக்கள் நலன்தான் முக்கியம் என்று கூறியுள்ளனர். ராயலசீமா பகுதியை சேர்ந்த 6 அமைச்சர்களானசைலஜாநாத் வெங்கடேசன், முரளி மோகன், சீனிவாசராவ்,அகம துல்பா, தோட்டா நரசிம்மா ஆகியோரும் 32 எம்.எல்.ஏ., 14 எம்.பி.க்களும் ஹைதராபாத்தில் நேற்று திடீரென அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டால் ராயலசீமா பிரதேசத்தைச் சேர்ந்தோர் அனைவரும் காங்கிரஸிலிருந்து விலகிவிடுவது என்று முடிவெடுத்திருக்கின்றனர். மேலும் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...