- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு
கலைக்கல்லூரி,கோவை) -
குடித்தனம் நடத்த முடியுமா? கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் இடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா? இவையாவும் இனி முடியாது. அப்படியே முடிந்தாலும் அடுத்தவர் உங்களை விடமாட்டார். இவைகளைப் போல, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும், மக்களிடம் பரஸ்பர உறவை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் மனிதர்களால் இனி வாழ முடியாது. மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தேடிப் போய் கொண்டு இருக்கிறார்கள். இல்லையேல் உங்களுக்கு மன அழுத்தம் தரும் ஏராளமான விஷயங்களோடு உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு நீங்கள் வாழ வேண்டும்
என்றால், அறிவியல் வளர்ச்சியினாலும் தொழில் நுட்ப வளர்ச்சியினாலும் ஏற்பட்டுள்ள
வாழ்க்கை வசதிகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு ஓர் விலை கொடுத்தே
ஆக வேண்டும். அந்த விலையே மன அழுத்தம்.
நம் அனைவரிடமும் ஓரளவு பணம் இருக்கும். உங்களிடம் 500 ரூபாய் இருக்கும் போது 5
ரூபாய்க்கு செலவு வந்தால் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது? சாதாரணமாக அந்த செலவை
சமாளித்து விடலாம். ஆனால் 50 ரூபாய் இருக்கும் போது 5000 ரூபாய் அளவுக்கு செலவு
வந்தால் உங்களால் எப்படி சமாளிக்க முடியும்?
அதைப் போலவே, நம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அளவு உடல், மன சக்தி உள்ளது.
சாதாரண, நம் சக்திக்கு உட்பட்ட செயள்களை நாம் செய்யும் போது பிரச்சனை ஏதுமில்லை.
ஆனால் தீர்க்க முடியாத பிரச்சனை ஒன்றை தீர்க்க முயலும் போது அல்லது செய்ய முடியாத
செயல் ஒன்றை செய்து முடிக்க முயலும் போது நாம் நம் உடல், மன சக்தியை மீறி
செயல்படுகிறோம் என்று அர்த்தம். இதுபோல நம் உடல், மன சக்திக்கு மீறிய விஷயம்
ஒன்றை சமாளிக்க முயலும்போது நம் மனதில் ஏற்படும் தவிப்பு அல்லது பய உணர்வே மன
அழுத்தம் எனப்படும்.***
அளவுக்கதிகமான கெட்ட மன அழுத்தம் நம்மை நிலைகுலையச் செய்வது போல, அளவுக்கு
அதிகமான நல்ல மன அழுத்தம் நம்மை சிறப்பாக செயல்புரிய செய்கிறது. நாம் அனைவரும் மன
அழுத்தத்தின் கெட்ட முகத்தைத் தான் காண்கிறோம். அதற்கு இன்னொரு நல்ல முகமும்
உண்டு.
பாம்பின் விஷம் கூட மருந்துக்குப் பயன்படுவது போல மன அழுத்தமும் நமக்கு நன்மை
புரியும். எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் ஓரளவுக்கு ஏற்படும் மன அழுத்தம்
நன்மைக்கே என்பதை மனதில் கொள்ள வேண்டும்.***
நாய் ஒன்று பூனையைத் துரத்துகிறது. பூனையோ நாயிடமிருந்து தப்பிப்பதற்காக தன்
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறது. இறுதியாக ஓர் அறையின் மூலையொன்றில்
பூனை மாட்டிக்கொள்கிறது. அதற்கு மேல் ஓட வழியில்லை. அப்போது பூனை என்ன செய்யும்
என்று கவனித்து இருக்கிறீர்களா?
பூனையின் கண்மணிப்பாவை விரிந்து பார்வை கூர்மையாகும். அமுங்கி இருக்கும் கால்
நகங்கள் நாயை கீருவதற்கு வசதியாக வலிமை பெறும். பூனையின் உடலிலுள்ள மயிர்கால்கள்
குத்திட்டு நிற்கும். கூறிய பற்களை காண்பித்து சத்தத்துடன் நாயைக் கடிக்க பூனை
தயாராகிவிடும். இறுதிப் போரட்டத்தில் சிறிய பூனை வலிமையான நாயையே கொண்று
விடக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
நாயைப் போன்ற மன அழுத்தம் நம்மை தாக்கும்போது நாமும் பூனையைப் போலவே ஒன்று
பிரச்சனையைக் கண்டு ஓடி ஒளிவோம் அல்லது பிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை
என்றாக்கி விடுவோம்.
No comments:
Post a Comment