Aug 17, 2012

கடுமையான பதிவுகளால் ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் 'பேஸ் புக்" கணக்கு





தி.மு.க. தலைவர் கருணாநிதியின், 'பேஸ் புக்" கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க. தலைவர் கருணாநிதி, 'கலைஞர் கருணாநிதி" என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை ஆரம்பித்தார்.

ஆரம்பித்த நாள் அன்றே சுமார், 2,700 பேர் அந்தப் பக்கத்தில் இணைந்தனர். மறு நாளான நேற்று மாலை வரை, சுமார் 5 ஆயிரம் பேர், அவருடைய பக்கத்தில் இணைந்திருந்தனர். கருணாநிதியின் 'பேஸ் புக்" பக்கத்தில் 'டெசோ" மாநாட்டுத் தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தன.

டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி


சென்னை: திமுக தலைவர் கருணாநிதியும் சோசியல் மீடியாவுக்குள் நுழைந்துள்ளார். டிவிட்டரில் தனது கணக்கைத் துவக்கவுள்ளார்
பாஜக தலைவர் அத்வானி இப்போதெல்லாம் தனது பேஸ்புக் அக்கெளண்டில் தான் தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அதே போல குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் டிவிட்டர் பக்கம் மிக மிகப் பிரபலமானதாகும். அங்கு அவருக்கு 8 லட்சம் வாசகர்கள் உள்ளனர்.
இந் நிலையில் டிராமா, சினிமா, டிவி என அந்தந்த கால டெக்னாலஜிக்களை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட இயக்கம் திமுக. ஆனால், இன்டர்நெட்டில் திமுக அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை.
இப்போது தான் திமுக பொருளாளர் ஸ்டாலின் பேஸ்புக்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந் நிலையில் கருணாநிதியும் சமூக வலைத்தள உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். டிவிட்டர் கணக்கு துவங்கியுள்ள கருணாநிதி இனி அதிலும் தனது கருத்துகளை வெளியிடவுள்ளார்.
கருணாநிதி டிவிட்டர் பக்கம்

சூரிய ஒளியினால் இயங்கும் மிதக்கும் விடுதி

சூரிய ஒளியினால் இயங்கும் மிதக்கும் விடுதி










































பதைபதைக்க வைக்கும் மலைப்பாம்பு!




பார்த்தவுடன் நீங்கள் பயந்து தான் போய் விடுவீர்கள். இருந்தும் என்ன செய்ய? இந்தக் கேக் உண்மையில் உண்மையான மலைப்பாம்பைப் போலவே காணப்படுகின்றது.
மலைப் பாம்பின் உருவத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ள கேக்கின் புகைப்படங்கள் இவை.இணையத்தில் இப்புகைப்படங்கள் வெளிவந்து உள்ளன.

மிகப்பெரிய மலைப்பாம்பு பிடிப்பட்டது!

இலங்கையில் இதுவரை பிடிக்கப்பட்டவற்றில் மிகப் பெரிய மலைப்பாம்பு எனக் கருதப்படும் 22 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நேற்று (16) மாத்தளை உகுவெல பிரதேசத்தில் பிடிக்கப்பட்டது.
இதனை எடை 122 கிலோகிராம் என வனசீவராசி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மலைப்பாம்பு எலஹெர கிரிதலே புனித பூமியில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இதே பிரதேத்தில் இதற்குச் சமாந்தரமான மலைப்பாம்பொன்று பிடிக்கப்பட்டு, பாதுகாப்பான வனப்பிரதேசத்தில் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

::. மாத்தளையில் உலாவிய இராட்சதன் (photo) .:: newJaffna.com

::. மாத்தளையில் உலாவிய இராட்சதன் (photo) .:: newJaffna.com

கலைஞர்கருணாநிதி.காம்-தொடங்கி வைத்தார் கருணாநிதி


சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தனது முதுபெரும் வயதில் இணையதளத்திற்குள் முறைப்படி காலெடி எடுத்து வைத்துள்ளார். கலைஞர்கருணாநிதி. காம் என்ற பெயரிலான அவரது புதிய இணையதளம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
சமீபத்தில்தான் கருணாநிதி டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றுக்குள் புகுந்தார். இப்போது இணையதள வீட்டுக்குள்ளும் புதுமுனை புகுவிழா நடத்தி அடியெடுத்து வைத்துள்ளார்.
http://www.kalaignarkarunanidhi.com என்ற பெயரிலான இந்த புதிய இணையதளம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. கருணாநிதியை அதைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், இனி இந்த இணையதளத்திலும், திமுக நிகழ்ச்சிகளை அனைவரும் அறிந்து கொள்ளலாம். டுவிட்டர், பேஸ்புக்கில் சேர்ந்ததன் மூலம் இளைய தலைமுறையினருடன் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார் தனக்கே உரிய மந்தகாச புன்னகையுடன்.
இந்த இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் முறையாக அப்டேட் செய்யப்படவில்லை. அதுதொடர்பான பணிகள் நடந்து வருவதாக அதில் செய்தி போடப்பட்டுள்ளது.
கருணாநிதி டிவிட்டர் பக்கம்
கருணாநிதியின் பேஸ்புக் பக்கம்

தெ.ஆப்பிரிக்க போலீஸ் அராஜகம் : 36 சுரங்கத் தொழிலாளர்கள் சுட்டுக் கொலை


தென் ஆப்பிரிக்காவில் உள்ள மரிகானாவில் லான்மின் பிளாட்டினம் சுரங்கத்தில் தொழிலாளர்கள் தீவிர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போலீசுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் 36 தொழிலாளர்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டது நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குண்டுதுளைக்காத ஜாக்கெட்டுகளுடன் குதிரை மீது வந்த போலீஸ் படையினர் தொழிலாளர்கள் மீது கண்மூடித் தனமாகச் சுட்டனர் இதில் 36 பேர் பலியாகினர். தொழிலாளர்கள் பக்கத்திலிருந்தும் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் பாம்பு இறைச்சியில் பேர்கர் சாப்பிட்டதுண்டா?

நீங்கள் பாம்பு இறைச்சியில் பேர்கர் சாப்பிட்டதுண்டா?இந்தோனேசியா நாட்டில் மிக பிரபலமான உணவுகளில் ஒன்றாக கருதப்படுவது பாம்பு பேர்கர் ஆகும். மேலும் இந்த பேர்கர் குறிப்பாக நாக பாம்புகளை கொன்று அவற்றின் இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படுவதால் மிகவும் சுவையானது என்று கருதப்படுகிறது




மனித உடல் மியூசியம் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?



தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில், மனித உடல் மியூசியம் உள்ளது. தெற்காசியாவிலேயே 130 மனித உடல்களைக் கொண்ட மியூசியம் இதுவாகும்.






மிகவும் அரிதாக காட்சியளிக்கும் வெள்ளை நிற கங்காரு




Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...