Sep 18, 2012

50 ஆண்டுகளில் 20 நாடுகள் அழியும் சிவகங்கையில் விஞ்ஞானி கருத்து








சிவகங்கை:""அதிகளவு கரியமில வாயு வெளியேறுவதை தடுக்காவிட்டால், 50 அல்லது 100 ஆண்டுகளில் உலகில் 20 நாடுகள் வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும்,'' என, மாநில சுற்றுச்சூழல் கல்வி மைய பொறுப்பு விஞ்ஞானி ராம்ஜி, சிவகங்கையில் பேசினார். "கால நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி பணிமனை' பயிற்சியில், அவர் பேசியதாவது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மத்திய அரசு, "பரியாவரன் மித்ரா' திட்டத்தை துவக்கியுள்ளது. இத்திட்டம் குறித்த கருத்துக்கள், ஆசிரியர்கள் மூலம், மாணவர்களுக்கு சேர்க்கப்படுகின்றன. அதிகமான கரியமில வாயு வெளியேற்றத்தால், காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.


பன்னாட்டு ஆய்வுக் குழுவின் அறிக்கைப்படி, 50 அல்லது 100 ஆண்டுகளில், உலகில், 20 நாடுகள், வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது. இந்தியா உட்பட 16 நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், இதில் அடங்கும். கடந்த 200 ஆண்டுகளில், உலகளவில், 1.5 செல்சியஸ் வெப்பமும், 20 செ.மீ., கடலரிப்பும் அதிகரித்துள்ளன.

உறை பனியின் உருகும் நிலை அதிகரித்து வருவதால், இமய மலையை நம்பியுள்ள, 20 கோடி மக்கள் பாதிக்கப்படலாம்.காலநிலை மாற்றத்தை சீராக்க, கார்பன்- டை- ஆக்சைடு பயன்பாட்டை குறைக்க வேண்டும். மாணவர்களை ஊக்கப்படுத்தி, நிறைய மரங்கள் வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளிலிருந்து கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காடுகள் அழிப்பை தடுக்கவும், அதிகளவு வாகன பயன்பாட்டை குறைக்கவும், வலியுறுத்த வேண்டும்.இல்லையெனில், எதிர்காலத்தில் பெருமளவில் விவசாயம் பாதித்து, மக்கள் உணவுக்கு கஷ்டப்படும் நிலை உருவாகலாம்.
இவ்வாறு பேசினார்.

டிசம்பருக்குள் உலகம் அழியும் பீதி கிளப்புகிறார் உமாசங்கர்

ஆத்தூர் : ""இன்னும் மூன்று மாதங்களில் உலகம் அழியும்,'' என, தமிழக ஒழுங்கு நடவடிக்கை ஆணைய கமிஷனர் உமாசங்கர் பேசினார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, அண்ணா கலையரங்கில், கிறிஸ்தவ போதகர்கள் சார்பில், "2012ம் ஆண்டு வரப்போகும் அழிவில் இருந்து தப்பிப்பது எப்படி' என்பது குறித்து, கிறிஸ்தவ மத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.தமிழக ஒழுங்கு நடவடிக்கை ஆணைய கமிஷனர் உமாசங்கர் பங்கேற்று பேசியதாவது:இந்த ஆண்டு, டிசம்பர் மாதம், உலகின் பெரும் பகுதி அழிவை சந்திக்க உள்ளது. சுனாமி, சூரிய புயல், விண்கற்கள் விழுதல் போன்ற இடர்ப்பாடுகளில், ஏராளமானோர் இறந்து விடுவர். நிலத்தின் ஒரு பகுதி கடலாக மாறி விடும், கடற்கரை நகரங்கள், 15 கி.மீ., வரை அழிவை சந்திக்கும்.அவ்வாறு, ஆண்டவர் வரும் நாளில், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படும். கிறிஸ்தவர்கள், வீட்டில் வைத்துள்ள ஜாதகங்களை, தீயிட்டு கொளுத்துங்கள், குப்பையில் வீசியெறியுங்கள். ராகு காலம், எமகண்டம் குறிப்பிட்டுள்ள காலண்டர்களைக் கூட எரித்து விடுங்கள். ஜாதகங்களை நம்ப வேண்டாம். இவ்வாறு உமாசங்கர் பேசினார்.பின்னர், அவர், நிருபர்களிடம் கூறுகையில், ""கிறிஸ்தவர்களிடம் மட்டும், கிறிஸ்தவ மதக் கருத்துக்களைக் கூறுகிறேன். அரசு பணியை தொய்வு இல்லாமல் செய்கிறேன். பா.ஜ.,வினர், அரசியல் சாசனச் சட்டம் தெரியாமல் பேசுகின்றனர். என் மீது, பா.ஜ.,வினர் புகார் செய்தாலும், கற்களை வீசினாலும் தாங்கிக் கொள்வேன்,'' என்றார். பா.ஜ., மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கூறுகையில், ""ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர், கிறிஸ்தவ மத மாற்ற முயற்சிகளில் ஈடுபடுவது, சட்ட விரோதமானது. அவர் மீது, விசாரணை நடத்த, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவரது கிறிஸ்தவ மதப் பிரசாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, புகார் செய்துள்ளோம்,'' என்றார்.


சீனா-ஜப்பான் மோதல் முற்றுகிறது தீவு பகுதியில் 1,000 சீன படகுகள்


-
சீனா, ஜப்பான் நாடுகளின் கடல் பகுதியில் அமைந்துள்ள 2 தீவுகள் உரிமை தொடர்பாக இரு நாடுகள் இடையே பிரச்சினை நிலவுகிறது.

இது தற்போது மோதலாக மாறியுள்ளது. இதனால் சீனாவில் செயல்படும் பிரபல ஜப்பான் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை மூடி விட்டன.

கடந்த சில நாட்களாக கடைகளையும் அடைத்து விட்டனர். அங்கு பணியாற்றும் ஊழியர்களை ஜப்பானுக்கு திரும்பி அனுப்ப ஏற்பாடு செய்து வருகின்றன.

இதன் விளைவாக 2 நாடுகள் இடையே வர்த்தகம் பெரும் அளவில் பாதிக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. அத்துடன் பீஜிங்கில் உள்ள ஜப்பான் தூதரகம் பாஸ்போர்ட் வழங்குவதை நிறுத்தவும் தீர்மானித்துள்ளது.

இதற்கிடையில் பிரச்சினைக்குரிய தீவு பகுதியில் சீனாவின் 1,000 மீன்பிடி படகுகள் முற்றுகையிட்டு, இது எங்கள் கடல் பகுதி என்றும், இங்கிருந்து ஜப்பான் கடலோரப்படை வெளியேற வேண்டும் என்றும் ரேடியோ மூலம் அறிவித்தனர். ஜப்பான் கடலோர பாதுகாப்பு படையினர் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

வயது தொடர்பான பார்வை குறைபாட்டை குறைக்கும் மீன் உணவு



வயதாகும் பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல வியாதிகள் தாக்கும் அபாயம் உள்ளது. அதில் பார்வை குறைபாடும் அடங்கும். வயதாகும் காலத்தில், பார்ப்பதற்கு உதவும் ரெடினா எனப்படும் விழித்திரையின் ஒரு பகுதியான மெகுலாவின் பெரும்பான்மையான செல்கள் இறந்து போகும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்படும் பார்வை குறைபாடு மருத்துவ உலகில் ஏ.எம்.டி. அதாவது ஏஜ் ரிலேடட் மெகுலார் டீஜெனரேசன் என அழைக்கப்படுகிறது. இக்குறைபாடு, பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. பிரிட்டனில் இந்த வியாதியால் ஏறத்தாழ 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஹார்வர்டு மெடிகல் ஸ்கூலில் மருத்துவராக உள்ள வில்லியம் கிறிஸ்டென் என்பவர் ஆய்வு ஒன்று மேற்கொண்டார். அந்த ஆய்வில், வாரத்திற்கு இரு முறை என்ற அளவில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் உணவை எடுத்து கொள்வது பலன் தரும் என தெரிய வந்துள்ளது.

நான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு



இயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இது பற்றி வெஸ்ட் விர்ஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற

ஆரம்ப நிலை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு



அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆய்வொன்றில் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை ஆரம்ப நிலையில் காணப்படும் மார்பக புற்றுநோயை தடுக்க கூடியது என தெரிய வந்துள்ளது. இவற்றில் உள்ள வைட்டமின் 'ஏ' வழியே பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம் ஆனது செல்களின் வளர்ச்சி, புதுப்பொலிவு மற்றும் செல் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தோல் வனப்புடன் இருப்பதற்கும் உதவுகிறது. மனிதனின் உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜீன் ரெட்டினாய்க் அமிலத்தின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கும் பணியினை செய்கிறது. இதனால் ரெட்டினாய்க் அமிலம், ஆரம்ப நிலையில் காணப்படும் புற்றுநோய் வளர்ச்சியை முற்றிலும் தடுத்து நிறுத்துகிறது என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

பால் அதிகமாக குடிப்பது பார்வைக்கு பலம் சேர்க்கும்: ஆய்வில் தகவல்


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு (ஏ.எம்.டி.) பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலும் 50 வயதினை நெருங்கும் பெண்களை பாதிக்கும் இக்குறைபாடு, சாதாரணமாக செய்யும் வேலைகளான வாசித்தல், வாகனம் ஓட்டுதல் மற்றும் தெரிந்தவர்களின் முகத்தை அடையாளம் காணுதல் போன்றவற்றை கூட செய்ய இயலாத நிலைக்கு அவர்களை தள்ளி விடுகிறது. பிரிட்டனில் வருடத்திற்கு

உடல் எடையை குறைக்கும் கோகோ நிறைந்த சாக்லேட்டுகள்



ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் லில்லி ஸ்டொஜநொவ்ஸ்கா என்பவர் சாக்லேட் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 75 முதல் 85 சதவீதம் கோகோ கலந்த அடர்ந்த கருப்பு நிறம் கொண்ட சாக்லேட்டுகள் அதிகமாக உட்கொள்வது உடலுக்கு நன்மையை தருகிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த சாக்லேட்டுகளில் எபிகாடெச்சின் என்ற ஆன்ட்டியாக்சிடண்ட் ரெட் வொய்னை விட இரு மடங்கிற்கும் மேல் அதிகமாக காணப்படுகிறது. அது உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பினை கரைப்பதற்கு

ஹிப்னாடிசம் முறையில் எளிதாகும் அறுவை சிகிச்சை



பெல்ஜியம் நாட்டிலுள்ள கத்தோலிக் டி லூவெய்ன் என்ற பல்கலைகழகத்தின் பேராசிரியர் பேபியன் ரோயெலன்ட்ஸ் என்பவர் மார்பக புற்றுநோய் மற்றும் தைராய்டு சுரப்பி அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு ஹிப்னாடிசம் முறையை பயன்படுத்துவதால் அதிக பலன் கிடைப்பதாக தனது ஆய்வில் தெரிவித்துள்ளார். அவரது ஆய்வில், மேற்குறிப்பிட்ட நோயாளிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு ஹிப்னாடிசம் முறையோடு கூடிய அனஸ்தீசியா கொடுக்கப்பட்டது. இதில், சிகிச்சைக்கு உள்ளானவர்கள் மற்ற சாதாரண நோயாளிகளை காட்டிலும் அதிவிரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினர். மேலும் அவர்களுக்கு வலி மிக குறைவாக இருந்ததும் மற்றும் புற்று கட்டிகள் பிற இடங்களுக்கு பரவாமல் இருப்பதும் இச்சிகிச்சை முறையின் பெரும்பயனாக அமைவதாக ஆய்வு முடிவில் ரோயெலன்ட்ஸ் தெரிவிக்கிறார். இம்முறையினால் கண், காது, மூக்கு, தொண்டை, மூட்டு, வயிறு இறக்கம் போன்ற அறுவை சிகிச்சைகளும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் பெண்களின் கரு முட்டையை நீக்கி மேற்கொள்ளப்படும் ஐ.வி.எப். சிகிச்சை முறை ஆகியவை மிக எளிதாக அமையும் என அவர் தெரிவித்தார்.

குழந்தை இறப்பை தவிர்க்க கர்ப்பிணி பெண்களுக்கு நிபுணர்கள் அறிவுரை

பொதுவாக கர்ப்பிணி தாய்மார்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் நடந்து கொள்ளும் முறையை பொறுத்து குழந்தை பிறப்பு எளிதாக நிகழ்கிறது. எனினும், சில சமயங்களில் கருவில் இருக்கும் குழந்தை, பிறப்பதற்கு முன்பே இறந்து விடும் சூழல் ஏற்படுகிறது. இதனை ஸ்டில்&பெர்த் என்றழைக்கின்றனர். இதற்கு பெண்களின் உடல் எடை அதிகரித்தல், அதிக வயதில் தாய்மையடைதல் மற்றும் தொப்புள் கொடியின் நிலை ஆகியவை காரணமாக கூறப்பட்டாலும் தாய்மார்கள் படுக்கும் விதமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைகழக ஆய்வொன்று தெரிவிக்கிறது. கர்ப்பிணிகள் வலது புறம் படுப்பதால் குழந்தை இறப்பு விகிதம் இரு மடங்காகிற அதே வேளையில், இடது புறம் படுத்துறங்குவதால் 1000க்கு 4 என்ற அளவிலேயே இறப்பு விகிதம் ஏற்படுகிறது. இடது புறம் படுப்பதால் தாயின் இரத்த நாளங்கள் சீராக இருப்பதுடன் குழந்தைக்கும் தாய்க்குமிடையேயான இரத்த ஓட்டம் சீராக அமைவதும் தெரிய வந்துள்ளது. உலகில் இங்கிலாந்து நாட்டில் தான் அதிகமாக குழந்தைகள் இறப்பு விகிதம்(ஸ்டில்&பெர்த்) காணப்படுகிறது. அங்கு வருடத்திற்கு 4,000 குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே இறந்து விடுகின்றன. மேலும் 3ல் 1 பங்கு குழந்தைகள் இறப்பதற்கான மிக சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை என்பது வருத்தத்திற்குரிய விசயம். இதனை தடுப்பதற்காக தூங்கும் முறையில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

நகர வாழ்க்கை, மூளையை பாதிக்கிறது: ஆய்வில் தகவல்


கிராமப்புறத்தில் வாழும் மனிதர்களை விட நகர்ப்புறத்தில் வசிக்கும் மனிதர்கள் அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. நகர்புறத்தில் காணப்படும் வேறுபட்ட சமூக அமைப்பு, அதிக சப்தம் மற்றும் மக்கள் நெருக்கடி ஆகியவை காரணமாக மூளையின் அதிக உணர்வு மிக்கதான மற்றும் மனஅழுத்தத்துடன் தொடர்பு கொண்ட அமைக்டலா என்ற பகுதி அதிகமாக செயல்படுவது தெரிய வந்துள்ளது. மேலும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பகுதியாகவும், சுற்றுப்புறத்தோடு தொடர்பு கொண்டதாகவும் விளங்கும் மூளையின் மற்றொரு பகுதியான சிங்குலேட் கார்டெக்ஸ், நகர்ப்புறத்தில் பிறந்தவர்களிடம் தேவையற்ற வகையில் அதிகமாக செயல்படுவதும் ஆய்விலிருந்து தெரிய வருகிறது. வரும் 2050-ம் ஆண்டிற்குள் ஏறக்குறைய 70 சதம் பேர் நகர்ப்புற வாழ்க்கைக்கு வந்து விடுவர் என கூறப்படுவதால் ஒழுங்கற்ற மனநிலை, எதிலும் அதிக ஆர்வமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க சிறந்த மனநலத்துடன் வாழ்வதற்கு ஏற்ப நகர்ப்புறங்களை தற்போதிருந்தே வடிவமைத்து அதற்கேற்ற வகையில் வாழ்க்கை முறையினை அமைத்து கொள்வது நலம் தரும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஆரோக்கியத்துக்கும் நல்ல தோற்றத்துக்கும் காரட் சாப்பிடுங்கள்



பிரிட்டனின் பிரிஸ்டால் பல்கலை கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு ஒன்றில் மனிதர்களின் தோல் நிறத்திற்கும் அவர்கள் தோற்றத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நல்ல மஞ்சள் நிறமாக இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் நல்ல தோற்றத்துடனும் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 'கேராடெனாய்டுகள்' அடங்கிய பழங்கள், காய்கறிகள் குறிப்பாக கேரட்டுகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர். நல்ல பலன் தர சுமார் இரண்டு மாதங்களாகலாம் என மேலும் கூறப்படுகிறது. மேலும், இருதய நோய் வருவதையும் இது தவிர்க்குமாம்.

உலகளவில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவது இந்தியர்களே: உலக சுகாதார அமைப்பு



இங்கிலாந்தில் பிரபலமாகும் புதிய வகை யோகா



ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் கிறிஸ்டோபர் ஹாரிஸன் (வயது 50) என்பவர் தான் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசைக்கெதிராக மேற்கொள்ளும் யோகா முறையை பிரபலப்படுத்தி வருகிறார். தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில் தொட்டில் போன்ற அமைப்பில் பயிற்சியாளர்கள் தொங்கி கொண்டு கைகளை விரித்து தலையை உயரே தூக்கிய நிலையில் பயிற்சி மேற்கொள்கின்றனர். மற்றும் கூட்டுப்புழு போன்ற பயிற்சியினையும் செய்கின்றனர். இங்கிலாந்தில் கடந்த 10 வருடங்களாக இப்பயிற்சியினை கற்று தேர்ந்து தற்போது பலருக்கும் கற்று தரும் கிறிஸ்டோபர் அயர்லாந்து, இத்தாலி மற்றும் அமெரிக்காவிலும் பயிற்சியினை விரிவுபடுத்த இருக்கிறார்.

படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம்: ஒரு ஆய்வின் தகவல்


படுத்ததும் தூங்கிப்போகிறவர்களுக்கு அது ஒரு வரம். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. சிலருக்கு படுத்ததற்கு நீண்ட நேரத்திற்குப்பின்னரே தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் கெளண்டிங் ஷீப் செய்வதுண்டு. அதாவது, எளிதில் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 100.... 200..... 300 வரை

நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய வியாதிக்கான 29 புதிய மரபணுக்கள் கண்டுபிடிப்பு



மனிதர்களில் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய வியாதி மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ். இந்த வியாதி, நரம்பிழைகளை சூழ்ந்து அதற்கு பாதுகாப்பு அளிக்கும் மைலின் ஷீத் என்ற பாதுகாப்பு வளையத்தை தாக்கி நரம்பின் பணிகளை முடக்குகிறது

இந்திய நறுமண பொருள்கள் புதிய சிகிச்சை முறைகள் உருவாக வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்



இந்திய நறுமண பொருள்கள் மருத்துவ ரீதியாக எவ்வாறு பயன்படுகிறது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. நறுமண பொருள்களில் மஞ்சள் பற்றிய ஆய்வில், குர்குமின் என்ற பொருள் அதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது என்றும் மேலும் டிரைகிளிசரைடு என்ற வேதி பொருளின் தாக்கத்தை

மருந்தாக பயன்படும் காட் மீன்கள் பற்றி சிறப்பு தகவல்கள்



மனிதர்களுக்கு விட்டமின் A, D மற்றும் E குறைவு ஏற்பட்டால் காட் லிவர் ஆயில் தான் மருந்து. இந்த மருந்தை நமக்கு தருவது காட் என்னும் ஒருவகை கடல் வாழ் மீனினம். இந்த மீன்களுக்கு பகைவர்கள் பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள். பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகளிடமிருந்து இவற்றை பாதுகாக்க

வேதனை தரும் பரிசோதனைகளுக்கு குட்பை: அதி நுட்ப பரிசோதனை அறிமுகம்



ஸ்பேஸ் ஏஜ் வகையை சேர்ந்த அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வியாதிகளுக்கான காரணங்களை கண்டறியும் வசதியை பெரும் பொருள் செலவில் இங்கிலாந்து மருத்துவமனை ஒன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த மருத்துவமனையில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலத்தில் இடம் பெற்றிருந்த உடல் பரிசோதனை கருவிகள் உட்பட பல நவீன கருவிகள் உள்ளன. இனி, நோயாளிகளுக்கு வேதனை தரும் பரிசோதனைகளுக்கு குட்பை சொல்லப்படும் என்று இந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஸ்டார் ட்ரெக் விண்கலத்தில் விண்வெளி வீரர்களின் உடல் நலத்தை கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட ட்ரை கார்டர் ஸ்கேனர்களுக்கு இணையான கருவிகள் இதில் இடம் பெற்றுள்ளன. நோயாளிகளின் பார்வை, நுகர்வு மற்றும் உணர்வுகளை மட்டுமே ஆய்ந்து வியாதிகளை இந்த கருவிகள் கண்டுபிடித்துவிடும் திறன் பெற்றவை என்று கூறப்படுகிறது. சாதாரண அமீபியாக்கள் காரணமான வயிற்று வலி முதல் கேன்சர் போன்ற கொடிய வியாதிகள் வரை அனைத்துக்கும் இந்த கருவிகளை பயன்படுத்தலாம் என தெரிகிறது.

அதிக பருமன் என்ற எண்ணமே உடல் எடையை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

 நார்வே,
நார்வே நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் உடல் பருமன் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், தங்களை தாங்களே அதிக பருமன் உள்ளவர்கள் என நினைப்பவர்கள் மற்றவர்களை காட்டிலும் அதிக உடல் எடை கொண்டவர்களாக வளர்கின்றனர். இது உளவியல் அடிப்படையில் ஏற்படும் அழுத்தம் காரணமாக உண்டாவதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் அவர்களின் இடை பகுதி விரிவடைகிறது. மேலும், அவர்கள் மேற்கொள்ளும் சரிவிகிதமற்ற உணவு, காலை உணவை தவிர்த்தல் ஆகியவை காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

திடீர் அறிவிப்பு! இஸ்ரேலின் இருப்பு கேள்விக்குறி?


2012ல் பல நாடுகள் மோதிக்கொள்ளவிருக்கின்றன.அமெரிக்காவும் இஸ்ரேலும் பலமான அச்சுறுத்தல்களை ஈரான் மீது விட்டுகொண்டிருக்கிறார்கள்.இதில் இன்று ஈரான் முதல் முறையாக வெளிப்படையாக தக்க பதிலடியொன்றை கொடுத்துள்ளது.இது முழு உலகையே அதிர வைத்துள்ளது.இதில் இன்னுமொரு சுவாரிஸ்சயம் என்ன என்கிறீர்களா?ஏற்கனவே மேற்குலக நாடுகள் உட்பட பல நாடுகள் மொஸாட் என்ற அமைப்பால் பாதிக்கபட்டுள்ளன.ஆகவே இஸ்ரேல் இல்லாமல் போனால் கவலையில்லை என்பது தான்.ஈரானும் பல வழிகளில் முக்கியமாக வளைகுடா யுத்தங்களால் படிப்பினைகளை கற்றுகொண்டவர்கள்.கீழே படியுங்கள் அவர்களின் சுவரிஸ்யமான அறிக்கைகள்:-

ஈரான் நியூக்ளியர் குண்டுகள் பெறுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா எடுக்கும் என ஐ.நா அமைப்பிற்கான அமெரிக்காவின் மூத்த தூதரான சூசன் ரைஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஈரான் நியூக்ளியர் ஆயுதங்கள் பெறுவதை அமெரிக்க அனுமதிக்காது. இவ்விடயத்தில் ஜனாதிபதி பராக் ஒபாமா மிகத் தெள்ளத் தெளிவான முடிவில் உள்ளார்.

அவ்வாறு நடப்பதை தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து முடிவுகளும் அந்நாட்டிற்கு எதிராக தயாராக உள்ளன.

இது ஒரு நசுக்கும் கொள்கையாக இருக்கவில்லை. ஈரான் அணு ஆயுதங்களை பெருக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது அமெரிக்காவின் ஒரு கொள்கையாக உள்ளது.

இதை ஜனாதிபதி பலமுறை வலியுறுத்தியும் சொல்லி வந்து இருக்கிறார். இது தான் இறுதி முடிவு. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இதையே அவர்களுக்கான ரெட் லைன் என்றும் கூறிவருகிறார்.

இது குறித்து இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் கொள்கை அதிகாரிகள் அனைவருடனும் தொடர்ந்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

ஈரான் அணு ஆயுதங்களை பெருக்கும் நடவடிக்கைகளை கைவிடவில்லை என்றால், அந்நாட்டின் மீது எந்நேரமும் படையெடுக்கும் ஆணையை பிறப்பிக்க தேவையான அதிகாரத்தை ஜனாதிபதி பராக் ஒபாமா பெற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.


ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடந்தால், நாங்கள் கொடுக்கும் பதிலடியில் இஸ்ரேலில் எதுவுமே மிஞ்சியிருக்காது என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானையொட்டிய வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் மிகப் பெரிய போர் ஒத்திகையை மேற்கொள்ள உள்ளன. இதற்கான பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பரப்பில் முகாமிட்டு வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதி முகமது ஜபாரி டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் எப்படி பதிலடி கொடுப்பது என்பதில் தெளிவாக இருக்கிறோம். நிச்சயமாக சொல்கிறோம்.. இஸ்ரேலில் எதுவுமே மிச்சமிருக்காது.

அமெரிக்கா எங்கள் மீது போர் தொடுக்குமேயானால் மேற்குலக நாடுகளும், அமெரிக்காவும் ஒரு பக்கமும் நாங்கள் ஒருபக்கமுமாக நிற்போம். இது இயற்கையானது. அதேபோல் போர் நடைபெறும் போது ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படுவதுவம் இயல்பான ஒன்றானதுதான்.

லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏற்கெனவே இஸ்ரேலை இலக்கு வைத்து 40 ஆயிரம் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளனர். எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அந்நாடு மீது தாக்குதல் நடத்துமாறு ஹிஸ்புல்லா அமைப்பை கேட்டுக் கொள்வோம். அப்புறம் இஸ்ரேலில் எதுவுமே எஞ்சியிருக்காது என்றார்.

ஈரான் தரப்பிலிருந்து இதுவரை இப்படி விரிவாக பதிலடித் தாக்குதல் பற்றி பேசுவது இதுவே முதல்முறை என்பதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...