Jan 13, 2013

தமிழர் திருநாளான 'பொங்கல்' பண்டிகைக்கான அலங்காரங்கள்

News Service
பொதுவாக பண்டிகை என்றாலே அனைத்து வீடுகளும் மிகவும் சுத்தமாக இருக்கும். ஏனெனில் மற்ற நேரங்களில் வீட்டை சுத்தம் செய்கிறோமோ இல்லையோ, பண்டிகை நாட்களில் நிச்சயம் செய்வோம். அதிலும் உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்றழைக்கப்படும் பொங்கல் பண்டிகையன்று, அனைத்து தமிழர்களும் கண்டிப்பாக செய்வார்கள். ஏனெனில் பொங்கல் பண்டிகைக்கு முதள் நாள் வரும் போகியன்று அனைத்து பழைய பொட்களையும் வெளியேற்றிவிட்டு, பொங்கலன்று புதிய பொருட்களைப் பயன்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி, நமது முன்னோர்கள் இவ்வாறு பொட்களை எரிக்கும் போது, நமது மனதில் இருக்கும் அனைத்து தீய எண்ணங்களும் எரித்துவிட்டு, பொங்கல் முதல் நல்ல எண்ணங்களை நினைக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
   மேலும் பொங்கல் பண்டிகை வருவதால், அந்த நாளன்று தேவைப்படும் பொருட்களை முன்னரே வாங்கிக் கொண்டு, எந்த மாதிரியான அலங்காரம் எல்லாம் வீட்டில் செய்ய வேண்டும் என்று ஒருசிலவற்றை உங்களுக்காக

கொத்தமல்லி கீரையின் மருத்துவ குணங்கள்..

News Service கொத்துமல்லி கரிசல்மண், செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும். இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. சிறிய இலைகளும் சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள்.
  
வாசனைக்காக சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம், நம் முன்னோர்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு,

சித்த மருத்துவத்தில் பூக்கும் மரங்களின் அரசு..!


News Service
பூ+அரசு = பூவரசு: பூக்கும் மரங்களின் அரசு..!
பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு! எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள் கொண்ட மரம் இது. இதய வடிவத்தில் இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம் கொண்டவை. பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால்

துாக்க மாத்திரை இல்லாமலே நிம்மதியான தூக்கத்தை தரும் மல்லிகை

News Service சிலர் எப்போது பார்த்தாலும், ஒருவித டென்சனுடன் காணப்படுவார்கள். அத்தகைய டென்சன் ஏற்படும் போது, அதனை குறைப்பதற்கு எத்தனையோ வழிகளைக் கையாள்வார்கள். சிலர் உணவுகள், பானங்கள் சாப்பிடுவது, வெளியே செல்வது என்பனவற்றை மேற்கொள்வார்கள். சிலர் நறுமணங்கள் மூலம் சரிசெய்வார்கள். அந்த ஒரு பிரச்சனையால் மட்டும் அனைவரும் பாதிக்கப்படவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகையவற்றிற்கு ஒருவகையான தீர்வு என்னவென்று பார்த்தால், அது ஒருசிலப் பொருட்களின் நறுமணங்கள் தான். மேலும் அனைத்து நறுமணங்களும் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, பெட்ரோல் வாசனை சிலருக்கு பிடிக்கும், சிலர் அதனை வெறுப்பார்கள்.
  
ஆனால் ஒருசில பொருட்களின் வாசனையை பிடிக்காது என்று யாரும்

தை பொங்கல் காட்சி



பக்கவாதம் வந்து நடக்க முடியாதவர்களை நடக்கச் செய்யும் புதிய மாத்திரை

பக்கவாதம் வந்து நடக்க முடியாதவர்களை நடக்கச் செய்யும் புதிய மாத்திரை
சனி, 12 ஜனவரி 2013

பக்கவாத நோய் தாக்கி நடக்க முடியாமல் போனவர்கள் மீண்டும் நடப்பதற்கு உதவும் மாத்திரையை கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் கோரியுள்ளனர்.

கலிபோர்னியா, ஸ்டான்போர்டு பல்கலைக் கழக பேராசிரியர் பிராங்க் லாங்கோ, பரிசோதனை முயற்சியாக கண்டுபிடித்த இந்த மாத்திரையின் பெயர் LM11A-31.

முதலில் எலிகளுக்கு கொடுத்து பரிசோதனை நடத்தியதில் சோதனை வெற்றிகண்டதாக அவர் கூறியுள்ளார்.

காயமடைந்து 4 மணிநேரம் கழித்து கொடுக்கத் தொடங்கி 42 நாட்களுக்கு தினமும் இரண்டு வேளை மேற்கூறிய மாத்திரைய்க் கொடுத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பரிசோதனையின் போது வலி குறைந்ததோடு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று ஆய்வு கூறுகிறது.

முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது என்றால் மூளை உடலின் மீதான கட்டுப்பாட்டை இழந்து விடுகிறது. ஆனால் இந்த மாத்திரைகள் மூளையின் செயல்பாட்டையும் உயிர்ப்பிப்பதாக முதன்முதலில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து மூலம் பக்கவாத நோயை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளது.

ஆலிகோடென்ட்ரோசைட்ஸ் (Oligodendrocytes) என்று அழைக்கப்படும் செல்களின் செயலிழப்பைத் தடுக்கும் புதிய வேதிமமும் இந்த சோதனையில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

ப்75 என்ற புரோட்டீனை செயலாக்கவிடாமல் தடுத்து ஆலிகோடென்ட்ரோசைட்ஸை பாதுகாக்கிறது இந்த மாத்திரை.

முதுகுத் தண்டு காயத்தினால் இந்த சிறப்பு வாய்ந்த செல்கள் இறந்து போவதற்கு ப்75 என்ற புரோட்டீனே காரணம் என்று முந்தைய ஆய்வுகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த செல்களின் அழிவை தடுத்தால் பக்கவாதத்தினால் இழந்த செயல்களை மீண்டும் பெறலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த ஆய்வு நியுரோசயன்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...