Feb 10, 2013

மகள் 'பேஸ்புக்' கணக்கை முடித்து கொள்ள தந்தை போட்ட புதிய ஒப்பந்தம்

மகள் 'பேஸ்புக்' கணக்கை முடித்து கொள்ள தந்தை போட்ட புதிய ஒப்பந்தம்
[ ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013,
அமெரிக்கா தந்தை, தன் மகளிடம் பேஸ்புக் கணக்கை முடித்துக் கொள்ள ஒரு புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.அமெரிக்க தந்தை தன் மகளிடம் பிரபல சமூக வலைதளமான "பேஸ்புக்" கணக்கை முடித்துக் கொள்ளவும், இனி தொடர்ந்து உபயோகிக்காமல் இருக்கவும் 11 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த 14 வயது பெண் பேஸ்புக்கை தொடர்ந்து உபயோகித்துள்ளதால் தன் பெற்றோருடன் பேசக்கூட நேரமில்லாமல் இருந்தது.
இச்சிறுமியின் செயலால் எரிச்சலடைந்த தந்தை பல முறை கெஞ்சியும் மிரட்டியும் கூறியுள்ளார். ஆனால் அவள் எதையும் கேட்டதாக தெரியவில்லை.
இதையடுத்து இருவருக்குமிடையே ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டதன் படி தன் மகளிடம் பேஸ்புக்கை பயன்படுத்தாமல் இருக்க 11 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து அச்சிறுமியும் பேஸ்புக்கை இனி பயன்படுத்தப்போவதில்லை என்று தந்தையிடம் முறையாக ஒப்பந்தம் செய்துகொண்டார்.
தூங்கும் குழந்தையை இழுத்துச் சென்ற நரி
[ ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013,
தென்கிழக்கு இலண்டனில் உள்ள புரோம்லீயி(Bromley) என்ற இடத்தில் ஒரு வீட்டிற்குள் புகுந்த நரி ஒரு மாதக் குழந்தையை கட்டிலிருந்து இழுத்துச் சென்ற கோர சம்பவம் நடந்துள்ளது.குழந்தையின் அறையிலிருந்து அலறல் குறல் கேட்டதும் பயந்துபோன தாய் ஓடிச்சென்று பார்த்தபொழுது குழந்தையின் கையைக் கவ்வியவாறு நரி சென்று கொண்டிருந்தது. ஓடி வந்த தாய் அதை எட்டி உதைத்தவுடனே நரி அந்தக் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டது.
கடந்த புதன்(6ம் திகதி) மாலை 4.30 மணியளவில் குழந்தையை செயிண்ட் தாமஸ் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அம்மருத்துவமனையிலிருந்து மாநகர் காவல்துறைக்குத் தகவல் சென்றுள்ளது.
நரியின் வாயில் குழந்தையின் கை சிக்கியதில் விரல்கள் சேதமடைந்துள்ளதால் அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக ஊடகத்தினர்

2013ம் ஆண்டு புத்தாண்டு எண் கணித பலன்கள் 01.01.2013 முதல் 31.12.2013 வரை

Wed,Dec 19, 2012. By Sukkran
அன்பு வாசகர்களே, பிறந்த தேதி, மாதம், வருடம் தெரியாதவர்களும் தங்களின் பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையிலும் கீழ்கண்டவாறு பலன்களை தெரிந்து கொள்ளலாம்.








* 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக A,I,J,Q,Y-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 1ஆக உள்ள 1ம் எண் நேயர்களே.
* எதையும் சரியாக புரிந்துகொண்டு செயல்பட்டு சகலமானவர்களையும் சகட்டுமேனிக்கு தன் பக்கம் ,ழுத்துக்கொள்ளும் உங்களுக்கு இந்த ஆண்டு எதையும் திட்டமிட்டு செய்தால் நன்மையாகவே முடியும்.
* ,ருப்புக்கள் குறைந்தாலும் அதை சரிக்கட்டும் முயற்சியில் மிக உஷாராக செயல்பட்டு பொருளாதாரத்தை சரிக்கட்டிவிடுவீர்கள்.
* திருமண விசயங்கள் நினைத்ததுபோல் நிறைவாக மகிழ்வாக நடைபெறும். தந்தையார் வழி உயர்வான உதவிகள் செய்வர்.
* வலிமையும், பலமும் அதிகரித்தாலும் தொடர் பணிகளால் அவ்வப்பொழுது அயர்ந்து போவீர்கள்.
* ,ரும்பு, உயர்தர உணவகங்கள், ஏற்றுமதியாளர்கள், கன்ஸ்ட்ரக்ஷன் துறையினர் திடீர் அதிர்ஸ்ட்டங்கள் அடைவர். ,தனால் தொழில் அதிபர்களின் பொருளாதார நிலை கூடுதலாகும்.
* தனது நீண்டநாள் எண்ணங்களின்படி செயல்களும், வெளியூர்களில் புதுமையான முறையில் கிளைகளும் அமைத்து வெற்றி பெறுவர் வியாபாரிகள்.
* பதவி உயர்வு, பணியிடமாற்றம், பொருளாதார ஏற்றம் போன்றவை வாழ்வின் தரத்தை உயர்த்தும் பணியாளர்களுக்கு.
* பெரும் பதவிகளை பெற்று மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கையும் வெளிநாட்டு ஒப்பந்தங்களையும் பெறுவர் அரசியல்வாதிகள்.
* அருகில் உள்ள நிலங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் வெற்றி காண்பர். விளைச்சல் அதிகரிக்கும் விவசாயிகளுக்கு.
* படித்து முடித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பும், திருமணமும் கைகூடி வரும். தந்தையார் வழி உறவுகளும் பலப்படும்.
* அதிக மதிப்பெண்களை எடுத்து ஆசிரியர்களின் ஏகோபித்த பாராட்டையும் வேலைவாய்ப்பினையும் பெறுவர் மாணவர்கள்.


இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 1, 3, 5, 9
திசை : கிழக்கு, வடக்கு
நிறம் : ஆரஞ்ச், பச்சை
தவிர்க்கவேண்டிய எண் : 8



* 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக R, K, B-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 2ஆக அமைந்தவர்களும்,
* குறுகிய காலத்தில் குபேரணகா வலம் வரப்போகிறீர்கள். எடுத்த முயற்சிகள் எடுக்கப்போகும் முயற்சிகள் எல்லாம் வெற்றி என்ற மந்திரமாகவே ஒலித்திடும் இனி.
* விரைவான முன்னேற்றத்திற்கு வெகுவாக வெளிநாட்டு பயணங்களும், புதிய முயற்சிகளும் பலன் அளித்து பொருளாதார ஏற்றத்தை அளித்திடும்.
* மனதிற்கேற்ற வரன்கள் அமையப்பெற்று திருமணங்கள் திருப்திகரமாகவே நடைபெறும் பலருக்கு.
* குன்றாத வலிமையும் பல நாள் வியாதிகளும் மறைந்துவிடுதலும், தாயார் நலன் பெறுதலும் மகிழ்வளித்திடும்.
* விரைவான செயல்பாடுகளும், அயல்நாட்டு ஒப்பந்தங்களும் அரசாங்க ஆதரவும் அகிலம் போற்றும் அளவிற்கு தொழில் அதிபர்களை கொண்டு செல்லும்.
* வசதிகளை பன்மடங்கு பெரிதாக்கிக்கொள்வதுடன் வியாபார நுணுக்கங்களையும் தெரிந்து செயல்பட்டு வருமானத்தை குவிப்பர் வியாபாரிகள்.
* எதிர்பாராத பதவி உயர்வுகளும், அதிகாரிகளின் நட்பும், சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரிக்கச்செய்திடும் பணியாளர்களுக்கு.
* தங்களின் மென்மையான போக்கில் ஈர்க்கப்பட்ட தலைமை மிகப்பெரிய பொறுப்பை உங்களிடம் தர ஆயத்தமாகிவிட்டது எனலாம் அரசியல்வாதிகளே.
* விருப்பம்போல் கால்நடை, விரிவாக்கம், விளைச்சல் பெருக்கம், புதிய நிலம் சேர்க்கை உண்டு விவசாயிகளுக்கு.
* பெருமையும், புகழும் மக்கள் செல்வாக்கும் கணவரிடம் பாராட்டும் பெற்று உயர்வு பெறுவர் பெண்கள்.
* மதிப்பெண்களை அள்ளும் முயற்சியில் நல்ல பலன் பெறுவதுடன், கற்று முடித்தவர்களுக்கு அரசாங்க பதவிகளும் வந்து மாணவர்களுக்கு மகிழ்வளிக்கும்.


இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 1, 2, 5, 6, 7
திசை : கிழக்கு, மேற்கு
நிறம் : வெள்ளை, மஞ்சள்
தவிர்க்கவேண்டிய எண் : 9



* 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக C, G, L, S-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 3 என அமைந்தவர்களுக்கும்,
* பூமியைவிட 300 மடங்கிற்கும் மேலான கன பரிமாணமுள்ள இந்த எண்ணுக்குரியவர்கள் மிகப் பெரியவர்களாகவே ,ருப்பர்.
* கொடுக்கல் வாங்கல், பூர்வீக சொத்துக்களின் வருகை, எதிர்பார்த்ததுபோல் தங்கள் வருமானம் எல்லாம் ஏறுமுகமாகவே உள்ளது.
* தடைகள் எல்லாம் நீங்கிவிடும். சொந்தத்திற்குள் திருமணம் நடைபெற்று மகிழ்வு தரும் பலருக்கு.
* தங்கள் முயற்சிகள் மூலம் உடல் வலிமையை கனகச்சிதமாக வைத்துக்கொள்வர்.
* எதிர்பார்த்து காத்திருந்த பெரிய கடன் தொகைகள் அரசாங்கம் வழங்கி அபிவிருத்திக்கு மிக ஆதரவாக செயல்படுவதால் உயர்வு உண்டு தொழில் அதிபர்களுக்கு.
* புதுமையான பொருட்களை விற்று, லாபத்தை குவிப்பதுடன் புதிய கிளைகளையும் ஆரம்பித்து வெற்றி பெறுவர் வியாபாரிகள்.
* மிக நுணுக்கமான அறிவுடன் செயல்பட்டு அதிகாரிகளின் ஆதரவை பெறுவதுடன், விரும்பிய ,டமாறுதல், பண பலன்கள், சக ஊழியர்களின் நட்பு ,வற்றை பெறுவர் பணியாளர்கள்.
* எதிர்பார்த்ததுபோல் பெரிய மாற்றங்களை பெறுவர். ,ருப்பினும் ரு, ஏ, று போன்ற முதல் எழுத்தை பெயரின் முதலாக பெற்றவர்களுடன் உஷாராக பழகவும் அரசியல்வாதிகளே.
* விளை பொருட்களை கூடுதல் லாபத்திற்கு விற்கலாம். கால்நடைகளால் நன்மையுண்டு. புதிய நிலம் சேரும் விவசாயிகளுக்கு.
* குழந்தைகளால் பெருமை அடைவர். கணவருடன் ,ணக்கமான சூழ்நிலை ஏற்படும். மகிழ்ச்சியுண்டு பெண்களுக்கு மொத்தத்தில்.
* ஆசிரியர்களின் கற்பித்தலை கச்சிதமாக உள்வாங்கி தேர்வில் காண்பித்து திறமையை வெளிப்படுத்துவர் மாணவர்கள்.



இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 1, 3, 9
திசை : கிழக்கு
நிறம் : சந்தனம், சிவப்பு
தவிர்க்கவேண்டிய எண் : 6



* 4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக D, T, M-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 4 என அமைந்தவர்களுக்கும்,
* சமூகத்தின் தூண்களான ,வர்கள் மக்கள் செல்வாக்கையும் குடும்பத்தினரின் அன்பையும் மிக அதிகமாக பெறுவர்.
* பொருளாதாரம் குறையாத அளவிற்கு தங்கள் தனித்திறமைகள் மேலும் சேர்ப்பதில் ஆர்வம் கொள்வர். அதுபோல் வரவும் உண்டு.
* காதலில் வெற்றியும், தடைகள் மாறி, பிரிந்தவர்கள் பலர் மீண்டும் புதிய வாழ்க்கையை துவங்குவர்.
* குடும்பத்தினரின் நலம் பாதுகாக்கப்படுவதுடன் தங்கள் உடல் வலிமை கூடுதலாகும். வயிறு கோளாறுகள் வந்த வழியே ஓடிவிடும் சிலருக்கு.
* அயல்தேச வர்த்தகத்தில் கால் பதித்து வருமானத்தை பன்மடங்கு அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்பை பெறுவர். மேலும் அரசாங்க ஆதரவும் அதிகரிக்கும் தொழில் அதிபர்களுக்கு.
* ,ரும்பு, ஜவுளி, நட்சத்திர அந்தஸ்து உணவகங்கள் போன்றவை மூலம் அதிக லாபம் பெறலாம் வியாபாரிகள்.
* விழுந்து விழுந்து சக பணியாளர்களுக்கு பாடுபட்டு நற்பெயர் பெறுவர். அதிகாரிகளும் மிக நட்பாக நடந்துகொள்வர். விரும்;பியதை பெற்று மகிழ்வர் பணியாளர்கள்.
* வெளிநாட்டு பயணங்களும் புதிய நண்பர்களும் பெரிய வெற்றிகளுக்கு காரணமாக அமைந்திடுவர் பல அரசியல்வாதிகளுக்கு.
* அமோக விளைச்சல், அபரிமிதமான தண்ணீர் வரத்து மிக செழிப்பை தரும்படி அமையும் விவசாயிகளுக்கு.
* பிறந்த வீட்டு பெருமையையும் புகழையும் சென்ற ,டத்தில் சிறப்பாக்கி காட்டுவர் பெண்கள்.
* கற்பதில் மிகுந்த ஆர்வம் கொள்வர். விளையாட்டின் மூலம் தங்கள் உறுதியை காட்டுவர் மாணவர்கள்.

இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 1, 3, 9
திசை : கிழக்கு, தெற்கு
நிறம் : அரக்கு, ஆரஞ்சு
தவிர்க்கவேண்டிய எண் : ---



* 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக E, H, N, X-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண்ணாக 5-ஐ பெற்றவர்களுக்கும்,
* நடைபெறும் எந்த விழாவானாலும் தானாகவே நண்;;பர்கள் வீட்டிற்கு சென்று தனது அன்பை வெளிப்பாடு செய்யும் உங்கள் செயல் பாராட்டுப்பெறும்.
* வருமானம் திட்டமிட்டு செயல்படுவதால் எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும். தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்து நற்பெயர் பெறுவீர்கள்.
* நினைத்தபடி திருமணம் நடைபெற நண்பர்கள் உதவி நிறைய உண்டு. காதலில் வெற்றியும் உண்டு.
* தாய் தந்தை நலம் காக்கப்படும். முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் உறுதியுடன் செயல்படும் உடம்பு.
* ஏற்றுமதி ,றக்குமதியாளர்கள் எதிர்பாராத திடீர் உயர்வுகளை பெறுவர். அரசாங்க ஆதரவு உயர்விற்கு காரணமாக அமைந்திடும் தொழில் அதிபர்களுக்கு.
* உணவுப்பொருட்கள், கெமிக்கல், ஜவுளி மூலம் மிக அதிகமான லாபத்தை குவிப்பர் வியாபாரிகள்.
* கட்டிடம், வாகன கடன்கள் வந்து மகிழ்வு தருவதுடன் திடீர் பதவி உயர்வும் உண்டு பணியாளர்களுக்கு. பணபலமும் கூடும்.
* குறிப்பிட்ட சில பதவிகளில் நாட்டம் கொண்ட உங்கள் எண்ணம் ‘மே’ மாதத்தில் நிறைவேறலாம் அரசியல்வாதிகளே.
* விவசாயம் தழைக்க உறுதியுடன் செயல்பட்டு வெற்றிகளை குவித்து லாபம் நிறைய பெறுவர் விவசாயிகள்.
* படித்து முடித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு, திருமணம் நடைபெற்று மகிழ்வு தரும்.
* வெளியூர் சென்று விளையாட்டின் மூலம் பெரிய சாதனைகளை படைப்பர் மாணவர்கள்.

இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 1, 5, 9
திசை : வடக்கு, கிழக்கு
நிறம் : வெள்ளை, பச்சை, சாம்பல்
தவிர்க்கவேண்டிய எண் : ----



* 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக U, V, W-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 6 உள்ளவர்களும்,
* விளையாட்டாக துவங்கிய பல விசயங்கள் மாபெரும் வெற்றியாக அமையப்போகிறது. இந்த ஆண்டின் கூட்டுத்தொகை 6 உங்களை வெற்றி நாயகனாக வலம் வரச்செய்யும்.
* லாட்டரி, ரேஸ், திடீர் விசயங்கள் மூலம் பணத்தை அள்ளுவதுடன் பல ,டங்களில் சிதறி நின்ற தொகைகளும் தொடர்ந்து வந்து குவியும்.
* பல்லாண்டுகளாக மனதில் நினைத்து ஏங்கிக்கொண்டிருந்த ,ளசுகள் காதலில் வெற்றி பெறுவர். வீட்டிலும் அனைவரும் சம்மதம் தெரிவிப்பர்.
* குழந்தைகள், துணைவியார் நலமும் காக்கப்படும். மனதில் மகிழ்ச்சியை தொடர்ந்து பெறுவதால் உடல்நிலை உயர்வாகவே ,ருக்கும்.
* கலை, தொலைக்காட்சி, அந்தஸ்து ஓட்டல்கள், உணவகங்கள், நகை தயாரிப்பு, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ் குறிப்பாக பெண்களை கவரும் பொருட்கள் தயாரிப்பு தொழிலதிபர்கள் எதிர்பார்த்திராத வகையில் வருமானம் பெறுவர்.
* வாடிக்கையாளர்களை தன்பக்கம் ,ழுப்பதில் மிக எளிதாக வெற்றி பெற்று லாபத்தை பன்மடங்கு உயர்வுற செய்வர் வியாபாரிகள்.
* தங்கள் திறமைகள் மதிக்கப்பட்டு, அதற்குரிய உயர்வுகளை அதிகாரிகள் உடனே வழங்கி கவுரவிப்பர் பணியாளர்களை.
* எதிர்பார்த்த உயர்வுகள் வருவதுடன், பல ஒப்பந்தங்கள் மூலம் வருமானமும் பெருக்கெடுக்கும் அரசியல்வாதிகளுக்கு.
* பசுமை புரட்சியும் வெளிநாட்டு முறை விவசாயமும், புதிய நிலச்சேர்க்கையும் உயர்விற்கு மேல் உயர்வு தரும் விவசாயிகளுக்கு.
* படித்து முடித்தவர்களுக்கு பணிகள், திருமண வயதில் உள்ளவர்களுக்கு நினைத்தது போல் மாப்பிள்ளை அமைவதும், கைநிறைந்த வருமானமும் பெண்களை உயர்த்தும்.
* எளிதில் எதையும் புரிந்துகொண்டு செயல்படுவதுடன் பிறர் நலனிலும் அக்கறை கொள்வர். படித்து முடித்தவர்களுக்கு உயர்வான பதவிகள் வந்து சேரும் மாணவர்களுக்கு.


இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 2, 6, 9
திசை : மேற்கு, தெற்கு
நிறம் : வெள்ளை, சிவப்பு, பச்சை
தவிர்க்கவேண்டிய எண் : 3



* 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக O, Z-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண்ணை 7ல் பெற்றவர்களுக்கும்,
* அமைதியின் வடிவமான நீங்கள் மேலும் பொறுமை காக்கவேண்டியது அவசியம். யாரிடமும் எதிர்ப்புகளை காட்டவேண்டாம். ஆன்மீக பலம் எப்பொழுதும் உங்களுக்கு ஆதரவாகவே ,ருக்கும்.
* ,ருப்பதைக்கொண்டு நல்லதை செய்து கொள்ளவேண்டும். புதிய திட்டங்களை செயல்படுத்தும் முன் தீவிரமாக சிந்தித்து செயல்படுதல் அவசியம்.
* சுபகாரியங்களில் சுற்றத்தார்களின் தலையீடுகள் ஏற்படலாம். உஷார்.
* வலிமையும் பலமும் குறைந்தாலும் அதை பலப்படுத்தும் முயற்சிகளில் வெற்றி பெறுவர்.
* எலக்ட்ரானிக்ஸ் துறையினர் சற்று சோம்பலடையலாம். மற்றபடி நடந்து வரும் துறையில் நுணுக்கமாக செயல்பட்டால் வருமானம் வந்து சேரும் தொழில் அதிபர்களுக்கு.
* வியாபாரிகள் எதைச்செய்வது என்ற குழப்பத்தில் தவிப்பர். அரசாங்கத்தின் ஆதரவு ,ருந்தாலும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.
* சுதந்திரமற்ற போக்கு, பணிகளில் குழப்படி, சக ஊழியர்களின் நெருக்கடிகளால் பாதிப்பு ஏற்படலாம் பணியாளர்களுக்கு.
* மாற்றங்கள் தங்களுக்கு சாதகமாக ,ல்லையே என மன உளைச்சல் அடைவர் அரசியல்வாதிகள்.
* விளைச்சல் அதிகரிக்கும். கால்நடைகளால் லாபம் உண்டு. ,ருப்பினும் செலவுகள் கட்டுக்கு மீறலாம் விவசாயிகளுக்கு.
* பெண்கள் வெளியிடங்களில் தங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக்கொள்வர். எதையும் சிந்தித்து செயல்படுதல் நல்லது.
* கடுமையான உழைப்பு அவசியம். ஆசிரியர்களின் நெருக்கடிக்கு ஆளாவர் மாணவர்கள்.

இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 1, 2, 3
திசை : கிழக்கு
நிறம் : ஆரஞ்ச், வெள்ளை, மஞ்சள்
தவிர்க்கவேண்டிய எண் : ---




* 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக F, P-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண்ணாக 8 அமைந்தவர்களுக்கும்,
* பலத்த யோகம், பலரும் பாராட்டும் செயல்கள். புதிய பிரபல நட்பு, சிறப்பான செல்வாக்கு அனைத்தும் கிடைக்கப்பெறுவர்.
* விருப்பம்போல் பொருளாதார ஏற்றத்திற்கு எடுத்தது எல்லாம் வெற்றியாக அமைந்திடும்.
* சுபகாரியங்கள் திட்டமிட்டபடி வெகு நேர்த்தியாக நடைபெறும். குழந்தைப்பேறும் உண்டு.
* வளமையான உடல்நலமும், மன பலமும் குடும்பத்தினர் சுகமும் மகிழ்வளித்திடும் வகையில் அமையும்.
* உள்நாடு, வெளிநாடு என எல்லா பகுதிகளிலும் தங்கள் தொழில் அபிவிருத்தியை பெருக்கி மகிழ்வதுடன் அபரிமிதமான பணப்புழக்கமும் உண்டு தொழிலதிபர்களுக்கு.
* எதிர்பார்த்ததுபோல் ஏற்றமும், புதிய விரிவாக்கமும் புகழும், புதிய வாடிக்கையாளர்களின் வருகையும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்திடும் வியாபாரிகளுக்கு.
* எதிர்பார்த்த பெரிய உயர்வுகளும், எதிர்பாராத வெளிநாட்டு பயணமும், பண வருகையும் வழக்குகளில் வெற்றியும் ஏற்பட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பர் பணியாளர்கள்.
* பதவி மாற்றங்களால் நினைத்துப்பார்த்திராத உயர்வுகளைப்பெறுவர். (நட்புகளை மறக்காமல் ,ருப்பது பின்னாளில் நல்லது) அரசியல்வாதிகள்.
* வெளிநாட்டு வகை தானியங்கள் உற்பத்தி செய்து அதிக லாபத்திற்கு விற்று பண பலமும் பெறுவர் விவசாயிகள்.
* கணவருடன் ,ணக்கம், குழந்தைகளால் உயர்ச்சி, பெற்றோரின் சொத்து சேர்க்கை பெண்கள் மனதில் ஆனந்தமளித்திடும்.
* எதார்த்தமாக செயல்பட்டு, ஏகப்பட்ட வெற்றிகளை குவித்து, பலரின் பாராட்டுதல்களை பெற்று மகிழ்வர் மாணவமணிகள்.

இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 2, 3, 5
திசை : வடக்கு
நிறம் : வெள்ளை, சந்தனம், பச்சை
தவிர்க்கவேண்டிய எண் : 1, 9




* 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயர் எண் 9 பெற்றவர்களுக்கும்,
* அதிர்ஷ்ட்டக்காற்று அலைபோல் எழுந்து நினைப்பவை எல்லாம் நிரந்தரமாக வந்து சேரப்போகிறது. அனைவராலும் பாராட்டப்பெறுவீர்கள்.
* வழிய, வழிய வருமானத்தை வகை வகையாக பெருக்குவதுடன் நற்காரியங்களுக்கும் உதவி செய்து மறையாத புகழ் பெறுவர்.
* காதலில் வெற்றியும், பெற்றோர்களின் சம்மதமும், மனதில் மகிழ்வளிக்கும் வகையில் அமைந்திடும் காதல் ஜோடிகளுக்கு.
* எதையும் செய்து காட்டும் உடல் வலிமையும் உள்ளத்துணிவும் உடனடியாக வந்து சேரும்.
* ஏற்றுமதியாளர்கள், ,ரும்பு தாது எடுப்பவர்கள், நிலக்கரி சுரங்கம், உணவகம், டெக்ஸ்டைல் அதிபர்கள் மிகப்பெரிய வெற்றிகளை குவிப்பர்.
* உணவுப்பொருட்கள், ,ரும்பு, ஹார்டுவேர், கட்டுமானப்பொருட்கள், உணவகங்கள் மூலம் அதிக ஆதாயம் அடைவர் வியாபாரிகள்.
* முடியாது என ஒதுக்கித்தள்ளிய பணியை மிக ,லகுவாக செய்து முடித்து வெற்றியாளர்கள் என பெயர் பெறுவர் பணியாளர்கள்.
* தலைமையிடம் நெருக்கம், தொண்டர்களிடம் ,ணக்கமும், மக்களிடம் பாசம் ,வைகள் எல்லாம் அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்ட்டத்தை வழங்கப்போகிறது.
* பெரிய அளவில் உற்பத்தி, கால்நடைகளால் லாபம், தண்ணீர் வசதி, புதிய உழவு கருவிகள் என அனைத்தும் உயர்வாக வந்து சேரும் விவசாயிகளுக்கு.
* பூர்வீகச்சொத்து சேர்க்கை, புகழ், கவுரவம், எதிர்பார்த்த வேலைவாய்ப்பு, கணவர் என பெண்கள் பெருமகிழ்ச்சியில் திளைப்பர்.
* ஒரே அடியில் முழுமூச்சாக எந்த பாடத்தையும் மனப்பாடம் செய்தாவது எல்லோரையும் விட அதிக மதிப்பெண்களை அள்ளிக்குவிக்கும் உத்வேகத்தில் மாணவர்கள் செயல்பாடு உள்ளதால் உறுதியாகிவிட்டது முதலிடம்.

இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 1, 3, 5, 6
திசை : வடக்கு, கிழக்கு
நிறம் : மஞ்சள், பச்சை, ஆரஞ்ச்
தவிர்க்கவேண்டிய எண் : 2, 8

இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு

ellu

எள்ளில் உள்ள எண்ணெய் சத்துக்கள் உடல் மெலிவாக இருப்பவர்களை குண்டாக்கும் தன்மையுடையது என்பதற்காகவே இந்த பழமொழி கூறப்படுகிறது.
* எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எள்ளின் பயன்பாடு இருந்துள்ளது. எள் வறட்சிப் பகுதியிலும் வளரக் கூடியது. இதை பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர்விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சி தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.
* தமிழ்நாட்டு சமையலில் எள்ளிற்கு முக்கிய பங்குண்டு. இதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட எள்ளின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.
* நடுநிலை கொழுப்புகள் ஃபாஸ்போலிப்பிட்டுகள், ஆர்ஜினைன், சிஸ்டைன், ஹிஸ்டீன், ஐசோலியுசிஸ், லியுசன், லைசின், ஃபோலிக் அமிலம், சுக்ரோஸ், அசிட்டைல்பைரசைன் போன்ற ரசாயனப்பொருட்கள் எள் செடியில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.
* விதைகள், இலைகள், வேர் போன்றவை மருத்துவப்பயன் உடையவையாகும். எள் செடியின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும்.  கண் நரம்புகள் பலப்படும். இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.
* எள் பொடியை உணவில் சேர்த்து உண்டால் மாதவிடாய் இன்மையையும், மாதவிடாய் வலியையும் போக்கும். குழந்தை பெற்ற பெண்கள் உணவுப்பொருட்களில் அதிக அளவில் எள் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் தளர்ந்த தசைகள் இறுகும். கருப்பைப் புண் குணமடையும்.
* விதைகள் நோய் தீர்க்கும். சிறுநீர் கழிவை கூட்டும். கட்டி வீக்கம் ஆகியவற்றை இளக்கும். இளம் பேதி மருந்தாக பயன்படும். மலச்சிக்கல் மற்றும் சீதபேதிக்கு பயன்தரும்.  வெந்தபுண், ஆவிக்கொப்புளம், சீழ்ப்புண்ணை ஆற்றும். தலைமுடிக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளில் அடிப்படைப் பொருளாக விதை எண்ணெய் பயன்படுகிறது.
* 100 கிராம் எள்ளில் 1450 மில்லிகிராம் சுண்ணாம்பு உள்ளது. உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல் எள்ளில் , தாமிரம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் , துத்தநாகம், வைட்டமின் பி1 , வைட்டமின் இ, ஆரோக்கியமான புரதம் மற்றும் நார்ப்பொருளும் அதிகமாக காணப்படுகின்றன.
இதில் உள்ள நன்மையை உணர்ந்தே நம் முன்னோர்கள் உணவுகளில் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் படிப்படியாக அதன் உபயோகம் இப்பொழுது குறைந்து வருகிறது.

பிரான்ஸ் அதிபர் பிப்ரவரி 14-ல் இந்தியா வருகை

புதுடெல்லி,பிப்.10-
 
பிரான்ஸ் அதிபர் பிப்ரவரி 14-ல் இந்தியா வருகைபிரான்ஸ் அதிபர் பிரான்கோஸ் ஹோலண்டே 2 நாள் சுற்றுப் பயணமாக பிப்ரவரி 14-ந்தேதி இந்தியா வருகிறார்.
 
பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று அவர் இந்தியா வருகிறார். அவருடன் பிரஞ்சு அரசின் முக்கியப் பிரதிநிதிகள், முக்கிய மந்திரிகள், உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களும் வருகிறார்கள்.
 
இவர் இந்தியாவின் முக்கியப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மரியாதை நிமித்தமாக பிரெஞ்ச் அதிபரை சந்திக்க உள்ளனர்.
 
பிப்ரவரி 15-ம்தேதி நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமுமான தீன் மூர்த்தி மகாலில் உரையாற்ற உள்ளார். மேலும், நோபல் பரிசு பெற்ற 'அமர்தியா சென்'னை கௌரவிக்கும் விதமாக பிரான்சின் உயரிய லிஜின் ஆப் ஹானர் விருதையும் வழங்க உள்ளார். மும்பையில் நடைபெறும் வணிக மாநாட்டில் அவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

வடகிழக்கு அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 9 பேர் பலி - 7 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின

வடகிழக்கு அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 9 பேர் பலி - 7 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கினநியூயார்க், பிப். 10-

வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ், கொனெக்டிக்ட் ஆகிய மாநிலங்களில் நேற்றிலிருந்து கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால், சாலைகளில் ஒரு மணி நேரத்தில் 1/2 அடி உயரத்துக்கு பனி உறைந்ததால், பல இடங்களில் 3 அடி உயரத்திற்கு பனி படிந்தது காணப்படுகிறது.

நியூயார்க் நகரிலும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து கடுமையான பனி கொட்டியதால், மின் கம்பங்களின் மீது மரங்கள் சாய்ந்ததில் மாசாசூசெட்ஸ், கொனெக்டிக்ட் மாநிலங்களில் உள்ள சுமார் 7 லட்சம் வீடுகள், கடைகள் ஆகியவற்றின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

கடும் குளிரை தாங்க முடியாமலும பனியில் சறுக்கிச் சென்ற வாகனங்கள் விபத்துக்குள்ளானதாலும் இது வரை சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகளில் உள்ள பனிக்கட்டிகளை சுரண்டி அகற்றும் பனியில் ஈடுபட்டுள்ள வாகனங்களும் உறைபனியில் சிக்கிக் கொண்டுள்ளன.

கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விட்டமின் ஈ அதிகம் உள்ள 10 உணவுகள்!



  • 17
     
விட்டமின் ஈவைட்டமின்கள் குறைபாட்டினால் நிறைய பிரச்சனைகள் உடலும் வரும். அதிலும் சரியான உடல் வளர்ச்சிக்கு, வைட்டமின்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும். வைட்டமின்களில் நிறைய உள்ளன. அவை வைட்டமின் ஏ, சி, ஈ, டி, பி12, பி11. இத்தகைய வைட்டமின்கள் நிறைய நன்மைகளை உள்ளடக்கியுள்ளன. இருப்பினும் அதில் வைட்டமின் ஈ மிகவும் முக்கியமான ஒன்று. வைட்டமின் ஈ சத்துக்கள் உடலில் அதிகம் இருந்தால், உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம்.
ஏனெனில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், கிருமிகள் உடலில் தங்காமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல், வைட்டமின் ஈ சத்து சருமத்திற்கும் சிறந்தது. இந்த வைட்டமின் ஈ- நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், முதுமை தோற்றத்தை தள்ளிப் போடலாம். மேலும் உடலில்

புற்றுநோயை(cancer) தடுக்கும் உணவுகள்!



  • 11
     
இறப்பை ஏற்படுத்தும் நோய்களில் cancer ம் ஒன்றாக கருதப்படுகிறது.
vegitablesஇந்த நோய்க்கு நிறைய மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் நிறைய மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறப்பிற்கு ஆளாகின்றனர்.
ஆனால் உண்மையில் இந்த நோயை உணவுகளாலேயே குணப்படுத்திவிட முடியும். குறிப்பாக ஆரோக்கிய உணவுகளான பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களால் சரிசெய்துவிடலாம்.
சிவப்பு மற்றும் நீல நிற பழங்கள்
அந்தோசியனின்கள் என்பவை வயதான தோற்றம், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும் ஒரு பொருள்.
இத்தகைய பொருள் சிவப்பு மற்றும் நீல நிற பழங்களில் அதிகம் இருக்கும். எனவே அத்தகைய பழங்களான ஸ்ட்ராபெர்ரி மற்றும் செர்ரி பழங்களை

முடி உதிர்வதை தடுக்க… வழுக்கையில் முடி வளர… முடி கருப்பாக…



  • 136
     

தலைமுடி பிரச்சினைகள் பலவிதம்… ஒவ்வொன்றும் ஒரு விதம்… தீர்வுகள் கைவசம்..!
முடி உதிர்வதை தடுக்க:
59734_284681204992273_353051054_nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை

காலை உணவு உண்ணாமல் வேலைக்கு செல்பவரா நீங்க..? வேண்டாம் விஷப்பரீட்சை!



  • 50
     
importance of breakfastகாலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு காலை உணவில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, தேவையான சக்தியை அளிக்கிறது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அவசர உலகத்தில் பெரும்பாலானவர்களுக்கு, காலை உணவை சாப்பிடக்கூட நேரமின்மையால் அதனை தவிர்த்து விடுகின்றனர். அதிலும் பள்ளிக்குழந்தைகள் அநேகம் பேர் காலை உணவை உட்கொள்வதே இல்லை. பெரும்பாலும் காலி வயிறுடனே பள்ளிக்குச் செல்கின்றனர். இதற்கு நேரமின்மையையே காரணமாக தெரிவிக்கின்றனர்.
இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரங்கள் வரை எதுவும் சாப்பிடாமல்,

நம்பமுடிகிறதா? தண்ணீர் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்!


 Sun, Feb 10th, 2013


  • 14
     

water
தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...