Jun 26, 2014

Pendrive வை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.

Pendrive வை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.

கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட
நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.
இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம். ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் வழிமுறைகள்:
1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கனணியின் USB portல் பொறுத்தவும். (Minimum 2 GB).
pendrive_002
2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும். அப்போது ஓபனாகும் புதிய விண்டோவில் advanced system setting என்பதை கிளிக் செய்யவும்.
3. அடுத்ததாக தோன்றும் system properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.
pendrive_004
4. அடுத்ததாக தோன்றும் window வில் performanceக்கு கீழேயுள்ள setting யை click செய்யவும்.
pendrive_005
5.Performance window வில் மீண்டும் advance டேபுக்கு சென்று virtual memmory-க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.
pendrive_006
6. தோன்றும் அடுத்த window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.
pendrive_007
7. Initial Size:1020 ,Maximum size:1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.
pendrive_008
8. set என்பதை click செய்யவும்.
pendrive_009
9. கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்.
pendrive_010
இதன் இறுதியில் உங்கள் கணினியின் செயல்படும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Jun 23, 2014

இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? எப்படி குணமாக்குவது


இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? எப்படி குணமாக்குவது?
உனக்கு பி.பி (Blood pressure) இருக்கா? பார்த்துப்பா..! ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்... நேரம் தவறாம மாத்திரை போட்டுக்கோ.. இல்லேன்னா ஆளையே தூக்கிடும். அங்க இங்க அலையாதே.. டென்சன் ஆகாதே.. என்று மேலும் மேலும் டென்சனாக்குபவர்கள் தான் இன்று அதிகம். அதைக் கேட்பவருக்கோ பி.பி. மேலும் எகிறும். படபடப்புடன் தலைசுற்றுவது போலவும் இருக்கும். உடனே ஓடிப் போய் பி.பி செக் செய்துகொள்வார்... நாலு கலர் மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொள்வார். உடனே நார்மலாகி விடுவார். இதுதான் இன்றைய பி.பி. நோயாளிகளின் பரிதாப நிலை.

வாழ்நாள் நோய்க்கு பாலிசி எடுத்துக்கொண்ட பி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு மருத்துவம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உடலை நன்கு அறிந்தவர் நீங்கள்தான். நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?

“நமக்குள் இருக்கும் இயற்கையான ஆற்றல்கள்தான் நோயை உண்மையிலேயே குணமாக்குகின்றன”என்றார்.
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது.
ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது.

” கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earthing the thunder) கலசங்களுக்கு கொடுக்கின்றன.
(நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்
த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.இவ்வளவு தானா… இல்லை,

பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் “கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது”, அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால்,
அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!.
அவ்வளவு தானா அதுவும் இல்லை, 

மழை, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்கள் எப்பொழுது வரும் என்று கூற முடியாது. ஒருவேளை இவ்வாறான இயற்கை அனர்ததங்களினால் தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் “எர்த்” ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்கும் போது “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று இதற்கு தான் சொன்னார்களா என்று யோசிக்க தோன்றுகிறதல்லவா???மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது.
ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது.
” கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earthing the thunder) கலசங்களுக்கு கொடுக்கின்றன.
(நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்

Jun 22, 2014

'இரவில் படுத்ததும் இருமல் வருகிறதே'


இரவு படுத்ததும் கொஞ்ச நேரத்தில் இருமல் வந்து விடுகிறது. பகலில் எந்தப் பிரச்னையும் இல்லை. இது எதனால்?
இரு காரணங்களால் இப்பிரச்னை வரலாம். முதல் காரணம், இரவில் நீங்கள் உறங்கும் போது சளி, மூச்சுக்குழாயின் பின்புறம் வழியாக நுரையீரலுக்குள் செல்வதால்
இருக்கலாம்.
இண்டாவதாக, இரவில் லேட்டாக சாப்பிட்டு, உடனே படுத்து விடுவதால் இருக்கலாம். உணவு சரியாக ஜீரணம் அடையாமல், படுத்தவுடன் உணவுத்துகள் மூச்சுக்குழாய்க்குள் வருவதால் தொந்தரவு ஏற்படும். எனவே உடன் நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுக்கு தாமதமாக சாப்பிடும் பழக்கம் இருந்தால், உடனடியாக மாற்றிக் கொள்வதுதான். இரவு 7 மணிக்கு சாப்பிடுங்கள். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்துதான் படுக்கைக்கு செல்ல வேண்டும். இதனை பின்பற்றியும் இருமல் தொடர்ந்து இருந்தால், நீங்கள் டாக்டரை பார்க்க வேண்டும். இருதய பிரச்னையால் கூட இதுபோன்ற

Jun 20, 2014

பாதாம் பருப்பில் அடங்கி உள்ள மருத்துவ குணங்கள்

பாதாம் பருப்பில் அடங்கி உள்ள மருத்துவ குணங்கள் !!!
பாதாம் பருப்பில் அடங்கி உள்ள மருத்துவ குணங்கள் !!!

இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு.

பாதாம் பருப்பு சாப்பிட்டால், வேதிப்பொருட்கள் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாதாம்பருப்பு நமது இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை கண்டறிந்து உள்ளனர். இதனால் செரிமாணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே செரிமாணப் பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.'

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.
மேலும் பாதம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில்

பாதாமில் உள்ள சத்துக்கள்

பாதாமில் உள்ள புரதச்சத்து நல்ல தரமுள்ளது. 25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது.
பாதாமில் உள்ள நார்ச்சத்து – 25 கிராமில் 3 கிராம். இந்த நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் நார்ச்சத்து. 80 சதவிகிதம் கரையாத நார்ச்சத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. இதனால் பாதாம் ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது.
பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்தது. மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் பூரித கொழுப்பு குறைவு.

பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரஸ§ம் உள்ளன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் உள்ளன. இதில் கால்சியமும், பாஸ்பரஸ§ம் கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது. உடலுக்கு தினசரி 15 மில்லி கிராம் விட்டமின் இ தேவை.

ஓட்ஸ், சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை ஏற்றாது. இதை பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.

பாதாமின் பயன்கள்

பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாய்யில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெய், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செறிந்தது. எல்லாவித சருமத்திற்கும் நல்லது. உடல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி இவற்றை பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது. இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது.

பாதாம் பால் தோலுரித்த பாதாமுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்த கலவை. பாலுடன் சேர்த்து பருக ஒரு சிறந்த பானம். ஆரோக்கியத்திற்கு நல்லது. பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது. பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது. பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.

ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கப்படுகின்றன.
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.
பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம்

Jun 19, 2014

திருமண பொருத்தம் நீங்களே பார்க்கலாம்

திருமண பொருத்தம் நீங்களே பார்க்கலாம்


திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் தான் பார்த்துப்பார்த்து செய்வார்கள். குறிப்பாக ஜாதகப்பொருத்தத்தை  கவனமாக பார்ப்பார்கள். அந்த வகையில் திருமண பொருத்தத்தை நீங்களே (வாசகர்கள்) அறிந்து கொள்ள இதோ டிப்ஸ்...

1. தினப் பொருத்தம்: 


மணப்பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரை எண்ணி, அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால் வகுத்தால், ஈவு 2,4,6,8,9 என்று  வருமானால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு. இதுதவிர பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண்  தொகை 2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 என்று வருமானால் இதுவும் தினப்பொருத்தம்தான். இருவருக்கும் ஒரே நட்சத்திரம் இருந்தாலே தினப்பொருத்தம்தான்.  ஆனால், பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருந்தால் இது பொருந்தாது.  மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து, அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால், இதுவும் சரியான பொருத்தம்தான்.

2. கணப் பொருத்தம்: 

தேவகணம், மனித கணம், ராட்சஸ கணம் என்று மூன்று கணங்கள் உள்ளது. தேவகணத்தில் அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி,  அனுஷம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். மனித கணத்தில் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம்,  பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை அடங்கும். ராட்சஸ கணத்தில் கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்  இவை அடங்கும். மணமகன், மணப்பெண் இருவரும் ஒரே கணத்தைச் சேர்ந்தவர்களானால், இருவருக்கும் திருமணம் செய்யலாம். இருவரும் ராட்சஸ  கணத்தவராக இருந்தால், மணமகளின் நட்சத்திரத்திலிருந்து மணமகனுடைய நட்சத்திரம் பதினான்காவதாக இருக்குமானால், கணப்பொருத்தமாகும்.

3. மகேந்திரப் பொருத்தம்: 

பெண் நட்சத்திரம் துவங்கி, ஆண் நட்சத்திரம் முடிய வரும் எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று அமையுமானால் இது மகேந்திரப் பொருத்தம் எனப்படும்.  இதன் மூலம் புத்திர பாக்கியம் நிறைவானதாக இருக்கும்.

4. பெண் தீர்க்கப் பொருத்தம்: 

மணப்பெண் நட்சத்திரம் துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று  கொள்ளலாம். 13க்கு மேல் இருப்பின், மிக மிகப் பொருத்தம்.

5. யோனிப் பொருத்தம்: 

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு மிருக அம்சம் உண்டு. அதாவது, அசுவினி, சதயம் -குதிரை; பரணி, ரேவதி - யானை; கார்த்திகை, பூசம் - ஆடு; ரோகிணி,  மிருக சீரிஷம் - பாம்பு; திருவாதிரை, மூலம் - நாய்; புனர்பூசம், ஆயில்யம் - பூனை; மகம், பூரம் - எலி; உத்திரம், உத்திரட்டாதி-  பசு; ஹஸ்தம், சுவாதி -  எருமை; சித்திரை, விசாகம் - புலி; அனுஷம், கேட்டை  -மான்; பூராடம், திருவோணம் - குரங்கு; உத்திராடம் -கீரி; அவிட்டம், பூரட்டாதி  -சிங்கம். இந்த  மிருக அம்சங்களில், குதிரை- எருமை, யானை- சிங்கம், ஆடு- குரங்கு, பாம்பு -எலி, பசு - குதிரை, எலி- பூனை, கீரி- பாம்பு, மான்-நாய் ஆகிய இவை  ஒன்றுக்கொன்று பகையாகும். இந்த எதிர் அம்சங்கள் இல்லாத வகையில் பிற மிருக அம்சங்கள் ஒன்றுக்கொன்று இணையுமானால், அது யோனிப் பொருத்தம்  என்று சொல்லப்படுகிறது. இல்லற இன்பம் நிலைத்திருக்க இந்தப் பொருத்தம் அவசியம்.

6. ராசிப் பொருத்தம்: 

மணப்பெண் ராசியிலிருந்து மணமகனின் ராசி வரையிலான எண்ணிக்கை ஆறுக்கு மேற்பட்டால் அது ராசிப் பொருத்தம். எண்ணிக்கை எட்டாக இருத்தல்  கூடாது. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இவை பெண் ராசி யாக அமையுமானால் ஆறா மிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம்.  அதேபோல ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை பெண்ணுக்குரிய ராசியானால் இதற்குப் பன்னிரண்டாவது ராசியாக ஆண் ராசி  அமைந்தால், பன்னிரண்டாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தம் ஆண் வாரிசுக்கு வழி வகுக்கும்.

7. ராசி அதிபதிப் பொருத்தம்: 

மணமகன், மணப்பெண் இருவருக்கும் ஒரே அதிபதியாக அமைந்துவிட்டால் அது சரியான பொருத்தம். அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தால்  விசேஷம். பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது.

8. வசியப் பொருத்தம்: 

ராசிகளில் உடன்பாடானவை, அல்லாதவை என்பதை அறிந்து பொருத்தம் அறியலாம். மேஷத்துக்கு  சிம்மம், விருச்சிகம்; ரிஷபத்துக்கு  கடகம், துலாம்;  மிதுனத்துக்கு  கன்னி; கடகத்துக்கு  விருச்சிகம், தனுசு; சிம்மத்திற்கு  துலாம்; கன்னிக்கு  மிதுனம், மீனம்; துலாமுக்கு  கன்னி, மகரம்; விருச்சிகத்திற்கு   கடகம், கன்னி; தனுசுக்கு  மீனம்; மகரத்துக்கு  மேஷம், கும்பம்; கும்பத்துக்கு  மேஷம், மீனம்; மீனத்துக்கு மகரம் என்று வசியப் பொருத்தம்  சொல்லப்பட்டிருக்கிறது.

9. ரஜ்ஜுப் பொருத்தம்: 

அசுவினி, மகம், மூலம் ஆரோகபாத ரஜ்ஜு, ஆயில்யம், கேட்டை, ரேவதி  அவரோகபாத ரஜ்ஜு; பரணி, பூரம், பூராடம் ஆரோக தொடை ரஜ்ஜு; பூசம், அனுஷம்,  உத்திரட்டாதி  அவரோக தொடை ரஜ்ஜு; கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆரோக உதர ரஜ்ஜு, புனர் பூசம், விசாகம், பூரட்டாதி  அவரோக உதர ரஜ்ஜு;  ரோகிணி, அஸ்தம், திருவோணம்  ஆரோக கண்ட ரஜ்ஜு; திருவாதிரை, சுவாதி, சதயம்  அவரோக கண்ட ரஜ்ஜு; மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்  சிரோ  ரஜ்ஜு. இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரது நட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால்,  ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் ; இரண்டு  நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் , ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு.

10. நாடிப் பொருத்தம்: 

அசுவினி, திரு வாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்கள் தட்சிண பார்சுவ நாடியைச் சேர்ந்தவை.  பரணி, மிருக சீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி இவை மத்திய நாடி. கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம்,  ஸ்வாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி இவை வர்ம பார்சுவ நாடி. மணப்பெண், மணமகன் இருவரும் ஒரே நாடியைச் சேர்ந்தவர்களானால்  நாடிப்பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம்.

Jun 18, 2014

வேலணை மஹாகணபதி பிள்ளையார் ஆலயம்: Top 10 World's Largest Combat Air Forces | உலகின் ...

வேலணை மஹாகணபதி பிள்ளையார் ஆலயம்: Top 10 World's Largest Combat Air Forces | உலகின் ...: Top 10 World's Largest Combat Air Forces | உலகின் மிகப்பெரிய டாப்- 10 விமானப்படைகள்: சீனாவுக்கு அடுத்து...

ராசி பலன்கள் | Rasi Palan | Yearly Rasi balan | Zodiac 2014 | Astrology 2014

ராசி பலன்கள் | Rasi Palan | Yearly Rasi balan | Zodiac 2014 | Astrology 2014

12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சி பலன்கள் (13.06.2014 முதல் 04.07.2015 வரை

12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சி பலன்கள் (13.06.2014 முதல் 04.07.2015 வரை)

குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கபடி ரீதியாக ஜெய வருஷம் வைகாசி மாதம் 30ம் தேதி 13.06.2014 வெள்ளிகிழமை நா. 30வி. 08க்கு மாலை மணி 6.03க்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.

இந்த வருட குரு பெயர்ச்சி பொது பலன்களை முதலில் காணலாம்.

இந்த ஆண்டு ஜய வருடம் குரு பகவான் தன்னுடைய உச்ச வீடாகிய கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பெயர்ச்சி இது. குரு பகவான் இந்த ஆண்டு ஓரளவுக்கு அணைவருக்குமே நன்மைகளையே வழங்க செய்வார். கெடுதல் செய்ய கூடிய ராசியாக இருந்தாலும் இந்த ஆண்டு குருவினால் நன்மைகளே நடக்கும்.
ஜாதகத்தில் நல்ல திசா புத்திகள் நடை பெற்றால் யோகம் அதிகமாக கிடைக்கும். ஒரு வேலை ஜாதகத்தில் கெட்ட திசா புத்திகள் நடை பெற்றால் கெடுதல்கள் உண்டாக கூடும். இதை அறிய ஜோதிடரிடம் சென்று கேட்டு அறிந்து அதன் படி நடத்தல் அவசியம்
பொதுவாக இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும். மகசூல் அதிகரிக்கும். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். நாட்டில் நல்லாட்சி அமையும் அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.
குருவை வியாழன் எண்டு சொல்வது உண்டு. சூரியனை ஒன்பது கிரகங்கள் சுற்றி வருகின்றன. இந்த ஒன்பதிலும் மிகவும் பெரிய கிரகம் வியாழன் ஆகும். இது பூமியை போல 1300 மடங்கு பெரியது. பூமியின் எடையை போல் 318 மடங்கு அதிகம். சூரிய ஒளியில் 51 சதா வீதம் வியாழன் பெறுகிறது. வியாழன் தன்னைதானே சுற்றி கொள்ள 9 மணி 55 நிமிடங்கள் ஆகிறது. வியாழன் சூரியனை ஒருமுறை சுற்ற 12 ஆண்டுகள் ஆகிறது. பூமியிலிருந்து 63 லட்சம் கிமி தூரத்தில் உள்ளது. இதன் குறுக்கு அளவு 56500 மையிகல் ஆகும்.

மேஷம்

மேஷம்: வியாபாரம் பெருகும்
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பவர்களே! நீங்கள் எந்த விஷயத்திலும் இறங்கினாலும் ஒருமுறைக்கு இருமுறை நன்கு யோசித்து செயல்படுவீர்கள். இதுவரை உங்களது தைரிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் இனி உங்களின் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இதனால் மனக் குழப்பங்களிலிருந்து விடுபட்டு நேரான வகையில் சிந்திப்பீர்கள். அரசாங்கத்தில் முக்கியமானவர்களின் ஆதரவு கிடைக்கும். அனைவரிடமும் சுமுகமான உறவு தொடரும். சகோதர, சகோதரிகள் பகைமை மறைந்து நட்பு பாராட்டுவார்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும்.
செய்தொழிலில் முன்னேற்றத்தை காண்பீர்கள். குருபகவானின் பார்வை எட்டாம் ராசியின் மீது படிகிறது. இதனால் நெடுநாட்களாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்த உடல் உபாதைகள் நீங்கும். சண்டை சச்சரவுகள் இல்லாமல் செயல்படுவீர்கள். ஆனாலும், முழுமையான வெற்றிகளைப் பெற முடியாமல் போகும். ஆன்மிக அறிவை வளர்த் துக் கொள்வீர்கள். இளைய சகோதர சகோதரிகளின் உதவிகளைப் பெறுவீர்கள். வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். மனதிலிருந்த தீய எண்ணங்கள் மறைந்து நேர்மையாக சிந்திக்கத் தொடங்குவீர்கள்.
குருபகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் செய்தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். வாக்கு சாதூர்யத்தால் அனைவரையும் வெற்றி கொள்வீர்கள். உங்கள் ஆசைகள் அனைத்தும் சுலபமாகப் பூர்த்தியாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். கடன் தொல் லைகளிலிருந்து விடுபடுவீர்கள். குரு பகவானின் பார்வை உங்களின் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் ராசியில் படிகிறது. இதனால் ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். அனைவரும் உங்களை மதித்து நடப்பார்கள். இழப்புகளைக் கண்டறிந்து அவற்றை உடனுக்குடன் சரிசெய்து விடுவீர்கள்.
கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றிவிடுவீர்கள். கடன் தொல்லை இல்லாவிட்டாலும் பொருளாதாரம் சிறிது ஏற்ற இறக்கமாகவே இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உங்களின் வேலைகளை சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். சக ஊழியர்களால் உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டறிந்து விலக்குவீர்கள். வருமானம் சீராக இருக்கும். சிறிய தடை ஏற்பட்டாலும் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.
வியாபாரிகள் திருப்தியாக வியாபாரத்தை நடத்து வீர்கள். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும், தேவைகளையும் எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தை தனித்தன்மையுடன் நேர்த்தியாகச் செய்வீர்கள். சிறிய முதலீடுகளைச் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
விவசாயிகளுக்கு விளைச்சல் நல்லபடியாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்துவீர்கள். பூச்சிக் கொல்லிகளுக்கு செலவு செய்ய நேரிடும். பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளுக்கு பராமரிப்புச் செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கு உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளவும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் திறமைக்கேற்ற பொறுப்புகள் கிடைக்கும். நேரடியாகத் தொல்லைகள் கொடுத்தவர்கள் அடங்கி விடுவார்கள். பிறரின் வலிமையை அறிந்து அதற்கேற்றார்போல் பேசுவீர்கள்.
கலைத்துறையினர் செய்தொழிலில் போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் உங்களின் முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்களின் உதவியுடன் தொழிலில் புதிய நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். அவர்களுடனான கூட்டு முயற்சியில் சில வெற்றிகளைக் காண்பீர்கள். சிலருக்கு புதிய வாகனச் சேர்க்கை உண்டாகும். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். பணவரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் மேம்படும். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உங்களால் குடும்பம் முன்னேற்றம் அடையும்.
மாணவமணிகள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் அனாவசியப் பேச்சு வேண்டாம்.
பரிகாரம்: செவ்வாய்க் கிழமைதோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வரவும். முடிந்தவர்கள் அருகிலிருக்கும் அறுபடை தலங்களுக்குச் சென்று வாருங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘கந்த சஷ்டி கவசத்தை’ அன்றாடம் பாராயணம் செய்தும், “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறையும் சொல்லுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
மலர் பரிகாரம்: “செவ்வரளி” மலரை ஏதேனும் கோயிலில் அருள்பாலிக்கும் முருகனுக்கோ அல்லது அம்மனுக்கோ சார்த்திவர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி. தேய்பிறை: ஞாயிறு, புதன், வெள்ளி.

ரிஷபம்

ரிஷபம்: செல்வம் சேரும்
சொன்ன நேரத்தில் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்பவர்களே! நீங்கள் ராப்பகல் பாராமல் உழைப்பதில் வல்லவர்கள். காசு விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்பவர்கள். தன்னைவிட தங்கள் குழந்தைகள் நன்றாக வரவேண்டும் என்று விரும்புவீர்கள். உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கத் தொடங்கும் குரு பகவானின் அருளால் முக்கியமான விஷயங்களில் நிதானமாக முடிவெடுத்து வெற்றி பெறுவீர்கள். செய்தொழிலில் நிரந்தர வளர்ச்சி அடைவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொள்வீர்கள்.
குடும்பத்தில் ஒரு நியதிக்கு உட்பட்டு சிறப்பாக சிந்திப்பீர் கள். ஆர்வக் கோளாறை தவிர்த்து நடக்கக் கூடியவைபற்றி நேர்வழியில் சிந்தித்து செயல்படுவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குருபகவானின் கருணையினால் இந்தக் காலகட்டத்தில் உடல் ஆரோக்யம் சிறப்பாகவே இருக்கும். உங்களின் சூட்சும புத்தியால் இக்கட்டான தரு ணங்களிலும் சமயோஜிதமாகப் பேசி நிலைமையை சமாளிப்பீர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் நடைபோடுவீர்கள். கடன் ஏதும் ஏற்படாது.
குருபகவானின் பார்வை உங்களின் ஏழாம் இடமான நட்பு ராசியின் மீது படிகிறது. அதனால் நண்பர்கள், கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்து இணக்கமாகப் பழகுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த உடல் உபாதைகள் அனைத்தும் விலகும். சுயதொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். திருமணம், மகப்பேறு போன்ற சுபகாரியங்களை இல்லத்தில் நடத்துவீர்கள். உங்கள் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.
உங்கள் தந்தை மற்றும் பாக்யஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் மீது படியும் குரு பகவானின் பார்வையினால் பூர்வீகச் சொத்துகள் கைக்கு வரும். அவற்றிலிருந்து நிரந்தர வருமானம் வரத் தொடங்கும். நற்செயல்களைச் செய்து அதனால் வரும் வருமானத்தைக் கொண்டு சில தான தர்மங்களைச் செய்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். உங்களின் லாப ஸ்தானத்தின் மீது படியும் குரு பகவானின் பார்வையினால் உங்கள் மனம் விரும்பும் மாற்றங்களை இல்லத்திலும் தொழிலிலும் செய்வீர்கள்.
இதனால் புதிய வழிகளில் வருமானத்தைப் பெற முயற்சி செய்வீர்கள். தொலை தூரத்திலிருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனதில் புதிய தெளிவு பிறக்கும். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். அலுவலகப் பயிற்சிகளில் தேர்ச்சியடைவீர்கள்.
வியாபாரிகள் சுக சௌகர்யங்களைப் பாராமல் கடினமாக உழைப்பீர்கள். ஆனாலும், போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ள நேரிடும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால் வியாபாரத்தில் குளறுபடிகளைத் தவிர்க்கலாம். உங்களின் நேரடிப் பார்வையிலேயே பண விஷயங்களைக் கையாளவும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் கிடைத்து நீர்வரத்து உயரும். புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். பால் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். வழக்குகள் சுமுகமாக முடியும்.
அரசியல்வாதிகள் கட்சியில் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனாலும், தொண்டர்கள் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். சமுதாயத்திற்குப் பயன்படும் உண்மையான தொண்டுகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்துவீர்கள்.
கலைத்துறையினருக்கு அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடிவடையும். உங்களைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை சரியாக வெளிப்படுத்துவீர்கள். பொருளாதார வசதிகள் உயரும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.
பெண்மணிகள் ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். முக்கிய முடிவுகளை யோசித்து எடுக்கவும். ஆடம்பரச் செலவுகளைச் செய்ய வேண்டாம்.
மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். ஒருமித்த மனதுடன் படித்து மதிப்பெண்களை அள்ளுவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்குங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினமும் 21 முறையாவது “ராம’’ நாமத்தை ஜபிக்கவும். தமிழிலோ, வட மொழியிலோ ‘‘சுந்தர காண்டம்” பாராயணம் செய்வது அதிக நன்மை தரும்.
மலர் பரிகாரம்: “மல்லிகை மலரை” சிவனுக்கு பிரதோஷ வேளையில் சார்த்தி வர குழப்பங்கள் அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி, தேய்பிறை: புதன், வெள்ளி.

மிதுனம்

மிதுனம்: முயற்சிகளில் வெற்றி
எதிலும் நிதானத்தைக் கடைப் பிடித்து காரியங்களை கரை சேர்க்கும் மிதுன ராசி வாசகளே நீங்கள் எதிலும் உங்கள் அறிவை வெளிக்காட்டுபவர். உங்களுடைய சாதுர்யத்தால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். இன்முகம் காட்டாது அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். உங்களுடைய தாய்மாமனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பீர்கள். உங்கள் ராசிக்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தான ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குரு பகவானின் அருளால் பொருளாதாரத்தில் சிறப்பான அபிவிருத்திகள் உண்டாகும்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்தவர்கள் அதை நிறைவேற்றி நற்பெயர் வாங்குவார்கள். மற்றவர்களை உங்களின் வசீகரமான பேச்சினால் கவர்வீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு உதவுவீர்கள். சிலருக்கு சொந்த வீடு அமைந்து புதுமனைப் புகுவிழா நடத்த வாய்ப்பு கிடைக்கும். உங்களின் மனோ தைரியம் அதிகரிக்கும். போட்டி பொறாமைகளால் பாதிப்பு வராமல் காக்கப்படுவீர்கள். இதனால் தள்ளி வைத்திருந்த விஷயங்களில் உடனடியாக முடிவெடுப்பீர்கள். உங்களிடமிருந்து விலகியிருந்த உற்றார், உறவினர்கள் நெருங்கி வந்து உறவு பாராட்டுவார்கள்.
இந்தக் காலகட்டத்தில் குருபகவான் உங்களின் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் ராசியைப் பார்க்கிறார். இதனால் உங்கள் காரியங்கள் அனைத்தும் அலைச்சல் இல்லாமல் சுலபமாக முடிவடையும். ஆகார விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். வயிறு உபாதைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். எட்டாம் ராசியைப் பார்க்கும் குரு பகவானின் அருளால் மாற்று இனம், மதத்தைச் சேர்ந்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். புதியவர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள்.
சுதந்திரமாகச் சிந்தித்து செயல்படுவீர்கள். அரசாங்கத்திலிருந்தும் எதிர்பார்த்த சலுகைகள் தேடி வரும். தொழில் ராசியான பத்தாம் இடத்தைப் பார்க்கும் குரு பகவானின் கருணையினால் உங்களின் புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். காரியங்களை அனுகூல மாக முடித்துக் கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். பெரியோர்களின் துணையோடு உங்களின் செயல்களை திறமையாக முடித்து விடுவீர்கள். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள். கடிதப் போக்குவரத்தால் நன்மைகள் உண்டாகும். பொதுநிகழ்ச்சிகளில் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கடினமான வேலைகளை சரியாகத் திட்டமிட்டு முடித்துவிடு வீர்கள். மேலதிகாரிகள் உங்களிடம் நட்புடன் நடந்துகொள்வார்கள். உங்களுக்குத் சிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். பண வரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது.
வியாபாரிகள் இந்த ஆண்டு கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவும். எதையும் சிந்தித்து செயல்படுத்தினால் எதிர்பார்த்த லாபத்தைப் பெற லாம். கூட்டாளிகளை கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். லாபம் அதிகரிக்கும். விளை பொருட்களை புதிய சந்தைகளில் விற்பனை செய்வீர்கள். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். புதிய குத்தகைகளை எடுக்கலாம்.
அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். தொண்டர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அவற்றில் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். திறமைகள் வெளிப்படும். சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். உங்களின் சமயோஜித புத்தியால் தக்க நேரத்தில் சரியான முடிவை எடுப்பீர்கள்.
பெண்மணிகள் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உடல் நலம் சுமாராக இருப்பதால் சில மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். சகோதர சகோ தரிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்குவீர்கள். விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர்வீர்கள். இந்தக் காலகட்டம் முழுவதும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு தொடரும். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயங்களுக்குச் செல்லுங்கள், முடிந்தவர்கள் திவ்ய தேசங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும்.
சொல்லவேண்டிய மந்திரங்கள்: ‘‘ஓம் ஹரி ப்ரும்ஹ வாசினே நமஹ’’ என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும்
மலர் பரிகாரம்: தாமரை மலரை அருகிலிருக்கும் பெருமாளுக்கு அர்ப்பணியுங்கள். அவர் எல்லாவற்றையும் சீராக நடத்தி வைப்பார்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வியாழன், தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்.

கடகம்

கடகம்: நிம்மதி கிட்டும்
எதிலும் பொறுமையுடனும் தைரியத்துடனும் ஈடுபடுபவர்களே! நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தைச் செய்ய மாட்டீர்கள். நீங்கள் எதிலும் ஈடுபடுவதற்கு முன் யோசிப்பீர்கள். தெய்வ சிந்தனை உடையவர்கள், பெற்றோர்களை மதித்து நடப்பீர்கள். உங்களின் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குரு பகவானின் கருணையினால் வருமானம் படிப்படியாக உயரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வெற்றிகள் குவியும். தோல்வியடையும் என்று நினைத்திருந்த காரியங்கள் வெற்றி பெறும். உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும்.
உடல் ஆரோக்யம் பலப்படும். புதிய மாற்றம் ஏற்படும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் உதவிகளைப்பெற்று உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நிதி நிலைமையில் குறிப்பிட்ட இலக்கை அடைவீர்கள். சுறுசுறுப்பாக உழைப்பீர்கள். இழந்த சுக சௌகர்யங்களை திரும்பப் பெறுவீர்கள். மற்றபடி முக்கியமானவர்களிடம் கவனமாகப் பேசவும். தீயோரிடமிருந்து விலகி இருக்கவும். “கூடா நட்பு போராய் முடியும்’’ என்கிற பழமொழிக்கு ஏற்ப ஜென்ம குருவின் சஞ்சாரம் உங்களுக்குச் சில வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்.
இந்த ஓராண்டு காலத்தில் குரு பகவானின் பார்வையைப் பெறும் உங்கள் பூர்வ புண்ய ராசி, உங்களை அறிவிலும், ஆற்றலிலும் சிறப்படையச் செய்யும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். அசையும், அசையாச் சொத்துகளின் சேர்க்கை உண்டாகும். புதிய உறவுகள் கிடைக்கும். நல்ல செய்திகள் வந்தடைந்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குரு பகவானின் அருட்பார்வை உங்களின் ஏழாம் இடத்தின் மீது படிகிறது. இதனால் அதிகாரம் செய்யும் பதவிகளில் அமர்வீர்கள்.
பிள்ளைகளை வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். குல தெய்வ வழிபாட்டினை மேற்கொள்வீர்கள். உங்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். குருபகவானின் பார்வை உங்களின் பாக்யஸ்தானத்தின் மீது படிவதால் ஆன்மிகத்தில் உயர்ந்தோரை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்களின் ஆன்மிக பலம் அதிகரிக்க புராண, இதிகாசங்களை நுணுக்கமாகக் கற்பீர்கள். உங்களின் பேச்சில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த சரியான தருணங்கள் அமையும்.
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் நன்றாக இருக்கும். சக ஊழியர்களுடன் சுமுகநிலை தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் முடியும். மற்றபடி பிறரிடம் நன்கு யோசித்துப் பேசவும்.
வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் அவற்றை சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர் கள். கொடுக்கல், வாங்கல் சாதகமாக இருக்கும்.
விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தகுந்த நேரத்தில் விதைத்து வளம் பெறவும். விற்பனை நன்றாக இருக்கும். கால்நடைகளால் விரும்பிய பலனைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் கௌரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். உங்களின் சிந்தனை தெளிவாக இருப்பதால் வெளிப்படையாக செயல்படுவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவிகளைச் செய்வார்கள்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். கணவரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். உங்களின் ஞாபக சக்தியும் அறிவாற்றலும் அதிகரிக்கும். பெற்றோரால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.
பரிகாரம்: முடிந்தால் திருவண்ணாமலை அல்லது பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி லலிதா திரிசதி பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்: “அல்லி மலரை’’ அம்பாளுக்கு திங்கள் தோறும் சாத்திவர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன், தேய்பிறை: ஞாயிறு, திங்கள், வெள்ளி.

சிம்மம்

சிம்மம்: நிர்வாகத்திறன் அதிகரிக்கும்
எதிலும் தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்துபவர்களே! நீங்கள் தர்ம சிந்தனை உடையவர்கள். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என்று விரும்புவீர்கள். உங்களின் அயன, சயன, மோட்ச ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குருபகவானின் சஞ்சாரத்தினால் உங்கள் காரியங்களை பெரிய அலைச்சல் இல்லாமல் சிறிது தாமதத்துடன் முடித்து விடுவீர்கள். பொருளாதாரம் சீராக இருந்தாலும் சில அனாவசிய செலவுகளைச் செய்ய நேரிடும். மற்றபடி உற் றார், உறவினர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்புகள் மறைந்து குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
நெடுநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வரும். உங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேறும். திடமாக சிந்தித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். கடினமாக உழைத்து போட்டிகளையும், எதிர்ப்பாளர்களையும் தகர்த்தெறிவீர்கள். அதேநேரம் செய்தொழிலை விரிவுபடுத்தும் எண்ணத்தைத் தள்ளி வைக்கவும். அனாவசிய கடன் வாங்கி புதிய முயற்சிகள் எதையும் செயல்படுத்த வேண்டாம். குருபகவானின் சயன ஸ்தான சஞ்சாரத்தினால் நிம்மதியாக உறங்குவீர்கள்.
ஆனாலும், எவருக்கும் வாக்கு கொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ கூடாது. உங்கள் பெயரில் எவருக்கும் கடன் வாங்கித் தர வேண்டாம். குரு பகவானின் பார்வை உங்களின் சுகஸ்தானமான நான்காம் ராசியின் மீது படிகிறது. இதனால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். தாய் வழியிலிருந்து நன்மைகள் கிடைக்கும். சொத்துச் சேர்க்கை உண்டாகும். புதிய வீட்டிற்கு மாற நினைப்பவர்கள் இந்த ஆண்டு அதை செயல்படுத்தலாம். குரு பகவான் தன் சப்தம பார்வையினால் உங்களின் ஆறாம் ராசியினைப் பார்வை செய்கிறார்.
இதனால் வெளியில் கொடுத்திருந்த கடன் உடனடியாகத் திரும்பக் கிடைக்கும். அசையாச் சொத்துகளில் இருந்த வில்லங்கம் தீரும். மனம் தெளிவாக இருக்கும். உங்களின் எட்டாம் ராசியைப் பார்வை செய்யும் குருபகவான் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைத் தேடித் தருவார். முன்பின் அறியாதவர்களும் உதவி செய்வார்கள். களவு போனதாக நினைத்துக் கொண்டிருந்த பொருட்கள் திடீரென்று உங்கள் கைக்கு கிடைக்கும். எவரிடமும் முன் கோபம் கொண்டு அவசியமில்லாத வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்.
உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முன்கூட்டியே செய்து முடிப்பீர்கள். சில நேரங்களில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். மற்றபடி பணவரவுக்குத் தடைகள் வராது. மேலதிகாரிகளின் ஆதரவு சுமாராக இருப்பதால் கவனமாக நடந்து கொள்ளவும்.
வியாபாரிகளுக்கு பொருளாதாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே முடிவடையும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். தேவை யில்லாத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். கூட்டாளிகளால் உங்களின் வேலைப்பளு குறையும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் முதலுக்கு மோசம் போகாது. நீர்ப்பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். விவசாய உபகரணங்களை வாங்கி எதிர்கால வளத்திற்கு வித்திடுவீர்கள்.
அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேலிடத்தின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். தொண்டர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.
கலைத்துறையினருக்கு பெயரும், புகழும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றி கடினமான வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விடுவீர்கள்.
பெண்மணிகள் அனுகூலமான நிலைமையைக் காண்பீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு குழப்பமான சூழ்நிலைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
மாணவமணிகள் மதிப்பெண்களைப் பெறுவதற்கு கடினமாக உழைக்க நேரிடும். இருப்பினும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவினால் படிப்பில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று நெய்விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் ஸ்ரீ சூரியனார்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வரலாம். காலையில் சூரியன் உதிக்கும்போது தரிசனம் செய்வதும் நன்மையைத் தரும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி ஆதித்ய ஹ்ருத்யம் அல்லது புருஷ ஸூக்தம் பாராயணம் செய்யலாம்.
மலர் பரிகாரம்: “எருக்க மலரை” சிவனுக்கு அல்லது கணபதிக்கோ அர்ப்பணம் செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். மேலும், கோமாதாவிற்கு துவாதசிதோறும் அகத்திக்கீரையும் கொடுக்கலாம். உங்களுக்கு அனைத்துக் காரியங்களும் தங்கு தடையின்றி நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, புதன், வியாழன், தேய்பிறை: புதன், வியாழன்.

கன்னி

கன்னி: செல்வாக்கு உயரும்
எதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்துபவர்களே! குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் நீங்கள். அதீதமான உணர்வுகள் கொண்டவர்கள். உங்களின் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கத் தொடங்கும் குருபகவானால் தடைபட்டிருந்த புதிய பொறுப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் உயர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். செய்தொழிலில் வருமானம் பல மடங்கு உயரும். மாற்றுக் கருத்துடையோரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். இழுபறியாக நடந்து கொண்டிருந்த வழக்குகளில் சாதக மான திருப்பங்களைக் காண்பீர்கள்.
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு தடை நீங்கி திருமணம் நடக்கும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றி விடுவீர்கள். வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெற்று புதிய அசையும், அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். குருபகவானின் பார்வை உங்கள் மூன்றாம் ராசியின் மீது படிகிறது. இதனால் உங்களின் அனைத்துச் செயல்களையும் திட்டமிட்டு சரியாகச் செயல்படுத்துவீர்கள்.
உங்களின் தர்க்க ஞானத்தால் சண்டை சச்சரவுகளில் வெற்றி காண்பீர்கள். சகோதர சகோதரிகளுடன் இணக்கமான உறவு தொடரும். சமுதாயப் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும். மற்றபடி உங்கள் காரியங்களை தனித்தே செய்து முடிக்கவும்.
குருபகவானின் பார்வை உங்களின் ஐந்தாம் ராசியின் மீது விழுவதால் உங்களின் அறிவுத்திறன் வெளிப்படும். ஆன்மிக விஷயங்களில் சிறப்பான ஈடுபாடு காட்டுவீர்கள். புதிய மொழிகளை அறிந்துகொள்ள பயிற்சி வகுப்புகளில் சேர்வீர்கள்.
உடல் ஆரோக்யம் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். குரு பகவானின் கனிந்த பார்வை உங்களின் ஏழாம் வீட்டின் மீது படிவதால் நெடுநாட்களாக செய்யாமல் விட்டிருந்த நெடுந்தூரப் பயணங்களைச் செய்வீர்கள். சமுதாயத்தில் உங்களின் பெயரும், புகழும் உயரும். உங்களின் பேச்சுக்கு அனைவரும் மதிப்பு கொடுப்பார்கள். அவப் பெயர்களிலிருந்து விடுபடுவீர்கள். வீடு மாற்றம் செய்ய நினைப்போர் இந்தக் காலகட்டத்தில் வசதியான இல்லத்திற்கு மாறுவார்கள்.
உத்யோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களை காண்பீர்கள். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். மேலதிகாரிகளால் தொல்லைகள் எதுவும் ஏற்படாது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பதவி உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும்.
வியாபாரிகளுக்கு போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டு வியாபாரத் தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி மனதில் உற்சாகம் பெருகும். மற்றபடி புதியவர்களை நம்பிக் கடன் தர வேண்டாம்.
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆனாலும், விவசாய உபகரணங்களுக்கு செலவுகளைச் செய்ய நேரிடும். மற்றபடி புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்வீர்கள்.
அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பிரயாணங்கள் செய்ய நேரிடும்.
கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் பெயரும், புகழும் உயரும். ரசிகர்கள் சிறிது அலட்சியப்படுத்தினாலும் ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள்.
பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். இல்லத்தில் நிம்மதி நிலவும். சுப காரியங்களில் பங்கேற்று மகிழ்வீர்கள்.
மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உங்களின் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும்.
பரிகாரம்: புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று தேங்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினமும் ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.
மலர் பரிகாரம்: “துளஸி”யை பெருமாளுக்குச் சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துகளில் இருந்த வந்த பிரச்னைகள் மாறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வியாழன், தேய்பிறை: திங்கள், புதன்.

துலாம்

துலாம்: துணிவு பிறக்கும்
எதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடுபவர்களே! நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள். அதிகம் சுமைகளை எடுத்துக் கொள்வீர்கள். அதேநேரம் சின்னச் சின்ன பிரச்னைகளில் தலையிட்டு வெளியில் வர தள்ளாடுவீர்கள். உங்களின் தொழில் ஸ்தானமான பத்தாம் ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குருபகவான், உங்களின் தலைமையை அனைவரும் ஏற்றுக்கொள்ளச் செய்வார். பெற்றோர் வழியில் ஏற்பட்ட உடல் உபாதைகள் மறையும். கடன் தொல்லை, மறைமுக எதிர்ப்புகள் என்று எதுவும் ஏற்படாது.
வெளியில் கொடுத்திருந்த கடன் வட்டியும் முதலுமாகத் திரும்பி வரும். புதிராக இருந்த உறவினர்கள் நல்லபடியாகப் பழகுவார்கள். எல்லோருக்கும் நல்லவர் என்று பெயரெடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய் பவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். குரு பகவானின் பார்வை உங்களின் குடும்ப ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் உங்கள் சிந்தனைகள் தெளிவாகும். நன்கு யோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
இதனால் வருமானம் உயரும். இறை வழிபாட்டில் முழு ஈடுபாடு உண்டாகும். நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பீர்கள்.
குரு பகவானின் பார்வை நான்காம் ராசியின் மீது படிகிறது. இதனால் சகோதர, சகோதரிகளின் ஆதரவு நன்றாக இருக்கும். தாழ்வு மனப்பான்மை மறையும். குடும்பத்தில் உங்கள் பெயரும், செல்வாக்கும் உயரும். தீயோரின் சகவாசம் நீங்கும். நண்பர்களிடம் உங்களுக்கு முன்பு ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.
குரு பகவானின் பார்வை ருணம், ரோக, சத்ரு ஸ்தானத்தில் படிகிறது. இதனால் நெடுநாளாக பாதிக்கப்பட்டிருந்த தோல் மற்றும் வயிறு உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். கடினமாக உழைத்து பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். உங்களை வீண் வம்பு வழக்குகளில் சிக்க வைக்க நினைக்கும் நண்பர்களைக் கண்டறிந்து விலக்குவீர்கள்.
உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். ஆனாலும், சக ஊழியர்கள் பகைமை பாராட்டுவார்கள். அதனால் அவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தினால் தோல்வியிலிருந்து தப்பிக்கலாம். மற்றபடி உங்கள் செயல்களை செவ்வனே செய்து முடிப்பீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த வருமானம் கிடக்கும்.
வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். கடும் போட்டிகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எனவே, புதிய முதலீடுகள் வேண்டாம். மற்றபடி கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சரளமாக முடியும். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள்.
விவசாயிகளுக்கு வருமானம் குறைந்தாலும் செலவு அதிகரித்தாலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். விளைபொருட்களை உடனுக்குடன் சந்தைக்கு எடுத்துச் சென்று நல்ல முறையில் விற்பனை செய்வீர்கள். கால்நடைகளை நன்கு பராமரிப்பீர்கள். பூச்சி மருந்துகளை சரியாகப் பயன்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். புதிய உத்வேகத்துடன் உங்கள் வேலைகளைச் செய்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் முக்கியமான பயணங்களைச் செய்வீர்கள்.
கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பிறரின் அபிமானத்தைப் பெறுவீர்கள். இருப்பினும் தொழிலில் போட்டி இருப்பதால் விருதுகளையும், பாராட்டுகளையும் பெற கவனமாக உழைக்க நேரிடும்.
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராக இருந்தாலும் கணவர் வழி உறவினர்களுடன் நல்லுறவு தொடரும். சிலருக்கு வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உணவு விஷயங்களில் கவனம் தேவை. ஆன்மிகத்தில் ஈடுபட்டு மனத் தெளிவு பெறவும்.
மாணவமணிகள் நன்றாகப் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மனதை ஒருநிலைப்படுத்தினால் மேலும் புகழடையலாம்.
பரிகாரம்: வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடனை வணங்கி வரவும். நெய் விளக்கு ஏற்றலாம். முடிந்தவரை கருட தரிசனம் செய்யவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லவும். ஸ்ரீராமஜெயமும் எழுதலாம்.
மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் வில்வத்தளங்களை சிவனுக்கு சார்த்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும். உணர்ச்சிகளை அடக்க யோகா செய்யுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி, தேய்பிறை: திங்கள், வெள்ளி.

விருச்சிகம்

விருச்சிகம்: செயல்திறன் கூடும்
எதிலும் நெஞ்சுரத்துடன் போராடி வெற்றிகளைக் குவிப்பவர்களே! நீங்கள் எடுத்த முடிவை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள தயங்குவீர்கள். உங் களுக்கென்று ஒரு குறிக்கோளுடன் வாழ்வீர்கள். உங்களின் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குருவின் அருளால் பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் மறையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நோய் உபாதைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். முகத்திலும் உடலிலும் புதிய பொலிவு உண்டாகும். நண்பர்களிடமும் கூட்டாளிகளிடமும் உங்கள் ஸ்பெகுலேஷன் மற்றும் பங்குச் சந்தைகளிலிருந்து திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.
உங்களின் சொத்து மதிப்பு உயரும். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடல் நலத்தையும், மனவளத்தையும் பாதுகாத்துக் கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். “ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு’’ என்ற பழமொழிக்கு ஏற்ப அனைத்து இடையூறுகளிலிருந்தும் கடைசி நிமிடத்தில் தப்பித்துக் கொள்வீர்கள். குரு உங்களின் ராசியின் மீது படிவதால் உங்களின் இரக்க குணத்தால் பிறருக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் அனைவரிடமும் பாசத்தோடு பழகுவீர்கள்.
புதிய முயற்சிகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். கண் உபாதைகள் தீரும். அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பான முடிவுகளை எடுப்பீர்கள். இறையருள் தொடர்ந்து கிடைக்கும். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேறும். குரு பகவானின் பார்வை உங்களின் மூன்றாம் ராசியான தைரிய ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் உங்கள் கடன்களை தக்க நேரத்தில் திருப்பிச் செலுத்துவீர்கள்.
நேர்முக, மறைமுக போட்டிகளை சாதூர்யமாக சமாளிப்பீர்கள். அபாண்டமான பழிகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் குடும்பத்தாருடன் இணைவார்கள். குரு பகவானின் கனிந்த பார்வை உங்களின் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். புதிய வழிகளில் வருமானம் பெற முயற்சி செய்வீர்கள். பொதுச் சேவையில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நன்றாக இருப்பதால் உங்களின் தோற்றத்தில் மிடுக்கு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். உங்களின் வேலைகளை சரியாகத் திட்டமிட்டுச் செய்வீர்கள். மேலிடத்தில் நம்பிக்கைக்கு உரியவர் என்ற பெயரை சம்பாதிப்பீர்கள்.
வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கூட்டாளிகளுடன் மனத்தாங்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். புதிய முதலீடுகளில் நன்றாக சிந்தித்து செயல்படவும்.
விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் கொள்முதல் பொருட்களை விற்று நல்ல லாபத்தைக் காண்பீர்கள். நெருங்கியவர்களுக்கு மிகப்பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெற்று உங்கள் கௌரவத்தை உயர்த்திக் கொள்வீர்கள். உங்கள் சிந்தனையில் தெளிவும், செயலில் வீரியமும் உண்டாகும்.
அரசியல்வாதிகளின் புகழ் உயரும். புதிய பதவிகள் உங்களைத் தேடிவரும். உங்கள் கடமைகளை சுறுசுறுப்புடனும் திடமான முயற்சிகளுடனும் செய்வீர்கள். தொண்டர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.
கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். மற்றபடி திட்டமிட்ட வேலைகளில் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். ரசிகர்களை அனுசரித்துச் செல்வீர்கள். மனதில் இருக்கும் வருத்தங்களை வெளியில் காட்ட மாட்டீர்கள்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உற்றார், உறவினர்கள் உங்களால் பயன் பெறுவார்கள். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
மாணவமணிகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.
பரிகாரம்: செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி சியாமளா தண்டகம் பாராயணம் செய்யலாம்.
மலர் பரிகாரம்: செவ்வாய்தோறும் எலுமிச்சம் பழ மாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள். அனைத்து காரியங்களிலும் வெற்றிகளை தேடித் தருவாள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, புதன், வியாழன், தேய்பிறை: திங்கள், வியாழன்.

தனுசு

தனுசு: வருமானம் கொழிக்கும்
எதிலும் நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு முன்னுதாரணமாக வாழ்பவர்களே! நீங்கள் அனைத்து பிரச்னைகளையும் உங்களின் வாக்கு சாதூர்யத்தால் சமாளிப்பீர்கள். ஆனால், எந்தக் காரியத்தையும் தள்ளிப்போடுதல் கூடாது என்பதனை கவனித்துக் கொள்ள வேண்டும். உங்களின் அஷ்டம ஸ்தானமான எட்டாம் ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குருபகவானின் அருளால் வருமானம் ஓரளவுக்கு திருப்தியாக அமையும். பழைய கடன்களுக்கு வட்டிகளைச் செலுத்துவீர்கள். பெரிய கடன்கள் ஏதும் ஏற்படாது.
செய்தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்ய நேரிடும். பெற்றோர் வழியில் சிறிது மருத்துவச் செலவுகளைச் சந்திக்கலாம். மற்றபடி உங்களின் உடல் ஆரோக்யம் சிறப்பாகவே இருக்கும். உங்கள் வேலை களை சரியாகத் திட்ட மிட்டு செய்வீர்கள். வருமானம் தரக்கூடிய பயணங்களை மட்டுமே மேற்கொள்வீர்கள். அதே சமயம் மன அழுத்தம் ஏற்படும். எந்த அனாவசியப் பிரச்னைகளிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம். வழக்கு விவகாரங்கள் இந்தக் காலகட்டத்தில் முடிவுக்கு வராது. எவரிடமும் கடினமான வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்.
குழப்பமான விஷயங்களிலிருந்து தள்ளி இருக்கவும். மேலும், ஸ்பெகுலேஷன் துறைகளிலும் அதிக மாக ஈடுபட வேண்டாம். மற்றபடி உங்கள் தேவைகளை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்து விடுவீர்கள். குருபகவானின் பார்வை உங்கள் அயனஸ்தானமான பன்னிரண்டாம் ராசியின் மீது படிகிறது. இதனால் செலவுகளை ஈடுகட்டும் வகையில் வருமானம் வந்துகொண்டிருக்கும். அலைச்சலும், டென்ஷனும் கட்டுக்குள் இருக்கும். உங்கள் கடமைகளை முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள்.
வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். குரு பகவானின் பார்வை உங்களின் குடும்ப ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். பழைய முதலீடுகளில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் நிதானமும், பொறுமையும் இருக்கும். உங்களின் எண்ணங்கள் கச்சிதமாக செயல்வடிவம் பெறும். குரு பகவானின் பார்வை உங்களின் சுகஸ்தானத்தின் மீது படிவதால் உற்றார், உறவினர்கள் உங்களிடம் சுமுகமாகப் பழகுவார்கள். உடல் உபாதைகள் பெரிதாக ஏற்படாது. தாயின் பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உங்களின் வேலைகளை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள். பயணங்களால் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படாது. என்றாலும் கொடுக்கப்பட்ட வேலைகள் நன்றாகவே முடிவடையும். அலுவலகத்தில் உங்கள் கௌரவத்திற்கு எந்தக் குறையும் ஏற்படாது.
வியாபரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மனதில் குதூகலம் நிறையும். புதிய முதலீடுகளால் பயன் பெறுவீர்கள். கூட்டாளிகள் உங்களிடம் சுமுகமாக நடந்து கொள்வார்கள். உங்களின் பேச்சுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும்.
விவசாயிகள் விளைபொருட்களால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். நீர்ப்பாசன வசதிகளை மேற்கொள்ள எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். புதிய குத்தகைகள் உங்களை நாடி வந்தாலும் அவற்றைத் தவிர்க்கவும். வயல், வரப்பு சண்டைகளில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களை காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் புதிய பதவிகள் உங்களைத் தேடிவரும். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது.
கலைத்துறையினர் விழிப்புடன் செயல்பட்டு ஒப்பந்தங்களை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடலையும் மனதையும் சிறப்பாக வைத்துக் கொள்வீர்கள். சக கலைஞர்களை பக்குவமாக சமாளிக்கவும்.
பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். பெற்றோரின் ஆதரவினால் தனலாபம் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்டு பதட்டப்படாமல் படித்து வெற்றி காண்பீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று குருபகவானை வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி காலை சிவ புராணத்தையும், தேவாரத்தையும் பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் விநாயகருக்கு அறுகம்புல்லை அணிவித்து வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வியாழன், தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி.

மகரம்

மகரம்: திருப்புமுனை ஏற்படும்
எதிலும் போராட்ட குணத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிப்பவர்களே! நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். கடுமையான உழைப்பின் மூலம் அனைத்து காரியங்களிலும் வாகை சூடுவீர்கள். உங்களின் சப்தம ஸ்தானமான ஏழாம் ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குருபகவானின் அருளால் வாழ்க்கை வசதிகள் உயரும். சிலர் வசதியான வீடுகளுக்கு மாறுவார்கள். திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் நடந்தேறும். குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். நண்பர்களோடு ஏற்பட்ட பகை நீங்கும். நடக்காமல் தள்ளி வைத்திருந்த விஷயங்கள் சிறப்பாக நடந்தேறும்.
போட்டிகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். புதிய வருமானம் தரும் தொழிலில் ஈடுபடுவீர்கள். புதிய வீடு கட்ட அஸ்திவாரம் போடுவீர்கள். வருமானம் குறைவாக இருந்த தொழில்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உற்றார், உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பால் மதிப்பும் மரியாதையும் உயரும். இந்தக் காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான திருப்புமுனைகள் உண்டாகி புதிய பாதையில் பயணிப்பீர்கள்.
குருபகவானின் பார்வை உங்களின் லாபஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். பொன், வெள்ளி போன்ற
விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொகுசு வாகனங்களில் பயணிப்பீர்கள். பல வழிகளில் வருமானம் கிடைத்து உங்களின் வாழ்க் கைத் தரம் உயரும். குரு பகவானின் பார்வை உங்களின் ராசியின் மீது படிவதால் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
எவரையும் சாராமல் தனித்து காரியங்களைச் செய்து சாதனை புரிவீர்கள். யோகா, பிராணாயாமம் செய்து மன அமைதி பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். களவு போயிருந்த பொருட்கள் மீண்டும் உங்களின் கைக்கு வந்து சேரும். காரியங்களில் பிடிப்பு ஏற்படும். குருபகவானின் பார்வை உங்களின் மூன்றாம் ராசியில் படிவதால் மெதுவாக நடந்து கொண்டிருந்த காரியங்கள் விரைவாக முடியும். தனித்து உங்கள் எண்ணப்படி செயல்படுவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்த மேலதிகாரிகள் இடம் மாறிச் செல்வார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு ஊதிய உயர்வுடன் இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் கடன் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறைவும் ஏற்படாது. கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்வீர்கள். சந்தையில் போட்டிகளை சாதூர்யமாக சமாளிப்பீர்கள்.
விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். பூமியால் லாபம் உண்டாகும். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்கள் மானியத்துடன் கிடைக்கும். ஆனாலும், கால்நடைகளுக்கு கூடுதலாக செலவு செய்ய நேரிடும். புழு பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாது.
அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். கட்சியில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள்.
கலைத்துறையினருக்கு நன்மை தரும் திருப்பங்கள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். மற்றபடி சுறுசுறுப்புடன் காரியங்களில் ஈடுபடவும்.
பெண்மணிகள் கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிறையும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வீணான சிந்தனைகள் வேண்டாம்.
மாணவமணிகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்துப் பழகவும்.
பரிகாரம்: சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பைரவரை வணங்கி வரவும். முடிந்தால் மிளகு விளக்கு போடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி காலபைரவாஷ்டகம் பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் பெருமாள் கோயிலில் இருக்கும் தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும். உங்களுக்கு பொன்னான காலம் கனிந்து வரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி, தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி.

கும்பம்

கும்பம்: தடைகள் நீங்கும்
கடுமையான சூழ்நிலைகளைக் கூட சமயோசிதமாக கையாண்டு மற்றவர்களை ஆச்சர்யத்துடன் பார்க்க வைப்பவர்களே! நீங்கள் புது தொழில் நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உடையவர்கள். உங்களின் ஆறாம் ராசியான ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இந்த காலகட்டத்தில் பொருளாதாரம் சீராக இருந்தாலும் முக்கிய செலவுகளுக்கு சிரமப்படுவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணம் மீண்டும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
அதனால் அனைத்து விஷயங்களிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். நண்பர்கள் உங்களை புரிந்துகொள்ளாமல் கோபப்படுவார்கள். குடும்பத்தில் சிறு சஞ்சலங்களும் குழப்பங்களும் ஏற்படும். மற்றபடி உடல் ஆரோக்யத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. குருபகவானின் பார்வை உங்களின் தொழில் ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் செய் தொழிலில் இருந்த இடையூறுகளும் தடங்கல்களும் நீங்கும். பொருளாதாரத்தில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் பெயரும், புகழும் உயரும்.
இதனால் சில பாராட்டுகளையும் விருதுகளையும் பெறுவீர்கள். கூட்டாளிகளுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதிலிருந்த பயம் நீங்கும். குருபகவானின் பார்வை அயன ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் எதிர்காலத்திற்காக நீங்கள் தீட்டும் திட்டங்கள் வெற்றி பெறும். உங்களை தனிமைப்படுத்திய உறவினர்கள் மறுபடியும் வந்து இணைவார்கள். ஆனாலும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது. குருபகவானின் பார்வை உங்களின் குடும்ப ஸ்தானத்தின் மீது படிகிறது.
இதனால் எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் மனத்தாங்கல்களை ஆத்ம நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வீர்கள். அசையும், அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். உடல் ஆரோக்யம் சீராகும். மற்றபடி எவருக்கும் இந்த ஆண்டு வாக்கு கொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ கூடாது.
உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் சற்று தாமதமாகவே பரிசீலிப்பார்கள். இதனால் கோபமடையாமல் பொறுமை காக்கவும். முடிவு உங்களுக்கு சாதகமாகவே அமையும். மற்றபடி உங்கள் திட்டங்களை நன்றாக முடிப்பதில் கவனமாக இருப்பீர்கள். அலுவலக ரீதியான பய ணங்களில் உடனடியாக நன்மைகளை எதிர்பார்க்க முடியாது.
வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் சிறப்பாக முடிந்தாலும் பெரிய லாபம் என்று எதுவும் ஏற்படாது. அதனால் கூட்டாளிகளுடன் சேராமல் உங் கள் காரியங்களை தனித்துச் செய்யவும். புதியவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். அரசு வழிகளில் கெடுபிடிகள் ஏற்படலாம்.
விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது. விளைச்சலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புழு, பூச்சிகளால் பயிர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும். மற்றபடி சக விவசாயிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்தவர்களால் பெரிய தொல்லைகள் ஏற்படாது. இந்தக் காலகட்டத்தில் உபரி வருமானத்தில் கவனம் செலுத்துங்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. மற்றவர்களுக்கு முன் ஜாமீன் கொடுக்க வேண்டாம். மற்றபடி உங்களின் கொள்கைகளில் உறுதியாக இருப்பீர்கள்.
கலைத்துறையினர் தேவையான வருமானத்தைக் காண்பீர்கள். வெளியூரில் நிகழ்ச்சிகளை நடத்தி புகழ் பெறுவீர்கள். உங்களின் செயல்களில் சிறு தடுமாற்றங்கள் ஏற்படலாம். சிறிய தடைகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். ஆனாலும், குடும்பத்தில் உங்களின் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செயல்படுவீர்கள். குடும்ப வருமானத்தைப் பெருக்க சுய தொழில்களில் ஈடுபடுவீர்கள்.
மாணவமணிகள் நன்கு உழைத்துப் படித்தால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். உங்களின் உடல்நலம் சீராகவே இருக்கும். வெளி விளையாட்டுகளிலும் உடற்பயிற்சியிலும் தவறாமல் ஈடுபடவும்.
பரிகாரம் : சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி மாலை வேளையில் ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் விநாயகருக்கு அறுகம்புல்லை அணிவித்து வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலையில் படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், வெள்ளி, தேய்பிறை: வியாழன், வெள்ளி.

மீனம்

மீனம்: லாபம் பெருகும்
கடும் சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவணைப்பவர்களே! எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் உங்கள் பொறுப்புகளை நீங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள். முடிந்தவரை அனைவருக்கும் நன்மைகள் செய்வதற்கு பாடுபடுவீர்கள். உங்களின் பூர்வ புண்ய புத்திர ஸ்தான ராசியான ஐந்தாம் இடத்தில் குரு சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். எதிர்பார்த்த புதிய பொறுப்புகள் உங்களைத் தேடிவரும். பிள்ளைகளின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
உங்களின் அறிவாற்றலால் அனைத்து விஷயங்களிலும் முத்திரை பதிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். இல்லத்தில் திருமணம், புத்திர பாக்கியம் ஆகிய சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வம்பு, வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பங்கள் ஏற்பட்டு வருமானம் வரத் தொடங்கும். பல வழிகளிலும் வருமானத்தைக் காண்பீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் காரியங்கள் அனைத்தும் தடங்கலின்றி நிறைவேறும். குருபகவானின் பார்வை ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தின் மீது படிகிறது.
இதனால் சமுதாயத்தில் பெரியோர்களின் நட்பும் ஆசியும் உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். உங்கள் காரியங்கள் அனைத்திலும் அதிக விழிப்புடன் நடந்து கொள்வீர்கள். எதிரிகள் உங்களைக் கண்டு அஞ்சுவார்கள். வெளிநாடு செல்வதற்கான விசா எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த ஆண்டு விசா கிடைத்து குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறுவார்கள். குருபகவான் உங்களின் லாப ஸ்தானத்தைப் பார்க்கிறார். இதனால் புதிய வாகனம், ஆடை அணிகலன்கள் சேரும். மூத்த சகோதர சகோதரர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.
அனாவசிய செலவுகள் ஏற்படாது. சேமிப்பு இரட்டிப்பாகும். குருபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது படிகிறது. இந்தக் காலகட்டத்தில் வாழ்க்கையில் முன்னேற தக்க தருணங்கள் வரும். அவற்றை விட்டு விடாமல் பிடித்துக் கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துகளால் லாபம் அடைவீர்கள். தனித்து இயங்கிய நீங்கள் மற்றவர்களால் சூழப்பட்டு மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். சக ஊழியர்களும் நட்பு பாராட்டுவார்கள். பணவரவிற்கு சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தத் தடையும் இருக்காது. விரும்பிய இடமாற்றங்களையும் பெறுவீர்கள். உங்களின் வேலைத் திறன் பளிச்சிடும்.
வியாபாரிகளின் திட்டங்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனை பிரதிநிதிகளைப் பல இடங்களுக்கும் அனுப்பி உங்களின் பொருட்களை விற்பனை செய்ய முற்படுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கினாலும் கூட்டாளிகளை கலந்தாலோசித்த பிறகே முடிவு செய்வீர்கள்.
விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் கொள்முதல் விற்பனை சீராக இருக்காது. சிலருக்கு பழைய கடன்கள் வசூலாகும். குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்துவீர்கள். போட்டிகளையும் வயல், வரப்பு சண்டைகளையும் சந்திக்க நேரிடும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிர்கட்சியினரால் கஷ்டங்கள் ஏற்படாது என்றாலும் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினருக்கு எதிர்பாராத வகையில் வெற்றிகள் கிடைக்கும். உங்கள் வேலைகளை குறித்த நேரத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகள் மக்களைக் கவரும் விதத்தில் அமையும். மற்றபடி வெளிவட்டாரங்களில் கவனமாகப் பழகவும். சக கலைஞர்களிடம் வீண் வாக்குவாதங்கள்
வேண்டாம்.
பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.
மாணவமணிகள் அதிகம் உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும்.
பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்குங்கள். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோருக்கு உதவவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி கோளறு பதிகம் பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் உங்களால் முடிந்த அளவு அறுகம்புல்லை மாலையாகக் கட்டி விநாயகருக்கு சாற்றவும். முடிந்தவர்கள் தேங்காய் மாலை சாற்றலாம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி, தேய்பிறை: புதன், வியாழன்.

வாழ்க வையகம் !!!
வளர்க இறைபணி !!!

பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்தன. தினசரி 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைந்து போனது ஆய்வில் தெரிய வந்தது. 

பதினைந்து பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் உயர்ரத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பலருக்கும் ரத்தஅழுத்தம் சராசரி அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்தன. இவர்கள் பீட்ரூட் சாற்றை குடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர். மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாகவும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவு பற்றி மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவித்துள்ளது.

ரத்த நாளங்கள் விரிவடையும்

பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்கிறது. இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வலிகளை குறைக்கிறது.

அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்கிறது. அதேபோல் நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.

நைட்ரேட் சத்தை சேமிக்கிறது. 

மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்தை தாவரங்கள் ஒவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே இந்த பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது, அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது.

பக்கவிளைவுகள் அற்ற பீட்ரூட்

நைட்ரேட் சத்து அதிகம் இருக்கும் பீட்ரூட் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஒருவரின் உயர் ரத்தஅழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும் என்கிறார் நிபுணர். இது பக்கவிளைவுகள் அற்ற மருந்து என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்தன. தினசரி 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைந்து போனது ஆய்வில் தெரிய வந்தது.
பதினைந்து பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் உயர்ரத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பலருக்கும் ரத்தஅழுத்தம் சராசரி அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்தன. இவர்கள் பீட்ரூட் சாற்றை குடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர். மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாகவும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவு பற்றி மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவித்துள்ளது.
ரத்த நாளங்கள் விரிவடையும்
பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்கிறது. இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வலிகளை குறைக்கிறது.
அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்கிறது. அதேபோல் நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.
நைட்ரேட் சத்தை சேமிக்கிறது.
மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்தை தாவரங்கள் ஒவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே இந்த பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது, அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது.
பக்கவிளைவுகள் அற்ற பீட்ரூட்
நைட்ரேட் சத்து அதிகம் இருக்கும் பீட்ரூட் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஒருவரின் உயர் ரத்தஅழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும் என்கிறார் நிபுணர். இது பக்கவிளைவுகள் அற்ற மருந்து என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Jun 1, 2014

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்!




பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்!

படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள்!

இன்றைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்திவரும் மிக முக்கிய நோய்களில் ஒன்று... சர்க்கரை நோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, பலரும் பெருங்குழப்பத்துக்கு ஆளாவது உணவு பற்றித்தான்.

''இனிமே இனிப்பையே தொடக் கூடாதோ? அரிசி, உருளைக்கிழங்கு கிட்டக்கூட நெருங்கக் கூடாதாமே. வெறும் பாகற்காய்தான் சேர்த்துக்கணுமா?'' என்பது போன்று பல சந்தேகங்கள் மனதில் எழும்.

''சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம்.

உணவுப்பழக்கத்தின் மூலமே சர்க்கரை நோயைப் பெரும்பாலும் கட்டுப்படுத்திவிடலாம்'' என்று சென்னை எம்.வி.டயபடீஸ் சென்டரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணராகப்

அன்றாட உணவில் காய், கனிகளின் அளவே ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும்


அன்றாட உணவில் காய், கனிகளின் அளவே ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும்

மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றை செய்திருக்கிறார்கள். அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ காய்கனிகளை அன்றாடம் உண்பது அவசியம் என்கிறார்கள் சுமார் 65 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்திருக்கும் இந்த விஞ்ஞானிகள்.

இதுநாள்வரை ஒரு 25 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவுக்காவது காய்கறி மற்றும் பழங்களை உண்ணவேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரை செய்து

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...