Sep 6, 2012

மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க


உடலில் போதிய அளவு சத்துக்கள் இல்லாத காரணத்தினால், அடிக்கடி மயக்கம் வருவது போல் இருக்கும். அதிலும் ஆண்களை விட பெண்களுக்கு தான் இந்த உணர்வு அதிகம் ஏற்படும். அதிலும் அவ்வாறு மயக்கம் தெருக்களில் நடந்து செல்லும் போது, காரை ஓட்டும் போது என்ற நேரத்தில் தான் வரும். ஆகவே அவ்வாறு மயக்கம் வருவது போல் இருந்தால், அந்த நேரத்தில் என்னவெல்லம் செய்தால், மயக்க நிலை போகும் என்று மருத்துவர்கள் கூறுவதைக் கேட்டு, பின்பற்றுங்களேன்…

உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்!!!


உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். மேலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவினால் ஏற்படும் நோய் தான் அனீமியா. ஆகவே அத்தகைய இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

இதயத்தை ஆரோக்கியமாக பேணும் உணவுகள்! – கட்டாயம் கவனிக்க வேண்டிய தகவல்!



தற்போது நிறைய பேர் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் முக்கியமான ஒன்று முறையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகள். அதாவது அதிக கொழுப்புகள் நிறைந்துள்ள உணவுகளை உண்பது, அவற்றை உண்ண வேண்டிய நேரத்தில் உண்ணாமல், கண்ட நேரத்தில் உண்பது என்பன. ஆகவே இதயம் நன்கு ஆரோக்கியமாக இருக்க, உணவுகளில் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டும். அதற்காக இவற்றை மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை, இந்த உணவுகளையும் தினமும் உணவில்

மூளையை பலப்படுத்தும் பாதாம் பருப்பு-

ஆப்பிள் போன்ற கன்னங்கள் வேண்டுமா?


ஆப்பிள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்காக தினமும் ஆப்பிளை வாங்கி சாப்பிடுகின்றோம். ஆனால் அவ்வாறு ஆப்பிளை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் மாறும். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ஏஜிங் முகத்தில் மற்றும் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்குவதோடு, ஆப்பிள் போன்ற கன்னங்களையும் பெற முடியும். சரி, இப்போது அந்த ஆப்பிள் சாப்பிட்டால்

முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா


முகமானது அழகாக இருக்க, அடிக்கடி முகத்தை கழுவுவோம். ஆனால் அவ்வாறு முகத்தை கழுவும் போது எத்தனை பேர் சரியாக கழுவுகிறோம்? மேலும் சிலர் முகத்தில் இருக்கும் அழுக்குகள் போக வேண்டும் என்பதற்காக தேய்த்து கழுவுவார்கள். அவ்வாறு செய்து, முகத்தை முறையாக, மென்மையாக கழுவவில்லை என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தான் அதிகமாகும். ஆகவே அத்தகையது வராமல், மென்மையாக இருக்க முகத்தில் இருக்கும் இறந்த செல்களை, அழுக்குகளை, கிருமிகளை நன்கு கழுவ, ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அதைப் பின்பற்றினால் முகத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம். அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
கிளின்சர் : முகத்தை கழுவுவதற்கு முன்னால், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு சிறிது காட்டனை எடுத்து, கிளின்சரில் நனைத்துக் கொண்டு, முகத்தை நன்கு துடைத்து விட வேண்டும். ஆனால் அப்படி கிளின்சர் பயன்படுத்தும் போது, சருமத்திற்கு ஏற்றதாக பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் போன்று இருக்கும் கிளின்சரைப் பயன்படுத்த வேண்டும். அதுவே எண்ணெய் சருமம் உள்ளவர்கள், வழுவழுப்பாக இருக்கும் கிளின்சரை பயன்படுத்த வேண்டும். அத்தகைய கிளின்சரை தினத்திற்கு 1 அல்லது 2 முறை பயன்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது முகத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணெயையும் அகற்றிவிடும்.
தண்ணீர் : எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அதனால் முகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் குழிகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிவிடும். பின் கழுவியதும் சுத்தமான துணியால் முகத்தை துடைத்துவிட வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் எளிதில் போய்விடும்.
ஃபேஸ் வாஷ் : இதுவும் முகத்தை கழுவ பயன்படுத்தப்படும் பொருட்களுள் ஒன்று. அவ்வாறு கடைகளில் விற்கும் ஃபேஸ் வாஷ் வாங்கும் போது ஆல்கலைன் இருக்கும் பொருட்களை வாங்க வேண்டாம். மேலும் குளிக்கும் போது பயன்படுத்தியப் பின், அடிக்கடி முகத்தை கழுவும் போது முகத்திற்கு சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. அப்போது முகத்தை தண்ணீரால் நனைத்து, பின் அந்த ஃபேஸ் வாஷ் கிரீம்களை பயன்படுத்தி முகத்திற்கு தடவி, மசாஜ் போல் செய்து முகத்தை கழுவ வேண்டும். பின் முகத்தை சுத்தமாக துடைத்து விட வேண்டும். முக்கியமாக மசாஜ் செய்யும் போது 1-2 நிமிடம் வரை செய்யக்கூடாது.
ஃபேசியல் ஸ்கரப் : முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது அனைவரும் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்க வேண்டும் என்பதற்காக மிகவும் கடினமாக, நீண்ட நேரம் செய்வர். ஆனால் அது மிகவும் தவறான செயல். அவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கும் திசுக்கள் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது, மிகவும் மென்மையாக 3-4 நிமிடங்களே செய்ய வேண்டும். அதுவும் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையே செய்ய வேண்டும். பின் கழுவி விட வேண்டும்.
இவ்வாறெல்லாம் முகத்தை கழுவினால் முகமானது அழகாக, பொலிவோடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மென்மையான சருமத்திற்கு ஏற்ற மூலிகைகள்


மென்மையான சருமமானது பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே இருக்கும். அதிலும் முகத்தை அழகுப்படுத்தவும், பொலிவுடன் வைக்கவும், பெண்கள் கடைகளில் விற்கும் பல செயற்கை முறையில் தயாரித்த பொருட்களை வாங்கி, முகத்தை மென்மைப் படுத்துகின்றனர். எதை பயன்படுத்தி முகத்தை மென்மை பயன்படுத்தினாலும், இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை அழகுபடுத்துவதே சிறந்ததாகவும், எந்த ஒரு பக்க விளைவும் வராமல் இருக்கும். அவ்வாறு முகத்தை பொலிவாக்க செயற்கை

சருமத்திற்கு இளமை தரும் உப்பு, சீனி, தவிடு!




சருமத்தை பாதுகாக்க எத்தனையோ க்ரீம்களை தடவினாலும் அதில் உள்ள ரசாயனங்கள் சருமத்தை பதம் பார்த்து விடுகின்றன. இதனால் தேவையற்ற பின்விளைவுகளும், பாதிப்புகளும் ஏற்படுகின்றன. நம் வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வறண்ட சருமத்தை பொலிவாக மாற்றலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களிலிருந்து நீக்கப்படும் தவிடானது அழகிற்கு அழகூட்டும்
வெள்ளை நிறத்தில் இருக்கும் காய், கனிகளை தொடர்ந்து உண்பவர்கள் இதய நலத்துடன் இருப்பதாகவும், புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி இவர்கள் உடலில்அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

வெங்காயத்திலிருந்து கிடைக்கும் அலிசின் என்ற வேதிப்பொருள் கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது.

வெற்றிலையின் மகிமை!



இந்திய மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று, வெற்றிலை. அது நல்ல தருணங்களின் சின்னம். திருமணம், வழிபாடு முதலியவற்றில் முக்கிய இடம் பெறுவது வெற்றிலை. சுபகாரியங்களில் வெற்றிலை `தாம்பூலம்’ என்ற சிறப்புப் பெயர் பெறுகிறது.
மருத்துவ குணம் வாய்ந்த வெற்றிலை, வரலாற்றுக் காலத்திலேயே புகழ்பெற்றுத் திகழ்ந்திருக்கிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிலை போடும் பழக்கம் இருந்து வந்திருப்பதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பண்டைக் காலத்துப் பெண்கள் தமது அழகுப் பொருட்களில்

இருதய நோயாளியின் வாழ்நாள் நீடிக்க வழி வகுக்கும் நவீன மருத்துவம்


இன்று சர்வதேச நோயாளர் தினமாக உலக சுகாதார ஸ்தாபனம் (World Health Organization) பிரகடனப்படு த்தியுள்ளது.
ஏலவே இன்றைய காலகட்டத்தில் அரசாங்க மருத்துவ மனைகளில் நடைபெற்று வருகின்ற இருதய நோய் தொடர்பான கிளினிக்கிற்கு (Clinic) செல்கின்ற நோயாளர் பற்றியும், இருதயத்தின் (Heart) இயல்பான இயக்கம், அது பழுதடைவதற்கான காரணம், இதனால் உடலுக்கு என்ன நேரிடுகின்றது, இதற்குரிய மருத்துவம் யாது? இருதயக் கோளாறுகளை அறிய உதவும் சோதனைகள், இருதய அறுவை சிகிச்சையின் (Operation) போது

சர்ச்சைக்குரிய தீவை அளந்த ஜப்பான்: அதிர்ச்சியில் சீனா





சீனாவும், ஜப்பானும் உரிமை கொண்டாடும் பிரச்னைக்குரிய தீவில் ஜப்பானிய நில ஆய்வாளர்கள் சென்று அளவிடும் பணியை தொடங்கினர்.சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ளது ஷென்காகு தீவு. இந்த தீவை சீனா டையாயூ என்றழைக்கிறது.
பண்டை காலம் தொட்டு இந்த தீவு தங்கள் எல்லைக்குட்பட்டு இருப்பதாக சீனாவும், கடந்த 1890ஆம் ஆண்டு முதல் இந்த தீவு தங்கள் வசம் இருப்பதாக ஜப்பானும், உரிமை கொண்டாடி வருகின்றன.
பிரச்னைக்குரிய இந்த தீவில் மனித நடமாட்டம் கிடையாது. இந்த தீவைச் சுற்றிலும் எரிவாயு அதிகம் கிடைப்பதால் சீனா இந்த பகுதியைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

சீனா சொந்தம் கொண்டாடும் சர்ச்சைக்குரிய தீவை விலைக்கு வாங்கும் ஜப்பான்



சீனா சொந்தம் கொண்டாடும் சர்ச்சைக்குரிய தீவை விலைக்கு வாங்கும் ஜப்பான்
டோக்கியோ, செப். 6-

ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே தீவு கூட்டம் ஒன்று உள்ளது. இதில் சில தீவுகளை ஜப்பானும், சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

சமீபாலமாக இந்த பிரச்சினை தொடர்பாக பதட்டம் நிலவுவதால் இரு நாட்டு கடற்படையினரும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். ரூ.130 கோடி விலை இந்த தீவு கூட்டத்தில் 3 தீவுகள் ஜப்பான் நாட்டை சேர்ந்த தனியாருக்கு சொந்தமாக இருந்தது.

பறவைகளுடன் பறந்தார் விளாடிமிர் புடின்



ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் சாகசங்கள் பற்றி உலகம் முழுவதும் அறிந்தவர்கள் இருக்கின்றனர்.ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற கண்ணோட்டத்தை விட்டும் அப்பாற்பட்டவர் புடின்.
குதிரையேற்றம், கார் ரேஸ், பனிப்பிரதேசத்தில் தங்குவது, அதிவேக ஜெட்டில் பறப்பது என அனைத்து விடயங்களும் புடினின் விரல் நுனியில் புதைந்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் வடகோடி பகுதிக்கு பயணம் மேற்கொண்ட போது புதின், கிளைடரில் வானில் பறக்க அப்போது

துருக்கி: வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ராணுவத்தினர் 25 பேர் பலி


துருக்கி: வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ராணுவத்தினர் 25 பேர் பலிஇஸ்தான்புல்,செப்.6-


துருக்கி நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள அப்யான் நகரில் அமைந்துள்ள ராணுவத்துக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் பரிசோதனை நேரத்தின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் ராணுவ வீரர்கள் 25 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். அந்நாட்டு வனத்துறை அமைச்சரின் வருகையின்போது நிகழ்ந்துள்ள இந்த விபத்து துருக்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...