Feb 28, 2013

வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்


வியாழன், 28 பிப்ரவரி 2013

வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்களா? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம்.

ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும்.

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும்.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் உயரமான 72 மாடி ஹோட்டல்

வியாழன், 28 பிப்ரவரி 2013

உலகின் மிக உயரமான 72 மாடி ஹோட்டல் கட்டிடம் துபாயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு ஹோட்டல், உலகின் மிக உயரமான ஹோட்டல் என்று கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

துபாய் நகரம் தனது சாதனை பட்டியலில், 72 மாடிகள் கொண்ட அதி நவீன ஓட்டல் ஒன்றை சேர்த்துள்ளது. உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த 72 மாடி கொண்ட ஓட்டலை கடந்த செவ்வாய் அன்று முறைப்படி துபாய் திறந்துள்ளது. 355 மீட்டர் உயரமுள்ள உலகின் மிகப்பெரிய இந்த ஒட்டலின் பெயர் ஜே.டபிள்யூ. மரியட்ஸ் மார்கியூஸ் துபாய் ஆகும்.

மொத்தம் 1608 அறைகளைக்கொண்ட இந்த ஹோடல்லில் மக்களின் வசதிக்காக அனைத்து அதிநவீன அம்சங்களும் நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலிகைப் பொடிகள் மற்றும் அதன் பயன்கள்






அருகம்புல் பவுடர் :
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பவுடர் :
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

கடுக்காய் பவுடர் :
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பவுடர் :
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கலா பவுடர் : தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்




அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம்




சிறிது சிறிதாக, குரோம் பிரவுசர் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. முதலில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்களின் விருப்பமாக இருந்த இந்த பிரவுசர் தற்போது நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் பிரவுசராக இடம் பிடித்து வருகிறது. 

லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன. மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது. இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன.

1. கீ போர்ட் ஷார்ட்கட் பயன்பாடு:

மவுஸ் வழியாக மட்டுமின்றி, கீ போர்ட் ஷார்ட் கட் வழிகள் மூலமாகவும், பல செயல்பாடுகளை குரோம் பிரவுசரில் மேற்கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, கண்ட்ரோல்+1 தொடங்கி, கண்ட்ரோல் + 8 வரை அழுத்தினால், பிரவுசரில் திறக்கப்பட்டுள்ள இணைய தளங்களை அந்த எண் வரிசையில் இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். 

இதன் செட்டிங்ஸ் மாற்ற ஆல்ட்+எப் அல்லது ஆல்ட் +இ (Alt +F / Alt+E) பயன்படுத்தலாம். 

Ctrl+D அப்போதைய இணைய தளத்திற்கு புக்மார்க் அமைக்கிறது.

Ctrl+H குரோம் ஹிஸ்டரியைத் தருகிறது.

Ctrl+J டவுண்லோட்ஸ் பிரிவிற்குச் செல்கிறது. 

Ctrl+K அட்ரஸ் பார் வழியே, மிக வேகமான தேடலுக்கு வழி தருகிறது. தேடலுக்கான சொல்லை அமைத்து என்டர் தட்டினால் போதும். 

Ctrl+N புதிய விண்டோ திறக்கப்படுகிறது. 

Ctrl+Sht+D அப்போது திறக்கப்பட்டிருக்கும் அனைத்து டேப்களையும், ஒரு புதிய புக்மார்க் போல்டரில் அமைக்கிறது.

Ctrl+Sht+N இன் காக்னிடோ எனப்படும், செயல்பாடுகளைப் பின்தொடராத தனி நபர் பயன்பாட்டிற்கு வழி கிடைக்கிறது.

Ctrl+Sht+T மூடப்பட்ட ஒரு டேப்பினைத் திறக்கிறது. இப்படியே இறுதியாக மூடப்பட்ட பத்து டேப்களை, அவற்றில் இயங்கிய இணையதளங்களுடன் திறக்கலாம்.

இவை எல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள். இது போல இன்னும் நிறைய பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன. நாம் பயன்படுத்தும் எக்ஸ்டன்ஷன் அல்லது அப்ளிகேஷன்களுக்கு, நாமாகவும் ஷார்ட் கட் கீ தொகுப்பினை அமைக்கலாம். Alt+F/Alt+E மூலம் குரோம் மெனு சென்று Settings | Extensions பிரிவில் இச்செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். 


2. செயல் தளங்கள் செல்ல குறுக்கு வழி:

குரோம் பிரவுசர் அட்ரஸ் பார் வழியாகவே, சில செயல்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய தளங்களை நமக்குக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, chrome://bookmarks என டைப் செய்து புக்மார்க்ஸ் பக்கத்திற்குச் செல்லலாம். chrome://setting என்பது செட்டிங்ஸ் பக்கத்தினைத் திறந்து கொடுக்கும். 

இதே போல எக்ஸ்டன்ஷன் பக்கம் திறக்க chrome://extensions என அட்ரஸ் பாரில் அமைத்து என்டர் செய்திட வேண்டும். ஹிஸ்டரி பக்கம் கிடைக்க chrome://history என அமைக்க வேண்டும். இந்தச் சொற்களை புக்மார்க் ஆக சேவ் செய்து, அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்து பெறலாம்.


3. புதிய டேப் தரும் வசதிகள்:

குரோம் பிரவுசரில், புதிய டேப் மற்ற பிரவுசர்கள் தராத சில வசதிகளைக் கொண்டுள்ளது. புதிய டேப் பக்கத்தினை Ctrl+T அழுத்தியோ அல்லது குரோம் பிரவுசர் திறக்கப்பட்டவுடனேயோ பெறலாம். இங்கு நீங்கள் இன்ஸ்டால் செய்த அப்ளிகேஷன்கள், அப்போது மூடப்பட்ட தளங்கள், வெப் ஸ்டோர் என அனைத்தும் காட்டப்படுகின்றன. இவற்றில் தேவை யானதைக் கிளிக் செய்து பயன்படுத்தலாம். 


4. பிரவுசருக்கான டாஸ்க் மானேஜர்:

விண்டோஸ் சிஸ்டத்திற்கு இருப்பதைப் போல, குரோம் பிரவுசர் தன் செயல் பாட்டினைக் கண்காணிக்க, தனியே ஒரு டாஸ்க் மானேஜரைக் கொண்டுள்ளது. இதனை, Shift+Esc கீகளை அழுத்திப் பெறலாம். 

இதில் எவ்வளவு மெமரி பயன்படுத்தப்படுகிறது, சி.பி.யு.நிலை, இணையத்திலிருந்து பெறப்பட்ட பைட்ஸ், அனுப்பப்பட்ட பைட்ஸ் அளவு, டேப்ஸ், அப்ளிகேஷன்கள், ப்ளக் இன் புரோகிராம்கள் போன்ற பல தகவல்கள் கிடைக்கின்றன. இதன் மூலம், பிரவுசர் இயங்குவதில் பிரச்னை ஏற்படுகையில், சிக்கல் எங்கு என அறிந்து தீர்ப்பது எளிதாக இருக்கும். 


5. தடயம் அறியா இணைய உலா:

குரோம் பிரவுசர் இன் காக்னிடோ என்ற வகை பிரவுசிங் வசதியினைத் தருகிறது. இதனை இயக்கி, இணைய தளங்களைப் பார்வையிடுகையில், அவை குறித்த தகவல்களை குரோம் பிரவுசர் குறித்து வைக்காது. நாம் தேடும் தளங்களை, அதில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பிறர் அறிந்து கொள்ளாமல் இருக்கவும் இதனைப் பயன்படுத்தலாம். Ctrl+Shift+N அழுத்தி இந்த வகை பிரவுசிங் செயல் பாட்டினை மேற்கொள்ளலாம். 


6. ஆம்னிபாக்ஸ் தேடல்:

குரோம் பிரவுசரின் அட்ரஸ் பாரை, தேடல் கட்டமாகப் பயன்படுத்தி, நாம் இணையத் தேடலை மேற்கொள்ளலாம். இதனால், தேடல் வேகம் அதிகரிக்கிறது. தேடும்போது இந்தக் கட்டத்தினை ஆம்னிபாக்ஸ் (Omnibox) என குரோம் அழைக்கிறது.


7. டேப்களை மாற்றி அமைக்க:

குரோம் பிரவுசரின் டேப்கள் நிலையானது அல்ல. நம் வசதிப்படி அவற்றின் இடத்தை மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, நாம் சில தின இதழ்களின் டேப்களை அடுத்தடுத்து அமைத்துப் பார்க்க விரும்பினால், அவற்றை இழுத்து வரிசையாக அமைத்துக் கொள்ளலாம். டேப்கள் அதிகம் இடம் எடுத்துக் கொள்ளாத வகையில் அட்ரஸ் பாருக்குக் கீழாக பின் அப் செய்தும் வைக்கலாம்.


8. தானாகத் தளங்கள் திறக்கப்பட:

குறிப்பிட்ட இணைய தளங்களை, பிரவுசர் திறந்தவுடன் திறந்து பயன்படுத்துபவரா நீங்கள்? அவ்வாறெனில், பிரவுசர் திறக்கும் போதே, இவையும் திறக்கும் வகையில் செட் செய்திடலாம். இதற்கு, Alt +F/Alt+E அழுத்தி செட்டிங்ஸ் பக்கம் செல்லவும். இங்குள்ள On Startup என்ற பிரிவில், Open A Specific Page Or Set Of Pages என்பதில் கிளிக் செய்திடவும். 

அடுத்து Set Pages என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். நீங்கள் இங்கு அமைத்திடும் தளங்கள் அனைத்தும், பிரவுசர் திறக்கப்படுகையில் திறக்கப்படும். அதேபோல, எந்த இணையதளம் பார்த்துக் கொண்டிருக்கையில், பிரவுசர் மூடப்பட்டதோ, அதே இணையதளத்துடன் மீண்டும் பிரவுசரைத் திறக்கும் வகையிலும் செட் செய்திடலாம். செட்டிங்ஸ் பிரிவில், Continue Where I Left Off என்பதனைத் தேர்ந்தெடுத்து செட் செய்தால் போதும். 



Feb 27, 2013

அல்சரின் அறிகுறிகளும் அதை குணப்படுத்துவதற்கான வழிகளும்!



  • 14
     
alcersஅல்சர் என்பது உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புண்களைக் குறிக்கும். புண்கள் ஏற்பட்டு, அப்புண்ணில் வலி ஏற்பட்டு, அந்த இடம் பாதிப்படைந்து, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால், அவற்றில் இரண்டாம் தொற்று ஏற்பட்டு, உடல் சோர்வடைந்து, சிகிச்சையில் பெரும் தாமதத்தை ஏற்படுத்துவதே அல்சரின் அறிகுறிகளாகும்.
முன்பெல்லாம் மனஉளைச்சல், உணவு மற்றும் வாழ்க்கை மாற்றத்தால் அல்சர் வருவதாக நினைத்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள், இப்பொழுது ஹீலிபாக்டார் பைலோரி (helibactor phylori) அல்லது எச்.பைலோரி என்ற ஒரு வகை பாக்டீரியாவால் அல்சர் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
நேரம் கடந்து உணவு உண்பதும் அல்சர் வர காரணமாக உள்ளது. மேலும் எடை இழப்பு, பசியின்மை, வீக்கம், குமட்டல், வாந்தி ஆகியவை அல்சரின் பிற அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் அவசரத் தன்மை கொண்டவை. குறிப்பாக மலம் ஒரு இருண்ட நிறத்தில் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சரி, இப்போது அல்சரை குணப்படுத்தும் சில

உடலின் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் ஆற்றல் மிக்க கேழ்வரகு!


ragiஉணவே மருந்தாக இருக்கவேண்டும் என்பதே சித்த மருத்துவத்தின் தத்துவமாகும். பெரும்பாலான சித்த மருந்துகள் உணவின் வடிவத்திலே காணப்படுகின்றன. சூரணம், லேகியம், மணப்பாகு என பல வடிவங்களில் வழங்கப்படும் சித்த மருந்துகள் பெரும்பாலும் அதிக ஊட்டச்சத்து உடையவையாகவும், பலவித சத்துக்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றன. ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உணவாக உட்கொள்ளும் போது செரிமான மண்டலம் சீராக இயங்குவதுடன் பலவித நோய்களின் ஆதிக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவேதான் இந்திய உணவு வகைகள் பல மக்களின் உடல்வாகுக்கும், சுற்றுப்புற சீதோஷ்ணத்திற்கும் ஏற்றவாறு

Feb 26, 2013

கார் நிறுத்தும் பகுதின்னா இப்படித்தான் இருக்கணும்!

car-parking-lot





  • 19
     
இப்போது காரில் எங்கு சென்றாலும், எப்போது சென்றாலும் நெரிசல், நெரிசல் என புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காரை பார்க்கிங் செய்வதற்கான இடத்தை தேடி(பார்க்கிங் லாட்டிலும்தான்) அலைந்து நொந்து நூடூல்சாக வேண்டியிருக்கிறது.
அப்பாடா, இடம் கிடைத்து விட்டதே என்ற சந்தோஷத்தில் காரை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்த்தால் காரை எடுக்க முடியாத அளவுக்கு இன்னொருவர் காரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு போயிருப்பார். ஷாப்பிங் செய்த டென்ஷனில், இந்த டென்ஷனும் சேர்ந்து கொள்ளும் சம்பவங்கள் நமக்கு தற்போது அன்றாடம்.
இந்த நிலையில், காரை எளிதில் பார்க்கிங் செய்யும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கார் பார்க்கிங் பகுதி நிச்சயம் நம்மை குஷிப்படுத்தும். எளிதாக வந்து நிறுத்தவும், பின்புறம் எடுக்கும்போது எந்த பிரச்னையும் இல்லாமல் எளிதாக செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. இஷ்டம்போல் இங்கு நிறுத்த முடியாது. கார் பார்க்கிங் பகுதிகளை அமைக்கும்போது இதுபோன்று அமைத்தால் சிறப்பாக இருக்குமல்லவா…!!

Feb 25, 2013

புளூடூத் பெயர் வரக் காரணம்


Posted: 23 Feb 2013
900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். 

தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். 

இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகளின் (டென் மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து) விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர். 

இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில், தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு புளுடூத் என்று பெயரிட்டனர். 

மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

சிறுநீரக கற்களை எளிதில் கரைக்கக் கூடிய சக்தி வாய்ந்த வாழைத்தண்டு!



  • 41
     
images (1)சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
* சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.
* சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை

உடல் இளைக்க இஞ்சி சாறு சாப்பிடுங்க





  • 95
     
zinger
உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.
இஞ்சி பிரியர் ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு இல்லை.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறுசுறுப்பு ஏற்படும்.
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும்.
காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடல் இளமை பெறும்.

உங்கள் விலையுயர்ந்த பட்டுப்புடைவைகளை பராமரிப்பது எப்படி?




  • 6
     

Raw_Silk_Sareesபட்டு சேலையை பராமரிப்பது ஒரு தனி ஸ்டைல். முறையாக பராமரித்து வந்தால் பல ஆண்டுகளுக்கு உபயோகிக்க முடியும். பட்டுப்புடவை பராமரிப்பிற்கு சில எளிய டிப்ஸ்:- விஷேசங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு புடவையை களைந்து உடனே மடித்து வைக்க கூடாது. நிழலில் காற்றாட 2 அல்லது 3 மணி நேரம் உலரவிட்டு பின்பு அதனை கைகளால் அழுத்தி தேய்த்து மடித்து எடுத்து வைக்கவேண்டும். சாதாரண தண்ணீரால் மட்டும் அலசினால் போதுமானது.
எக்காணரத்தை கொண்டும் பட்டுப்புடவையை சூரியஒளி படும்படி வைக்க கூடாது. பட்டு புடவையின் மீது ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் போன்ற கடினமான கறைகளாக இருந்தால் அந்த இடத்தில் விபூதியை போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை

Feb 24, 2013

ஜோதிடக் கட்டுரைகள் - கிரகங்களுடன் இராகு, கேது சேர பலன்கள்



*    மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மீனம் ஆகிய இடங்களில் கரும்பாம்பு எனப்படும் ராகு நின்றிட அதே சமயத்தில் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற நான்கு மூலைகளிலும் கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகனுக்கு சிறந்த நன்மைகளும் பொன் பொருள் சேர்ந்து யோகம் அமையும்.

*    செம்பாம்பு எனப்படும் கேது 1,5,9 ஆகிய கோண ஸ்தானங்களிலும் லாப ஸ்தானத்திலும் நிற்க அந்த ஜாதகன் சொந்த இடத்திலும் பிற தேசங்களிலும் வாசம் செய்து சம்பாதிப்பான். பொன் ஆபரணம் மற்றும் பூமியும் சேர்ந்து இந்திரனுக்கு ஒப்பாக வாழ்வான். இல்லறத்தில் மகிழ்ச்சி அடைவான். ஜோதிடத்திலும் வல்லமை பெற்று விளங்குவான்.

*    லக்னாதிபதியும் சந்திரனும் மூன்றாம் அதிபதியும் சனியும் ஒரே இடத்தில் கூட ராகுவுடன் பாவக்கிரகம் சேர இவர்களில் தசா புக்தி காலத்தில் ஜாதகனுக்கு உயிர் ஆபத்து உண்டாகும். தற்கொலை போன்ற எண்ணமும் வரும்.

*    ராகுவுடன் வேறு கிரகம் சேர்ந்து அவர்களுக்கு இரு புறமும் மற்ற

தமிழ் வருடங்கள் 60 வருடங்களுக்கான சுழற்சியில் வரக்கூடியவை ஆகும். அவை

:

எண் பெயர் Name வருடம்
1 பிரபவ Prabhava 1987-1988
2 விபவ Vibhava 1988-1989
3 சுக்ல Sukla 1989-1990
4 பிரமோதூத Pramodhudha 1990-1991
5 பிரசோற்பத்தி Prajorpati 1991-1992
6 ஆங்கீரச Angirasa 1992-1993
7 ஸ்ரீமுக Srimukha 1993-1994
8 பவ Bhava 1994-1995
9 யுவ Yuva 1995-1996
10 தாது Dhatu 1996-1997
11 ஈஸ்வர Esvara 1997-1998
12 வெகுதானிய Vehudhaniya 1998-1999
13 பிரமாதி Pramathi 1999-2000
14 விக்கிரம Vikrama 2000-2001
15 விஷூ Vishu 2001-2002
16 சித்திரபானு Chitrabanu 2002-2003
17 சுபானு Subanu 2003-2004
18 தாரண Tarana 2004-2005
19 பார்த்திப Parthiba 2005-2006
20 விய Viya 2006-2007
21 சர்வசித்து Sarvasithu 2007-2008
22 சர்வதாரி Sarvadhari 2008-2009
23 விரோதி Virodhi 2009-2010
24 விக்ருதி Vikruthi 2010-2011
25 கர Kara 2011-2012
26 நந்தன Nandhana 2012-2013
27 விஜய Vijaya 2013-2014
28 ஜய Jaya 2014-2015
29 மன்மத Manmatha 2015-2016
30 துன்முகி Dhunmuki 2016-2017
31 ஹேவிளம்பி Hevilambi 2017-2018
32 விளம்பி Vilambi 2018-2019
33 விகாரி Vikari 2019-2020
34 சார்வரி Sarvari 2020-2021
35 பிலவ Pilava 2021-2022
36 சுபகிருது Subakrithu 2022-2023
37 சோபகிருது Sobakrithu 2023-2024
38 குரோதி Krodhi 2024-2025
39 விசுவாசுவ Visuvaasuva 2025-2026
40 பரபாவ Parabhaava 2026-2027
41 பிலவங்க Plavanga 2027-2028
42 கீலக Keelaka 2028-2029
43 சௌமிய Saumya 2029-2030
44 சாதாரண Sadharana 2030-2031
45 விரோதிகிருது Virodhikrithu 2031-2032
46 பரிதாபி Paridhaabi 2032-2033
47 பிரமாதீச Pramaadhisa 2033-2034
48 ஆனந்த Aanandha 2034-2035
49 ராட்சச Rakshasa 2035-2036
50 நள Nala 2036-2037
51 பிங்கள Pingala 2037-2038
52 காளயுக்தி Kalayukthi 2038-2039
53 சித்தார்த்தி Siddharthi 2039-2040
54 ரௌத்திரி Raudhri 2040-2041
55 துன்மதி Thunmathi 2041-2042
56 துந்துபி Dhundubhi 2042-2043
57 ருத்ரோத்காரி Rudhrodhgaari 2043-2044
58 ரக்தாட்சி Raktakshi 2044-2045
59 குரோதன Krodhana 2045-2046
60 அட்சய Akshaya 2046-2047

ஜோதிடக் கட்டுரைகள் - கிரகங்களின் சிறப்பான பலன்கள்

சூரியன்: லக்னத்திற்கு 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் பரிதி எனப்படும் சூரியன் நின்றால் அந்த ஜாதகனின் வீடு தெய்வத்தால் காக்கப்படும். அத்தகையோனுக்கு நல்ல வாகன யோகமும் சத் விஷயங்களில் ஞானமும் அறிவு கூர்மையும் உண்டாகும். அரசாங்கத்தால் ஆதரவும் புதல்வர்களுக்கு யோகமும் ஏற்படும். அஞ்சா நெஞ்சனாக பகைவர்களை ஒழித்து வீரனாக விளங்குவான். அதே சமயத்தில் 2, 3, 4, 5, 7 ஆகிய இடங்களில் சூரியன் நின்றால் அந்த ஜாதகன் சொற்ப அளவே பலன் பெறுவான். மேலும் வியாதி, கண்ணோய் முதலியன உண்டாகும். ஈனத் தொழில் செய்பவர்களின் விரோதமும் ஏற்படும்.

சந்திரன்: நன்மை தரும் சந்திரன் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களிலும் 5, 9 எனும் திரிகோண ஸ்தானங்களிலும் தன ஸ்தானமான 2ம் இடத்திலும் லாப

ஜோதிடக் கட்டுரைகள் - 27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்



நட்சத்திரங்கள் -அதிஸ்டம் தரும் தெய்வங்கள்


எண் நட்சத்திரங்கள தெய்வங்கள்
01  அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி
02  பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04  ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்
07  புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08  பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10  மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி
12  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி
13  அத்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி
14  சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15  சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16  விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்.
17  அனுசம்  ஸ்ரீ லக்மி நாரயணர்.
18  கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19  மூலம்  ஸ்ரீ ஆஞ்சனேயர்
20  பூராடம்  ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21  உத்திராடம்  ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22  திருவோணம்  ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23  அவிட்டம்  ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24  சதயம்  ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25  பூரட்டாதி  ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26  உத்திரட்டாதி  ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27  ரேவதி  ஸ்ரீ அரங்கநாதன்.

ஜோதிடக் கட்டுரைகள் - கிரகங்கள் சேர்க்கை பலன்கள்



*    லக்னத்திற்கு 4,7 ஆகிய கேந்திரங்களில் சுபக் கிரகங்கள் சேர்ந்து நிற்கப் பிறந்த ஜாதகன் பொன் பொருள் மற்றும் கோடி ரூபாய் சம்பாதிக்கும் திறம் பெற்று சிறப்புடன் வாழ்வான். பலவித வாகனம் பெற்று பெருமை அடைவான்.

*    லக்னத்திற்கு 4ம் இடம் சர ராசியாக அமைய அதில் ஒரு கிரகம் நின்றால் அந்த ஜாதகன் அரசனுக்குரிய ஆடம்பர வாழ்க்கை பெற்று யோகவானாக விளங்குவான். பெரியவர்களின் தொடர்பு பெற்று அரசாங்கத்தால் விருது மற்றும் பொருள் பெறுவான். இனிய மனைவி அமைந்து சுக ஜீவனம் செய்வான்.

*    செவ்வாய், சனி, ராகு இவர்கள் ஒரே வீட்டில் கூடி நின்றால் பெண்களால் தன லாபம் உண்டாகும். வீடு கட்டை சுகத்துடன் வாழ்வான். எனினும் தீய தசைகள் நடக்கும் போது இந்த சேர்க்கையினால் சிற்சில துன்பங்களும்

தமிழர்களின் பாரம்பரிய கலை மல்லர் கம்பம்

Mallakhamb Tamilபயிற்சியின் போதும் பயிற்சிக்கு பின்னும் பல விளைவுகளை உருவாக்க கூடிய கிரேக்கர்கள் உருவாக்கிய ஜிம்னாஸ்டிக்ஸ் பார்த்து வியக்கும் நாம் அதைவிட உடலுக்கும் மனதிற்கும் மிக வலிமை சேர்க்கின்ற மல்லர் கம்பம் என்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டை மறந்து போனது மிக துயரமான விசயம் தான்.
சிலம்பம், களரி , மல்யுத்தம், பிடிவரிசை , வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலை போல் மனிதன் உடலையும் மனதையும் கட்டுபடுத்தி வைக்க உதவும் யோகாசனம் தியானம் போல் மல்லர் கம்பமும் மிக சிறந்த விளையாட்டாகும். இது நம் முன்னோர்களால் போற்றி வளர்க்க பட்டது.
தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டு மல்லர் கம்பம் ஆகும். தரையில் ஊன்றிய
கம்பத்தின் மீதும், கயிற்றில் தொங்கும் கம்பத்தின் மீதும், அந்தரத்தில் தொங்கும் கயிற்றின் மீதும் தாவி ஏறி ஆசனங்கள் செய்யும் மல்லர் கம்பம்

21 வயதில் 21 படங்கள்; 21 குழந்தைகள் தத்தெடுப்பு: ஹன்சிகாவுக்கு இளம் சாதனையாளர் விருது

February 24, 2013
21 வயதில் 21 படங்கள்; 21 குழந்தைகள் தத்தெடுப்பு:  ஹன்சிகாவுக்கு இளம் சாதனையாளர் விருது ஹன்சிகா... தமிழ்நாட்டில் தற்போது நம்பர் ஒன் நடிகை. மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா 6 வயதிலிருந்தே இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு 2007ம் ஆண்டு தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார். அங்கு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்ததும் தமிழில் "மாப்பிள்ளை" படத்தின் மூலம் அறிமுகமானார். எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் ஜூனியர் குஷ்புவாக இடம் பிடித்தார். தற்போது சேட்டை, வாலு, வேட்டை மன்னன், சிங்கம்-2, பிரியாணி, தீயா வேலை செய்யணும் குமாரு, வாலிபன் படங்களில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் 8 படங்களில் நடிக்கும் ஹீரோயின் இவர்தான்.



இது தவிர தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மும்பை குடிசை பகுதியில் இருந்து ஒரு ஏழைக் குழந்தையை தத்தெடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான செலவுகளை ஏற்றுக் கொள்கிறார். இதுவரை 21 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். நிரந்தரமா ஒரு அறக்கட்டளை தொடங்கவும் ஏற்பாடு

அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு

அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு
February 24, 2013  01:04 pm
அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.

சர்வதேச சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கார் விருதுகருதப்படுகிறது. அந்த விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான 85-வது விருது வழங்கும் விழா அமெரிக்க நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு (இந்திய நேரப்படி நாளை காலை 8.30 மணிக்கு) லாஸ்ஏஞ்சல்ஸ்சில் நடக்கிறது. அதில், சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், டைரக்டர் இசையமைப்பாளர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

உடல் முழுவதிற்குமான எளிய உடற்பயிற்சிகள்.



ஓவ்வொரு உட‌ற்ப‌யிற்சியையும் 5 முறை அள‌விற்கு செய்ய‌லாம். நன்கு பழகிய பிறகு படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகாரிக்கலாம்.

* கைக‌ளுக்குக்கான உட‌ற்ப‌யிற்சியில் இர‌ண்டு கைக‌ளையும் ப‌க்க‌ வாட்டில் நீட்டி முன்னும் பின்னுமாக‌ சுழ‌ற்ற‌ வேண்டும். இத‌னால் கை தோள்ப‌ட்டை வ‌லி கையில் உள்ள‌ ச‌தை குறைய‌ ந‌ல்ல‌து.

* தோப்பு க‌ர‌ண‌ம் போடுவ‌து போல் இடுப்பில் கை வைத்து கொண்டு பாதி அள‌விற்கு உட்கார்ந்து எழுந்திரிக்க‌லாம். எல்லாம் ஒரு 5 க‌வுண்ட் அள‌விற்கு

Feb 23, 2013

திருப்பதி வெங்கடாஜலபதியின் உருவத்துடன் கைக்கடிகாரம்! சுவிஸ் நிறுவனம் அசத்தல்



  • 2
     


watch_tripathiஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவில், வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில் 2-ம் இடத்தில் உள்ளது.
மிகவும் செல்வாக்கு மிகுந்த கடவுளாக திகழும் இந்த திருப்பதி வெங்கடாஜலபதியின் தரிசனம் எப்போதும் கிடைக்க வேண்டும் என்றே அவரது பக்தர்கள் விரும்புவார்கள்.
அவர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் சுவிட்சர்லாந்து நிறுவனம் அழகான, ஆடம்பரமான கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

மஞ்சள் மருத்துவக் குணங்கள்

The size of the tree bark is yellow in color yellow. The bark, leaves with a medical nature. The leaves bitter taste, is vice cuvaiyakak Karppu taste. Is to increase the heat of the drought.இம்மரத்தின் பட்டை பருமனாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மரப்பட்டை, இலை மருத்துவக் குணம் உடையது. இதன் இலைகள் கசப்புச் சுவையும், துணைச் சுவையாகக் கார்ப்புச் சுவையுடனும் இருக்கும். வறட்சித் தன்மையும் சூட்டை அதிகரிக்கச் செய்யும் தன்மையும் கொண்டது. ரணம், நீரிழிவு, அரிப்பு ஆகியவற்றைப் போக்கும் குணமுண்டு. தமிழகம் எங்கும் காடுகளில் காணப்படுகின்றது.


மஞ்சள் மருத்துவக் குணங்கள்

மர மஞ்சளின் பட்டையை எடுத்து விழுதாய் அரைத்து ரணங்களில் பூசி வர

உடலின் நோய்த் தொற்று நீக்கும் துளசி


Easily available everywhere and a lot of greatness in basil leaves. If you eat healthy, live tulacic leaves daily bowel, stomach, mouth-  related problems will not get any. Digestive power, fresh basil leaves the body throughout the day can.எங்கும் எளிதாகக் கிடைக்கும் துளசி இலையில் மகத்துவங்கள் ஏராளம். ஆரோக்கியமாக வாழ துளசிச் இலையை தினமும் தின்று வந்தால் குடல்,  வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் வராது. ஜீரண சக்தியும், நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் உடலில் ஏற்பட்ட படைச்சொரி  மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து சாப்பிட்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு  தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை  தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம்  துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன்  குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள  குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

பனிப்புயல் தாக்குதல் சிகாகோவில் 270 விமானங்கள் ரத்து


கான்சாஸ் சிட்டி: அமெரிக்கா மீண்டும் பனிப்புயல் தாக்கியது. வடகிழக்கு திசை நோக்கி வீசும் பனிப்புயலால் மின்னசோட்டா மாகாணம் முதல் ஒஹியோ மாகாணம் வரை உள்ள பகுதிகளில் பனி படர்ந்துள்ளது.கான்சாஸ் நகரில் 30.5 செ.மீ. உயரத்துக்கு பனி படர்ந்தது. இதனால் கான்சாஸ் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது.சிகாகோ நகரில் உள்ள 2 விமான நிலையங்களில் 270 விமானங்களும், செயின்ட் லூயிஸ் மாகாணத்தில் உள்ள லாம்பர்ட் விமான நிலையத்தில் 320 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.இந்த வார இறுதியில் இப்பனிப்புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நியூ இங்கிலாந்து பகுதிகளில் ஏராளமான பனிப்பொழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

2013ல் இந்திய இணையம்

Posted: 20 Feb 2013

இந்தியாவில் இணையப் பயன்பாடு 2013 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளில், அதன் பொற்காலத்தைக் காண இருக்கிறது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

இணைய வழி வர்த்தகம் மிக வேகமாக வளரும் என்றும், அதன் சார்பான இணையப் பயன்பாடு தற்போது இருப்பதனைக் காட்டி லும் அதிக வளர்ச்சி பெறும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. 

இந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற இருப்பதைக் கவனத்தில் கொள்ளும் முன், இந்த 2013 ஆம் ஆண்டில் எந்த எந்த வகைகளில், பிரிவுகளில் இணைய வளர்ச்சி இந்தியாவில் இருக்கும் என்பதனைக் காணலாம்.

ஏறத்தாழ 15 கோடி இணைய பயனாளர்களுடன், இந்தியா உலக அளவில்

அதிக பயனாளர்களைக் கொண்டுள்ள முதல் 20 இணைய தளங்கள்

Posted: 21 Feb 2013

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. 

அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். 

இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம். 


எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தனி நபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 கோடியே 30 லட்சம். முதன் முதலில் இது தொடங்கிய போது, பொருட்களைப் பெற்று, பேக் செய்து அனுப்பும் பணியைத்தான் மேற்கொண்டதாக இருந்தது. தற்போது இதன் இமாலய வளர்ச்சி, இணைய வர்த்தகத்தின் சிறப்பினைக் காட்டுவதாக அமைந்துள்ளது. 

எதிர்வரும் 28ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பட்டமளிப்பு!

Jaffna-Studentsயாழ். பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 28ஆம் திகதி வியாழக்கிழமை கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார்.
குறித்த பட்டமளிப்பு விழாவில் 1236 பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
இது தொடர்பில் பதிவாளர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு நிகழ்வில் 1236 பேருக்கு பட்டம் வழங்கப்படவுள்ளதுடன் மேலும் இரண்டு பேருக்கு கலாநிதிப்பட்டமும் வழங்கப்படவுள்ளது. இதில் உள்வாரி மற்றும் வெளிவாரி ஆகிய பிரிவினர்களும் உள்ளடங்குகின்றனர்.
அதன்படி வெளிவாரி மாணவர்கள் 253 பேரும் மேற்படி பட்டதாரிகள் 189பேரும் முதுநிலை பட்டப்பின் மாணவர்கள் 150 பேரும் டிப்ளோமா பட்டதாரிகள் 57 பேரும் பட்டம் பெறவுள்ளனர்.
யாழ்பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சிவசூரிய தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் 6 அமர்வுகளைக் கொண்டதாக நடைபெறும்.
எனினும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...