Dec 27, 2012

தேவையான எளிய மூலிகை மருத்துவம்



தேவையான எளிய மூலிகை மருத்துவம்

இன்று நான் உடல் நலம் சரியில்லாத எனது நெருங்கிய  நண்பரை நலம் விசாரிக்க சென்றேன்.அப்போது அவர் மருத்துவரை அனுகியதாகவும் அவர் சில மாத்திரைகளை கொடுத்ததாகவும்,ஆனால் அதில் 3 நாட்களாகியும் குணமடையவில்லை என்றும் தெரிவித்து கொண்டிருந்த போது அவருடைய 86 வயதாகிய பாட்டிஅவர்கள் காலத்து மூலிகை மருத்துவத்தை பற்றி கூறியதை குறிப்பெடுத்து உங்களுக்கு சுருக்கமாக அளிக்கின்றேன்.இவை அனைத்தும் மிகவும் பயனுள்ள மருத்துவம் ஆகும்.




(முக்கிய  குறிப்பு :- இதுவரை பாட்டியம்மா ஆங்கில மருந்தினை உண்டதில்லையாம் எந்த உடல்நலக்  குறைவு என்றாலும் இயற்கை மருத்துவம் மட்டுமே எடுத்துக்கொள்வாராம். அவர் உடல் சோர்வின்றி நல்ல திடகாத்திரமாகவே உள்ளார்.நண்பரே உடனே அவர்களுக்கு திஷ்டி  சுத்தவும்)

நன்மை செய்யும் பூச்சிகளைக் காப்போம்!



 பயிர்களைத் தாக்கி சேதப்படுத்தும் தீமை விளைவிக்க கூடிய பூச்சிகளை அழிக்கக்கூடிய நன்மை தரும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் உள்ளன.
 இப்படிப்பட்ட நன்மை தரும் பூச்சிகளை ஒவ்வொரு விவசாயியும் அடையாளம் கண்டு கொள்வதோடு மட்டு மல்லாமல், அதை அழிக்காமல் இருக்க பூச்சிக் கொல்லி மருந்தின் உபயோகத்தைத் தவிர்த்திட வேண்டும்.
 இது குறித்து ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இ.வ.நா.முத்துஎழில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 கிரைசோபா: இவ்வகை பூச்சிகளில் ஆண் பூச்சிகள் 10 முதல் 12 நாள்களும்,பெண் பூச்சிகள் 35 நாள்களும் உயிர்வாழும். 500 முதல் 600 முட்டைகள் வரை இடும். இது குஞ்சு பருவமாக இருக்கும் போதே தீமை

ஆச்சரியமான உண்மைகள்!


 மனிதர்களாகிய நாம் சிறப்பாகச் செயல்படுவதற்கு நமது ஐம்புலனறிவு ஒரு முக்கியக் காரனம். ஐம்புலனறிவு எல்லா உயிகளுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
 பறவைகளுக்கு பார்வை சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூட பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.
  வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வை சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் 22 கோடி வரை உள்ளன.
 மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 இலட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு வாசனைகளை அவனால் பிரித்தறிய முடியும்.
 உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை உண்டு வாழும் ஒரு புழு



எதற்கு முன்னோட்டம்? என்று கேட்டுக்கொண்டே என் வலைப்பூவுக்கு *வருகை தரும்* அனைவருக்கும் வணக்கம்! அது வேற ஒண்ணுமில்லீங்க, சில பல வருஷங்கள் கழித்து நமக்குப் பிடித்த சில பொருட்களை பார்த்தா கொஞ்சம் ஓவர் எக்ஸைட் ஆவோம் இல்லையா? என்னது...இல்லையா?? அவ்வ்வ்வ்வ்...அப்ப நாந்தான் ஓவர் ரியாக்ட் பண்ணறேனா? எனிவேஸ்..வந்தது வந்துட்டீங்க, மேற்கொண்டு படிங்க, உங்களுக்கே புரியும்!

எங்க வீட்டில் இருந்து ஜஸ்ட் 10 மைல் தொலைவில் இருக்கும் ஒரு சனீஸ்..ச்சீ,வாய் குழறுதே, சைனீஸ் மார்க்கெட் போனதும், அங்கே வாங்கிய பொருட்களும், அதை வைச்சு நான் சமைச்ச ரெசிப்பிகளும் பற்றிய ஒரு முன்னோட்டம் தாங்க இந்தப் பதிவு.

இந்த 99 Ranch Market என்னவரின் அலுவலகம் போகும் வழியிலேதான் இருக்கிறது. வாரம் 5 நாட்கள் அதே டைரக்ஷனில் போவதாலோ என்னவோ, வீகென்ட் ஆனால் அங்கே ஷாப்பிங் என்றால் எதையாவது சொல்லி தட்டிக்

அன்றாட வாழ்வில் அவசியமான உடற்பயிற்சி.


நாம் எமது அன்றாட வாழ்வில் அவசியமாக செய்ய வேண்டியது உடற்பயிற்சி. உடற்பயிற்சியானது நம்மை உறுதியானவர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் வைத்திருக்கின்றது. மனதை எந்தவித சஞ்சலங்களுமின்றி இலகுவாக வைத்திருக்க உடற்பயிற்சி உதவும்;.
 
இவையெல்லாவற்றையும்விட எமது உடலை ஒரு கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் என்றும் இளமையாகவும் விளங்கவைக்கின்றது. சர்க்கரை நோய், உயர் குருதி அழுத்தம்,

திருமணத்தன்று கருவளையம் இல்லாமலிருக்க


திருமணத்தன்று சருமத்திற்கு அதிக கவனம் சொலுத்தி, அதனை சரியாக பராமரிப்போம். அதற்காக நிறைய ஃபேஸ் பேக் போடுவது, அதிகமான அளவு பழங்களை சாப்பிடுவது, உடலை குறைக்கவும், சருமம் பொலிவாகவும் க்ரீன் டீ குடிப்பது என்றெல்லாம் செய்வோம்.
 
இருப்பினும் திருமணத்தன்று மட்டும் சிலருக்கு கண்களைச் சுற்றி கருவளையம் இருக்கும். இந்த கருவளையத்தை என்ன செய்தாலும் போகாமல் இருக்கும். எனவே திருமணத்தன்று இந்த மாதிரியான கருவளையம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை படித்து

கண்களை பராமரிக்கும் முறை.


அழகான பெண்களுக்கு மேலும் அழகாக இருக்க சில குறிப்புக்கள். அதாவது உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும் மொத்தத்தில் அவை உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள்.
கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால்தான் அழகு, சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்துவிடும். கண்களின் அழகைப் பராமரிக்க கீழ்க்கண்ட விஷயங்கள் முக்கியம் தினசரி எட்டு மணி

டிச 9, 2012 சீரகத்தின் மருத்துவக் குணங்கள். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு.


சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.
மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு

பீன்ஸ் சத்துப்பட்டியல்.

பீன்ஸின் மகத்துவத்தை இங்கே படித்தபின் நீங்கள் பீன்ஸ் பிரியர் ஆனால்ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வளவு சத்துகள் அடங்கியது பீன்ஸ். பேப்பேசி குடும்பத்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் பேசில்லஸ் வல்கரிஸ். செடியில் வளரும் பீன்ஸ், கொடியில் விளையும் பீன்ஸ் வகைகள் உள்ளன.
இதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்... புதிதாக பறிக்கப்பட்ட பீன்ஸ் குறைந்த அளவு கலோரி ஆற்றல் தரக்கூடியவை. 100 கிராம் பீன்ஸ் உடலுக்கு 31 கலோரி ஆற்றல் வழங்கும். பச்சை பீன்ஸ் நிறைய வைட்டமின்கள், தாது

பேரிக்காயும் அதன் நன்மைகளும்.


இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும் பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.
 
சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை

இதய நோயை இதமாக குணப்படுத்தும் தேன்.



உலகில் எளிதில் கெட்டுப் போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப் போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும் கூட. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளதில் நீங்கி விடும். குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும்.
இது தவிர சுவாசக்கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், தாகம், வாந்தி பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் போன்றவையும் குணமாகின்றன. இரவில் படுப்பதற்கு முன்பு பாலில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். மறுநாள் நன்றாக பசிக்கவும் செய்யும்.
ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள் பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது. குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. நீங்களும் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிட படிப்படியாக ஸ்லிம் ஆக மாறலாம்

BMW 2012-இல் 1.8 மில்லியன் வாகனங்கள் விற்பனை!




வியாழன், 27 டிசம்பர் 2012

FILE
உலகின் அதிநவீன சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW, 2012 ஆம் நிதியாண்டில் 1.8 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இதுகுறித்து ஒரு ஜெர்மன் நாளிதழுக்குக் கருத்து தெரிவித்த பிரிஎட்ரிச் இச்னர், 2012-இல் விற்பனையை அதிகரிப்பது என்று முடிவெடுத்திருந்தோம். அதைத் தற்போது கணிசமாக அடைந்திருக்கிறோம் என்றார்.

FILE

கடந்த 2011-இல் BMW விற்பனை ஆண்டு முழுவதும் சேர்த்து 1.67 மில்லியன் ஆகும். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை விற்பனையிலேயே 1.66 மில்லியனைத் தொட்டுவிட்டது. டிசம்பர் இறுதியில் 1.8 மில்லியன் அடைந்து விடும் என்று பாக்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன

அமெரிக்காவில் பனி புயல்; 7 பேர் பலி, 2000 விமான சேவை முடக்கம்

வியாழன், 27 டிசம்பர் 2012
FILE
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தொடர் பனிபொழிவு மற்று சுழற்காற்றில் சிக்கி இதுவரை ஏழு பேர் பலியாகியுள்ளனர். மேலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ி‌றிஸ்மஸ் ப‌ண்டிகையை தொடர்ந்து அமெரிக்காவின் மெக்ஸிக்கோ வளைகுடாவிலிருந்து கிரேட் லேக் வரை கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது.

தாரை தாரையாக பனிகட்டிகள் வானிலிருந்து விழுவதால் நகரமே வெள்ளை போ‌ன்றவை போல காட்சியளிக்கிறது. கடுமையான தொடர் சுழற்காற்றில் சிக்கி இதுவரை ஏழு பேர் பலியாகியுள்ளனர்.

கடுமையான காற்று மற்றும் உறை பனியால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வான் வழி போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் முடங்கியுள்ளன. பல இடங்களில் பனி‌க்கட்டிகள் விழுந்து வீட்டு கூறைகள், மரங்கள், மின் கம்பங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன.

மேலும் பனி‌ப்பொழிவுகள் தொடரும் எனவும், பெரிய அளவிலான பனி‌க்கட்டிகள் விழக்கூடும் என்பதால் மக்கள் சாலைகளில் நடமாட வேண்டாம் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சந்திரனுக்கு போட்டியாக ஒளிரும் `இசோன்’ வால் நட்சத்திரம்
[ வியாழக்கிழமை, 27 டிசெம்பர் 2012சூரிய மண்டலத்தில் ‘இசோன்’ என்ற வால் நட்சத்திரம் கடந்த செப்டம் பரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அது சூரிய மண்டலத்தில் இருந்து விலகி சூரியனை நோக்கி வருகிறது.
இது அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் சூரியன் அருகே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இதை வெறுங் கண்ணால் பார்க்க முடியாது. எக்ஸ்ரே டெலஸ்கோப் மூலம் மட்டுமே காண முடியும். இந்த நட்சத்திரம் சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை லண்டனில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் மைனர் பிளானட் சென்டர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 20 ம் நூற்றாண்டில் ஹேல்-பாட் என்ற வால் நட்சத்திரம் அதிகம் ஒளிரும் தன்மையுடன் திகழ்ந்தது.
1997 ம் ஆண்டில் இதை பார்க்க முடிந்தது. இது சந்திரனுக்கு போட்டியாக அதிக வெளிச்சத்துடன் ஒளிரும் சக்தி கொண்டது. எனவே, இதை “சூப்பர் வால் நட்சத்திரம்” என அழைக்கின்றனர். அதைத் தொடர்ந்து இந்த 21 ம் நூற்றாண்டில் முதன் முறையாக அதிகம் ஒளிரும் வால் நட்சத்திரமான ‘இசோன்’ தெரிய உள்ளது

நிகாரகுவா நாட்டில் எரிமலை வெடித்தது: கிராம மக்கள் வெளியேற்றம்மனாகுவா, டிச.27-

அமெரிக்க நாடான நிகாரகுவாவில் சினான்டெக்கா நகரம் அருகே சான் கிறிஸ்டோபல் என்ற இடத்தில் எரிமலை உள்ளது. அங்குள்ள மிகப்பெரிய எரிமலைகளில் இதுவும் ஒன்று.

இந்த நிலையில் அந்த எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் அதில் இருந்து கரும்புகை வெளியாகி வானத்தில் பல நூறு மைல் சுற்றளவுக்கு படர்ந்துள்ளது. எனவே, நிகாரகுவாவில் மேற்கு பகுதியில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் இருந்து வெளியாகும் வெப்பம் 2,500 மீட்டர் பரப்பரளவுக்கு தாக்குகிறது. எரிமலையை சுற்றி மக்கள் வசிக்கின்றனர். எரிமலை வெடித்து தீக்குழம்பு வெளியேறும் நிலை இருப்பதால் அதை சுற்றி 5 கி.மீட்டர் தூரத்தில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 500 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், பலர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

கடந்த செப்டம்பரில் இந்த எரிமலை வெடித்தது. இதில் பல கால்நடைகள் பலியாகின.

2000 ஆண்டுகள் பழமையான தியேட்டர் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!


December 27, 2012  01:07 pm
2000 ஆண்டுகள் பழமையான தியேட்டர் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!இங்கிலாந்தில் ரோமானிய கலாச்சாரத்துடன் கூடிய பழமையான தியேட்டர் ஒன்று மண்ணில் புதைந்திருந்ததை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சரித்திர முக்கியத்துவம் பெற்ற இந்த தியேட்டர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படுகின்றது.

பிரிட்டனில் உள்ள தொல்லியல் துறையில் பணிபுரியும் Dr Paul Wilkinson என்பவர், Faversham, Kent பகுதியில் தொல்லியல் துறை பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார். இந்த பள்ளியின் பின்புறம் ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் இவரது மாணவர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, மிகபெரிய தியேட்டர் ஒன்று மண்ணில் புதைந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

இது பிரிட்டனிலே கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது தொன்மையான கட்டிடம் ஆகும். ரோமானிய கலாசாரத்துடன் வட்ட வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த தியேட்டர், 12,000 மக்கள் உட்கார்ந்து பார்க்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பின்னாளில் ஏற்பட்ட நாகரீக தியேட்டர்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளதாக அறிய முடிகிறது.

Dr Paul Wilkinson, செய்தியாளர்களிடம் தெரிவித்த போது... 

இதுபோன்ற ஒரு பழமையான தியேட்டர் இதுவரை பிரிட்டனில் எங்குமே கண்டுபிடிக்கப்படவில்லை. அத்தகைய ஒரு கட்டிடம் எனது தோட்டத்தில் கிடைத்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இது எனக்கு மட்டுமல்ல, பிரிட்டன் நாட்டிற்கே ஒரு பெருமையாகும். தொல்லியல் துறை மூலமாக இந்த இடத்தை மேலும் ஆராய்ச்சி செய்ய தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

வௌ்ளத்தில் மிதக்கும் மலேஷியா

வௌ்ளத்தில் மிதக்கும் மலேஷியா – 14,000 பேர் நிர்க்கதி!

வௌ்ளத்தில் மிதக்கும் மலேஷியா – 14,000 பேர் நிர்க்கதி!

December 27, 2012
  
மலேஷியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 14 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழை காரணமாக டெரன்கனு, பஹாங், கெலன்டன் போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மாநிலங்களிலிருந்து சுமார் 13,746 பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் வெள்ளத்தின் நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பஹாங் செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...