Oct 29, 2012

தீவிரமடைந்து வரும் சான்டி புயல்: கனடா மக்களுக்கு எச்சரிக்கை


sandy_canada_001சான்டி புயல் தீவிரமடைந்து வருவதால், கனடா மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என செஞ்சிலுவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குனர் மைக் மோர்ட்டோன் கூறுகையில், சான்டி புயல் தீவிரமடைந்து வருவதால் அடுத்த மூன்று நாட்களுக்கு தேவையான உணவு, மருந்து, குடிநீர் போன்றவற்றை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
வெள்ளம் ஏற்பட்ட பிறகு இடப்பெயர்ச்சி தேவைப்பட்டாலோ, மின்தடை ஏற்பட்டாலோ அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொருவரும் தம்முடைய அவசர உதவி பெட்டியில் 4 லிட்டர்

சூறாவளி தாக்கலாமென்ற எச்சரிக்கையை அடுத்து வடக்கு கரையோர மக்கள் இரவிரவாக வெளியேற்றம்; கொட்டும் மழையில் பெரும் அவலம்


jaffna_floodரொஷான் நாகலிங்கம்

வடக்கு,கிழக்குப் பகுதியில் திங்கட்கிழமை இரவு சூறாவளி தாக்களாமென்ற அபாய அறிவிப்பையடுத்து வடபகுதி கரையோர மக்கள் இரவிரவாக அவசர அவசரமாக கொட்டும் மழையில் கையில் அகப்பட்ட பொருட்களுடன் இடம்பெயர்ந்தனர்.
வங்காளவிரிகுடாவில் இலங்கையின் வடக்கே நிலைகொண்டிருந்த தாழமுக்கம் சூறாவளியாக மாறி வடக்கு,கிழக்கு கரையோரத்தால் கடக்கலாமென்று வானிலை அவதான நிலையம் நேற்றிரவு அவசர அவசரமாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

வலி நீக்க வழிகள் வந்தாச்சு!


ன்றைய நவீன  மருத்துவத்தில் எப்பேர்பட்ட பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. குறிப்பாக வலிகளைப் போக்குவதில் பிரபலமாகி வருகிற
நவீன சிகிச்சைகள் பிரமிக்க வைக்கின்றன. மருந்துகளும் மாத்திரைகளும் ஒரு பக்கமிருக்க, வலிகளைப் போக்க வந்திருக்கிற லேட்டஸ்ட் கருவிகள் பல வருடங்களாக வலிகளுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ பேருக்கு வரப்பிரசாதமாக அமையும். வலிகளைப் போக்க அறிமுகமாகி யிருக்கும் லேட்டஸ்ட்கருவிகள் பற்றிப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.

‘‘நாள்பட்ட வலிகளுக்கு, உதாரணத்துக்கு புற்றுநோய் வலிகளுக்கு, மருந்து தடவிய ஸ்டிக்கர்கள் வந்திருக்கின்றன. இவற்றை ஒட்டிக்கொள்வதன் மூலம்

வீடுகளில் முடங்கினர் மக்கள் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை கட்டிப்போட்ட சாண்டி புயல்


நியுயார்க் : அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை தாக்குவதற்கு சாண்டி புயல் வந்து கொண்டிருப்பதால், அப்பகுதியில் உள்ள மாகாணங்களில் பஸ், ரயில், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.  120 கி.மீ. வேகத்தில் சூறாவளியுடன் மழையும் சுழற்றி அடிக்கும் என்பதால், மக்கள் வீடுகளில் முடங்கினர்.

கரீபியன் கடலில் உருவான சாண்டி புயல், ஜமைக்கா, கியூபாவை பதம் பார்த்தது. இப்பகுதியில் புயல் காரணமாக 65 பேர் இறந்தனர். இந்நிலையில், அந்த புயல் அமெரிக்காவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சாண்டி புயல், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் கரையை கடக்கலாம்

தமிழ் -கருத்துக்களம்-
சிறுமிகளும், பிராய்லர் கோழிகளும்
*******************************
நெருங்கிய தோழியின் மகள் பூப்பெய்திய விழாவுக்குச் சென்றிருந்தேன்.தோழியின் தூரத்து உறவினர் பெண்ணான ஒரு ஆசிரியையும் வந்திருந்தார். சடங்கு,சம்பிராதய நிகழ்வுகள் முடிந்ததும் அந்த ஆசிரியை பூப
்பெய்திய பெண்ணின் வயதைக் கேட்டார். “9″ வயது என்றார்கள்.

இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொன்னார். இன்றைய பல குடும்பங்களில் வாரம் ஒரு முறை தவறாமல் பிராய்லர் சிக்கன் கோழிகளை வாங்கி சமைக்கின்றனர். ஆண்களுக்கு இது எப்படியோ, ஆனால் பெண்களுக்கு இது ஒரு விதத்தில் ஆபத்து என்றார்.

பண்ணைகளில் வளர்க்கப்படும் ப்ராய்லர் கோழிகள் நாற்பதே நாளில் பருத்து வளர ஹார்மோன் ஊசி போடுவது உண்டாம்.இந்தக் கோழிகளை சமைத்துச் சாப்பிடும் நமக்கும் ஹார்மோன்கள் வேலை செய்கிறதாம். குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வரும் முன்னரே பருவம் எய்தும் வேலையை இது செய்கிறது.இது பிஞ்சிலே பழுக்கும் அபாயம் ஆகும்.

தோழியை விசாரித்த போது பூப்பெய்திய அவள் மகள் விரும்பி சாப்பிடும் உணவு பட்டியலில் பிராய்லர் சிக்கனுக்குத்தான் முதலிடம் என்றாள்.

பெண்களைப் பெற்றவர்களே! இந்த மாதிரி வயதில் உங்கள் பெண் குழந்தைகளுக்கு எந்தெந்த உணவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதை டாக்டரிடம் கேட்டுப் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

சூறாவளி அச்சுறுத்தல்...விசேட செய்தி...


Written By Admin on Monday, October 29, 2012



சூறாவளி அச்சுறுத்தல்; அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு...

மீளக்குடியமர்ந்த முல்லைத்தீவு மக்கள் பெரும் அவதி..

முல்லைத்தீவு கடற்பரப்பிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் தீவிரமடைந்து இன்றிரவு 80 km / h வேகத்தில் மினி சூறாவளி தாக்கவுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.


இதனால் திருகோணமலை, குச்சவெளியிலிருந்து யாழ்ப்பாணம் வரையான

உலகின் அதிக நட்புறவான நாடாக மலேசியா 10-வது இடத்தில் தேர்வு

உலகின் அதிக நட்புறவான நாடாக மலேசியா 10-வது இடத்தில் தேர்வு


பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 29-உலகிலேயே அதிக நட்புறவான நாடுகளின் பட்டியலில் மலேசியா 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அண்மையில் Forbes நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
சிறந்த வாழ்க்கைத் தரம், திருப்திகரமான சமூக, சுலபமான பொதுபோக்குவரத்து, மற்றும் தங்கள் நாடுகளை விட நல்லதொரு வீட்டு வசதி போன்றவையே மலேசியாவை சிறந்த நட்புறவான நாடாக திகழச்செய்துள்ளதாக Forbes தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தனது டுவீட்டர் அகப்பக்கத்தில் உலக மக்களை வரவேற்கிறோம் என கருத்து தெரிவித்துள்ளார்.
வருமான வரி இல்லாத காரணத்தாலும், மிகவும் அரிதான குற்றச்செயல்கள், மாசுபடாத சுற்றுச்சூழல் மற்றும், வருடம் முழுவதும் நீடிக்கும் கோடைக்காலம் போன்றவற்றால் Cayman தீவுகள் உலகிலேயே அதிக நட்புறவான நாடுகளாக முன்னணி வகிக்கின்றன.
Forbes நடத்திய இந்த ஆய்வில், உலகிலே அதிக நட்பான நாடாக கனடா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நியுசிலாந்து ஐந்தாவது இடத்தையும்,  ஸ்பைன், இங்கிலாந்து, பெர்முடா, தென் ஆப்பிரிக்காவுக்குப் பின்னர் மலேசியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவை அச்சுறுத்தும் சாண்டி புயல்: 3 ஆயிரம் விமான சேவை ரத்து- 4 லட்சம் பேர் வெளியேற்றம்

அமெரிக்காவை அச்சுறுத்தும் சாண்டி புயல்: 3 ஆயிரம் விமான சேவை ரத்து- 4 லட்சம் பேர் வெளியேற்றம்
நியூயார்க், அக். 29-
 
கரீபியன் கடல் பகுதியில் சமீபத்தில் மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளி புயல் உருவானது. அந்த சூறாவளி புயலுக்கு சாண்டி என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
சாண்டி புயல் கடந்த 2 தினங்களாக ஜமைக்கா, கியூபா, தெற்கு ஹைதி நாடுகளை துவம்சம் செய்தபடி கடந்தது. இதில் அந்த நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 பேர் பலியானார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
 
என்றாலும் சாண்டி புயலின் கோரத்தாண்டவம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நேற்று சாண்டி புயல் மேலும் வலுப்பெற்று அமெரிக்காவை

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...