Apr 28, 2013

இத்தாலி பிரதமர் அலுவலம் அருகே துப்பாக்கி சூடு: 2 பேர் படுகாயம்



இத்தாலி பிரதமர் அலுவலம் அருகே துப்பாக்கி சூடு: 2 பேர் படுகாயம்
ரோம், ஏப். 28-

பொருளாதரச்சரிவு உள்பட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் இத்தாலியில் முன்னாள் அதிபர் ஜியார்ஜியோ நெபோலிடானோவே மீண்டும் அதிபராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஜனநாயக கட்சியை சேர்ந்த ’என்ரிகோ லெட்டாஸ்’ என்பவரை புதிய பிரதமராக அறிவித்து இன்று பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

அதிபர் மாளிகையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு புதிய பிரதமரின் வருகையை எதிர்நோக்கி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும், புதிய பிரதமர் என்ரிகோ லெட்டாஸ் தனது மந்திரிகள் பரிவாரத்துடன் அலுவலகத்திற்கு வருவார் என எதிர்பார்த்து அவரது ஆதரவாளர்களும் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் அங்கிருந்த காவலர்களை நோக்கி சுட்டான். இதில் 2 பேர் படுகாயமடைந்தனர். அருகிலிருந்த போலீசார் அவனை மடக்கிபிடித்தனர். 

இத்தாலியில் புதிய கூட்டணி அரசு பதவியேற்பு

இத்தாலியில் 2 மாத அரசியல் இழுபறி நிலைக்குப் பின் புதிய கூட்டணி அரசு ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றது.
அங்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பொதுத் தேர்தல் நடைபெற்றது. எனினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஏற்கெனவே பொருளாதாரப் பிரச்னையில் சிக்கியுள்ள இத்தாலியில் அரசியல் சிக்கலும் ஏற்பட்டது ஐரோப்பிய யூனியனில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் என்ரிகோ லெட்டாவின் ஜனநாயகக் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் மக்கள் சுதந்திரக் கட்சிக்கும் இடையே கூட்டணி

சனி பார்வையில் கிரகங்கள்


சனீஸ்வரன் பெயரை கேட்டாலே அண்ட சராசரங்களே ஆடிப்போகும். எளியவர் வலியவர் பார்ப்பதில்லை. உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமில்லை. அனைவருக்கும் ஒரே நீதி, அது சமநீதி என்ற கோட்பாடு கொண்டவர். 

அதனால் பயம் கலந்த பக்தியோடு பார்க்கப்படுகிறார். இவர் பார்க்கும் இடங்கள் விருதிக்காது என்கிறது சாஸ்திரம். 

இவர் பார்வையில் உள்ள கிரகங்கள் பல தொல்லைகளை தரும் என்கிறது சாஸ்திர குறிப்புகள்.

நீலமாய் இருப்பார், கருப்பாய் மருவார். இயந்திரமாய் உழலுவார். உழைப்பை அதிகமாக்குவார். 

அரசியலுக்கு அடித்தளம், மருத்துவத்திற்கு பக்கப்பலம், தொழில் நுட்பத்திற்கு உதவிகரம்

உயர் இரத்த அழுத்த விளைவு மீள முடியாத பக்கவாதம்

nஹீhற்றா நோய்களின் மிக முக்கியமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் நோய் உயர் இரத்த அழுத்தம் என்பதை அறிந்துகொண்டோம். உயர் இரத்த அழுத்தத்தை ‘ஒரு மெளனமான கொலையாளி’ என்று கூறுமளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது அதன் இயல்பு.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக ‘மாரடைப்பு’ ஏற்படுகிறது. இது ஆளையே ஒரு நொடியில் முடித்துவிடும். மாரடைப்பில் சிறிய அளவு தாக்கம் ஏற்படும் போது அதனை ‘மைல்ட் அட்டாக்’ என்று கூறுவார்கள் ‘மைல்ட் அட்டாக்குக்கு ஆளான ஒருவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் இரத்த நாளத்தின் அடைப்பை சரி செய்து விடுவார்கள்.
இப்போது அவர் தன்னுடைய உணவுப் பழக்க வழக்கங்களை முழுமையாக மாற்றிக்கொள்ள வேண்டும். பைபாஸ் சிகிச்சை செய்து கொண்டவர்கள் வழமை போன்று தன் வேலைகளை செய்ய முடியும்.
ஆனால் உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் ஷிtrokலீ இனால் அதாவது பக்கவாதம்,

விஸ்கியின் மருத்துவ குணங்கள்

Whiskyஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும்.
ஆனால் விஸ்கியை குடித்தாலும், அதுவும் அளவாக குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது விஸ்கியை குடித்தால் என்ன நன்மை இருக்கிறது என்று பார்போமா…!
நல்ல தூக்கம்- உடல் அதிக அசதியுடன் இருக்கும் போது 1-2 சின்ன பெக் விஸ்கியில் ஐஸ் போட்டு குடிக்கலாம். அதுவும் அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் மனமானது சற்று ரிலாக்ஸ் அடைந்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
புற்றுநோய்- நிறைய பேர் ஆல்கஹால் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் விஸ்கி சாப்பிட்டால், புற்றுநோய் குணமாகும். எப்படியெனில்

பூண்டின்(உள்ளி) மருத்துவக்குணங்கள்..!



பூண்டின்(உள்ளி) மருத்துவக்குணங்கள்..!
நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.

மீன் எண்ணை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....

மீன் எண்ணை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....
உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.

அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.

ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.

மீன் எண்ணெய் என்றால் என்ன?

இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.

இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.

எதற்கு சாப்பிட வேண்டும்?

இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.

எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.

இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்

ஒற்றுமைக்கு..........காகம்.
அமைதிக்கு..............புற

உழைப்புக்கு............எறு
ம்பு
தன்மானத்திற்கு.....கவரிமான

சுறுசுறுப்புக்கு.........த
ேனீ
தந்திரத்திற்கு..........நரி
பேச்சுக்கு.................கிளி
பாட்டுக்கு...............குயில்
ஆடலுக்கு...............மயில்

பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்...


பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்...

பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.

பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.

உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது

ஹிட்லரிடம் பணிபுரிந்த பெண் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்


ஜெர்மனியின் சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர் 1934 முதல் 1945 வரை ஜெர்மனியை ஆட்சி செய்தார். இவர் 1945 ஏப்ரல் 30-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரின் ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் இவரை கொல்ல பல முறை திட்டம் தீட்டினர்.
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரிடம் பணிபுரிந்த மார்கட் வோலக் என்ற பெண்மணி 50 வருடங்களாக வெளி உலகுக்கு சொல்லாமல் வைத்திருந்த தனது அனுபவங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
95 வயதாகும், அந்தப்பெண் தனக்கு 25 வயது இருக்கும் போது ஹிட்லரிடம் இரண்டரை வருடம் பணிபுரிந்ததாக கூறியுள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் நரியின் குகை (வுல்ப்ஸ் லேர்) என்று பெயரிடப்பட்ட ராணுவ தலைமை அலுவலகத்தில் தங்கி இருந்தார். இந்த இடம் தற்போது போலந்து நாட்டில் உள்ளது. அங்கு மார்கட் வோலக் ஹிட்லரிடம் பணிபுரிந்தார்.
அந்த அனுபவம் குறித்து மார்கட் கூறியதாவது:-
ஹிட்லர் ஒரு சைவ உணவு பிரியர். நான் அவரிடம் பணிபுரிந்த காலத்தில் அவர் அசைவம் சாப்பிட்டதில்லை. இங்கிலாந்து அரசு தனக்கு விஷம் வைத்து கொன்று விடும் என்று ஹிட்லர் பயந்தார். அதனால் அவர் சாப்பிடும் உணவுகளில் விஷம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, 15 பெண் பணியாளர்களை வைத்திருந்தார்.
அந்த உணவை ஹிட்லர் சாப்பிடும் முன் சாப்பிட்டு விஷம் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதே அவர்களின் வேலை. அதில் நானும் ஒருத்தி. உணவுகளில் விஷம் கலந்திருக்கலாம் என்ற பயம் எங்களுக்கு இருக்கும். உணவுகள் மிக சுவையாக தயாரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் மரண பயம் காரணமாக நாங்கள் நிம்மதியாக சாப்பிட்டதே இல்லை. ஒவ்வொரு முறையும் சாப்பிடும் போது இதுதான் நமது கடைசி உணவாக இருக்கும் என்று பயந்து நடுங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவர் 1917-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் பிறந்தார். இவருக்கு தற்போது வயது 95 என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கை புனித நீரா?





காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில்தான் நாள்தோறும் கலக்கிறது. இதன் அளவு 20 மில்லியன் காலனாகும். நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்பட்டு கங்கையில் கரைக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் 9000 கிழப் பசுக்கள் உயிரோடு கங்கையில் தள்ளப்பட்டுக் கொல்லப்படுகின்றன - மோட்சத்துக்காக. இதன்விளைவாக 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்கள் கடும
ையான நோய்க்கு ஆளாகி ஆயிரக்கணக்கில் மாண்டனர்.

இன்னொரு புள்ளி விவரம் மிகவும் முக்கியமானது. இந்தியாவில் மற்ற மற்ற பகுதிகளில் எல்லாம் குழந்தைகள் மரணம் நூற்றுக்கு 94 என்றால் கங்கை பாயும் காசி வட்டாரத்திலோ 133.94 ஆகும்.

பீகாரில் துர்காபூர், பொகாரோ, பிலாய், டாடா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந்தும், உரத் தொழிற்சாலைகளிலிருந்தும் அம்மோனியா, சயனைடு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...