Feb 22, 2015

அகரம் தந்து சிகரம் ஏற்றிய தமிழ் வாழ்க: இன்று உலக தாய்மொழி தினம்

 இன்று உலக தாய்மொழி தினம்எங்கும் தமிழ்

பதிவு செய்த நாள்

20பிப்
2015 
23:50

மொழி நம் பண்பாட்டைச் செதுக்கும் உளி. தகவல் தொடர்பு எனும் ஒப்பற்ற ஊடகத்தின் விழி. நம் தாய் வழியே பிறந்து வாய் வழியே வளர்ந்து நம்மை அடையாளப்படுத்தும் மந்திரச்சொல். மொழியைத் தாயிடம் இருந்து கற்றதாலும், தாயாய் அமைந்து அது நம்மைக் காப்பதாலும் தாய்மொழி என்று அழைக்கப்படுகிறது. அழியும் மொழிகளை இனியும் காக்காதிருக்கக் கூடாது என்பதற்காக யுனஸ்கோ பிப்.21 ஐ உலகத் தாய்மொழிகள் தினமாய் அறிவித்தது.
சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்கத் தாய்மொழி எனும் உளியால் மட்டுமே முடியும். தாகூர், கீதாஞ்சலி எனும் நோபல்பரிசு பெற்ற படைப்பை முதலில் உருவாக்கியது அவரது தாய்மொழியான வங்கமொழியில்தான்.

Feb 18, 2015

Motorizing and test driving the scaffold

விண்டோஸ் 10-ஐ அறிமுகம் செய்தது மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பாக விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கணினி, டேப்லட், மொபைல் ஆகிய அனைத்துக்கும் இனி ஒரே இயங்குதளமாக விண்டோஸ் டென் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

windows 10
தற்போதைய விண்டோஸ் 8.1 பதிப்பின் மேம்படுத்தளாக  விண்டோஸ் 9-ஐ நேற்று வெளியிடப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய இயங்குதளத்திற்கு விண்டோஸ் 10 என்று பெயரிட்டுள்ளது.
இதற்கு காரணம், இந்த புதிய அப்டேட் முன்னெப்போதும் இல்லாத வகையில் நவீன வசதிகள் இருக்கும் என்பதால் விண்டோஸ் 9-ஐ

Feb 16, 2015

Brihadeeswarar Temple 360 view | Brihadeeswarar Temple Varahi amman sannathi | Temple virtual Tour | 360 view | 360 degree virtual tour | tamilnadu temples 360 degree | Brihadeeswarar Temple | Brihadeeswarar Temple Thanjavur | Brihadeeswarar koil | பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர்

Brihadeeswarar Temple 360 view | Brihadeeswarar Temple Varahi amman sannathi | Temple virtual Tour | 360 view | 360 degree virtual tour | tamilnadu temples 360 degree | Brihadeeswarar Temple | Brihadeeswarar Temple Thanjavur | Brihadeeswarar koil | பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர்

Kumaran Panchamoorthy's Thillana Performance at Sri Shenpaga Vinayagar T...

Kumaran Panchamoorthy's Thillana Performance at Sri Shenpaga Vinayagar T...

இயற்கை தரும் பேரழகு !

இயற்கை தரும் பேரழகு !
பாரம்பரிய அழகு ரகசியங்களை முறையாகக் கடைப்பிடித்தால், உடலுக்கு நிரந்தர ஆரோக்கியமும்  அழகும் சேரும் என்கிறார் இயற்கை மற்றும் சித்த மருத்துவர் மகேஷ்வரி. அவர் தரும் சில நேச்சுரல் டிப்ஸ் இங்கே...
1 கிருமிநாசினியாகும் வேப்பிலை
அழகுப் பொருட்களின் ராணி. பிசுபிசுப்பு, எண்ணெய் வழிதல், பரு, கரும்புள்ளிகள் போன்ற பிரச்னைகள் தீர, தினமும் வேப்பிலைத் தண்ணீரால் முகத்தைக் கழுவிவருவது நல்ல பலன் தரும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால், முகச் சுருக்கங்கள் நீங்்கி, இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கும்.  இது சரும நோய்களுக்கான சிறந்த கிருமிநாசினி. வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுகளிடமிருந்தும், சூரியக் கதிர்களிடமிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.
2 கரும்புள்ளிகளை நீக்கும் துளசி
டீன் ஏஜில் தோன்றும் பருக்களை மறையச்செய்யும். துளசியில் பால் சேர்த்து அரைத்து, விழுதாக்கி முகத்தில் தடவினால், பருக்கள், கரும்புள்ளிகள் மறையும். வாரம் மூன்று முறை இரண்டு துளசி இலைகளைச் சாப்பிட்டுவர, ரத்தம் தூய்மை அடைந்து, சருமம் மிளிரும். கீழாநெல்லி, துளசி இலைகளை அரைத்து, முகத்தில் பேக் போட்டுக் கழுவினால், கரும்புள்ளிகள், திட்டுக்கள் நீங்கி முகம் புத்துணர்வு பெறும்.

Feb 2, 2015

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்


யாழ்.மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
காலை 6.30 மணிக்கு கோபுரங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று 9.30 மணிக்கு மூல மூர்த்திக்கும் அதனை தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
மருதடி விநாயகர் ஆலயம் கடந்த 2004ம் ஆண்டு முதல் 10 வருடகாலமாக கருங்கல்லினால் புனருதாரனம் செய்யப்பட்டு வந்தது. ஆலய சிற்ப வேலைகளுக்கு இந்தியாவில் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு கருங்கல்லில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. ஆலய புனருத்தாரன வேலைகளுக்காக 25 கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்மாவட்டத்தின் சிறந்த பாற்பசுப் பண்ணையாளராக வல்வையை சேர்ந்த திரு.ரவி தெரிவு



யாழ்மாவட்டத்தின் சிறந்த பாற்பசுப் பண்ணையாளராக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.நாகேஸ்வரன் ரவி அவர்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு கடந்த 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற உழவர் பெருவிழாவில் விருதுகள் மற்றும் பணப்பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
வடக்கின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தையொட்டி உழவர் பெருவிழாவை நடாத்தி வருகிறது.
திரு.ரவி அவர்கள் இதற்கு முன்னரும் 2012 ம் ஆண்டுக்கான யாழ்மாவட்டத்தின் சிறந்த கால்நடை வளர்ப்பாளராக  வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.                         
வல்வெட்டித்துறை மானாங்கானையில் உள்ள இவரது பண்ணியல் 25ற்கு மேற்ப்பட்ட பசுக்களை வளர்த்துவருவதோடு, அவற்றிக்கான தீவணங்களை இயற்கை முறையில் தயாரித்து வருகிறார். இதற்காக தனது தோட்டத்தில் புற்களை பெருமளவில் வளர்த்து வருகின்றார்.
உழவர் பெருவிழாவில் வடக்கு மாகாண முதலமைச்சரால் விருது வழங்கப்படும் பொழுது 
வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் விருது 

Feb 1, 2015

http://www.seithy.com/breifNews.php?newsID=124693&category=CommonNews&language=tamil

http://www.seithy.com/breifNews.php?newsID=124693&category=CommonNews&language=tamil

Ads by Fb Chat Ninja(?)Hide ads

இயற்கை வைத்தியம்

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்!

வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் (Bவெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன. ஒனியன் என ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.. இது யூனியோ என்ற லத்தீன் மொழிச் சொல்லாகும்.. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் போன்ற பொருள் காணப்படுகின்றது. இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் (பெல்லாரி வெங்காயம்) இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து

கூந்தல் உதிர்தலை தடுக்க !!!

கூந்தல் உதிர்தலை தடுக்க !!!


1.கடுகு எண்ணெய் ஒரு கப் கடுகு எண்ணையை எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை வைத்து, தலையை நன்கு மசாஜ் செய்து கொண்டால், முடி ஆரோக்கியத்தை பெரும்.




2.வெந்தயம் சில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, 40 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டூம். இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால் முடி கழிதல் குறையும்.


Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...