Oct 31, 2012

சான்டிப் புயலின் கோரத் தாண்டவம்: மீண்டும் மூடு விழா கண்ட சுதந்திர தேவி

statue_of_liberty_002


சான்டிப் புயலின் கோரத் தாண்டவத்தால் அங்குள்ள சுதந்திர தேவி சிலை மீண்டும் மூடப்பட்டுள்ளது.
மன்ஹட்டான் நகர மத்தியில் அமைந்துள்ள அமெரிக்கர்களின் வரலாற்றுச் சின்னமான சுதந்திர தேவிச் சிலையை சமீபத்தில்தான் சீரமைத்தார்கள்.
அதுவரைக்கும் மூடப்பட்டிருந்த இச்சிலை, பணிகள் முடிவடைந்து கடந்த ஞாயிறே திறக்கப்பட்டது.
ஆனால் தற்போது 'சான்டி' புயலின் கோரத் தாண்டவம் காரணமாக சுதந்திர தேவி சிலை மறுபடியும் முடப்பட்டிருக்கிறது.
30 மில்லியம் டொலர்கள் செலவில் மேற்கொள்ளப் பட்ட சீரமைப்புப் பணிகள்

இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் இஸ்ரேல்!

 10 Bn Business How Israel Became

, செப்டம்பர் 24, 2012,

Get the Google App & Chrome and Start Searching. It's Quick & Easy.
டெல்லி: இந்தியாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தை இஸ்ரேல் பிடித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவுக்கு ரூ. 50,000 கோடிக்கும் அதிகமான ஆயுதங்களை இஸ்ரேல் ஏற்றுமதி செய்துள்ளது. 2009ம் ஆண்டில் ரஷ்யாவை விட அதிகமான ஆயுதங்களை இந்தியாவுக்கு இஸ்ரேல் ஏற்றுமதி செய்துள்ளது.
குறிப்பாக நீர்மூழ்கிகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், உளவு செயற்கைக் கோள்கள் தொடர்பான கருவிகள், விமானங்கள்-ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் லேசர் உதவியிலான ஏவுகணைகள்,

ஈரான் போர்க்கப்பல்கள் சூடான் துறைமுகத்தில் நிறுத்தம்: இஸ்ரேலை மிரட்ட திட்டம்


கார்தோம்: ஈரான் நாட்டைச் சேர்ந்த இரண்டு போர்க்கப்பல்கள் அதன் நட்பு நாடான சூடானில் நிறுத்தப்பட்டுள்ளது. சூடான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தடுக்கவும், இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுக்கவுமே இந்த கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூடான் நாட்டில் கார்தோம் நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஆயுத தொழிற்சாலையில் சமீபத்தில் இரண்டுமுறை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்வதாக கருதி இந்த தொழிற்சாலை மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்கியதாக சூடான் குற்றம்சாட்டியது. இதற்கு இஸ்ரேல் தரப்பிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில் இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் பாராக்கிடம் இது பற்றி ஒரு செய்தி நிறுவனம் கருத்து கேட்டதற்கு 'இது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை' என்று அவர் கூறிவிட்டார்.
இஸ்ரேலை மிரட்ட போர்க்கப்பல்?
இதற்கிடையே சூடானின் நட்பு நாடான ஈரான் நாட்டின் 2 போர் கப்பல்கள் சூடானின் செங்கடல் பகுதி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதியில் தீவிரவாத செயல், கடற்கொள்ளையர்களை ஒடுக்கவே போர் கப்பல்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், 2 நாட்டு தளபதிகளும் சந்தித்து பேச இருப்பதாகவும் ஈரான் கூறியுள்ளது. இருப்பினும் இஸ்ரேலை மிரட்டவே ஈரான்-சூடான் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ரயில் சுரங்கங்களில் வெள்ளம்: போக்குவரத்து சீராக 10 நாட்களாகும்

நியூயார்க் :அமெரிக்காவை உலுக்கிய, "சாண்டி' புயல் காரணமாக, பலத்த மழை பெய்ததால், 1,000 கி.மீ., தூரம் கொண்ட சுரங்க ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து சீராக, 10 நாட்களாகும், என அறிவிக்கப்பட்டுள்ளது. கரிபியன் கடலில், கடந்த வாரம் தோன்றிய, "சாண்டி' புயல், அமெரிக்காவின், நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்சி உள்ளிட்ட, 15 மாகாணங்களை தாக்கியது. புயலுக்கு இதுவரை, 50 பேர், பலியானர். இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நியூஜெர்சியும், நியூயார்க்கும் இந்த புயலில் அதிகமாக பாதிக்கப்பட்டன. நியூயார்க் பங்கு சந்தை இரண்டு நாட்கள் மூடப்பட்டது. 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பலத்த காற்றினால், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான நகரங்கள், இருளில் மூழ்கின. 75 லட்சம் பேர், மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனர்.

மூன்று அணு நிலையங்கள் மூடல் : நியூஜெர்சியில் உள்ள, "ஆயிஸ்டர் க்ரீக்' அணுசக்தி நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நியூஜெர்சியில், டெலாவர் நதிக்கருகே உள்ள, இரண்டு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...