Nov 19, 2013

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்




நெல்லிக்காய் பசுமை நிறமாகவும், நெல்லிப்பழம் வெண்மஞ்சள் நிறமாகவும் காணப்படும். நெல்லிப்பழம் உலர்ந்த பின்னர் கருப்பாக இருக்கும். இதற்கு நெல்லிமுள்ளி என்று பெயர். இதனை நெல்லி வற்றல் என்றும் அழைப்பர். நெல்லி முச்சுவை உடையது; முதல் சுவை புளிப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும். நெல்லியை சுவைத்த பின்னர் தண்ணீர் அருந்தியவுடன், இனிப்புச் சுவையான நீர்போல் சுவைப்பதன் காரணம் இதுதான்.

* நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.

* நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.

* நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.

* நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.

* நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.

* நெல்லிவற்றலை தண்ணீ­ர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

* நெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி, அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு, வாந்தி ஆகியவை நீங்கும்.

* நெல்லிவற்றலுடன் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.

* நெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி, சுவை உண்டாகச் செய்யும்.

* நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து.... சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீ­ரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும் நீங்கும்.

* நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது) தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும்.

மருத்துவக் குணம் நிறைந்த அகத்திக்கீரை



அகத்திக் கீரையில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நிக்கோடினிக் அமிலம் போன்றவை அடங்கியுள்ளன. இக்கீரை உடலில் உள்ள நஞ்சை முறிக்கும் குணமுள்ளதால் மருந்து உட்கொள்ளும் தருணங்களில் இதைத் தவிர்க்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதனுடைய தண்டு, பூ, இலை அனைத்திலுமே மருத்துவ குணம் நிறைந்துள்ளது. பூவை சமைத்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும். இக்கீரை உடலில் உள்ள உஷ்ணத்தை தவிர்ப்பதோடு, பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க வைக்கும் தன்மையும் இதில் உள்ளது. வாய்வு தொல்லையிலிருந்து விடுபடவும் இக்கீரை உதவுகிறது. தொண்டையில் தோன்றும் புண், எரிச்சலுக்கு தினமும் அகத்தீக் கீரையை வெறும் வாயில் மென்று தின்றாலே போதும் உடனடி நீவாரணம் கிடைக்கும்.

அகத்திய இலைகளை பிழிந்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி தீரும். இக்கீரை மூளையை பலப்படுத்தி அறிவு திறமையை கூர்மையாக்கும் சக்தி உள்ளது. தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்வதினால் உடல் சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். அகத்திக்கீரை சாறு எடுத்து குடிப்பதால் தும்மல், ஜலதோஷம் குணமாகும். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் இயற்கையாகவே நம் உடலுக்கு பல நன்மைகள் வந்து சேரும்

வயிற்று புண்ணை குணப்படுத்தும் முளைக்கீரை



கீரையை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முளைக்கீரை அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை. இக்கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, போலேட் மற்றும் ரிபோப்லாவின் ஆகியவற்றை கொண்டுள்ளது.. நீர்சத்து அதிகமுள்ள முளைக்கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

உடலுக்கு பலம் கூட்டும் சக்தியை கொண்டது. சிறுவர்களுக்கு இந்தக்கீரையை தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார்கள். முளைக்கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மங்கனீசு போன்ற கணிமங்களை கொண்டுள்ளது முளைக்கீரை. கோதுமை, அரிசி, ஓட்ஸ், ஆகியவற்றில் கொண்டுள்ள புரதத்தை விட 30% அதிகபுரதத்தை கொண்டுள்ளது. இதயநோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கு முளைக்கீரை உதவுகிறது.

குடைகள் பற்றிய தகவல்கள்:



மழைக்காலம் வந்துவிட்டாலே நாம் வெளியே செல்வதற்கு குடையைத் தேடுகிறோம். ஒரு சிலர் மழை கோட் உபயோகித்தாலும் நம்மில் பெரும்பாலானோர் குடையையே உபயோகிக்கின்றோம். இன்று பல முன்னேற்றத்துடன் காணப்படும் குடை எவ்வாறு உருவானது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதன் சூரிய வெப்பத்திலிருந்தும் மழையிலிருந்தும் தன்னை காத்துக் கொள்வதற்காக குடையைப் பயன்படுத்தினான். 15 - ஆம் நூற்றாண்டிலிருந்து எகிப்து, அசீரியா, கிரீஸ், சீனமக்கள் குடையைப் பயன்படுத்தியதாக வரலாற்று நூல்களிலிருந்து நாம் அறிகிறோம்.

பழங்காலத்தில் சூரிய ஒளியிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காகவே குடை பயன்படுத்தப்பட்டது. கொலகேசிய தாவரங்களின் இலைகளில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பதற்கு அதிலுள்ள பசை போன்ற பொருட்களே காரணம் ஆகும். இதைப் பார்த்த சீன மக்கள் தாங்கள் தயாரித்த குடைகளில் பசைகளைப் பூசி தண்ணீர் வழிந்தோட வைத்து மழைக்காலத்தில் பயன்படும் குடையைத் தயாரித்து பயன்படுத்தினார்கள்.

16 - ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் குடை பிரபலமடைந்தது. இந்த காலக்கட்டத்தில் குடைக்கு அம்ப்ரெல்லா (Umbrella)என்ற பெயர் உருவானது. அம்ப்ரா என்ற லத்தின் வார்த்தைக்கு நிழல் (UMBRA)என்று பொருளாகும். ஐரோப்பாவில் குடை பிரபல்யமாக இருந்தபோதிலும் பெண்கள் மட்டுமே குடையைப் பயன்படுத்தினார்கள். ஜோனாஸ் கான்வே என்ற பெர்சியன் எழுத்தாளர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது குடையைப் பயன்படுத்தினார். அதிலிருந்து ஆண்கள் மத்தியிலும் குடை பிரபலம் அடைந்தது. முதலில் ஐரோப்பாவில் குடைகள் தயாரிக்க மரக்குச்சிகளும், எண்ணெய் பூசப்பட்ட கலர் கேன்வாஸ்களும் பயன்படுத்தப்பட்டன.

1830 - ல் லண்டனிலுள்ள நியூ ஆக்ஸ்போர்ட் தெருவில் ஜேம்ஸ் ஸ்மித் ஆன்ட் சன்ஸ் என்ற பெயரில் பெருமளவில் குடைகளை விற்பதற்காக கடை தொடங்கப்பட்டது.அதிலிருந்து பல நாடுகளிலும் குடை விற்பனை அதிகரித்தது

DU Meter

DU Meter

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...