Jun 21, 2012

பீன்ஸ்:




பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6,பி12 உள்ளிட்ட 'பி' வைட்டமின்களும், ஃபோலிக் அமிலமும் மிகுதியாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை ஆசுவாசமாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க வைக்கிறது.மேலும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு 'பி' வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
சிறுநீரகமும் அதை பாதுகாக்கும் முறையும் !!
மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும்இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதா ன் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள்ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.
இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு

சுண்டக்காயின் மருத்துவ குணம் !!!!


கசப்பான விசையங்கள் என்றும் வாழ்கையில் நல்ல விசையமாக இருக்கு ...

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்

அத்தியின் மருத்துவப் பயன்கள்

அத்தி

மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
அத்திப்பழம் இருவகைப்படும். சீமை அத்தி, என்பது எனவும் நாட்டு அத்தி என்பது எனவும் தாவரவியலில் திகழ்கின்றது.
அத்தி பழத்தின் சத்துக்கள்
அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் புரதம் – 4 கிராம், கால்ஷியம் – 200 மி.கி., இரும்பு – 4 மி.கி., வைட்டமின் – 100 ஐ.யு., தயாமின் – 0.10 மி.கி., கலோரி அளவு – 260 ஆகியவை 100 கிராம் அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.
அத்தியின் மருத்துவப் பயன்கள்
அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்து வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
அத்திப் பாலை மூட்டுவலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.
முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.
அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதப்பேதி, இரத்தப்பேதி ஆகியவை தீரும்.
அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக் கடுப்பு, மூலவாயு, இரத்த மூலம், மூலக்கிராணி (வயிற்றுப் போக்கு) தீரும்.
அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.
அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்து காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வரத் தீராத பெரும்பாடு தீரும். 

BY : இன்று ஒரு தகவல்
மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
அத்திப்பழம் இருவகைப்படும். சீமை அத்தி, என்பது எனவும் நாட்டு அத்தி என்பது எனவும் தாவரவியலில் திகழ்கின்றது.
அத்தி பழத்தின் சத்துக்கள்
அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில்

அருகம்புல்லின் அருமை...


அருகம்புல்லின் அருமை...

நம்மில் பலர் அருகம்புல்லை பூஜை அறையில் வைத்துப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், அருகம்புல்லின் மருத்துவப் பெருமைகளை அறிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்?


நமது உடலில் ஊட்டச்சத்து பெருக வேண்டும் என்பதற்காக ஹார்லிக்ஸ், காம்ப்ளான், பூஸ்ட், விவா போன்ற பானங்களை அருந்துகிறோம். ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து முலிகை என்பது நம்மில் பலருக்கு

83 –ம் ஆண்டு ஆனந்த விகடன் அட்டை படத்தில் இடம் பெற்றிருந்த கமல்ஹாசனின் குடும்ப படம்.

உட்கார்ந்திருப்பவர்களில் நடுவில் இருப்பது கமலின் தந்தை ஸ்ரீநிவாசன். இடதுபுறத்தில் சாருஹாசனின் மனைவி. அவரது அருகில் சாருஹசனின் மகள் நந்தினி, வலதுபுறத்தில் சாருஹாசனின் மற்றொரு மகள் பாஷினி, அவருக்கு அடுத்து கமல்ஹாசனின் மனைவி வாணி கமல்.

நிற்பவர்களில் இடது ஓரம் சாருஹாசன், அவருக்கு அடுத்து சுகாசினி, அடுத்து கமல்ஹாசன் வலது புறம் சந்திரஹாசன்.

ஆடுகளம் படத்தின் நாயகி "டாப்ஸி" நடிப்புத்துறைக்கு வருவதற்கு முன்பு, சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்துள்ளார். ஆப்பிள் நிறுவத்தின் ஐ-போன்களில் தற்போது பயன்படுத்தப்படும் "Font Swap" - என்ற application - ஐ உருவாக்கிய குழுவில் இவர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை!!!




1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.

2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.


3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில்

குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!




மண‌ம் கமழு‌ம் ம‌ல்‌லி, மதுரை ம‌ல்‌லி எ‌ன்றெ‌ல்லா‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் மரு‌த்துவ ம‌ல்‌லியை‌ப் ப‌ற்‌றி உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரியுமா?

தலை‌‌யி‌ல் சூடுவத‌ற்கு‌ம், மாலை அல‌ங்கார‌ங்களு‌க்கு‌ம் பய‌ன்படு‌ம் ம‌ல்‌லிகை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ங்களை இ‌ப்போது பா‌ர்‌ப்போ‌ம்.


சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால்

சொரியாசிஸ் நோயை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்



உலகிலேயே தோல் நோய்கள் அதிகம் வருவதில், முதலில் இருப்பது சொரியாசிஸ் தான். இது மரபு காரணமாக ஏற்படுகிறது.
மேலும் இது வந்தால் தோலானது திட்டு திட்டாக வரும். இந்த திட்டு ஏற்பட்ட இடமானது தடிமனாக, வறட்சியுடன் இருக்கும்.
இந்த சொரியாசிஸ் விரைவில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவும் தன்மையுடையது. அதற்காக இது தொற்றுநோய் அல்ல.
மேலும் இது வந்த இடத்தை சுற்றி சிவப்பு நிறத்துடன் இருப்பதோடு, வறண்டும் காணப்படும். இந்த சொரியாசிஸை உடனே முற்றிலும் குணப்படுத்த முடியாது.
ஆனால் இதற்கு தினமும் மருந்து எடுத்துக் கொள்வதால் சரிசெய்யலாம். மேலும் இதனை இயற்கையான முறையில் குணப்படுத்தலாம். அதற்கு

சந்திரனுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளலாம்: அறிவியலின் பிரம்மாண்ட வளர்ச்சி



விண்வெளியில் உள்ள கிரகங்களுக்கு சுற்றுலா செல்லும் அளவுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து விட்டது.
இதனையடுத்து தற்போது சந்திரனுக்கு ஆட்களை சுற்றுலாக்கு அழைத்து செல்லும் நடவடிக்கையில் இங்கிலாந்து நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதற்காக ரஷ்யா நிறுவனத்திடம் இருந்து 6 விண்கலங்ளை விலைக்கு வாங்கி உள்ளதுடன், நபர் ஒருவருக்கு ரூ.700 கோடி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு விண்கலத்தில் 3 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். சந்திரனுக்கு சென்று வரும் பயண திட்டம் வருகிற 2015ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
தற்போது, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். அதையும் தாண்டி பூமியில் இருந்து 3 லட்சத்து 76 ஆயிரத்து 586.5 கி.மீட்டர் தூரம் சென்று திரும்பும் பயண திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லண்டனில் உள்ள வெஸ்ட் மனிஸ்டரில் நேற்று செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ




'ஐஸ்வர்யா ராய் உண்டானாலும் நியூஸ். குண்டானாலும் நியூஸ்!’ என்பது இப்போது பிரபல ஜோக். ரொம்ப காலமாகவே அவர் 'ஃபிஃப்டி கே.ஜி. தாஜ்மஹால்’ ஆகத்தான் இருந்தார். இப்போது தாய்மை தந்த பூரிப்பில் கொஞ்சம் குண்டடித்து இருக்கிறார். பிரசவத்துக்கு முன் மட்டும் அல்ல; பிரசவத்துக்குப் பின்னும் ஐஸ்வர்யாதான் ஹாட் டாபிக்.
ஐஸ்வர்யாவின் எடை கூடிவிட்டதைப் பற்றிய விவாதங்கள் அனல் பரப்புகின்றன. நமக்கு இந்த விவாதம் தேவையற்றது. ஆனால், குழந்தைப் பேறுக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பதுகுறித்த அலசல் நிச்சயம் அவசியம். இதுகுறித்து மகளிர் மற்றும்

வலுவைத் தரும் கிழங்கு வாதத்தையும் தரும்!

கிழங்கு வகைகளைப் பயன்படுத்துவது எப்படி?

''கிழங்கு வகைகளை வேகவைத்துச் சாப்பிடுவதுதான் நல்லது. இவற்றில் மாவுச் சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு நல்ல சக்தி கொடுக்கும். ஆனால் ருசிக்காக, எண்ணெயில் வறுத்து, பொரித்துச் சாப்பிடுவதால், கிழங்கில் இருக்கும் சத்துக்கள் நம் உடலில் சேராமல் போய்விடுவதோடு, எண்ணெயில் உள்ள

அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!


அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!

உணவில் சுவைக்காக சேர்க்கும் பொருட்களில் பஞ்சமே இல்லாமல் கலந்து இருக்கிறது ஆபத்து. 'அஜினோமோட்டோவில் கலந்திருக்கும் மோனோசோடியம்குளுட்டோமேட் (MSG)என்பது ஒற்றைத் தலைவலி, சோர்வில் ஆரம்பித்து பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கக் கூடியது’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
இதை உணர்ந்த சீனா தங்கள் நாட்டில், அஜினோமோட்டோவைத் தடை

ஏ.சி. ஒருகணம் யோசி!--உபயோகமான தகவல்கள்


சந்தேகங்களும் தீர்வுகளும்



ரு விஷயம் தெரியுமா? இந்தக் கோடையில் ஊட்டியின் பல வீடுகளில் ஏ.சி. பொருத்திவிட்டார்கள். இது ஆச்சர்யத் தகவல் அல்ல; அபாயகரமானத் தகவல். ஏ.சி. இயந்திரங்களின் பெருக்கம் சுற்றுச்சூழலுக்கும் நல்லது அல்ல; வீட்டுச் சூழலுக்கும் நல்லது அல்ல. சரி, வீட்டில் ஏ.சி., காரில் ஏ.சி., அலுவலகத்தில் ஏ.சி. என 24 மணி நேரமும் ஏ.சி-யிலேயே இருந்து பழகியாயிற்று; அதில் என்னதான் பிரச்னை என்கிறீர்களா?
''எப்போதும் ஏ.சி-யிலேயே இருந்தால், உங்கள் உடலின் இயற்கையான தகவமைப்பை நீங்களே சிதைக்கிறீர்கள் என்று அர்த்தம்'' என்கிறார் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குநரான இளங்கோ.

''வெளியே இருக்கும் காற்றை இயந்திரம் உள்வாங்கி அதைக் குளிர்வித்து

உங்களுக்கு வறட்சியான தலை முடியா?


முடி உதிர்வது, முடியின் நுனிப்பகுதி வெடிப்பது, உடைவது என்பது இன்று பெண்கள் சாதாரணமாக எதிர்நோக்கும் பிரச்சினையாகும். இவர்கள் மாறி மாறி எதையாவது செய்வார்கள் ஆனால் எதிலும் சரியான தீர்வு கிடைக்காமல் திணறி விடுவார்கள். முடியை கவனித்து, பராமரிக்காவிட்டால், முடி உடையும் வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல் முடியின் நுனிப்பகுதியும் பிளவுபடும். அதிகமாக வெயிலிலும், காற்றிலும் வேலை செய்பவர்களின் தலை முடி நடுவில் உடைந்தும் நுனியில் பிளவு பட்டிருப்பதும் சகஜமான விஷயம். கிணற்று தண்ணீரில் குளிப்பவர்களின் தலைமுடி அதிகமாக உடைந்து போக வாய்ப்பிருக்கிறது. மேலும், வயதான முடியும் அடிக்கடி

சிறுநீர்க்கல்லுக்கு ஹோமியோபதி சிகிச்சை

சிறுநீர்க்கல்


பெயர் விளக்கம் : சிறுநீர்க்கல் பொதுவாக “சிறுநீரகக்கல்” என்றே வழக்கமாக குறிப்பிடப்படுகிறது. சிறுநீரகம் என்ற தமிழ்ச்சொல் பொதுவாக மூத்திரக்காய் (Kidney), வடிகுழாய் (Ureter), சிறுநீர்ப்பை (Bladder) ஆகிய அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். ஆனால் வழக்கில் சிறுநீரகம் என்ற சொல் மூத்திரக்காயை மட்டும் குறிப்பதாகப் பயன்படுவதால் இங்கு சிறுநீர்க்கல் என்ற சொல் Renal Calculi என்ற ஆங்சிலச் சொல்லுக்கு

தொப்பை கரைக்கும் மூலிகை வைத்தியம்



தொப்பை கரைக்கும் மூலிகை வைத்தியம்


அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் பேதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்காகும்.
நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...