Mar 2, 2014

ஆரோக்கியமான வாழ்விற்கு சோளம்!


நகரமயமாக்கல் சூழலில் மேற்கத்திய கலாச்சர தாக்குதலால் சத்து மிகுந்த உணவு பொருட்கள் பயன்பாடு குறைந்தது.
ஆனால் இப்போது உணவு பொருட்கள் மூலம் பெருகி வரும் நோய்களால் பண்டைய உணவு பொருட்களுக்கு ஏங்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
சமீபகாலமாக கம்பு, ராகி போன்ற தமிழர்களின் பண்டைய சிறு தானியங்களை பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.
சிறுதானியங்களில் பல வகைகள் இருந்தாலும் சோளம் முதன்மையான உணவு பொருளாக கருதப்படுகிறது.
சோள உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சோளம் பயிரிடப்படுகிறது.
சோளத்தில் ரொட்டி, கஞ்சி, கூழ், சாதம் போன்றவை மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது, இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை, சமோசா உள்ளிட்ட பல உணவு

பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படும் அதிவேக Broadband இணைய சேவை



Virgin Media வலையமைப்பானது 152Mb வேகம் கொண்ட Broadband இணைய சேவையை பிரித்தானியாவில் அறிமுகம் செய்கின்றது.
இதன் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒரு நிமிட நேரத்தில் தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 2007ம் ஆண்டில் காணப்பட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை விடவும் தற்போது 55 சதவீத அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவித்த அந்நிறுவனம் ஆரம்பத்தில் 30Mb வேக இணைய இணைப்பைக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் தமது இணைப்பு வேகத்தினை 50Mb, 60Mb, 100Mb, 120Mb மற்றும் 152Mb வேகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

கடலின் உள்அழகை காட்சிப்படுத்தும் கூகுள்


கூகுள் நிறுவனம் வழங்கி வரும் சேவைகளுள் Street View எனும் சேவையும் பிரபல்யம் வாய்ந்தமை அறிந்ததே.
இச்சேவையினை கூகுள் நிறுவனம் Underwater Street View எனும் பெயருடன் நீருக்கு அடியில் உள்ள அரிய தகவல்களை பயனர்களுக்காக வெளிக்கொணரும் சேவைக்கு விஸ்தரித்திருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் நீருக்கு அடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பயனர்களின் பார்வைக்கு விடவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏனைய தொழிநுட்ப செய்தி Netflix வழங்கவுள்ள ஆகாயவழி டெலிவரி சேவை (வீடியோ இணைப்பு)



தொலைக்காட்சி ஷோக்கள் மற்றும் திரைப்படங்களை ஒன்லைனினல் கண்டுகளிக்கும் வசதியை வழங்கும் Netflix நிறுவனம் DVD - களை டெலிவரி செய்யும் சேவையையும் செய்து வருகின்றது.
இந்நிறுவனம் தற்போது Drone Delivery Service எனும் ஆகாயவழி மூலமான டெலிவரி சேவையை வழங்கவுள்ளது.
இதற்கு முன்னர் அமேசான் நிறுவனமே இந்த சேவையினை அறிமுகம் செய்திருந்தது.
அதன் பின்னர் குறுகிய காலத்தில் தானும் Drone Delivery சேவையினை அறிமுகம் செய்வதாக Netflix நிறுவனம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
Drone 2 Home என பெயரிடப்பட்டுள்ள இச்சேவையின் மூலம் விரைவான வழங்கலை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜிமெயில் அறிமுகப்படு த்தும் புதிய வசதி


தனது பயனர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் தற்போது தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.
அதாவது ஒன்லைன் சொப்பிங், செய்தி சேவை போன்றவற்றிற்கு தமது மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி சந்தாதாரர் (Subscribe) ஆகியிருப்பவர்களுக்கு தொடர்ச்சியாக மின்னஞ்சல் வந்துகொண்டே இருக்கும்.
இதில் சில மின்னஞ்சல்களை தவிர்க்க வேண்டியிருந்தால் அது இதுவரை காலமும் கடினமானதாகவே இருந்தது.
ஆனால் தற்போது ஒரே ஒரு கிளிக் மூலம் Snsubscribe செய்து குறித்த மின்னஞ்சல் முகரிகளிலிருந்து வரும் மின்னஞ்சல்களை தவிர்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிவப்பணுக்களை உருவாக்கும் லிச்சி பழம்!


லிச்சி பழம் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிறந்த விதத்தில் செயல்படுகிறது.
சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது.
லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடப்பட்டு இருக்கும் அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பழம் உள்ளது.
லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76 சதவீதம், மேலும் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் திராட்சை

சத்துக்களை அதிகம் அள்ளித்தந்து ஆரோக்கியமான வாழ்விற்கு துணைநிற்கிறது திராட்சை.
திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.
குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.
வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான்.
கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.
எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் திராட்சை
த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும்.
மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

அதிசயங்கள் நிறைந்த மனித உடல்



  
 அதி

மனிதன்
சயங்கள் நிறைந்த மனித உடல்
 தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தபிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்.
இதற்கு காரணம் மனிதன் உட்காரும்போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.

ரத்த நாளங்கள், செல்கள்
1. நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும்.
2. நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீட்டராக இருக்கும்.
3. ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை(Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர்

தேனின் தித்திக்கும் இனிப்பு


தேனின் அதிகப்படியான இனிப்பிற்கு காரணம் அதில் உள்ள ஃப்ரக்டோஸ் எனப்படும் சர்க்கரை தான்.
சர்க்கரையில் பல வகைகள் உள்ளன, கரும்பில் உள்ளது சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரை.
இதை இன்வெர்டேஸ் என்கிற நொதியால் சிதைத்தால், குளுகோஸ், ஃப்ரக்டோஸ் என்ற இரு சிறு சர்க்கரை பொருட்கள் கிடைக்கும்.
இவற்றில் ஃப்ரக்டோஸ் எல்லாவித பழங்களிலும் இருக்கிறது.
பழங்களின் சுவைக்கு இவை தான் காரணம், இதுதவிர பூவிலுள்ள மதுவிலும் இந்த சர்க்கரை தான் நிரம்பியுள்ளது.
தேன் எப்படி கிடைக்கிறது?
தேனீக்கள் மலர்களின் மகரந்தங்களிலிருந்து , பூந்தேனை குடித்து வந்து, தேன் அடைகளில் தேக்கி வைத்து தித்திக்கும் தேனாய் நமக்கு தருகின்றன.
தேனீக்கள் உடலில் சுரக்கும் ஒருவகை சுரப்பி நீர், பூந்தேனை நாமருந்தும் தேனாக மாற்றுவதில் பெறும் பங்கு வகிக்கின்றது.
தேனின் தரம்
தேனில் இனிப்பு சத்து அதிகம். ஃப்ரக்டோஸ், குளுகோஸ் அதிகமாகவும், தாது பொருட்கள் குறைவாகவும் உள்ளன.
அந்ததந்த பகுதிகளில் பூக்கும் மலர்களின் தன்மையை பொருத்தே, தேனின் தன்மையும் அமையும்.
தேனில் உள்ள ஈரபதத்தின் அடிப்படையில் தேனின் தரம் நிர்ணயம் செய்யபடுகின்றது.

விண்டோஸ் 8 ஷார்ட்கட் கீகள்!


நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்துகிறீர்களா? முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தினை இதிலிருந்து பெற்று வருகிறீர்கள் என்பது உறுதி.
முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களுக்கும், இதற்குமான ஓர் அடிப்படை வேறுபாடு, இதன் டச் ஸ்கிரீன் இண்டர்பேஸ் தான். இதனை திரை தொடுதல் இன்றி, மவுஸ் மூலமாகவும் இயக்கலாம்.
இருப்பினும் இதுவரை முந்தைய விண்டோஸ் இயக்கங்களில் இயங்கிய செயல்பாடுகள் பல இதில் வேறாக இருக்கின்றன.
இந்த சிஸ்டத்தில் பல ஷார்ட்கட் கீகள், இதன் செயல்பாட்டிற்கெனத் தரப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கிய ஷார்ட் கட் கீகள் இங்கு காட்டப்படுகின்றன.
விண்டோஸ் கீயுடனான சில ஷார்ட் கட்கீ செயல்பாட்டினை பார்க்கலாம்.
விண்டோஸ் கீயுடன்
+ D: நீங்கள் எந்த விண்டோவில் இருந்தாலும் இது டெஸ்க்டாப்பிற்கு உங்களை அழைத்துச் செல்லும். விண்டோஸ் கீயினை மாற்றி மாற்றி அழுத்துகையில், அது விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் டெஸ்க் டாப்பிற்கு மாறி மாறி கொண்டு செல்லும்.
+ I: செட்டிங்ஸ் பேனல்(Settings Panel) திறக்கப்படும். இந்த ஷார்ட் கட் கீ, Control Panel, Personalization menu, Power menu (sleep, shut down, or restart) எனப் பல வசதிகளை உங்களுக்கு அளிக்கும்.
+ X: அட்வான்ஸ்டு விண்டோஸ் செட்டிங்ஸ்(Advanced Windows Settings) மெனு திறக்கப்படும். System, Device Manager, Command Prompt, மற்றும் பல வசதிகளை இதன்

வண்ண வண்ண குடைமிளகாயின் மகத்துவம்

வண்ண வண்ணமாய் தெரியும் குடை மிளகாய் பார்க்க மட்டும் அழகானது இல்லை ஆரோக்கியத்திலும் அபாரமானது.
கொழுப்பு, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் இதில் அடங்கியுள்ளது.
காரத்திற்காக பச்சை மிளகாய் சேர்க்கப்படுவதுண்டு. அந்த அளவுக்கு காரமற்றது குடைமிளகாய், உணவுகளுக்கு அழகூட்டுவது இதன் சிறப்புத் தன்மை.
குடை மிளகாயை உணவில் சேர்ப்பது பல விதங்களில் நமக்கு பலன் அளிக்கிறது.
வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக அது செயல்படுகிறது.
கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும். அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்துகிறது.
பல் வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவைகளை கட்டுப்படுத்தும் சக்தியும் ‘காப்ஸேயில்’ இருக்கிறது. காப்ஸேயில் ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
மேலும், குடைமிளகாய் கொழுப்பு மற்றும் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் நீர்க்கட்டை குறைக்கும் தன்மையும் கொண்டது. குடைமிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைய உள்ளது.
இவை இரண்டும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, குடைமிளகாய் மஞ்சள், சிவப்பு, பச்சை போன்ற நிறங்களில் அதிகமாக கிடைக்கிறது.
பச்சையாகவோ, பாதி வெந்தநிலையிலோ இதை சாப்பிட்டால்தான் கூடுதல் சத்து உடலுக்கு கிடைக்கும்.

உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வ


து

ம்ம எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமா facebookபக்கம் திரும்பிகிட்டு இருக்கோம்னு சொல்லலாம். Orkut யில் நிறைய வசதிகள் இருந்தாலும்
Facebook பயன்படுத்துபவர்களுக்கு Orkut அந்நியமாக படுகிறது. இந்த பதிவும் Facebook Security ய பத்தியதுதான். ஆமாங்க Facebook என்ற தளத்தை நிறுவிய Mark Zuckerberg's Fan page யை சமீபத்தில் Hack செஞ்சுருக்காங்க நம்ம கில்லாடி Hackerகள். நம்ம Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் நாம் எப்படி பார்த்து தெரிந்து கொள்வது என்று பார்போம்.நம்முடைய பல Personal செய்திகளை Facebook தர துவங்கிவிட்டோம், இந்நேரத்தில் இதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

www.facebook.com/tamilcomputertrick

முதலில் Facebook.com-------->Account------>Account settings ---->Account security செல்லவும்.

மேலே உள்ளது போல் வந்த Window வில் உங்களது Account எப்பொழுது கடைசியாக பார்க்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியும்.நீங்கள் இல்லாமல் வேறு எந்த பகுதியில் இருந்து யாராவது உள்ளே வந்திருந்தால்,பக்கத்தில் இருக்கும் End Activity என்ற linkயை கிளிக் செய்து விடுங்கள்.மேலும் வேறு யாரவது உங்கள் கணக்கை பயன்படுத்த துவங்கினால் உங்களது email முகவரிக்கோ, அல்லது SMS மூலமாக உங்களுக்கு தகவல் வர மாதிரி செய்யலாம்.Send me a mail,Send me a text message என்ற இடத்தில Tick செய்து விடுங்கள்.வேலை முடிந்தது.



உங்களது போட்டோக்களை அழகாக்கும் வெப்சைட்ஸ்

நண்பர்களுடனோ அல்லது வேறு யாருடனோ நாம் வெளியே எங்காவது சென்று வந்தால் நாம் வீட்டிற்கு வந்ததுமே அந்த போட்டோக்களை எடுத்து பேஸ்புக்கில் போட்டு மகிழ்வோம்.

உண்மையில் அந்த போட்டோக்கள் நமக்கு அழகாக தெரிந்தாலும் பார்க்கும் மற்றவர்கள் கண்களுக்கு ஒவ்வொரு மாதிரியாத தான் தெரியும். இதே உங்களது போட்டோவை அழகாக மாற்ற வேண்டுமா அப்படியென்றால் இணையத்தில் அதற்கென்றே பல வெப்சைட்டுகள் இருக்கின்றன நண்பரே.

இந்த வெப்சைட் மூலம் உங்களது அழகிய போட்டோக்களை நீங்கள் மேலும் அழகாக்கிடலாம் இதோ அந்த வெப்சைட்டுகளை என்னென்ன என்பதை கீழே பாருங்கள்...

http://www.splashup.com/
http://www.picmonkey.com/
http://fotoflexer.com/
http://www.befunky.com/
http://pixlr.com/
www.facebook.com/tamilcomputertrick

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...