Oct 9, 2012

இயற்பியல்: 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

செர்ஜ் ஹரோச்சி

நடப்பாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்ûஸச் சேர்ந்த செர்ஜ் ஹரோச்சி(68), அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் வைன்லேண்ட்(68) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கணினித் துறையில், குவாண்டம் இயற்பியல் பிரிவில் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மருந்துகள்-1--


சுரசம் (Surasam), கஷாயம் (Kashayam) என்றெல்லாம் அறியப்படும் இந்த மூலிகை டிகாக்ஷனின் (herbal decoction) எப்படித் தயாரிப்பது? இதில் என்னென்ன வகைகள் உள்ளன?

ஒரு மூலிகையையோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட மூலிகைகளை இணைத்தோ, 1:6 (ஒரு பங்கு மூலிகைக்கு ஆறு பங்கு தண்ணீர்) என்றளவு தண்ணீரில் கொதிக்க விட்டு ஆறு பங்கு தண்ணீர் இரண்டு பங்காகச் சுருங்கி வரும்போது வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்தால் மூலிகையின் தன்மைக்கேற்ப நோயின் தீவிரம் குறைகிறது. மிக முக்கியமாக இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

சுரசம் / கஷாயம் தயாரிக்க பயன்படும் சில நாட்டு மருந்துகளின் பெயர்களை

இவ்வாண்டிற்கான இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப் பேரில் ஒருவராக கிழக்கிலிருந்து ஒரு தமிழ்மாணவன்




[Tuesday, 2012-10-09

ஒரேயொரு தமிழ்மாணவனான சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தை சேர்ந்த மாணவன் வினோஜ்குமார் கிழக்கில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இலங்கை பொறியியலாளர் நிறுவனம் வருடாந்தம் நடாத்திவரும் இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் இவ்வாண்டுக்கான தேசிய நிலைப் போட்டியில் தெரிவாகிய இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப் பேரில் ஒரேயொரு தமிழ் மாணவன் தெரிவாகி சாதனை படைத்துள்ளான்.

இலங்கையில் இவ்வாண்டுக்கான இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப் பேரில் கிழக்கின் சம்மாந்துறை கோரக்கர் தமிழ்க் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் என்பவரே இச்சாதனைக்குச் சொந்தக்காரன்.
 கிழக்கில் முதலிடம் பெற்ற சோமசுந்தரம் வினோஜ்குமார் சம்மாந்துறை

முதலாவது வர்த்தக சரக்கு விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்




[Tuesday, 2012-10-09

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான மீள் விநியோகங்களை மேற்கொள்வதற்கான முதலாவது வர்த்தக ரீதியான சரக்கு விண்கலம் அமெரிக்க புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனாவெரல் விண்வெளி நிலையத்திலிருந்து நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. டிரகன் சரக்குக் கப்பல் ௭ன அழைக்கப்படும் தன்னியக்க ரீதியான மேற்படி ரோபோ விண்கலமானது பால்கன் ஏவுகணை மூலம் ஏவப்பட்டது.

இந்த விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள 6 விண்வெளி வீரர்களுக்கான 400 கிலோகிராம் நிறையுடைய உணவு, ஆடைகள், பரிசோதனை உபகரணங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் ௭டுத்துச் செல்லப்படுகின்றன.

மேற்படி விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மேற்கொள்ளவுள்ள 12 பயணங்களில் முதற் பயணம் இதுவாகும். நாசா விண்வெளி நிலையத்துக்காக கலிபோர்னிய மாநிலத்திலுள்ள ஸ்பேஸ்௭க்ஸ் கம்பனி மேற்படி விண்கலத்தை செயற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
நாசா விண்வெளி நிலையமானது விண்வெளிக்கான தனது போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தனியார் துறையினரின் பங்களிப்பை ௭திர்பார்த்துள்ளது.

இந்நிலையில், ஸ்பேஸ்௭க்ஸ் நிறுவனம் மேற்படி விண்வெளி போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக நாசாவுடன் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உடன் படிக்கையை செய்து கொண்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திற்கு சர்வதேச தர அந்தஸ்து கிடைத்தமைக்கு வரவேற்பு


திருச்சி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
கஸ்டம்ஸ் சேவைகளுடன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வாரத்திற்கு சுமார் 70 விமான சேவைகளை அளித்து வருகிறது திருச்சி விமான நிலையம்.
மேலும் சரக்கு போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது

அமெரிக்க தளங்களை தமது ஏவுகணைகளால் தாக்கி அழிக்க முடியும் : வடகொரியா எச்சரிக்கை


தம்மிடம் உள்ள யுத்த ஏவுகணைகள், அயல் நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்க கூடியன என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையே ஏவுகணைகள் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதன் இரு நாட்களுக்கு பின்னர் வடகொரியா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அமெரிக்க அரசு தென்கொரியாவுடன் இணைந்து கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடிய ஏவுகணையின் வீச்சங்களை அதிகரிப்பதற்கான தொழிநுட்பங்களை வழங்கும் ஒப்பந்தத்தை

சங்கீத நாடக அகடாமி விருது : பல்வேறு கலைத்துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவம்


இன்று டெல்லியில் சங்கீத நாடக அகடாமி 2011ற்கான விருது நிகழ்வில் இசை, நாடகம்,நடனம் மற்றும் பல்வேறு கலைத்துறைகளில் பங்காற்றி சாதனை படைத்த கலைஞர்களுக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி விருது வழங்கி கௌரவித்தார்.

உலக நாணயத்தாள்கள்



உலக நாணயத்தாள்கள் தொடர்பான சுவையான தகவல்கள்.....

Ø பாகிஸ்தான் பயன்படுத்திய இந்திய நாணயத்தாள்கள்.|

 
1947ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் பின்னர்  முதல் குறிப்பிட்ட  சில மாதங்கள் பாகிஸ்தான் நாட்டில் நாணயச்சுற்றோட்டத்திற்கு போதுமான பாகிஸ்தான் நாணயத்தாள்கள் இல்லாமையினால் இந்திய நாணயத்தாள்களில் பாகிஸ்தான் என்ற முத்திரையினையிட்ட நாணயத்தாள்களே புழக்கத்திலிருந்தன.

Ø அவுஸ்திரேலிய டொலர்.|

 
1966ம் ஆண்டு அவுஸ்திரேலியா நாடானது டொலர் நாணய அலகிற்குள் தன்னை உள்வாங்கிக்கொள்ள முன்னர் அதன் உத்தியோகபூர்வ நாணய அலகாக அவுஸ்திரேலியன் பவுண் விளங்கியது. தொடக்கத்தில் அவுஸ்திரேலிய டொலருக்கு "றோயல்" என்ற பெயரே வழங்கப்பட்டது. இந்த பெயரானது உள்ளூர் மக்களிடையே பிரபல்யம் அடையாமையினால் டொலர் என மாற்றம் செய்யப்பட்டது.

Ø அமெரிக்க டொலர்.|

 
அமெரிக்க டொலரினைக் குறிப்பிடுவதற்கு $ என்ற குறியீடானது பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் $ என்கின்ற குறியீடானது அமெரிக்க நாணயத்தாள்களில் இதுவரை தோற்றம் பெற்றதில்லை.

Ø பூட்டான் பண்டமாற்று முறை.|

 
1974ம் ஆண்டிற்கு முன்னர் பூட்டான் நாட்டில் எந்தவிதமான  நாணயங்களும் பாவனையில் இருக்கவில்லை. மாறாக பண்டமாற்று முறையையே(பொருட்கள், சேவைகளுக்குப் பதிலாக பொருட்கள், சேவைகளை வழங்குதல்) மாற்றாகப் பயன்படுத்தினர். பூட்டான் 1974ம் ஆண்டு தனது நாணய அலகாக நகுல்ட்ரம்  இனை அறிமுகப்படுத்தியது.

Ø எலிசபெத் மகாராணியாரின் உருவப்படம்.|

 
எலிசபெத் மகாராணியாரின் உருவப்படம் 33 நாட்டு நாணயத்தாள்களில் தோற்றமளிக்கின்றது. அவரின் உருவப்படம் முதன்முதலில் 1935ம் ஆண்டு கனடா நாட்டு நாணயத்தாள்களில் தோற்றமளித்தபோது அவரின் வயது 9 ஆண்டுகளாகும்.
மகாராணியின் உருவப்படம் பல்வேறு நாட்டு நாணயத்தாள்களில் தோற்றமளிக்க காரணம் யாதெனில் இந்த நாடுகள் பொதுநலவாயத்தில் அங்கம்வகிப்பதுடன் அந்த நாடுகள் பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் இருந்தமையாலாகும்.

Ø இந்திய  நாணயத்தாள்கள்.|

 
இந்திய நாட்டு நாணயத்தாள்களில் ஒரு ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் இந்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்தினைக் கொண்டிருப்பதுடன், இரண்டு ரூபா மற்றும் அதற்கும் மேற்பட்ட பெறுமதியான நாணயத்தாள்கள் இந்திய மத்திய வங்கியின் ஆளுனரின் கையொப்பத்தினைக் கொண்டிருக்கும்.

Ø நாணய அலகுகள்.|

 
உலகில் 5 நாணய அலகுகளே தன்னை பிரதிநிதித்துவப்படுத்த தனித்துவமான அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. அவையான அமெரிக்க டொலர், ஜப்பான் யென், பிரிட்டிஷ் ஸ்ரேலிங் பவுண், யூரோ, இந்திய ரூபாய். 

 
இவற்றில் பிரிட்டிஷ் ஸ்ரேலிங் பவுண் நாணய அடையாளம் மட்டுமே நாணயத்தாள்களில் அச்சிடப்படுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள்

4) USA 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln ) பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் உயரம் கூடியவராம்.

.

1) USA 3வது ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) 6 வித்தியாசமான மொழிகளைப் பேசக்கூடியவராக இருந்தவராம்.

2) USA 2வது ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் (John Adams ) வெள்ளைமாளிகையில் முதன்முதலில் வசித்தவர் ஆவார்.

3)USA 4வது ஜனாதிபதி ஜேம்ஸ் மடிசன் ( James Madison ) பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் உயரம் குறைந்தவராம்.(5'4")











5) USA 39வது ஜனாதிபதி ஜிம்மி காட்டர் (Jimmy Carter) வைத்தியசாலையில் பிறந்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாம்.









6) USA 40வது ஜனாதிபதி ரொனால்ட் ரீகன்( Ronald Reagan ) கூடிய வயதில் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதியாம்.( 69 -77 வயது வரை பதவி வகிப்பு )

அதிவேக பயணிகள் விமானத்தில் பயணம் செல்ல தயாராகிவிட்டீர்களா?


2003 மே 21ம் திகதி கொன்கோர்ட் (Concorde) விமானமானது தனது இறுதிப்பறப்பினை நியூயோர்க் நகரத்திலிருந்து பாரிஸ் நகரத்தை நோக்கி 2500km/h(1553mph) க்கும் அதிகமான வேகத்தில் 4 மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்தினை எடுத்துக்கொண்டது. 27வருடங்களாக வான்பரப்பில் பறப்பினை மேற்கொண்ட இந்த அழகிய Franco - British பறவை என வர்ணிக்கப்படும் இந்த கொன்கோர்ட்டானது நீண்டதூர விமானப்போக்குவரத்து உயர்சந்தையில் நிரந்தரமாக கூடு கட்டத் தவறிவிட்டது.







பூமியில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய விண்கல்.....

அண்டவெளியிலிருந்து பூமியில் விழுந்து கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய விண்கல்லாக "ஹோவா விண்கல்" விளங்குகின்றது.


1920ம் ஆண்டு நமீபிய நாட்டின்(அக்காலகட்டத்தில் தென் மேற்கு ஆபிரிக்கா என்றழைக்கப்பட்டது) வடபகுதியில் குரூட்ஃபொன்ரெய்ன் பகுதியினைச் சேர்ந்த ஜே.பிரிட்ஸ் என்கின்ற விவசாயி தனது நிலத்தினை விவசாய செய்கைபண்ண உழுதபோது நிலத்தில் புதையுண்டிருந்தநிலையில் பிரமாண்டமான கல்லொன்று இருப்பதனைக் கண்டுபிடித்தார். இக்கல்லினை ஆய்வுக்குட்படுத்திய விஞ்ஞானிகள் இரும்புத்தாதுக்கள் நிறைந்த விண்கல் என்பதனை உறுதிப்படுத்தினார்கள்.

பிரமாண்டமான நிறையின் காரணமாக இவ்விண்கல்லினை கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு நகர்த்தமுடியவில்லை. எனினும் விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் கல்வீச்சு வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்காகவும் இவ்விண்கல்லின் பெரும் பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விண்கல்லானது 9அடி நீளம், 9அடி அகலம், மற்றும் 3அடி தடிப்பத்தினைக் கொண்டதாகும்.

"ஹோவா வெஸ்ட்" என்கின்ற பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணத்தினால் "ஹோவா விண்கல்" என்றழைக்கப்படுகின்ற இவ்விண்கல்லானது 80000 ஆண்டுகளுக்கு முன்னர் புவியில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இவ்விண்கல்லில், இரும்புத்தாதுக்கள்82.4%,  நிக்கல்16.4%, கோபால்ட்0.76% மற்றும் பொஸ்பரஸ் 0.04%, செம்பு, நாகம், காபன், சல்பர், குரோமியம் , கல்லியம்,  ஜெர்மனியும் ,  இரிடியம்   மூலகங்கள் சிறிதளவும் உள்ளடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.


 
ஹோவா விண்கல்லினை கெளரவிக்கும் நமீபிய தபால் முத்திரை

"உலக தபால் தினம்" → ஒக்டோபர் மாதம் 9ம் திகதி



ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி "உலக தபால் தினம்" கொண்டாடப்படுகின்றது. உலக தபால் சங்கம் 1874ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ம் திகதி சுவிட்சர்லாந்து நாட்டின் பேர்ன் நகரில் அமைக்கப்பட்ட நிறைவினையொட்டி 1969ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியா நகரில் உலக தபால் சங்க சம்மேளனத்தில் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி "உலக தபால் தினம்" என பிரகடனம்செய்யப்பட்டது.
இன்று நவீன தொழில் நுட்ப முறைகளில் ஏற்பட்ட அபிவிருத்தியானது தொடர்பாடல் துறையில் பல்வேறுபட்ட மாறுதல்களை ஏற்படுத்தினாலும் தபால் துறையானது

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...