Nov 29, 2013

இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதா? மீளப் பெற என்ன செய்யலாம்?


இன்றைய காலகட்டத்தில் இணையம் என்பது மக்களுக்கு அத்தியாவசிய தேவையாகிவிட்டது என்றே கூறலாம்.


மேலும், தற்போது கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை தொடர்ந்து பெருகி வரும் நிலையில், மைக்ரோசாப் விண்டோஸ் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, இணைய இணைப்பில் உள்ள அக்கவுண்ட் சார்ந்து அமைத்துள்ள நிலையில், இணைய இணைப்பு இருந்தால் தான், பொருள் பொதிந்த கம்ப்யூட்டர் பயன்பாடு கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஆனால், இணைய இணைப்பு திடீர் திடீர் என விட்டுப் போவது, நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை ஆகிறது. குறிப்பாக கம்பி வழி இணைப்பு கொண்டோருக்கு இது தொடர்ந்து வரும் பயமுறுத்தலாகவே உள்ளது. இணைய இணைப்பு இல்லாமல் போவது என்பது, நமக்கு தும்மல் வருவது போல ஆகிவிட்டது. தும்மலையாவது ஒரு சில காரணங்களுக்காகக் கட்டாயம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும்; மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது.

பொதுவாக இது போல கட் ஆனால், உடனே கம்ப்யூட்டரை ரீபூட் செய்து பார்க்கிறோம். நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம். கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இந்த நிறுவனத்தை முடித்து , வேறு ஒரு நிறுவனத்தின் சேவைக்கு மாற்றினால் தான் நிம்மதி என்கிறோம். இருப்பினும் கீழ்க்காணும் விஷயங் களையும் செய்து பார்க்கலாமே வேறு எதனையும் செய்வதற்கு முன்னால், உங்கள் மோடத்தினை மீண்டும் ரீபூட் செய்திடுங்கள்.

ஒன்றுமில்லை, அதற்கு வரும் மின்சக்தியை நிறுத்தி சில நொடிகள் கழித்து மீண்டும் ஆன் செய்திடுங்கள். பின் உங்கள் ரௌட்டரை ஆன் செய்திடுங்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துவோரே அதிகம். அவர்கள் அதனை மட்டும் ரீபூட் செய்தால் போதும். உங்களுக்கு ரௌட்டர் வழி இணைப்பு இல்லை என்றால் கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். அதன் பின் கேபிள் மோடத்தினை பூட் செய்திடுங்கள்.

மோடத்தில் விளக்குகள் எரிந்து டேட்டா பரிமாற்ற விளக்குகள் சிமிட்டத் தொடங்கினால் இன்டர்நெட் இணைப்பு வந்துவிட்டது என்று பொருள். அனைத்து விளக்குகளும் எரியவில்லை என்றால் உங்கள் இணைப்பிற்கான கேபிள்கள் அனைத்தும் சரியாகப் பொருத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள்.

அதன் பின் உங்களுக்கு இணைப்பு தந்துள்ள நிறுவனத்தின் கஸ்டமர் சர்வீஸ் எண்ணுக்கு போன் செய்திடுங்கள். அதற்கு முன் அவரிடம், எது போன்ற குறை என்று சொல்ல வேண்டும் என்பதனைத் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள். பின் குறையினைத் தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் கட்டத்தில், ரன் பாக்ஸில் cmd என டைப் செய்து என்டர் தட்டவும். உங்கள் மானிட்டர் திரையில், கறுப்பு பாக்ஸில் டாஸ் இயக்கம் கிடைக்கும்.

அங்கு துடிக்கும் கர்சரில் Ipconfig /all என டைப் செய்திடுங்கள். உங்களுடைய default gateway மற்றும் DNS servers அறிந்து கொள்ளுங்கள். பின் இவற்றிற்கு கட்டளை கொடுத்துப் பாருங்கள். பதில் கிடைக்கிறதா? இவை அனைத்தும் உங்கள் இணைப்பைத் தராவிட்டால், traceroute எனக் கொடுத்துப் பார்த்தால் எங்கு பிரச்சினை ஏற்பட்டு இணைப்பு அறுந்து போகிறது என்று தெரியும்.

traceroute என்பது ஒரு கட்டளைச் சொல். உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து தகவல்கள் ஒரு பாக்கெட்டாக எங்கெங்கு செல்கின்றன என்று காட்டச் சொல்லும் ஒரு கட்டளை. traceroute எனக் கொடுத்து பின் ஒரு ஸ்பேஸ் கொடுத்து உங்களுக்குச் சிக்கலைத் தரும் தளத்தின் முழு முகவரியைத் தர வேண்டும்.

பொதுவாக ஒரு தளம் கிடைக்கவில்லை என்றால் இது போல traceroute மற்றும் ping கட்டளைகள் கொடுத்துப் பார்த்துவிட்டுப் பின் இன்டர்நெட் சேவை தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

முதலில் உங்கள் யூசர் நேம் கொடுக்கவும். அவர்கள் உங்கள் அக்கவுண்ட்டினைச் சார்ந்த மேலும் சில தகவல்களை உறுதி செய்வார்கள். அவர்கள் கூறும் செயல்பாடுகளையும் பொறுமையாக மேற்கொண்டு, பதில் கொடுங்கள்.

நிறுவனத்தின் சர்வரில் பிரச்சினை இருந்தால் அவர்கள் உடனே அதனை உங்களுக்குத் தெரிவித்து, உங்கள் குறை எந்த எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், எத்தனை மணி நேரத்திற்குள் அது சரி செய்யப்படும் எனவும் கூறுவார்கள். பொறுமையாகக் காத்திருக்கவும்.

தொடர்ந்து சரி ஆகவில்லை என்றால், மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையத்தினைத் தொடர்பு கொண்டு நினைவு படுத்தவும். நிச்சயம் இணைப்பு சரி செய்யப்படும்


இன்று கம்பியூட்டர் துறையில் அசைக்க முடியாத ஜாம்பவானாக இருப்பது இருப்பது யார் என்று கேட்டால் நாம் அனைவரும் கூறும் பதில் மைக்ரோசாப்ட் தான். மைக்ரோசாப்ட் கம்பெனி ஆரம்பித்தவுடனே இவ்வளவு பெரிய இடத்துக்கு வரவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


மிகவும் கஷ்டப்பட்டு போராடி தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறது அத்தகைய மைக்ரோசாப்டின் மிகப் பெரும் சாதனை எது என்றால் அது விண்டோஸ் தான். இன்றும் ஓ.எஸ் களில் விண்டோஸ் தான் நம்பர் 1 இது யாரும் மறுக்க முடியாத உண்மை இந்த மைக்ரோசாப்டின் நீங்கள் அறியாத சில உண்மைகளை இங்கு பார்ப்போமா.....

உலகில் விண்டோஸ் பயன்படுத்துவர்களை கணக்கில் எடுத்தால் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையையும் விஞ்சும்

விண்டோஸ் 95 மொத்தம் விற்றது 4 கோடி பிரதிகள் மட்டுமே ஆனால் இன்று விண்டோஸ் 8 இதுவரை மட்டும் 10 கோடி பிரதிகள் விற்றுள்ளது மைக்ரோசாப்ட்

Cooksville-பகுதியில் பாரிய தீவிபத்து

mississaugafiredundasnov28-635x423Cooksville-பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டு கட்டிடத்தின் ஒருபகுதி சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் 1-பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
டன்டாஸ் வீதி கிழக்கில் ஹியுரொன்ராறியோ கிழக்கு வீதிக்கண்மையில் அமைந்துள்ள பாத்திமா குறோசர்ஸ்சில் அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக மிசிசாகா தீயணைப்பு அவசர சேவை பிரிவு தலைமை அதிகாரி அலன் ஹில்ஸ் தெரிவித்துள்ளார்.
மளிகைக் கடையில் ஏற்பட்ட இந்த தீ அக்கடைத்தொடரில் அமைந்திருந்த ஏனைய கடைகளிலும் பரவ முன்னதாக காலை 7.30மணியளவில் தீயணைப்பு படையினர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டனர். தீயை அணைப்பதற்கு ஆயிரக்கணக்கான கலன்கள் தண்ணீர் பாவிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
அவ்விடத்தில் ஏற்பட்ட வெப்பமான பகுதிகள் மற்றும் சிறிய சுவாலைகள் போன்றனவற்றை

முருங்கைக் கீரையில் உள்ள மருத்துவக் குணம்

ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு மருத்துவக் குணம் உண்டு. ஆகையினால் தினம் ஒரு கீரையைப் பயன்படுத்தி முன் கூட்டியே நோய் வராமல் பாதுகாப்போம்.
எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கையும் ஒன்று. அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. இதில் விற்றமின் A,B,C  ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. இது குளிர்ச்சியைத் தர வல்லது. இக்கீரை உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளை வலுவூட்டுகின்றது.
பித்தத்தைத் தணிக்கும் ஆற்றல் இதற்குண்டு. பித்தம் சம்பந்தமான நோயால் வருந்துபவர்கள் இக்கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடலாம். சிலருக்கு குரல் வளையில் வீக்கமும் வலியும் இருக்கும். அத்தகையவர்கள் இக்கீரையை சாப்பிட வீக்கமும் வலியும் குணமாகும். வயிறு, குடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளுக்கு வலுவைத் தரவல்லது. உணவு எளிதில் ஜீரணமாவதுடன் உணவிலுள்ள சத்துக்கள் இரத்தத்துடன் கலக்க உதவும்.
மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றில் வேண்டாத புழு, பூச்சிகள் இருந்தாலும் அதை மலத்துடன்

50 ஆயிரம் பேருடன் உலகைச் சுற்றிவரும் கப்பல்

பாடசாலைகள், வைத்தியசாலைகள், விமான நிலையம், ஆடம்பர விடுதிகள், பூங்காக்கள் ஆகியவற்றுடன் 50 ஆயிரம் பேர் பயணிக்கக் கூடிய இராட்சதக் கப்பல் அமெரிக்காவிலிருந்து உலகத்தைச் சுற்றிவரத் தயாராகவுள்ளது.
Freedom Ship என்ற பெயருடைய இந்தக் கப்பல் மிதக்கும் உலகம் என அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றினால் ஆடம்பர வர்க்கத்தினருக்காக இவ்வாறானதொரு கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து உலகத்தை சுற்றி வரவுள்ளதாக Freedom Ship இன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதில் 25 அடுக்கு மாடிகள் உண்டு. இங்கு குடியிருக்கும் 50 ஆயிரம் பேருக்கு மேலதிகமாக 30 ஆயிரம் விருந்தினர்கள் பயணிக்கக் கூடிய வாய்ப்பையும் கப்பல் வழங்குகிறது.
 
கப்பல் உருவாக்கப்பட்டுள்ள விதம் குறித்தான வரைபடத்தை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு கப்பலில் உலகத்தைச் சுற்றிவர பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...