Mar 31, 2014

சாதனை படைத்தது Fitbit அப்பிளிக்கேஷன்



   
 
 
 
 
 
 
 

உடல் ஆரோக்கியத்தை சிறந்த நிலையில் பேணுவதற்கு உதவும் ஒரு இலத்திரனியல் சாதனமே Fitbit ஆகும்.இதனைப் பயன்படுத்தி ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க முடியும்.
தற்போது Android மற்றும் iOS உட்பட 44 வகை சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படும் இச்சாதனத்தின் அப்பிளிக்கேஷன் ஆனது Android இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களுக்காக 1 மில்லியன் தடவைகள் வரை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
Fitbit Android App Passes 1 Million Downloads, Now Supports 44 Devices
Fitbit has today announced that its activity and sleep trackers now sync directly with 44 Android and iOS devices, providing an additional 26 devices for users to chose from since January of this year.
The Fitbit application will be pre-loaded on the new HTC One M8 smartphone that was announced this week and has already been through a teardown by the iFixit team.
Fitibit also explained that Android users are rapidly adopting the Fitbit fitness tracker and application and have already downloaded the app more than 1 million times from the Google Play Store. Fitbit explain :
“The free Fitbit app accounted for 83 percent of device installs on Google Play among top fitness tracker apps. The Distimo study also verified that Fitbit dominates companion apps for fitness trackers competition on iOS with 72 percent of downloads.”

அரிசியின் ரகசியங்கள்!




  
 


அரிசியால் ஆன சோறு, அரிசி மாவில் செய்யப்படும் இட்லி, தோசை போன்றவற்றை விரும்பி உண்ணும் மனிதன் அவற்றின் குணங்ளையும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.கார் அரிசுயை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.
குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.
குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.
சீரகச் சம்பா சிறுவாத நோய்களைக் குணமாக்கும், பசியை அதிகரிக்கும்.
கோடைச் சம்பா அரிசி வாதப்பித்த நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும்.
ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும்.
பச்சரியைச் சாப்பிட்டால் வாதக் குறைபாடுகள் உண்டாகக்கூடும். பக்கவாதம், உடல் உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படக்கூடும். பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும்.
புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான்.
தினை அரிசியும் புன்செய் தானியம்தான். சளித்தொற்றை போக்கும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும், ஆனால் அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும்.

Oculus நிறுவனத்தை வாங்குகிறது பேஸ்புக்




வாட்ஸ் ஆப்பை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள ஆக்குலஸ் நிறுவனத்தை வாங்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது.சமூக வலைத்தளங்களில் ஜாம்பவனாக திகழும் பேஸ்புக், சமீபகாலமாக நவீன தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் தான் கடந்த பிப்ரவரி 19ம் திகதி வாட்ஸ் ஆப் நிறுவனத்தை வாங்கியது.
இந்த வர்த்தக பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்ட ஒரு மாதத்தில் ஆக்குலஸ்(Oculus) நிறுவனத்தையும் வாங்க திட்டமிட்டுள்ளது.
வீடியோகேமிற்கான விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்(Virtual Reality Headset) தொழில்நுட்ப பணிகளை நிறைவேற்றி வருகிறது, இந்த நிறுவனம் அமெரிக்காவில் இருக்கிறது.
இந்நிறுவனத்தை ரூ.12 ஆயிரம் கோடிக்கு வாங்குவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. இதில் ஒரு பகுதி பணமாகவும், ஒரு பகுதி பங்குகளாகவும் வழங்கப்படும் என்றும் பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.
இதுபோன்ற நவீன தொழில்நுட்ப சேவைகளை வாங்கி அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தினால், வரும் காலங்களில் சமூக இணையதளத்தின் மூலம் மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யமுடியும் என்று பேஸ்புக் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் தெரிவித்துள்ளார்.

தேன் வேட்டையர்கள்

தேன் வேட்டையர்கள்
மனிதனின் நாவிற்கு தித்திக்கும் சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாகவும் பல்வேறு நலன்களை அள்ளித்தருகிறது தேன்.
அன்றாட வாழ்வில் உணவுகளுடன் சேர்த்து தேன்களை ருசிக்கும் மனிதன் இந்த தித்திப்பான தேன் எவ்வாறு நம்மை வந்து சேர்ந்தடைகின்றன என்ற கதையை அவசியம் தெரிந்துகொள்ளதான் வேண்டும்.
தேன் வகைகளில் சுத்தமான தேன் என்று பல்வேறு கடைகளிலும், பல்வேறு இடங்களிலும் கூவி கூவி விற்றாலும் உண்மையான தேன் என்றால் அது மலைத்தேன் தான்.
அதுவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கலப்படமற்ற தேனாக இந்த குரூங்
திசை மாறி தேடப்படும் மலேசிய விமானம்!

இந்தியப்
 பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி மாற்றப்பட்டுள்ளது.மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் திகதி அதிகாலை நடுவானில் மாயமானது.
அந்த விமானத்தின் நிலைமை என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான

நீரிழிவு நோயை உண்டாக்கும் உணவு பழக்கவழக்கங்கள்

நீரிழிவு நோயை உண்டாக்கும் உணவு பழக்கவழக்கங்கள் நகர்ப்புறங்களில் நீரிழிவு நோய் என்பது அவர்களது தவறான உணவு பழக்கவழக்கங்களால் தற்போது அதிகரித்து வருகிறது. பாதி சமைக்கப்பட்ட உணவு பொருள்கள் மற்றும் பாஸ்ட் புட் உணவுகள் மல்டிநேசனல் கம்பெனிகளால் ஊக்குவிக்கப்பட்டு அனைத்து மக்களின் வாழ்க்கை முறைகளை மாற்றி, அவர்களுக்கு நீரிழிவு நோய் போன்ற வியாதிகளை ஏற்படுத்துகிறது. இதில் தற்பொழுது குறைந்த வயதுள்ளவர்கள் உடல் எடை அதிகரிப்பால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதிகமான உடல் எடை நீரிழிவு

பச்சைக் கீரைகள்

பச்சைக் கீரைகள் ஊட்டசத்துக்களின் உற்பத்தி மையங்கள் என்று கருதப்படும் கீரைகளில் பைட்டோநியூட்ரிஷன் சத்துக்களும், வைட்டமின்களும் மற்றும் தாதுக்களும் உள்ளதால் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சி இவற்றை சாப்பிடுவதால் ஊக்கம் அடைவதை யாராலும் மறுக்க முடியாது. USDA-வின் பரிந்துரைகளின் படி, ஒரு வாரத்திற்கு 3 கோப்பையாவது பச்சைக் கீரைகளை சாப்பிடவேண்டும்
முட்டைகள் புரதச்சத்து மிகுந்த உணவாக நன்கு அறியப்பட்டிருக்கும் முட்டையில், மூளையின் செயல்பாடுகளின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான சத்துக்களும் உள்ளன. அது மட்டுமல்லாமல், முக்கியமான வைட்டமின்களை அளிக்கவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் நோய்களை வரவழைக்காத வகையில் கொழுப்பின் அளவுகளைகட்டுப்படுத்தவும் முட்டை உதவுகிறது. 
வேர் காய்கறிகள் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஆகிய சத்துக்கள் அடங்கிய கேரட், உருளைக்கிழங்கு மற்றும் முள்ளங்கி போன்ற காய்கறிகள் இந்த வகையில் வருகின்றன. இவை பழங்காலங்களில் வேட்டையாடிக் கொண்டிருந்த மனிதர்கள் சேகரித்து வைக்கும் உணவுப் பொருட்களைச் சேர்ந்தவையாக உள்ளன.

 வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிரம்பிய பழங்கள் மரங்களில் காய்த்துக் கிடக்கும் கனிகளும், காய்களும் தான் நாடோடி வேட்டையனாக திரிந்து கொண்டிருந்த பழங்கால மனினின் மற்றுமொரு முக்கிய உணவாக இருந்தது. இந்த காய்கள் மற்றும் கனிகளில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்றவற்றிற்கு குறையொன்றும் இருக்காது. மிகவும் அதிகமான கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதால் இரத்தத்தின் சர்க்கரை அளவு திடீரென்று உயர்ந்து விடும் பலவீனத்தை இவை தடுக்க உதவுகின்றன. அது மட்டுமல்லாமல், ஆக்சிஜன் எதிர்பொருட்கள் நிறைந்துள்ளதால் எண்ணற்ற பிரச்சனைகளில் நாம் சிக்குவதையும் அவை தவிர்க்க உதவுகின்றன. நிறைய பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆக்சிஜன் எதிர்பொருட்கள் உதவுவதால், நமது உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்படுகிறது.

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சில ஊட்டச்சத்து

கால்சியம் மற்றும் வைட்டமின் டி நம் உடலில் காஸ்ட்ரிக் அமிலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால், வைட்டமின் டி மற்றும் கால்சியம் உட்கிரகிக்கும் அளவு போன்றவை முப்பது வயதிற்கு முன்பிருந்ததை விட, நாற்பது வயதில் சரிவர இருப்பதில்லை. அதனால் 30 வயதிற்குள்ளயே கால்ஷியம் அடங்கிய உணவுகளை போதிய அளவில் உட்கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றாலும் கூட காலம் தாழ்த்திவிடாமல் கீரை வகைகள், பச்சைப் பூக்கோசு, அக்ரூட், சூடை மீன், நகர மீன், பரட்டை கீரை மற்றும் கொழுப்பு குறைந்த அல்லது கொழுப்பு இல்லாத பால் போன்ற கால்சியம் அதிகமுள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மீன் வகைகள் நமது உணவில் மீன் வகைகளை நன்றாக சேர்க்க வேண்டும். மீனில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இந்த அமிலம் நமது உடலில் சுரப்பதில்லை. நகர, கிழங்கான், சூடை போன்ற கடல் மீன்கள் மற்றும் கடல் உணவுகளான நீர்ப்பாசி, இறால் போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
பழங்கள் பழங்களில் உள்ள அதிகளவிலான சத்துக்கள் உடலுக்கு தேவையான அனைத்தையும் தருவதால் அவைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலநிலையிலும் பல பழங்கள் எளிதில் நமக்கு கிடைக்கின்றன. பழங்கள் எளிய செரிமானத்திற்கு வழிவகுக்கிறது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பழங்கள் மிகவும் அவசியம். அவர்கள் இனிப்பு அதிகம் சேர்க்க கூடாது. ஆனால் பழங்களில் உள்ள இனிப்பு அவர்களின் சர்க்கரை அளவை பாதிப்பதில்லை.
பழச்சாறுகள் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் மிக அவசியம். அவர்களால் கடின உணவை எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு பதிலாக பழச்சாறுகளை எடுத்து கொள்ளவது மிகவும் நல்லது. நமது உடலில் உணவுகளின் எளிதான செரிமானத்திற்கும், சிறந்த நீறேற்றியாகவும் பழச்சாறு பயன்படுகிறது. மேலும் நமது உடலால் எளிதாக உட்கிரகிக்கப்படுகிறது பழச்சாறு.
முழு தானிய வகைகள் முழு தானிய உணவுகளான கோதுமையால் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கைகுத்தல் அரிசி போன்றவை நமது உடலில் பசியை தூண்டி, சர்க்கரை அளவில் நிலைப்பாட்டை ஏற்படுத்துகிறது. நாம் அனைவரும் பாலிஷ் செய்யப்பட்ட தானியங்களை விடுத்து, முழு தானிய வகைகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். இவை உங்கள் பசியை சீராகி சர்க்கரையை மெதுவாக உங்கள் உடலில் சேர்க்கும். இதனால் அளவுக்கு அதிகமாக உண்ணுவதை கட்டுப்படுத்தி, சர்க்கரை அளவில் அபரிமிதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சில ஊட்டச்சத்து குறிப்புகள்

 ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதால் மட்டுமே மனத்தெளிவை பெற்று, நோய்கள் மற்றும் உடல் பலவீனத்தை தடுத்து, நோய்களில் இருந்து எளிதில் குணமடையும் சக்தியை பெற்று, அதிக ஆற்றல் திறனுடன் விளங்க முடியும். நல்ல உணவுமுறையால், உடலுக்கு நல்ல ஆற்றலும், உடம்பில் உள்ள நீண்ட கால நோய்களை சமாளிக்கும் திறனும் அவர்களுக்கு கிடைக்கும். வயதான காலத்தில் நல்ல உணவு முறையால், நல்ல மனநிலையையும், உணர்வுகளில் நிலைப்பாட்டையும் பெற முடியும். உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்து தேவைகள் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.வயதான பிறகு கலோரிகளை எரிக்கும் திறன் நமது உடலுக்கு குறைந்து விடும். இதனால் பசியின்மை ஏற்பட்டு, நாம் உண்ணும் உணவின் அளவு குறைந்து விடும். தவறான உணவு முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் சிகரெட் பிடித்தல் போன்ற சில காரணங்களாலேயே பொதுவாக

கொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள்

 கொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ள ஃப்ரிட்ஜ்களில் கொத்தமல்லி இலைகளுக்கு என்று தனி இடம் உண்டு. இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும். கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது. கொத்தமல்லி இலைகளில் மிளகில் இருப்பது போன்ற சிறிது காரமான சுவை இருப்பதால், இது பல உணவு வகைகளுக்கும் வித்தியாசமான வாசனையைக் கொடுத்து, உணவின் சுவையைக் கூட்டுகிறது. குறிப்பாக இதன் விலை மிக மிகக் குறைவு. ஆனால் இதன் மருத்துவப் பயன்களைப் பார்க்கும் போது, விலை மதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது

Mar 30, 2014

ரெட் ஒயினின் அழகு நன்மைகள்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பானங்களில் ரெட் ஒயினும் ஒன்று என்று தெரியும். மேலும் ஆய்வு ஒன்றிலும் ரெட் ஒயின் சாப்பிட்டால், இதய நோய் வருவதைத் தவிர்க்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாகவும், அதுவே அளவுக்கு மீறினால், மோசமான விளைவையும் சந்திக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல், அக்காலத்தில் எல்லாம் ரெட் ஒயின் ஒரு மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால் தான் இன்றும் ப்ரெஞ்சு மக்கள், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, தினமும் அளவான அளவில் ரெட் ஒயினை சாப்பிட்டு வருகின்றனர். இத்தகைய ரெட் ஒயின் உடலுக்கு மட்டும் நன்மைகளை தருவதில்லை.

Mar 23, 2014

திருமதி மஞ்சுளா வசந்தராஜா 15.03.2014


திருமதி மஞ்சுளா வசந்தராஜா
மண்ணில் : 7 டிசெம்பர் 1965 — விண்ணில் : 15 மார்ச் 2014

யாழ். வேலணை வடக்கு சோளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மஞ்சுளா வசந்தராஜா அவர்கள் 15-03-2014 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், அன்னலக்சுமி(பிரான்ஸ்) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்களம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வசந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கோபிநாத், கோபிதாசன், கல்பனா, கோபிசங்கர்(கெவின்) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
சறோஜினிதேவி(சறோ), சதானந்தி(சதா), சித்திரா(கலா), ஜெயசீலன்(சுவிஸ்), சத்தியசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வைரவநாதன், நந்தகுமார், விஜயகுமாரன், கிறிஸ்ரினா(சுவிஸ்), வினோதா(பிரான்ஸ்), பரிமளகாந்தி, லோகேஸ்வரி(அவுஸ்திரேலியா),

Mar 22, 2014

காணமற்போன மலேசிய விமானம் தொடர்பில்


காணமற்போன மலேசிய விமானம் தொடர்பில்


How a CPU is made


New Apple iMac 27": Unboxing, Benchmarks, & 32GB RAM Upgrade

New Apple iMac 27": Unboxing, Benchmarks, & 32GB RAM Upgrade

நாம் வீட்டில் பார்க்கும் தொலைகாட்சி ( LCD TV ) யை எப்படி தயாரிக்கிறார்கள்


நாம் வீட்டில் பார்க்கும் தொலைகாட்சி ( LCD TV ) யை எப்படி தயாரிக்கிறார்கள் என்று இந்த காணொளி ஊடாக பாருங்கள் . இந்த வீடியோ நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும்(Video)

Philips TV manufacturing and logistics


நாம்
வீட்டில் பார்க்கும் தொலைகாட்சி ( LCD TV ) யை எப்படி தயாரிக்கிறார்கள்
என்று இந்த காணொளி ஊடாக பாருங்கள் . இந்த வீடியோ நிச்சயம் உங்களை வியப்பில்
ஆழ்த்தும்(Video)
See More

Mar 21, 2014

கணனித் தொகுதி The Computer System

கணனியென்பது தனியொரு உபகரணமல்ல. மாறாக பல பாகங்களையும் துணை கருவிகளையும் இணைத்து இயங்கும் ஒரு தொகுதியாகும். சில கணனிகள் பார்வைக்கு தனியொரு கருவியாகத் தென்பட்டாலும் பல்வேறு வேலைகளைச் செய்வதற்கு அதனுள்ளேயும் வெளியேயும் பல பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்,

[+/-]

Mar 20, 2014

விண்டோஸ் 7 நினைவில் கொள்ள


இதுவரை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இல்லாத சில புதிய வசதிகளை விண்டோஸ் 7 கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை நினைவில் கொள்வோம்.


1. பின் அப் போல்டர்:

நீங்கள் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட போல்டரிலிருந்து பைல்களை எடுத்து பயன்படுத்துகிறீர்களா? தினந்தோறும் குறிப்பிட்ட பைல்கள் உங்கள் செயல்பாட்டிற்குத் தேவையா? போல்டரையும் அதில் உள்ள பைல்களையும் பெற விண்டோஸ் எக்ஸ்புளோரர் எல்லாம் சென்று திறக்க வேண்டியதில்லை.

குறிப்பிட்ட போல்டரை, டாஸ்க் பாரில் பின் அப் செய்து வைத்துக் கொள்ளலாம். அந்த போல்டரில் ரைட் கிளிக் செய்து, இழுத்து வந்து டாஸ்க் பாரில் விட்டுவிடவும். விண்டோஸ் 7 தானாக அதனை எக்ஸ்புளோரர் ஜம்ப் லிஸ்ட்டில் வைத்துக் கொள்ளும். போல்டரைத் திறக்க, டாஸ்க் பாரில் உள்ள

விண்டோஸ் 7 - பைல் நிர்வாகம்


மைக்ரோசாப்ட் இறுதியாக வெளியிட்ட விண்டோஸ் 7 இயக்கம் பயனாளர்களுக்குப் பல வகைகளில் எளிமையான இயக்கத்தினைத் தருவதாக உள்ளது. இங்கு பைல்களைக் கையாள்வதில், விண்டோஸ் 7 தரும் புதிய வழிகளையும் வசதிகளையும் காணலாம்.

எக்ஸ்பி சிஸ்டத்தில் பைல்களைக் கையாள, பைல்களின் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்று ஓரளவிற்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எந்த விபரமும் தெரிந்திருக்க வேண்டிய தில்லை.

விண்டோஸ் 7 சிஸ்டம், எக்ஸ்பி சிஸ்டத்தின் விரிவாக்கம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். கீழே இன்னும் தெளிவான ஒரு இயக்கத்தைத் தர ஐந்து குறிப்புகள் தரப்படுகின்றன.


1. டாகுமெண்ட்ஸ் லைப்ரேரி:

விண்டோஸ் 7 இயக்கத்தில் Documents என்பது, எக்ஸ்பி இயக்கத்தில் நமக்குக் கிடைத்த மை டாகுமெண்ட்ஸ் (My Documents) போல்டராகும். ஆனால் இது ஜஸ்ட் ஒரு போல்டர் மட்டுமல்ல; டாகுமெண்ட்ஸ் என இங்கு அழைக்கப் படுவது இங்கு ஒரு லைப்ரரியாக உள்ளது.

விண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ்


விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

முற்றிலும் மாறானது, கூடுதல் வசதிகளைக் கொண்டது, விலையும் நியாயமானது என்ற எண்ணம் கம்ப்யூட்டர் வாங்குவோரிடம் விண்டோஸ் 8 ஏற்படுத்தியுள்ளது. வாங்கிய சில வாரங்கள், விண்டோஸ் 8, அதன் பயனாளர்களிடையே சற்று தடுமாற்றத்தினை ஏற்படுத்துகிறது. 

அவற்றைப் போக்கும் வகையிலான பயனுள்ள சில குறிப்புகளை இங்கு காணலாம்.

1. அப்ளிகேஷன் புரோகிராம்களை ஒழுங்கு படுத்த:
விண்டோஸ் 8 தரும் புதிய ஸ்டார்ட் ஸ்கிரீன் மூலம், அப்ளிகேஷன் டைல்ஸ்களை, நம் விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம். முதலில் அவை, எந்த வரிசையிலும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருப்பது போல

விண்டோஸ் 7 - சில புதிய குறிப்புகள்



புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் அனைவரும், அதனுடன் வரும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கத் தொடங்கிய பின்னர், அது தரும் வசதிகளை ஒவ்வொன்றாய் ஆய்வு செய்து அறிந்து வரு கின்றனர். 

விஸ்டாவிற்குப் பின் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன், மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் 7 தொகுப்பில், பல புதுமைகளையும் எளிய, திறனுடன் கூடிய வசதிகளையும் தந்துள்ளது. 



1. கீபோர்ட் ஷார்ட் கட்ஸ்: 

விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் காணலாம். 

எச்: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.
ஐ: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்கிறது; அல்லது

விண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்


புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பெற்று பயன்படுத்தத் தயங்குபவர்கள், இப்போது விண்டோஸ் 7 தொகுப்பினையே பெறுகின்றனர். 

அதன் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்திப் பார்த்து, அவற்றின் தன்மையினை முழுமையாகப் பெறச் செயல்படு கின்றனர். விஸ்டாவின் தோல்விக்குப் பின் வந்த இந்த சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பல கூடுதல் வசதிகளைத் தந்துள்ளது. பல புதுமைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். 


1. கீ போர்டு ஷார்ட் கட்ஸ்:
விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் காணலாம்.

எச்: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.

ஐ: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது. 

ஷிப்ட்+ ஆரோ: அப்போதைய விண்டோவினை, அடுத்த திரைக்கு மாற்றுகிறது.

D: அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்து, டெஸ்க்டாப் திரையைக் காட்டுகிறது.

E: விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும்; மை கம்ப்யூட்டர் போல்டர் காட்டப்படும்.

F: தேடல் விண்டோ காட்டப்படும்.

G: உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சுற்றிக் காட்டும்.

L: டெஸ்க்டாப்பினை லாக் செய்திடும்.

M: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்திடும்.

R: ரன் விண்டோவினை இயக்கும்.

T: டாஸ்க் பாரில் சுழன்று வரும்; ஒவ்வொரு ஐட்டத்திற்கும் ஏரோ பீக் வசதியினைக் கொடுக்கும்.

U : ஈஸ் ஆப் யூஸ் சென்டரைத் திறக்கும்.

TAB: முப்பரிமாணக் காட்சி

Pause: சிஸ்டம் ஆப்லெட் இயக்கப்படும்.


2.ஹெல்ப் அண்ட் சப்போர்ட்:
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஹெல்ப் பிரிவு புதிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மைப் பக்கத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. 

Search Box, மைக்ரோசாப்ட் இணைய தளத்திற்கான நேரடி லிங்க், அண்டு என்று பெயரிடப்பட்ட பட்டன். விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள அண்டு பட்டனை அழுத்தலாம்; அல்லது ஹோம் பேஜில், இடது கீழ்ப்புறம் உள்ள More Support Options பிரிவில் கிளிக் செய்து, தேவையான தகவல்களைப் பெறலாம். 

இதில் தான் மைக்ரோசாப்ட் அண்டு a Person for Help என்ற பிரிவை மறைத்து வைத்துள்ளது. இதில் கிளிக் செய்தால் Remote Assistance, Microsoft Help Forums, மற்றும் Computer Manufactures Homepage ஆகியவை கிடைக்கும். இதன் மூலம் எப்படி உதவி பெறலாம் என்பதனை, இதில் சென்று அறிந்து கொள்வதே சிறப்பாக இருக்கும்.


3. சிஸ்டம் ஹெல்த் ரிப்போர்ட்:
நம் கம்ப்யூட்டர் எந்த நிலையில் உள்ளது என்று அறிய அனைவருக்கும் ஆர்வமாகத்தான் இருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இதற்கான வழி தரப்பட்டுள்ளது. சர்ச் லைன் பெட்டியில், perfmon /report என டைப் செய்து என்டர் தட்டினால், கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும். 

கம்ப்யூட்டர் செயல்படும் திறன், எவ்வளவு திறனைப் பயன்படுத்துகிறது, பிரச்னைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்க வழி ஆகியவை காட்டப்படும்.இந்த அறிக்கை கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும். இதனை எச்.டி.எம்.எல். பைலாக சேவ் செய்து, உங்கள் நண்பருக்கு, இதனை இமெயிலில் அனுப்பவும் வழி தரப்படுகிறது.


4. அப்ளிகேஷன்ஸ் அன் இன்ஸ்டால்:
விண்டோஸ் சிஸ்டத்துடன், சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைத்தே தரப்பட்டன. இவை சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்து இருந்த தனால், பயன்படுத்துகிறோமோ இல்லையோ, அவை சிஸ்டத்தில் இயக்க நிலையில் இருந்து கொண்டே இருக்கும். 

இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 8, மீடியா பிளேயர், மீடியா சென்டர், டிவிடி மேக்கர் போன்ற புரோகிராம்கள் இதற்கு எடுத்துக் காட்டு. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இவற்றை தேவை இல்லை என்றால், நீக்கிவிட வசதி தரப்பட்டுள்ளது. கண்ட்ரோல் பேனலில், Program and Features என்ற பிரிவிற்குச் செல்லவும். 

இதில் Turn Windows features on or off என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இவற்றில் இது போன்ற ஒருங்கிணைக்கப்பட்டுள்ள புரோகி ராம்களின் பட்டியல் காட்டப்படும். இதில் உங்களுக்குத் தேவைப்படும் புரோகிராம்களை மட்டும் வைத்துக் கொள்ள அதன் முன்புறம் உள்ள, சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். 


5. கிரெடென்ஷியல் மேனேஜர் (Credential Manager):
இந்த சிஸ்டத்தின் கண்ட்ரோல் பேனலில், கிரடென்ஷியல் மேனேஜர் என்னும் புதிய அப்ளிகேஷன் ஒன்று தரப்பட்டுள்ளது. இதனை இயக்க சர்ச் லைனில் Credential என டைப் செய்திடவும். இதில் நம் பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றைக் குறிப்பிட்டு சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம். 

நாம் அடிக்கடி செல்லும் இணையதளங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களையும், இதில் பதிந்து பாதுகாப்பாக வைக்கலாம். இவை Windows Vault என்பதில் சேவ் செய்து வைக்கப்படும். இந்த பைலையும் பேக்கப் எடுத்து வைக்கலாம். 


6. புதிய செயல்முறையில் வேர்ட் பேட்:
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புடன் வரும் வேர்ட் புரோகிராமினையே அனைவரும் பயன்படுத்துகிறோம். அதனால் சிஸ்டத்துடன் வரும் நோட் பேட் மற்றும் வேர்ட் பேட் புரோகிராம்களை அவ்வளவாகப் பயன்படுத்துவது இல்லை. நோட்பேட் புரோகிராமினையாவது, சில புரோகிராம்களை எழுதுகையில் இயக்குகிறோம். 

ஆனால் வேர்ட் பேட் புரோகிராமினை முழுமையாக ஒதுக்கி வைக்கிறோம். இதனாலேயே மைக்ரோசாப்ட் நிறுவனமும், இதில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாமலேயே, தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் தந்து வந்தது. இப்போது விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இது பெரிய மாற்றங்களுடனும் வசதிகளுடனும் தரப்பட் டுள்ளது. 

இப்போது டாகுமெண்ட்களை விருப்பப்படியான பார்மட்டில் உருவாக்க முடியும். ஆர்.டி.எப். (.rtf) பார்மட்டில் தான் இவற்றை முன்பு சேவ் செய்து வந்தோம். இப்போது இவற்றை Office Open XML documet (.docx) ஆகவும் சேவ் செய்திடலாம். இதனால் வேர்டில் உருவாக்கப்படும் இந்த பார்மட் பைல்களை, வேர்ட் பேடிலும் திறந்து எடிட் செய்திடலாம்.


7. டெஸ்க்டாப் ஒழுங்கமைப்பு:
ஐகான்கள் திரையெங்கும் சிதறிக் கிடக்கின்றனவா! சிரமம் எடுத்து அவற்றைச் சீரமைக்க வேண்டாம். எப்5 கீயை, சற்று நேரம் அழுத்தியவாறு வைக்கவும். ஐகான்கள் தாமாக சீராக அமைக்கப்படும். அல்லது வழக்கம்போல, டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, விஸ்டாவில் உள்ளது போல, View, Auto arrange அழுத்தவும்.


8. சிஸ்டத்தினை ரிப்பேர் செய்திட:
கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வாசகர்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்டு அவசர அழைப்புகளைக் கொடுப்பதுண்டு. அவர்களிடம், ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி உள்ளதா என்று கேட்டால், பதில் கிடைக்காது. ஏனென்றால், சிஸ்டத்துடன் தரப்படும் சிடிக்களில், அப்படி ஒன்று உள்ளதென்று தெரிந்தவர்கள், அதனைப் பத்திரமாக வைத்திருப்பதில்லை. 

அப்படியானால், விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, இன்டர்நெட்டிலிருந்து டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்தவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். விண்டோஸ் 7 சிஸ்டம் இதுபோன்ற ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி தயாரிக்கும் வழியைக் கொண்டுள்ளது. சிஸ்டம் பூட் ஆவதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலையில், இது போன்ற சிடிக்கள் நமக்கு கை கொடுக்கும்.

இதனைத் தயாரிக்க Start > All Programs > Maintenance > Create a System Repair Disc என்று செல்லவும். விண்டோஸ் 7, சிஸ்டத் தினை இயக்கக் கூடிய சிடி ஒன்றைத் தயாரித்துக் கொடுக்கும்.


9. பிரச்னைகளைக் கண்டறிய:
சில வேளைகளில், சிஸ்டத்தின் சில செயல்பாடுகள் மட்டும் முடங்கிப் போகும். அந்த வேளையில், எதனால் பிரச்னை ஏற்படுகிறது என நமக்குத் தெரியாது. இதனைக் கண்டறிந்து கொள்ள, விண்டோஸ் 7 வழி ஒன்றைத் தருகிறது. அது போன்ற சூழ்நிலையில், கண்ட்ரோல் பேனல் செல்லவும். 

அங்கு System and Security என்பதன் Find and Fix என்ற பிரிவைப் பார்க்கவும். அல்லது சர்ச் பாக்ஸில் Troubleshooting என்று டைப் செய்து என்டர் தட்டவும். பொதுவான பிரச்னைகள், நீங்கள் அமைத்துள்ள செட்டிங்ஸ், சிஸ்டம் கிளீனிங் போன்ற வழிகளில், பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கலாம். 

இதற்கு முன் இதே போல ஏற்பட்டிருந்தால், சர்ச் பாக்ஸில் Troubleshooting history என்று டைப் செய்து பார்க்கவும். இந்த விண்டோவின் இடது மேல் பக்க மூலையில் View All என்ற லிங்க்கில் கிளிக் செய்தால், இதற்கு முன் இது போல ஏற்பட்ட சிக்கல்கள், அவற்றின் தன்மை மற்றும் தீர்வுகள் காட்டப்படும்.

ஏர்டெல் தரும் 4ஜி இணைய சேவை




ஏர்டெல் நிறுவனம், பெங்களூருவில், தன் 4ஜி இணைய சேவையைத் தொடங்கி உள்ளது. இதனால் உடனடியாகப் பயன் பெறுபவர்கள், ஐபோன் 5 எஸ் மற்றும் 5சி ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் மட்டுமே. 

இந்த போன்களில், ஏற்கனவே 3ஜி பயன்படுத்தக் கட்டணம் செலுத்திப் பதிவு செய்தவர்கள், கூடுதலாக எதுவும் செலுத்தாமல், 4ஜி செயல்பாட்டினை, அதே கட்டணத்தில், அனுபவிக்கலாம். 

ப்ரீ பெய்ட் மற்றும் போஸ் பெய்ட் என இரண்டு திட்டங்களில் இயங்குபவர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், தங்கள் 3ஜி சிம் கார்டினை, 4ஜி சிம் கார்டுக்கு மாற்ற

அபாயத்தை எதிர்நோக்கி 50 கோடி கம்ப்யூட்டர்கள்


விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான பாதுகாப்பு வசதிகள் அனைத்தையும், வரும் ஏப்ரல் 8 முதல் நிறுத்திக் கொள்ளப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து, தொடர்ந்து எச்சரிக்கையும் கொடுத்து வருகிறது. 

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பலரின் பிரிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இயங்கி வந்த, இயங்கிக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை முடிவுக்குக் கொண்டு வர மைக்ரோசாப்ட் பல ஆண்டுகள் முடிவெடுத்து, தற்போது அதன் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டது.

பல கணக்கெடுக்கின்படி, ஏறத்தாழ 48.8 கோடி கம்ப்யூட்டர்கள் எக்ஸ்பியில் இயங்குவதாக தெரிகிறது. மிகச் சரியாக எத்தனை கம்ப்யூட்டர்கள் என்று, மைக்ரோசாப்ட் நிறுவனம் மட்டுமே சொல்ல முடியும். 

இது ஒரு பெரிய எண்ணிக்கையாகத் தோன்றினாலும், அனைத்து நாடுகளிலும் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டரில், இவை ஏறத்தாழ 30 சதவீதம் மட்டுமே என Net Applications என்ற

Mar 19, 2014

கூகுள் தளத்தில் துல்லியமான தேடல்கள்


இணையத்தில், சிறப்பான வழிகளில், துல்லியமாக நம் தேடலை அமைத்துத் தகவல்களைப் பெறுவது என்பது ஒரு தனித் திறமையே. 

இக்காலத்தில், நமக்கு என்ன தகவல்கள் தேவை என்றாலும், கூகுள் தளத்தினையே நாம் சார்ந்திருக்கிறோம். பல நேரங்களில், நம் தேடலுக்கான முடிவுகள் நமக்கு ஏமாற்றத்தினையே தரும். 

ஏனென்றால், பொதுவான தேடல்களாக நாம் அமைத்திருப் போம். கூகுள் தேடல் தளத்தினைப் பொறுத்தவரை, நாம் சரியாக நம் தேடல் கேள்விகளை அமைத்தால், நமக்கு தகவல்களும் நாம் தேடிய வகையில் கிடைக்கும். 

எனவே, நமக்குத் தேவையானதைச் சரியாகப் பெற, அதில் தேடல்களையும் நாம் சரியாக அமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முன்பு இது குறித்த கட்டுரை ஒன்று வெளியானது. தற்போது இன்னும் சில குறிப்புகளை இங்கு காணலாம்.

பொதுவாக, நிறுத்தல் மற்றும் பிற குறிகளுக்கு நாம் அவ்வளவாக

Mar 18, 2014

மாயா மான மலேசிய விமானம்: விமானத்தின் பாதை கம்யூட்டரில் மாற்றி அமைத்து கடத்தல்


நியூயார்க்
கோலாலம்பூரில்  இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறபட்டு சென்ற மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இச்சம்பவம் நடந்து இன்றுடன்12  நாட்கள் ஆகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, வியட்நாம் உள்பட 26 நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஆனால்  எந்த வித தகவலும் இதுவரை தெரியவில்லை.இருந்தும் அது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த விமானம் விபத்தில் சிக்கியதா? தீவிரவாதிகளால் கடத்தப் பட்டதா? அல்லது நாசவேலையால் சிதைக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளது. தறபோது விமானத்தை தேடும் ம்தூரம் அதிகரிக்கபட்டு உள்ளது.
விமான பைலட்கள் மீது சந்தேகம்
விமானத்தை ஓட்டி சென்ற தலைமை பைலட் ஜாகாரி  அகமது ஷா வீட்டில் மலேசிய போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.மலேசிய போலீசார் தலைமை பைலட்டின் குட்ம்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  அகமது ஷா  மன நிலை எவ்வாறு இருந்து என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். இது ஒரு வாடிக்கையான விசாரணைதான் அவரை குற்றவாளியாக கருதி விசாரணை நடத்த வில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் உதவி பைலட் பாரூக் அப்துல் அமீது வீட்டிலும் மலேசிய போலீசார்  சோதனை நடத்தினர். அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோதனையில் விமானிகள் தான் விமானத்தை கடத்தி இருக்ககூடும் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.மாயமான விமானம் எம் எச் 370  கடத்தலுக்கு மிகவும் அபாயகரமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.விமானம் காணாமல் போனதை தொடரந்து விமானிகளின் மனைவி மற்றும் குழந்தைகள்  வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
பைலட்டின கடைசி பேச்சு
மலேசிய போலீசார் தலைமை பைலட் ஜாகாரி  அகமது ஷா மற்றும் உதவி பைலட் பாரூக்  ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து சோதனைகள் முடிந்து அவர்கள் விமானத்தில் ஏறும் அனித்து சிசிடிவி வீடியோ காட்சிகளையும் பார்த்து தடயங்கள் ஏதாவது கிடைக்கிறதா என் பார்த்து வருகின்றனர்.
விமானத்தில் உள்ள வீடியோ காட்சியில் விமானிகள் இருவரும் சோதனை செய்யபட்டு நடந்து வருவது தெரிகிறது.
இதற்கிடையே விமானம் தனது கட்டுப்பாட்டில் இருந்து விலகுவதற்கு சிறிது நேரத் துக்கு முன்பு விமானி மலேசிய விமான கட்டுப் பாட்டு அறையுடன் பேசிய விவரம் வெளியாகி உள் ளது.
விமானி  அறையில் இருந்து உதவி பைலட் பாரூக் அனைத் தும் சரியாக உள்ளது. இரவு வணக்கம்(ஆல் ரைட், குட்நைட்) என பேசி யுள்ளார். அதன் பிறகு தான் கட்டுப்பாட்டு அறை யுடனான விமானத்தின்  தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
உதவி விமானியின் கடைசி வார்த்தைகளுக்கு 12 நிமிடங்கள் முன்பாக அதாவது, அதிகாலை 1.07 மணியளவில் விமானத்தின் தானியங்கி தகவல் பரிமாற்ற கருவி செயல்பட்டுள்ளது.  ஒவ்வொரு நிமிடங்களுக்கும் தகவலை தெரிவிக்கும் இந்த கருவி எப்பொழுது அணைக்கப்பட்டது என்பது குறித்து சரியாக தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  விமானி மற்றும உதவி விமானி வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வந்த நிலையில், கடந்த வார இறுதியில், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமான இயக்கும் கருவி ஒன்று கேப்டன் ஷாவின் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளது.  அதனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  இது குறித்த தகவல் எதனையும் வெளியிட முடியாது என்று அவர்கள்  தெரிவித்தனர்.

காணாமல் போன மலேசிய விமானத்தை இயக்கிய விமானியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 5 வேறுபட்ட நாடுகளின் ஓடுதளங்களில் விமானத்தை இயக்குவதற்கான சாப்ட்வேர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலேசிய காவல்துறையினர் நடத்திய சோதனையில், இந்தியா, இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளில் உள்ள விமான நிலையங்களின் ஓடு தளங்களில் விமானத்தை இயக்குவதற்கான தனித்தனி சாப்ட்வேர்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனால், விமானத்தை திட்டமிட்டி விமானி கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.

தலிபான்கள் மறுப்பு
புதிய தகவலின் படி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இரு நாடுகளில்தான் விமானம் தரையிறங்கி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் எல்லைபகுதி மற்றும்  வடமேற்கு பாகிஸ்தான் நிலப்பகுதிகளில் விமானம் இறக்கப்பட்டு இருக்கலாம் என  சில தனியார் அமைப்புகள் தெரிவித்து உள்ளன.
தலீபான்கள் விமானத்தை கடத்தி இருக்கலாம் என்ற கருத்துக்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலிபான்களின் பிரதிநிதி சபிஹுல்லா முஜித் தெரிவிக்கையில் அது ஒரு வெளிநாட்டு பிரச்சினை அது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என கூறினார்.
ஐநா. தகவல்
காணாமல் போன மலேசிய விமானம் எங்கேயாவது மோதியோ, நடுவானில் வெடித்துச் சிதறியோ விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை என ஐ.நா. ஆதரவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மலேசியாவுக்கு உதவுவதற்காக இன்சாட் செயற்கைக்கோள் நிபுணர்கள் கோலாலம்பூருக்கு வந்துள்ளனர். அவர்கள் தவிர அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள் உதவியையும் மலேசியா கோரியுள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. அதிகாரிகளும் கோலாலம்பூரில் முகாமிட்டுள்ளனர்.
விமான பாதை கம்யூட்டர் மூலம் மாற்றி அமைப்பு
விமானத்தின் பாதை  கம்யூட்டர் மூலம்  மாற்றி அமைக்கபட்டு உள்ளது.மாயமான விமானம் கோலாலம்பூர் முதல் பீஜிங் வரை  செல்லவேண்டும் என  விமான பாதை  விமான கம்யூட்டரில் பதிவு செய்து வைக்கபட்டு இருக்கும். ஆனால் திட்டமிட்டு விமானபாதை கம்யூட்டரில் பாதையை மாற்றி அமைத்து உள்லனர் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

Mar 16, 2014

அஞ்சனக்கல் என்றால்

அஞ்சனக்கல் என்றால்:-

போகர் அருளிய “போகர் 12000” என்கிற நூலில் அஞ்சனக் கல் குறித்த குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. வெள்ளையும், நீலமும் கலந்த நிறத்தை உடைய இந்த கல்லுக்கு “நீலாஞ்சனம்”, “கருமாக்கல்” என்ற வேறு பெயர்களும் உண்டு.

இந்தியாவில் பஞ்சாப், ஆந்திரா மற்றும் தென் தமிழகப் பகுதியில் இந்த கல் கிடைக்கிறது. ஒழுங்கற்ற உருவமுடைய இவை இலகுவாக உடையும் தன்மையுடையது. இவை தண்ணீரில் கரையாது.

இவற்றில் ஆறு வகை கற்கள் இருப்பதாக போகர் கூறுகிறார். அவையாவன...

சவ்வீராஞ்சனம்
ரசாஞ்சனம்
ரக்தாஞ்சனம் 
சுரோதாஞ்சனம்
நீலாஞ்சனம்
புஷ்பாஞ்சனம்

இவற்றில் தற்போது நீலாஞ்சனம் மட்டுமே நமக்கு இலகுவாக கிடைக்கின்றது. மற்றவை மிக அரிதாகவே கிடைக்கும். இந்த அஞ்சனங்களை மருத்துவத்தில் வெளிப்பூச்சுக்காகப் பயன்படுத்தியதற்க்கான பல ஆதாரங்கள் நூலில் காணக் கிடைக்கின்றன.

சித்த மருத்துவத்தில் குழிப்புண், சன்னி, மேகம், நாவறட்சி, கண்வலி, இரத்தப் பித்தம் போன்ற பல நோய்களுக்கு நிவாரணியாகப் இந்த அஞ்சனக்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர மாந்திரீக, வசிய முறைகளில் மை தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும் உள்ளன.

சூரிய வெப்பம் கண்ணை பாதிக்காமல் இருக்கவும், கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றாமல் இருக்கவும், கண்களுக்கு மேலதிக அழகாய் உண்டு பண்ணவும் பழந்தமிழ் பெண்கள் இந்த அஞ்சனக் கற்களை அரைத்து புருவத்திலும், இமைகளிலும் மையாக தீட்டிக்கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த அஞ்சன மை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற்து
போகர் அருளிய “போகர் 12000” என்கிற நூலில் அஞ்சனக் கல் குறித்த குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. வெள்ளையும், நீலமும் கலந்த நிறத்தை உடைய இந்த கல்லுக்கு “நீலாஞ்சனம்”, “கருமாக்கல்” என்ற வேறு பெயர்களும் உண்டு.

இந்தியாவில் பஞ்சாப், ஆந்திரா மற்றும் தென் தமிழகப் பகுதியில் இந்த கல் கிடைக்கிறது. ஒழுங்கற்ற உருவமுடைய இவை இலகுவாக உடையும் தன்மையுடையது. இவை தண்ணீரில் கரையாது.

இவற்றில் ஆறு வகை கற்கள் இருப்பதாக போகர் கூறுகிறார். அவையாவன...

சவ்வீராஞ்சனம்
ரசாஞ்சனம்
ரக்தாஞ்சனம்
சுரோதாஞ்சனம்
நீலாஞ்சனம்
புஷ்பாஞ்சனம்

இவற்றில் தற்போது நீலாஞ்சனம் மட்டுமே நமக்கு இலகுவாக கிடைக்கின்றது. மற்றவை மிக அரிதாகவே கிடைக்கும். இந்த அஞ்சனங்களை மருத்துவத்தில் வெளிப்பூச்சுக்காகப் பயன்படுத்தியதற்க்கான பல ஆதாரங்கள் நூலில் காணக் கிடைக்கின்றன.

சித்த மருத்துவத்தில் குழிப்புண், சன்னி, மேகம், நாவறட்சி, கண்வலி, இரத்தப் பித்தம் போன்ற பல நோய்களுக்கு நிவாரணியாகப் இந்த அஞ்சனக்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர மாந்திரீக, வசிய முறைகளில் மை தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும் உள்ளன.

சூரிய வெப்பம் கண்ணை பாதிக்காமல் இருக்கவும், கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றாமல் இருக்கவும், கண்களுக்கு மேலதிக அழகாய் உண்டு பண்ணவும் பழந்தமிழ் பெண்கள் இந்த அஞ்சனக் கற்களை அரைத்து புருவத்திலும், இமைகளிலும் மையாக தீட்டிக்கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த அஞ்சன மை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற்து

வண்ணங்களின் (Colour) தமிழ்ப் பெயர் !



வண்ணங்களின் (Colour) தமிழ்ப் பெயர் !

தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் .... இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது.

வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது. 

அடர் சிவப்பு – cramoisy

அடர் நீலம் - perse / smalt

அடர் மஞ்சள் - gamboge

அயிரை/ அசரை - sandy colour

அரத்த(ம்) (நிறம்) - heliotrope / haematic

அருணம் - bright red, colour of the dawn;

அவுரி(நிறம்) - indigo

அழல் நிறம் – reddish colour of fire

ஆழ் சிவப்பு - cinnabar

ஆழ் செந்நீலம் (ஊதா) - claret

ஆழ் பழுப்பு - brunneous

ஆழ் பைம்மஞ்சள் - citrine

7m thiruvila inuvil sivakami amman kovil

5m nal thiruvila inuvil sivakami amman kovil

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேர்த் திருவிழா


திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.
 
பிள்ளையார்,முருகன்,அம்பாள் தனித்தனி தேரில் வலம்வந்து அருள்பாலித்தனர். இங்கு அடியார்கள் நூற்றுக்கணக்கில் அங்கபிரதட்சணை செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததால் இடநெரிசலும் ஏற்பட்டது. 

ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேர்த் திருவிழா | Virakesari

ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேர்த் திருவிழா | Virakesari

விமானத்தின் சமிக்ஞைகள் செய்மதி கட்டமைப்புகளில் பதிவு, விமானி வீட்டில் பலத்த சோதனை, விமானத்தை இயக்குவதற்கான மாதிரி விமானி அறையும் கண்டுப்பிடிப்பு, விமானி மீதும் சந்தேகம்

விமானத்தின் சமிக்ஞைகள் செய்மதி கட்டமைப்புகளில் பதிவு
 
காணாமல் போனதாகக் கூறப்படும் மலேசிய விமானத்தின் சமிக்ஞைகள் தமது செய்மதி கட்டமைப்புக்களில் பதிவாகியுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செய்மதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
எம் ஏச் 370 என்ற குறித்த விமானம் 239 பேருடன் கடந்த 8ஆம் திகதி காணாமல் போயிருந்தது.
 
இந்த விமானத்தை தேடும் பணிகள் சர்வதேச நாடுகளின் கப்பல்கள் மற்றும் விமானங்களின் ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே பிரித்தானியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த சமிக்ஞைகள், தேடுதல் நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவக்கூடும் எனவும் பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
 
இதேவேளை, குறித்த விமானம் தொடர்பிலான உண்மைத்தகவலை வெளியிடுமாறு சீனா, மலேசியாவைக் கோரியுள்ளது.
 
அத்துடன், தமது தொழிநுட்ப வல்லுனர்களை மலேசியாவிற்கு அனுப்பியுள்ளதாகவும் சீனா அறவித்துள்ளது.
 
விமானத்தின் தொலைத்தொடர்பு கட்டமைப்பு திட்டமிட்ட வகையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
 
 
விமானியின் வீட்டில் பலத்த சோதனை
 
காணாமல் போன ஆர் 370 விமானம் கடத்தப்பட்டிருக்கக் கூடும் என்ற தகவல்கள் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து அந்த விமானத்தின் விமானியான கேப்டன் சஹாரியின் வீட்டில்பொலிஸார் சோதனை நடத்தி உள்ளனர்.
 
காணாமல் போன ஆர் 370 விமானத்தின் பாதையைத் தெரிவிக்கும் டிரான்போன்டர்  கருவியை விமானத்தில் இருந்தவர்கள்தான் வேண்டுமென்றே நிறுத்தியிருக்கின்றார்கள் என்றும் அதனால் விமானம் கடத்தப்பட்டிருக்கும் சாத்தியம் அதிகரித்திருக்கின்றது என்றும் புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் இருந்த பயணிகள், விமானிகள், விமானப் பணியாளர்கள் என அனைவரும் தற்போது காவல் துறையினரின் கண்காணிப்பிற்கும், புலனாய்வுகளுக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள்.
 
விமானி சஹாரியின் வீடு மலேசியக் காவல் துறையினரால் முற்றுகையிடப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி படங்களோடு செய்திகள் வெளியிட்டிருக்கின்றது.
 
 
 
மாதிரி விமானி அறை கண்டுபிடிப்பு
 
இந்த விமானியின் வீட்டில் சிமுலேட்டர் (ளுiஅரடயவழச) எனப்படும் போயிங் 777 விமானத்தை இயக்குவதற்கான மாதிரி விமானி அறை போன்ற பகுதி நிர்மாணிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காணாமல் போனதும் சஹாரி செலுத்திய போயிங் 777  விமானம்தான் என்ற நிலையில் ஏன் அவர் இப்படி ஒரு மாதிரி அறையை வீட்டில் நிர்மாணித்தார் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
 
சந்தேகம் 
 
விமானம் செலுத்துவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அந்த விமானி தனது பொழுது போக்கிற்காக இப்படி ஒரு மாதிரியை நிர்மாணித்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.
 
மாதிரி விமானி அறையில் சஹாரி இருப்பது போன்ற புகைப்படம் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதால், அவர் இந்த நடவடிக்கையை இரகசியமாக செய்திருக்கவில்லை என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த புகைப்படத்தில், மாதிரி விமானி அறையோடு, மூன்று கணினிகள், கணினித் திரைகள், கம்பிகளுடன் கூடிய தொலைத் தொடர்புக் கருவிகளும் இணைக்கப்பட்டிருப்பது தெரிகின்றது.
 
ஷா ஆலாமில் வசிக்கும் 53 வயதான சஹாரி அகமட் ஷா மிகுந்த சமூக அக்கறை கொண்டவர் என்றும் அவரை நம்பி தாராளமாக விமானத்தில் ஏறலாம் என்றும் காரணம் விமானப் பயணிகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் தனது உயிரைப் பணயம் வைத்து செயலாற்றக் கூடிய மனோபலம் கொண்டவர் அவர் என அவரது பக்கத்து வீட்டார் கூறியதாகவும் சிஎன்என் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
 
நேற்று பிற்பகல் பிரதமர் நஜிப், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவலை வெளியிட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு சிறிது நேரத்திற்குப் பின்னர் உடனடியாக காவல்துறையினர் சஹாரியின் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.
 
காணாமல் போன விமானம் பற்றி தகவல்கள் ஏதும் கிடைக்குமா எனத் துப்பு துலக்கவே காவல் துறையின் வீட்டை சோதனையிட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
 
பினாங்கில் பாலிக் புலாவில் உள்ள சஹாரியின் குடும்ப இல்லத்தைச் சோதனையிடுவதற்காக தங்களுக்கு இன்னும் ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்றும் காவல் துறை தலைவரின் கட்டளைக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் பினாங்கு காவல் துறையின் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாஃபி தெரிவித்துள்ளார்.
 
 
9/11 போன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த மலேசிய விமானம் கடத்தல்?
 
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதியன்று அமெரிக்கா பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி  தரைமட்டமாக்கப்பட்ட உலக வர்த்தக இரட்டை கோபுர கட்டிடங்கள்போன்று மாயமான மலேசிய விமானத்தை கடத்தி இந்தியாவை தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
 
மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு கடந்த சனிக்கிழமை கிளம்பிய விமானம் மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
 
சீனா 10 செயற்கைக்கோள்களை விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்தியாவும் தனது கடற்படையை தேடல் வேட்டையில் இறக்கியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று இத்தனை நாட்கள் கூறப்பட்டது. ஆனால் தற்போது விமானம் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
 
இந்நிலையில் வெளியுறவுக் கொள்கை ஆய்வாளரும், முன்னாள் அமெரிக்க துணை செயலாளருமான ஸ்ட்ரோப் டால்பாட் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
 
9.11 தாக்குதல் போன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
 
 
 
மலேசியா விமானத்தை தேடும் பணி சென்னை கடற்கரை வரை நீட்டிப்பு
 
காணாமல் போன மலேசியா விமானத்தை தேடும் பணி சென்னை கடலிலில் இருந்து சுமார் 300 கி.மீட்டர் தொலைவு வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்தியப்பெருங்கடல் பகுதியில்
இந்த நிலையில் மலேசிய விமானத்தை இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் தேட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் அடிமட்டத்தில் அந்த விமானம் சிக்கி இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்தான், இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளதாக அமெரிக்க ராணுவம் மற்றும் விமான போக்குவரத்து துறை வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
 
அந்தமான் கடல் பகுதியில்
மலாக்கா ஜலசந்திக்கு மேற்கே அந்தமான் கடல் பகுதியில் இந்த விமானத்தை தேடும் பணியில், இந்தியாவுடன் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பி-3சி ஆரியன் கண்காணிப்பு விமானம் ஈடுபட உள்ளது.
சென்னை கடற்கரை வரை
இந்த நிலையில், மலேசிய விமானத்தை தேடும் பணி சென்னை கடற்கரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மலேசியா அரசின் வேண்டுகோளை அடுத்து வங்காள விரிகுடா கடல் பகுதியிலும் தேடுதல் பணியை இந்தியா தொடங்கியுள்ளது.
 
வங்காள விரிகுடா பகுதியில்
மலேசிய அரசின் வேண்டுகோளை அடுத்து, இந்தியா 9,000 சதுர கிலோமீட்டர் வங்காள விரிகுடா கடல்பகுதியில் தேடும் பணியை விரிவுபடுத்தியுள்ளது. சென்னை கடலிலில் இருந்து சுமார் 300 கி மீட்டர் தொலைவு வரை தேடும் பணி விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...