Jul 16, 2013

வெயிலிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க எளிய வழிகள் சில..


வெயிலிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க எளிய வழிகள் சில...


* சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது. இதைத் தடுக்க கடல்பாசி, சந்தன எண்ணெய், பன்னீர் மூன்றையும் சில துளிகள் கலந்து தடவினால் தோல் அழகு பெறும். ஜாதிக்காயும், சந்தன பவுடரும் கூடக் கலந்து போடலாம். அல்லது கசகசாவில் எலுமிச்சை சாறு கலந்து போடலாம்.
* பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, முகத்தில் பூசவும். அரைமணி நேரம் கழித்து, வெந்நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.
* கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம்.
* பப்பாளிச் சாற்றை முகத்தில் தடவினால், வியர்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.
* எல்லா வித பழங்களும் முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும்.

பொலிவான முகம் வேண்டுமா? ஆவி பிடிங்க...


பொலிவான முகம் வேண்டுமா? ஆவி பிடிங்க...


சிலர் அழகாக காணப்பட வேண்டுமென்று சருமத்திற்கு பலவிதமான அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், அத்தகைய அழகுப் பொருட்கள் தற்காலிகமான அழகைத் தான் தரும் இதற்கு உதாரணம், ஒவ்வொரு நாளும் அன்றைய நாள் முடிவில் சருமமானது பொலிவிழந்து, கருமையாக காணப்படும்.
ஏனெனில் சருமத்தில் அழுக்குகள், இறந்த செல்கள் அப்படியே தங்கியிருப்பதால், அவை பொலிவிழந்த சருமத்தை வெளிப்படுத்துகிறது.
இதனால் சிலர் முகத்திற்கு சவர்க்காரம் அல்லது 'ஃபேஸ் வாஷ்' போன்றவற்றை பயன்படுத்துவார்கள். இருப்பினும், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்காமல், அவை வறட்சியான சருமத்திற்கு தான் வழிவகுக்கும்.
ஆகவே, பலர் இதற்காக 'ஃபேஸ் மாஸ்க்', 'ஸ்கரப்' போன்றவற்றை பயன்படுத்துவார்கள். ஆனால் அவை அனைத்தும் ஆவி பிடிப்பதற்கு சமமாகாது. ஏனெனில் ஒருமுறை முகத்திற்கு ஆவிபிடித்தாலும், சருமத்துளைகள் நன்கு தளர்ந்து, அங்கு தங்கியிருக்கும் இறந்த செல்கள் மற்றும் மாசுக்களை முற்றிலும் அகற்ற முடியும்.
மேலும் ஆவி பிடித்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளை போக்கலாம். பொதுவாக ஆவி பிடிப்பது என்பது மிகவும் எளிமையானது. அத்தகைய ஆவி பிடிப்பதில் பல வழிகள்

Hereafter (2010) - Realistic Tsunami Scene Scary..



நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன?

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது


இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு ராணுவ பயன்பாடு உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில் அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேசுவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத




Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...