Feb 23, 2013

திருப்பதி வெங்கடாஜலபதியின் உருவத்துடன் கைக்கடிகாரம்! சுவிஸ் நிறுவனம் அசத்தல்



  • 2
     


watch_tripathiஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவில், வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில் 2-ம் இடத்தில் உள்ளது.
மிகவும் செல்வாக்கு மிகுந்த கடவுளாக திகழும் இந்த திருப்பதி வெங்கடாஜலபதியின் தரிசனம் எப்போதும் கிடைக்க வேண்டும் என்றே அவரது பக்தர்கள் விரும்புவார்கள்.
அவர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் சுவிட்சர்லாந்து நிறுவனம் அழகான, ஆடம்பரமான கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

மஞ்சள் மருத்துவக் குணங்கள்

The size of the tree bark is yellow in color yellow. The bark, leaves with a medical nature. The leaves bitter taste, is vice cuvaiyakak Karppu taste. Is to increase the heat of the drought.இம்மரத்தின் பட்டை பருமனாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மரப்பட்டை, இலை மருத்துவக் குணம் உடையது. இதன் இலைகள் கசப்புச் சுவையும், துணைச் சுவையாகக் கார்ப்புச் சுவையுடனும் இருக்கும். வறட்சித் தன்மையும் சூட்டை அதிகரிக்கச் செய்யும் தன்மையும் கொண்டது. ரணம், நீரிழிவு, அரிப்பு ஆகியவற்றைப் போக்கும் குணமுண்டு. தமிழகம் எங்கும் காடுகளில் காணப்படுகின்றது.


மஞ்சள் மருத்துவக் குணங்கள்

மர மஞ்சளின் பட்டையை எடுத்து விழுதாய் அரைத்து ரணங்களில் பூசி வர

உடலின் நோய்த் தொற்று நீக்கும் துளசி


Easily available everywhere and a lot of greatness in basil leaves. If you eat healthy, live tulacic leaves daily bowel, stomach, mouth-  related problems will not get any. Digestive power, fresh basil leaves the body throughout the day can.எங்கும் எளிதாகக் கிடைக்கும் துளசி இலையில் மகத்துவங்கள் ஏராளம். ஆரோக்கியமாக வாழ துளசிச் இலையை தினமும் தின்று வந்தால் குடல்,  வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் வராது. ஜீரண சக்தியும், நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் உடலில் ஏற்பட்ட படைச்சொரி  மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து சாப்பிட்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு  தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை  தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம்  துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன்  குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள  குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

பனிப்புயல் தாக்குதல் சிகாகோவில் 270 விமானங்கள் ரத்து


கான்சாஸ் சிட்டி: அமெரிக்கா மீண்டும் பனிப்புயல் தாக்கியது. வடகிழக்கு திசை நோக்கி வீசும் பனிப்புயலால் மின்னசோட்டா மாகாணம் முதல் ஒஹியோ மாகாணம் வரை உள்ள பகுதிகளில் பனி படர்ந்துள்ளது.கான்சாஸ் நகரில் 30.5 செ.மீ. உயரத்துக்கு பனி படர்ந்தது. இதனால் கான்சாஸ் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது.சிகாகோ நகரில் உள்ள 2 விமான நிலையங்களில் 270 விமானங்களும், செயின்ட் லூயிஸ் மாகாணத்தில் உள்ள லாம்பர்ட் விமான நிலையத்தில் 320 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.இந்த வார இறுதியில் இப்பனிப்புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நியூ இங்கிலாந்து பகுதிகளில் ஏராளமான பனிப்பொழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

2013ல் இந்திய இணையம்

Posted: 20 Feb 2013

இந்தியாவில் இணையப் பயன்பாடு 2013 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளில், அதன் பொற்காலத்தைக் காண இருக்கிறது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

இணைய வழி வர்த்தகம் மிக வேகமாக வளரும் என்றும், அதன் சார்பான இணையப் பயன்பாடு தற்போது இருப்பதனைக் காட்டி லும் அதிக வளர்ச்சி பெறும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. 

இந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற இருப்பதைக் கவனத்தில் கொள்ளும் முன், இந்த 2013 ஆம் ஆண்டில் எந்த எந்த வகைகளில், பிரிவுகளில் இணைய வளர்ச்சி இந்தியாவில் இருக்கும் என்பதனைக் காணலாம்.

ஏறத்தாழ 15 கோடி இணைய பயனாளர்களுடன், இந்தியா உலக அளவில்

அதிக பயனாளர்களைக் கொண்டுள்ள முதல் 20 இணைய தளங்கள்

Posted: 21 Feb 2013

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. 

அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். 

இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம். 


எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தனி நபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 கோடியே 30 லட்சம். முதன் முதலில் இது தொடங்கிய போது, பொருட்களைப் பெற்று, பேக் செய்து அனுப்பும் பணியைத்தான் மேற்கொண்டதாக இருந்தது. தற்போது இதன் இமாலய வளர்ச்சி, இணைய வர்த்தகத்தின் சிறப்பினைக் காட்டுவதாக அமைந்துள்ளது. 

எதிர்வரும் 28ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பட்டமளிப்பு!

Jaffna-Studentsயாழ். பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 28ஆம் திகதி வியாழக்கிழமை கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார்.
குறித்த பட்டமளிப்பு விழாவில் 1236 பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
இது தொடர்பில் பதிவாளர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு நிகழ்வில் 1236 பேருக்கு பட்டம் வழங்கப்படவுள்ளதுடன் மேலும் இரண்டு பேருக்கு கலாநிதிப்பட்டமும் வழங்கப்படவுள்ளது. இதில் உள்வாரி மற்றும் வெளிவாரி ஆகிய பிரிவினர்களும் உள்ளடங்குகின்றனர்.
அதன்படி வெளிவாரி மாணவர்கள் 253 பேரும் மேற்படி பட்டதாரிகள் 189பேரும் முதுநிலை பட்டப்பின் மாணவர்கள் 150 பேரும் டிப்ளோமா பட்டதாரிகள் 57 பேரும் பட்டம் பெறவுள்ளனர்.
யாழ்பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சிவசூரிய தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் 6 அமர்வுகளைக் கொண்டதாக நடைபெறும்.
எனினும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...