Feb 4, 2013

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்

அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கடந்த 1990ம் ஆண்டில் இருந்து விண்வெளியை ராடார்களின் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு ராட்சத விண்கல் பூமியை நோக்கி பறந்து வருவது தெரியவந்துள்ளது. சுமார் 50 மீற்றர் அகலம் கொண்ட அந்த ராட்சத விண்கல்லூக்கு 2012 டி14 என்று பெயரிட்டுள்ளனர்.
அக்கல் தற்போது பூமியில் இருந்து 27,680 கி.மீற்றர் தூரத்தில் உள்ளபோதும் இந்த தூரம் பூமிக்கும் ராட்சத விண்கல்லூக்கும் இடையே மிக குறைவானது என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விண்கல் நிச்சயம் பூமியை தாக்காது என்றும் வருகிற 15ம் திகதி அது பூமியை கடந்து செல்கிறது எனவும் நாசா விஞ்ஞானி டான் யியோ மான்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற ஒரு ராட்சத விண்கல் கடந்த 1908ம் ஆண்டு பூமியை தாக்கியது. ரஷ்யாவின் சைபீரியாவில் வனப்பகுதியில் விழுந்த இந்த விண்கல்லால் பல நூறு சதுர கி.மீற்றர் தூரத்துக்கு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு கோடீஸ்வரர்களுக்காக சுவிஸ் வங்கிகளில் புதிதாக பெட்டகவசதி!

News Service
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்களுக்காக, தங்கக் கட்டிகள், அதிக மதிப்புடைய சுவிஸ் ஃபிராங்க் கரன்சி ஆகியவற்றை சேமிப்பதற்கான பெட்டக வசதி உள்பட சிறப்பு கணக்கு சேவையை தொடங்கி உள்ளன. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற உலக பொருளாதார பேரவையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட சுவிஸ் வங்கிகள் இந்தத் தகவலை தெரிவித்தன.
தங்கக் கணக்கு மற்றும் வைரம், 1,000 சுவிஸ் ஃபிராங்க் கரன்சி ஓவியங்கள் மற்றும் கலை படைப்புகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களை சேமிப்பதற்கான பாதுகாப்புப் பெட்டக வசதிக்கான தேவை அதிகரித்து வருவதால், அதற்கான கட்டணங்களை இவ்வங்கிகள் கணிசமாக உயர்த்தி உள்ளன. இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினரின் கறுப்புப் பணத்துக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் அடைக்கலம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வங்கிகளில் இந்தியர்கள் மட்டும் பல லட்சம் கோடி முதலீடு செய்திருப்பதாகவும் அவற்றை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக, சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் ரகசியக் கணக்கு விவரங்களைக் கேட்டுப் பெறுவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்படி, இந்தியர்கள் ரூ.12,800 கோடி முதலீடு செய்திருப்பதாக சுவிட்சர்லாந்து தேசிய வங்கி தெரிவித்துள்ளது. சேமிப்புக் கணக்கில் உள்ள முதலீடு தொடர்பான விவரங்களை மட்டுமே கேட்டுப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன. இந்த ஒப்பந்தங்களின்படி, பாதுகாப்புப் பெட்டக விவரங்களை கேட்க முடியாது என்பதால், இத்தகைய புதிய சேவையைத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

300 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞானி நியூட்டன் எழுதிய புத்தகங்கள்!

News Service
விஞ்ஞானி ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகங்கள் 300 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் கிடைத்துள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன். பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதை கண்டுபிடித்தவர். ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு என்பது உள்பட இயக்கம் தொடர்பான விதிகளை (லா ஆப் மோஷன்) கூறியவர். இயற்பியல் மட்டுமின்றி கணக்கு, வானியல், பொருளாதாரம் ஆகிய துறைகளிலும் வல்லுனராக திகழ்ந்தவர். இங்கிலாந்தில் கி.பி. 1642-ல் பிறந்த இவர் 1727-ல் இறந்தார்.
 
தன் கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் கோட்பாடுகள் தொடர்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்தின் ஸ்டபோர்டுஷயர் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் சுற்றுப்பகுதிகளில் புராதன பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சியில் வில் கார்சைடு (16) என்ற மாணவன் ஈடுபட்டிருந்தான். அப்போது லைம் என்ற பள்ளி வளாகத்தின் ஆய்வுக்கூடத்தில் ஒரு பீரோவில் தூசி படிந்த நிலையில் ஒரு பெட்டி இருப்பதை அவன் கண்டுபிடித்தான். அந்த பெட்டியில் 3 புத்தகங்கள் இருந்தன. அவை லத்தீன் மொழியில் ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகங்கள்.
பிலாசபி நேச்சுரலிஸ் பிரின்சிபியா மேத்தமேடிகா என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த புத்தகம் மூன்று பாகங்களாக உள்ளன. 1687-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டவை. அந்த புத்தகங்களில் புவிஈர்ப்பு விசை மற்றும் இயக்க விதிகள் தொடர்பாக ஏறக்குறைய 1000 பக்கங்களுக்கு நியூட்டன் எழுதியுள்ளார். அந்த பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராக 1874-ல் இருந்த பிரான்சிஸ் எலியன் கிச்சனர் என்பவர் அந்த புத்தகங்களை வைத்திருந்திருக்கலாம் என தெரிகிறது. புத்தகங்கள் வரலாற்று பெருமை வாய்ந்தவை என்பதால் அவற்றை விற்கப் போவதில்லை என்று பள்ளி நிர்வாகி ஜூலி கூறியுள்ளார்

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்!

News Service
அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து விண்வெளியை ராடார்களின் மூலம் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு ராட்சத விண்கல் பூமியை நோக்கி பறந்து வருவது தெரிந்தது. சுமார் 50 மீட்டர் அகலம் கொண்ட அந்த ராட்சத விண்கல்லுக்கு 2012 டி14 என பெயரிட்டுள்ளனர். அக்கல் தற்போது பூமியில் இருந்து 27,680 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த தூரம் பூமிக்கும் ராட்சத விண்கல்லுக்கும் இடையே மிக குறைவானது என கணிக்கப்பட்டுள்ளது.
  
இந்த விண்கல் நிச்சயம் பூமியை தாக்காது. வருகிற 15-ந்தேதி அது பூமியை கடந்து செல்கிறது. இந்த தகவலை நாசா விஞ்ஞானி டான் யியோ மான்ஸ் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு ராட்சத விண்கல் கடந்த 1908-ம் ஆண்டு பூமியை தாக்கியது. அப்போது அது ரஷியாவின் சைபீரியாவில் வனப்பகுதியில் விழுந்தது. இதனால் பல நூறு சதுர கி.மீட்டர் தூரத்துக்கு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...