Nov 3, 2012

சிரியாவில் தீவிரமடைந்து வரும் உள்நாட்டு போர்


 ஞாயிற்றுக்கிழமை, 04 நவம்பர் 2012
சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் படைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் மிக தீவிரமாக நடந்து வருகிறது.சிரியாவின் தலைநகர் டமாஸ்கசுக்கும், வர்த்தக நகரமான அலெப்பாவிற்கும் இடையே உள்ள முக்கிய விமான தளமான டாப்டனாசை போராட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே இராணுவம் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள கோலன் ஹைட்ஸ் பகுதிகளுக்கு சிரியா மூன்று இராணுவ டாங்கிகளை அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரேல் ஐ.நாவிடம் குற்றம் சுமத்தி உள்ளது.

எதனாலே உன் சீற்றம்


அழகான உலகிலே
இழிவான செயல்களால்
இயற்கை அன்னையே
இயலாது கொந்தழிக்கின்றாயா?
இல்லையேல் எதனாலே 
உன் சீற்றம் ???

வாழ்ந்து முடித்தோர் 
எது வந்தாலும் ஏற்கும் நிலையில்....
வாழ ஆசைகொண்டோர்
கண்களிலே பல ஏக்கம்...!!!
இடையினர் மனங்களோ
உன்னை எதிர்கொள்ளும் பயத்தினிலே..!!!
ஏதும் அறிய குழந்தைகளோ 
குறும்புகளுடன் சந்தோஷமாய்...!!!
நாளைய விடியலுக்காய்
விழித்திருக்கும் பல விழிகள்....!!!
எப்படி இருப்பினும்
உன்னை எதிர்கொள்ள
எம்மால் முடியாதம்மா...!!!

அடுத்தடுத்து துன்பங்கள்
அயராது தாக்கினாலும் 
எதிர்நீச்சல் போட்டிடலாம்..!!
அன்னையே உன்னை 
எதிர்த்திட முடியாதம்மா...!!!
இரங்கலாய் கேட்கின்றோம் 
இரக்கம் காட்டாயோ????

விண்டோஸ் 8ல் மெட்ரோ இல்லை


விண்டோஸ் 8 சோதனைத் தொகுப்பு வாடிக்கையாளர் களுக்குத் தரப்பட்ட நாள் முதல், அதன் இன்டர்பேஸ் என்னும் இடைமுகம் "மெட்ரோ இன்டர்பேஸ்' என அழைக்கப்பட்டது.

ஆனால், பல்வேறு சட்ட சிக்கல்கள் அதில் ஏற்பட்டதால், மெட்ரோ என்ற பெயரை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பயன்படுத்துவதில்லை என்ற முடிவை, மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது.


"மெட்ரோ' என்ற பெயரினை, சியாட்டில் நகரத்தில் செயல்படும் போக்குவரத்துக் கழகத்தின் இயக்க முறையினால் கவரப்பட்டு, மைக்ரோசாப்ட் தேர்ந்தெடுத்தது. சியாட்டில் நகரில் தான் மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகம் இயங்குகிறது.

சூடு பிடிக்கும் மொபைல் கதிர்வீச்சு

மொபைல் போன்கள் பயன்படுத்தப்படுகையில் ஏற்படும் கதிர் வீச்சு இதயம், மூளை ஆகியவற்றை அதிகம் பாதிக்கிறது எனவும், அபாய அளவில் கதிர் வீச்சு உள்ள போன்களைத் தடை செய்திட வேண்டும் என்றும் பல அறிக்கைகளைப் படித்து வருகிறோம்.

அரசு இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் பத்திரிக்கைகள் வாயிலாக வெளி வந்த வண்ணம் உள்ளன.

மேலை நாடுகளில் இந்த பிரச்னையை மிகக் கவனத்துடன் அரசுகள் கையாண்டு வருகின்றன. பாதிக்கக் கூடிய அளவில் கதிர்வீச்சு இருக்கும் போன்களை அங்கு விற்பனை செய்திட முடியாது.

இந்தியாவில் இந்த விழிப்புணர்ச்சி மெதுவாக ஏற்பட்டு வருகிறது. இதனால்,

ஜாவாவை நீக்கியது ஆப்பிள்

ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா சாப்ட்வேர் புரோகிராமினைத் தன் மேக் கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து நீக்கியுள்ளதாக, ஆப்பிள் அறிவித்துள்ளது. 

தன் மேக் ஓ.எஸ். எக்ஸ் சிஸ்டத்தில், இதுவரை ஜாவா சாப்ட்வேர் தொகுப்பின் இயக்கத்தை இணைத்து ஆப்பிள் வெளியிட்டது. பயனாளர்களுக்கு ஜாவா பாதுகாப்பற்ற தன்மையைத் தருவதாகவும், அதன் மூலம் வைரஸ் மற்றும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் பரவும் வாய்ப்பு எளிதாகின்றது என்றும், இணையவெளி பாதுகாப்பு வல்லுநர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவினை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது. 

ஆனால், இதுதான் காரணம் என்று குறிப்பிட்டு எதனையும் கூறவில்லை

இன்டர்நெட்டில் புதுப்பாதை

இந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழி வகை தொடங்கப்பட உள்ளது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதனை தனி அடையாளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படுகிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. Internet Protocol version 4 (IPv4) என அழைக்கப்படும் இந்த முறையானது, 1981ல் தொடங்கப்பட்டது.

தற்போது இதன் திறன் முழுமையும் பயன்படுத்தப் பட்டுவிட்டதால், இனிமேல் முகவரிகளை வழங்க இயலா நிலைக்கு நாம் நெருங்கி விட்டோம். சென்ற பிப்ரவரி 1 அன்று தான், முகவரிகளைத் தரும் தொகுதிகளில் இறுதி தொகுதி வழங்கப்பட்டது.

ஆசிய பசிபிக் நாடுகளுக்கென ஒதுக்கப்பட்ட முகவரிகள் எண்ணிக்கை 2012ல்

செய்திகளைக் காவும் பத்திரிகைகளே நோயையும் காவுகின்றனவாம் - நிபுணர்கள் எச்சரிக்கை!

செய்திகளைக் காவும் பத்திரிகைகளே நோயையும் காவுகின்றனவாம் - நிபுணர்கள் எச்சரிக்கை!
[Sunday, 2012-11-04
News Service மருத்துவமனைகளில், வரவேற்பறைகளில் கிடக்கும், பழைய பத்திரிகைகளின் மூலம் தொற்று நோய் பரவும், என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.தனியார் மருத்துவமனைகளில், டாக்டரை பார்க்க, காத்திருக்கும் நேரத்தை சமாளிக்க, வரவேற்பு அறைகளில், பழைய பத்திரிகைகளை வைத்திருப்பார்கள். நோயாளிகள் பலர் இதை தொட்டு, படிப்பதால், பலருக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளதாக பிரிட்டனின், தேசிய சுகாதார மைய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
  
பிரிட்டனின், டோர்செட் மாவட்டத்தில், லைம்ரெஜிஸ் பகுதியில் உள்ள, பல் மருத்துவமனையில் 2004ம் ஆண்டு வெளிவந்த பத்திரிகைகள்,

கி.மு 4700 ஆண்டுகள் பழமையான நகரம் பல்கேரியாவில் கண்டுபிடிப்பு!

கி.மு 4700 ஆண்டுகள் பழமையான நகரம் பல்கேரியாவில் கண்டுபிடிப்பு!
[Friday, 2012-11-02
News Service ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல்கேரியா நாட்டில் கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய 4700 ஆண்டுகள் பழமையான நகரம் ஒன்றை அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.அந்த நாட்டின் புரோவாடியா நகருக்கு அருகே பூமிக்கடியில் இருந்த சுற்றுச்சுவருடன் கூடிய ஒரு 2 அடுக்கு மாடி வீடு மற்றும் கல்லறைகளை அவர்கள் தோண்டியெடுத்துள்ளனர்.
  
கி.மு. 4700 - 4200 ஆண்டுகள் வரை பழமையானதாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள இந்த நகரில் 350 குடும்பங்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.இந்த இடம் உப்பு உற்பத்தி மையமாக இருந்திருக்க வேண்டும். இங்குள்ள நீரூற்று தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு செங்கற்களை அவர்கள் உற்பத்தி செய்து, இறைச்சியை பாதுகாப்பதற்கு அதை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த நகரத்தை நிர்மாணிக்க உதவிய

அமெரிக்க அதிபர் தெரிவு செய்யப்படுவது எப்படி? - வித்தியாசமான நடக்கும் தேர்தல்!

அமெரிக்க அதிபர் தெரிவு செய்யப்படுவது எப்படி? - வித்தியாசமான நடக்கும் தேர்தல்!
[Saturday, 2012-11-03
News Service உலக கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 6 ம் தேதி நடக்கவுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் உச்சக்கட்ட பிரச்சாரம் என்று ஊடகங்கள் சொல்லி வருகின்றன. ஆனால் உண்மையில் இந்த தேர்தல் என்ற ஜனநாயக நடைமுறை, இந்தியா அல்லது இலங்கை போன்ற, பின் காலனிய ஜனநாயக சமூகங்களைப் போலல்லாமல், சற்று வித்தியாசமாகவே நடக்கிறது.
  
அமெரிக்க அதிபர் தேர்தல், பலரும் நினைப்பதைப் போல நேரடியான வாக்களிப்பு மட்டும் அல்ல. போட்டியிடும் வேட்பாளர், நாட்டின் ஒட்டு மொத்த பதிவான வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளை வாங்கினால் மட்டும் போதாது. அவர் , மாநிலங்களில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் " தேர்வு செய்வோர் அவை" யில் பெரும்பான்மை வாக்குகளைப்பெற வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன்

சாண்டியின் சண்டித்தனத்துக்கு ஐ.நாவும் தப்பவில்லை!

சாண்டியின் சண்டித்தனத்துக்கு ஐ.நாவும் தப்பவில்லை!
[Saturday, 2012-11-03
News Service அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகக் கட்டடங்கள் சாண்டி புயலால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ளது ஐ.நா. சபை வளாகம். சமீபத்தில் அமெரிக்காவை தாக்கிய சாண்டி புயலால், பல பகுதிகள் நீரில் மூழ்கின. பாலங்கள், கட்டடங்கள் சேதமடைந்தன.
  
புயலின் சீற்றத்துக்கு ஐ.நா. சபையின் கட்டடமும் தப்பவில்லை. கடந்த திங்கள்கிழமை முதல் மூடப்பட்டிருந்த ஐ.நா. கட்டடம், வியாழக்கிழமை திறக்கப்பட்டது. அலுவலகத்தைப் பார்வையிட்ட ஐ.நா. அதிகாரிகள், தகவல் தொடர்பு சாதனங்களும், கட்டமைப்பு வசதிகளும் கடுமையாக சேதமடைந்திருப்பதாக கண்டறிந்தனர்.
இது குறித்து ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறியதாவது, மின் சாதனப்

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் - இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஒபாமா,ரோம்னி!

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் - இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஒபாமா,ரோம்னி!
[Saturday, 2012-11-03
News Service
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னியும் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிபர் ஒபாமா ஒகியோவிலும், மிட்ரோம்னி விஸ்பான்சின் நகரிலும் பிரசாரம் மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
  
அப்போது, ஒபாமா தனது ஆட்சி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை

2 இலட்சம் டொலர் கொடுத்து காதலியை கழற்றி விடுகிறார் சிம்பாப்வே பிரதமர்!

2 இலட்சம் டொலர் கொடுத்து காதலியை கழற்றி விடுகிறார் சிம்பாப்வே பிரதமர்!
[Sunday, 2012-11-04
News Service சிம்பாப்வே நாட்டின் பிரதமராக மோர்கன் சுவான்கிரை பதவி வகிக்கிறார். இவர் லொகார் டியா கரிமாட்டுசன்கா என்ற பெண்ணை காதலித்தார். அவரை கடந்த ஆண்டு அதிகார பூர்வமற்ற முறையில் திருமணம் செய்தார். இந்த நிலையில், அவர் மற்றொரு பெண்ணை கடந்த செப்டம்பரில் முறைப்படி திருமணம் செய்தார்.
  
இதை அறிந்த அவரது காதலி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு பிரதமர் மோர்கன் காதலியை கழற்றி விட அவருக்கு 2 இலட்சம் டொலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. அதை மோர்கன் ஒப்புக் கொண்டார்.

எலும்புகள் பலமா இருக்க உண்ண வேண்டிய உணவுகள்..

எலும்புகள் பலமா இருக்க உண்ண வேண்டிய உணவுகள்..

News Service
எளிதில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம் வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற்படுவது வழக்கம். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தியில்லாமல் எளிதில் உடையும் நிலையை அடைகின்றன.
  
இளைய தலைமுறையினர் பாதிப்பு
சுண்ணாம்பு சத்து, வைட்டமின் டி சத்து குறைவு போன்றவற்றால் இந்த நோய் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு காணப்பட்ட இந்த நோய் தற்போது இளம் வயதினருக்கும் காணப்படுகிறது. பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, போதிய அளவு உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்

காதைப்பற்றி காதோரம் ஒரு செய்தி..

காதைப்பற்றி காதோரம் ஒரு செய்தி..
[Friday, 2012-11-02
News Service காது.. உட‌லி‌ல் ‌மிக‌ச் ‌சி‌றிய உறு‌ப்புதா‌ன். ஒ‌லிகளை உ‌ள்வா‌ங்‌கி அதனை மூளை‌க்கு‌க் கொ‌ண்டு செ‌ல்லு‌ம் ப‌ணியை‌ச் செ‌ய்வதுதா‌ன் கா‌தி‌ன் வேலையாகு‌ம்.
  
ஆனா‌ல், இ‌ந்த கே‌ட்கு‌ம் ச‌க்‌தி ‌இ‌ல்லாம‌ல் போனா‌ல்.. நா‌ம் பேசு‌ம் ச‌க்‌தியை பெற முடியாது எ‌ன்பதுதா‌ன் மு‌க்‌கியமான ‌விஷய‌ம். பல ‌விஷய‌ங்களை நா‌ம் கே‌ட்டு‌த்தா‌ன் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌கிறோ‌ம், ஒருவருட‌‌ன் ஒருவ‌ர் பே‌சி‌ப் பழகு‌ம், பு‌ரி‌ந்து கொ‌ள்ளவு‌ம் காது இ‌ன்‌றியமையாததாக உ‌ள்ளது.
செவியில் புறச்செவி (வெளிச்செவி), இடைச்செவி (நடுச்செவி), உட்செவி

சிறுநீரக நோய்களைத் தவிர்க்கும் வழிமுறைகள்..!


[Saturday, 2012-11-03
News Service இந்தியாவில் கோடிக் கணக்கானோர் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
  
ஆண்டுக்கு ஆண்டு இது அதிகரித்து வருவதாகவும், வியாதி முற்றிய நிலையில் சிறுநீரகம், செயலிழப்பு ஏற்பட்டு அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பது நோய் முற்றிய நிலையில்தான் அவர்களுக்கு தெரிய வருகிறது.
சிறு நீரக வியாதிகளை பல்வேறு பரிசோதனைகள் மூலம் ஆரம்பத்திலே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் மிக

ஜப்பான் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சீன கப்பல்கள்




[ சனிக்கிழமை, 03 நவம்பர் 2012,
ஜப்பான் கடல் எல்லைக்குள் சீனாவின் கப்பல்கள் மீண்டும் அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள சென்காகு தீவுகளுக்கு ஜப்பானும், சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில் சென்காகு தீவு கடல் பகுதியில் சீனாவின் கடலோர கண்காணிப்பு படைக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் நேற்று அத்துமீறி நுழைந்தன. அவர்கள் ஜப்பான் கடற்படை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர்.
ஆனால் தங்கள் கடல் பகுதி எல்லையில் தான் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாக சீனா கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சான்டி புயலின் தாக்கம்: பெட்ரோலுக்காக அடித்து கொள்ளும் மக்கள்




[ சனிக்கிழமை, 03 நவம்பர் 2012,
அமெரிக்காவில் சான்டி புயல் பாதித்த பகுதிகளில் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில் கடந்த வாரம் மையம் கொண்ட சான்டி புயல் 15 மாகாணங்களை தாக்கியதில், 80க்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.
இதனால் சாலைகள் மற்றும் சுரங்க ரயில் பாதைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முழுமையாக தொடங்கவில்லை.
மேலும் அமெரிக்காவின் பல நகரங்களில் 40 லட்சம் பேர் மின்சாரம் இன்று தவிக்கின்றனர்.
பொலிஸ் நிலையங்கள் உட்பட அலுவலகங்களும், வர்த்தக நிறுவனங்களும் ப்ருக்ளின் நகரில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மின்சாரம் துண்டிக்கப்பட்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் போதிய ஆட்கள்

சீனாவின் அழைப்பை ஏற்று பீஜிங் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்துகிறார் அப்துல் கலாம்


abdulkalam_3
பீஜிங் : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதன் முறையாக சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணிபுரிந்த அவர், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடி வருகிறார்.பீஜிங் பல்கலைக்கழக தலைவர் ஜூ ஷான்லு

சாண்டி புயல் தாக்குதல்: அமெரிக்காவில் ரூ.1 லட்சம் கோடி சேதம்- சாவு 45 ஆக உயர்வு

சாண்டி புயல் தாக்குதல்: அமெரிக்காவில் ரூ.1 லட்சம் கோடி சேதம்- சாவு 45 ஆக உயர்வு

நியூயார்க், அக். 31-
 
கரீபியன் கடலில் உருவான சாண்டி புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் மையம் கொண்டுள்ளது. நேற்று இது நியூஜெர்சியை தாக்கியது. 13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய ராட்சத அலைகளால் கடல்நீர் ஊருக்குள் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்தது.
 
நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்கள் வெள்ளக் காடாகியுள்ளன.  மணிக்கு 135 கி.மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் மரங்கள் வேறோடு சாய்ந்தன. புயல் காரணமாக நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில் 45
Click Here
சாண்டி புயல் தாக்குதலை விண்வெளியில் இருந்து பார்த்த சுனிதா வில்லியம்ஸ்

சாண்டி புயல் தாக்குதலை விண்வெளியில் இருந்து பார்த்த சுனிதா வில்லியம்ஸ் 
அமெரிக்காவை சாண்டி புயல் புரட்டி போட்டது. அதன் தாக்குதலை விண்வெளியில் இருந்து அமெரிக்க வாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பார்த்தார்.
 
இது குறித்து அவர் ஒரு செய்தி அனுப்பியுள்ளார். அதில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது அமெரிக்காவின் கடற்கரை பகுதியில் சுழல் போல் சுற்றியபடி புயல் மையம் கொண்டிருந்தது. அதையும், அதன் சுழலை நாங்கள் (விண்வெளி வீரர்கள்) பார்த்தோம். மேலும், எங்கள் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சாண்டி புயல் கோரத்தாண்டவம்: பெட்ரோல், மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு

அமெரிக்காவில் சாண்டி புயல் கோரத்தாண்டவம்: பெட்ரோல், மின்சாரம் இன்றி மக்கள் தவிப்புClick Here

நியூயார்க், நவ.3-

கரீபியன் கடலில் உருவான சாண்டி என்ற பயங்கர புயல் இந்த வாரம் தொடக்கத்தில் அமெரிக்கா கிழக்கு கடற்கரை பகுதியை தாக்கி கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் அந்த பகுதியில் அமைந்துள்ள நியூயார்க், நியூஜெர்சி, கனெக்டிக்கட், மேரிலாந்து, வெர்ஜினியா, பென்னில்வானியா, வடக்கு கரோலினா உள்பட 15 மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது.

குறிப்பாக முக்கிய வர்த்தக நகரமான நியூயார்க் பேரழிவை சந்தித்தது. இங்கு

வடக்கு டொரண்டோ மக்கள் காலை எழுந்தவுடன் கண்ட இன்ப அதிர்ச்சி :

வடக்கு டொரண்டோ மக்கள் காலை எழுந்தவுடன் கண்ட இன்ப அதிர்ச்சி :
[Saturday, 2012-11-03
News Service வடக்கு டொரண்டோ நகரில் நேற்றையதினம் காலை எழுந்தவுடன் ஒரு இன்ப அதிர்ச்சியை கண்டுள்ளனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்று பார்த்ததும், கடுமையான பனிப்பொழிவால், எதிரே நிற்பவர்கள் கூட கண்ணுக்கு தெரியாத நிலை ஏற்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
  

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...