Dec 6, 2012


இந்த மாதம் டிசம்பர் மாதம் 21ம் திகதி மாயன் நாட்காட்டி முடிவிற்கு வருகிறது உலகம் அழியப்போகிறது என ஆரம்பித்து பல பல புனைகதைகளிற்கு கை, கால் வைத்து மக்களிடைய பீதியை ஏற்படுத்தும் முயற்சி அமெரிக்காவை உத்தியோகபூர்வமாக அறிக்கை விட வைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது.

பொதுவில் வதந்திகளுக்குப் பதில் கூறுவதில் அர்த்தமே இல்லை.  ஒரு வகையில் அது அந்த வதந்தியை மேலும் பரப்புவதாகவே அமையும்.

அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பூமி இருளில் மூழ்கிவிடுமாம். அது தான் அந்த வதந்தி. நாசா இது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த வதந்தி கூறுகிறது.


இது உண்மையா? அறிந்த வரையில் நாசா அப்படி எந்த எச்சரிக்கையையும்

சிறந்த நகரங்களின் பட்டியலில் ஒட்டாவா, டொரோண்டோவை முந்தியது வன்கூவர்!

சிறந்த நகரங்களின் பட்டியலில் ஒட்டாவா, டொரோண்டோவை முந்தியது வன்கூவர்!

News Service உலகளவில் தரமான வாழ்க்கைக்கு ஏற்ற நகரங்களின் வரிசையில் கனடாவின் வன்கூவர் ஐந்தாவது இடத்தைப்பிடித்துள்ளது. Mercer ஆய்வகம் உலகளவில், தரமான வாழ்க்கைக்கு ஏற்ற நகரங்கள் குறித்த பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளது.
  
இந்தப்பட்டியலில் வியன்னா முதலிடத்திலும், சூரிச் இரண்டாமிடத்திலும், ஒக்லாந்து மூன்றாமிடத்திலும், மியூனிச் நான்காமிடத்திலும் உள்ளன. வன்கூவர் ஐந்தாமிடத்தில் உள்ளது. கனடாவின் ஒட்டாவா 14வது இடத்தையும், டொரோண்டோ 15வது இடத்தையும், மொன்றியல்23வது இடத்தையும்,கேல்கரி32வது இடத்தையும் பிடித்துள்ளன.
வாழ்க்கைத்தரம் குறைந்த நகரங்களின் பட்டியலில் சூடான், சாட், போர்ட் ஆப் பிரின்ஸ் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசின் பாங்கூய் போன்றவை இடம்பெற்றுள்ளன.

சுவீடனில் கடும் பனிப்புயல் - நோபல் பெற்றவர்கள் அங்கு செல்ல முடியாமல் அவதி!



News Service கடும் பனிப்புயல் காரணமாக சுவீடனில் பல பகுதிகள் ஸ்தம்பித்துள்ளன. பஸ், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோபல் பரிசு பெற வந்தவர்கள் அவதிப்பட்டனர். சுவீடனில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் நேற்று பனிப்புயல் வீசியதால் 30 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.
  
இதனால் தலைநகர் ஸ்டாக்ஹோம் உள்பட பல நகரங்கள் பனியில் மூடின. முக்கிய விமான நிலையம் ஸ்தம்பித்தது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஸ்டாக்ஹோம் விமான நிலையத்துக்கு நேற்று வருவதாக இருந்தது. ஆனால், பனி காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எந்த விமானமும் வரவில்லை.
இதுகுறித்து நோபல் பரிசு வழங்கும் நிர்வாகிகள் கூறுகையில், நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் புதன்கிழமை வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கேற்ப இங்கு பல்வேறு கருத்தரங்கு, மாநாட்டு ஏற்பாடுகள் தயாராக உள்ளன. ஆனால், பனிப்பொழிவு காரணமாக தாமதமாகிறது என்றனர்.
பரிசளிப்பு விழா திங்கட்கிழமை நடக்கிறது. அதற்குள் நிலைமை சரியாகி விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சாலைகளில் பனி மூடிக்கிடப்பதால் மக்கள் வெளியில் வரமுடியவில்லை. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் 30 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகி உள்ளது. மேலும் 20 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்று எச்சரித்துள்ளனர். வழக்கத்துக்கு மாறான பனிப்பொழிவால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
  

வரும் 21ம் திகதி உலகம் அழியாது - வதந்தியை நம்பாதீர்கள் என்கிறது அமெரிக்கா!

வரும் 21ம் திகதி உலகம் அழியாது - வதந்தியை நம்பாதீர்கள் என்கிறது அமெரிக்கா!
[
News Service வரும் 21ம் திகதியுடன் மாயன் நாட்காட்டி முடிவதால், உலகம் அழியப் போகிறது என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  
அமைதியாய் இருங்கள்- உலகில் எந்த மாற்றமுமே டிசம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறப்போவதில்லை. மாயன் நாட்காட்டியில் கூட ஒரு ஆண்டுக்கான சுற்று டிசம்பர் 21ம் திகதி முடிந்து புதிய ஆண்டு டிசம்பர் 22ம் திகதி தொடங்குகிறதே தவிர அந்த நாட்காட்டியின் ஊழிக்காலம் முடியவில்லை என அந்த அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான வதந்திகள் கடந்த காலங்களிலும் பல்வேறு விதமாக வந்திருக்கின்றன. உலகம் அழியப்போகிறது என்ற வதந்தி 2003 , 2004ம் ஆண்டுகளில் கூட பரவின. எந்த ஒரு அழிவோ மாற்றமோ டிசம்பர் 21ம் திகதி இடம்பெறப்போவதில்லை. அது மற்றைய நாட்களைப் போல சாதாரண நாட்களே. கிரகங்கள் பூமியை நோக்கி வருகின்றன. எரிகற்கள் விழப்போகின்றன என்பதெல்லாம் கட்டுக்கதை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் பூமியை வந்தடையவிருக்கும் மர்ம பொருள்: நாசா தகவல்


ScienceCasts: Rock Comet Meteor Showerஎதிர்வரும் டிசம்பர் 13 அல்லது 14ம் திகதிகளில் வானியலில் குறிப்பிடத்தக்க மாற்றமொன்று நிகழவிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
கடந்த 1983ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி கண்டறியப்பட்ட 5.10 km விட்டத்தைக் கொண்டிருக்கும் rock comet எனும் வால்நட்சத்திரங்களின் துகள்கள் வந்து விழக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுவதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. இவற்றை விண்வெளிக்குப்பைகள் என்றும் சொல்வார்கள்.
கடந்த 2009ம் ஆண்டு நாசாவின் விண்கலமான STEREO-A இது போன்ற 3200க்கும் மேற்பட்ட துகள்களை அவதனிதிருந்தது.
மிகவும் பிரகாசமாக வந்து விழும் இத்துகள்கள் காற்றுமண்டலத்திற்குள் நுழையும்போது உராய்வு காரணமாக எரிந்து பெருமளவு சாம்பலாகிவிடும்.
மிகச் சிறியளவு துணிக்கைகளே பூமியை வந்தடையும் என்றும் இதன் மூலம் பெரியளவில் பாதிப்பு ஏற்படாதெனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.
டிசம்பர் 21ஆம் திகதி நிபிறு பிரளயம் : உலகம் அழியப்போகிறதா?

உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரித்துப்போகும் ஆனால் பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரும் ஒரே நாளில் மரித்துப்போனால்? எண்ணிப்பார்க்கவே எம்முள் அச்சம் குடிகொள்வதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் இது நடந்தே தீரும் என்கிறது ஒரு கூட்டம்

சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பூமியில் கோலோச்சி இ

ருந்த டைனோசோர்கள் அழிந்தது போல ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் மனித இனமும் வருகின்ற டிசம்பரில் ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் அழியப்போகிறது.

பூமியில் பாரிய எரி கல் ஒன்று மோதுண்டதனால் வெளியான வெப்பம், தூசு

பேஸ்புக் தளத்தில் பகிரப்பட்ட வீடியோக்களை Website இல் பயன்படுத்து​வதற்கு



முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது நண்பர்களை இணைத்து வைத்திருப்பதுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரும் தளமாகவும் காணப்படுகின்றது.
இதன் அடிப்படையில் புதிது புதிதாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறான வீடியோக்களை வலைத்தளங்களில் பயன்படுத்துவதற்கான வசதியினை தற்போது பேஸ்புக் தளம் தருகின்றது.
இதற்கு பேஸ்புக் தளத்தினுள் உங்கள் கணக்குகளை பயன்படுத்தி

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...