Dec 2, 2013

5 லட்சத்து 36 ஆயிரம் கி.மீட்டர் பயணித்து வெற்றிகரமாக சந்திரனை கடந்து செவ்வாய் நோக்கி விரையும் மங்கல்யான்



5 லட்சத்து 36 ஆயிரம் கி.மீட்டர் பயணித்து வெற்றிகரமாக சந்திரனை கடந்து செவ்வாய் நோக்கி விரையும் மங்கல்யான்
புதுடெல்லி, டிச.3-

செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கல்யான் விண்கலத்தை அனுப்பி உள்ளது. 450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியைச் சுற்றி வரும் மங்கல்யானின் சுற்று வட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2 லட்சம் கி.மீ. உயரத்துக்கு பல்வேறு சிக்கல்களுக்குப்பின் உயர்த்தப்பட்டது. சுற்று வட்டப்பாதையை

பலம் தரும் பலாக்கொட்டை



நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நம் பாரம்பரிய வழக்கம். அசைவ உணவை போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.

பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையைப் பெருக்கும் தன்மை உள்ளதுதான் பலாக்கொட்டை.”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக உட்கொள்ள ஏற்றது. 100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை.

இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக்

வெளிநாட்டு வாழ் ஆண்களுக்கான எளிதான மட்டன் பிரியாணி செய்முறை டிப்ஸ்


 
 
 
 
 
ஓர் சிறிய சமயல் டிப்ஸ்:- 

Like, Share & Tag ---> @[282030625230450:274:உணவே மருந்து]

வெளிநாட்டு வாழ் ஆண்களுக்கான எளிதான மட்டன் பிரியாணி செய்முறை டிப்ஸ் !!

தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி – 1 கிலோ
மட்டன் – 11/2 கிலோ
நெய் 250 கிராம்
தயிர் – 400 மில்லி (2 டம்ளர்)
பூண்டு – 100 கிராம்
இஞ்சி – 75 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலம் – 3 வீதம்
பெரிய வெங்காயம் – 1/2 கிலோ
தக்காளி – 1/4 கிலோ
பச்சை மிளகாய் – 50 கிராம், – எலுமிச்சை – 1,
பொதினா, கொத்தமல்லிதழை – கையளவு
கேசரிப்பவுடர் – சிறிதளவு
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு

முன்னேற்பாடுகள்:
1. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
2. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்
3. பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

செய்முறை;
1. குக்கரை அடுப்பில் வைத்து, சூடேறியது நெய்யை ஊற்றவும்

2. நெய் சூடேறியதும் ஏலம் பட்டை கிராம்பைப் போடவும்

3. பின்னர் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

4. பின்னர் அதில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதுகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்

5. கழுவி சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மட்டன் துண்டுகளை அதில் போட்டு சிறிது நேரம் கிளறவும்

6. தயிர், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கிளறிவிட்டு குக்கரில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

7. பின்னர் 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் வைத்து அதில் சிறிதளவு உப்பு போட்டு அரிசியை தனியாக வேறு பாத்திரத்தில் வேக வைத்துக்கொள்ளவும்

8. குக்கரில் உள்ள குருமாவில் எலுமிச்சைச் சாறு ஊற்றி புதினா மல்லித்தழை போட்டு கொதிக்க விடவும்

9. கொதிக்கும் குருமாவில் சமைத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கிளறி சமப்படுத்தவும்

10. கேசரி பவுடரை சிறிது பால் கலந்து பிரியாணி மீது ஒரு பக்கமாக ஊற்றி, மூடி வெயிட் போட்டு லேசான தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கிவிடவும்

11. நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி பிரியாணியை வேறுபாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு பின்பு பரிமாறவும்.
பிரியாணி பார்ப்பதற்கு சிகப்பு, வெள்ளைக் கலரில் அழகாகவும் ருசி மிக்கதாகவும் சுவையானதாகவும் இருக்கும். 
 
 
 

தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி – 1 கிலோ
மட்டன் – 11/2 கிலோ
நெய் 250 கிராம்
தயிர் – 400 மில்லி (2 டம்ளர்)
பூண்டு – 100 கிராம்
இஞ்சி – 75 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலம் – 3 வீதம்
பெரிய வெங்காயம் – 1/2 கிலோ

தக்காளி – 1/4 கிலோ
பச்சை மிளகாய் – 50 கிராம், – எலுமிச்சை – 1,
பொதினா, கொத்தமல்லிதழை – கையளவு
கேசரிப்பவுடர் – சிறிதளவு
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு

முன்னேற்பாடுகள்:
1. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

இதயத்துடிப்பை அதிகரிக்கும் காபின் சக்தி பானங்கள்

இதயத்துடிப்பை அதிகரிக்கும் காபின் சக்தி பானங்கள்


சமீபத்தில் வடஅமெரிக்காவில் கதிரியல் (ரேடியாலஜிகல்) சங்கத்தின் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஜெர்மனியின் பான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் குழு காபின் கலந்த சக்தி பானங்களைக் குடிப்பதால் இதயத்துடிப்பு அதிகரிப்பதை தங்களின் ஆய்வு நிரூபித்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இத்தகைய சக்தி பானங்களைக் குடித்த 17 பேரின் இதயங்களின் செயல்பாடுகள் ஒரு மணி நேரம் கழித்து குறிக்கப்பட்டன. அதில் அவர்களின் இதயத்துடிப்பு அதிகரித்திருப்பது தெரியவந்தது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இதுநாள்வரை இந்த சக்தி பானங்கள் இதயத்தின் செயல்பாடுகளில் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. சாதாரணமாகப் பருகும் காபி அல்லது கோலா போன்ற பானங்களைவிட இவற்றில் மூன்று மடங்கு காபின் அதிகமாகக் காணப்படுகின்றது. 

விரைவான இதயத்துடிப்பு, படபடப்பு, இரத்த அழுத்தம் அதிகரிப்பு, மிகக் கடுமையான சந்தர்ப்பங்களில் வலிப்பு மற்றும் திடீர் மரணம் போன்றவை இதன் பக்க விளைவுகளாக கூறப்படுகின்றன. எனவே, குழந்தைகளும், சில சுகாதார பாதிப்புகளைக் கொண்டவர்களும் இத்தகைய சக்தி பானங்களைத் தவிர்க்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜோனஸ் டோர்னர் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் குளிர்பான சங்கங்கள் ஏற்கனவே இந்த பானங்கள் குழந்தைகளுக்கானவை இல்லை என்பதைத் தெரிவித்துள்ளது.

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்




மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்!



'என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?' என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம். கொலஸ்ட்ரால் என்றால் என்ன, அது ஆபத்தானதா, கண்டறிவது எப்படி என்று இதய நோய் சிகிச்சை நிபுணர் ஆர்.ரவிகுமாரிடம் கேட்டோம்.
'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை.
நம் உடல் செல்கள் உற்பத்திய£வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது' என்றவர் கொலஸ்ட்ரால் கண்டறியும் முறை, தடுக்கும் வழிகளைப் பட்டியலிட்டார்.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்
அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.
1. கொலஸ்ட்ரால் அளவை அறிந்துகொள்ளுதல்
கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை

நோக்கியா 515


நோக்கியாவின் இரண்டு சிம் போன்களில், அண்மையில் விற்பனைக்கு அறிமுகமான நோக்கியா 515 சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. 

இரண்டு சிம் இயக்க போன்களைத் தாமதமாகவே தயாரித்த நோக்கியா நிறுவனம், தற்போது இந்த வரிசையில் பல போன்களைக் கொண்டு வந்துள்ளது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களை இயக்கலாம். 

இதன் பரிமாணம் 114 x 48 x 11 மிமீ. எடை 101.1 கிராம். பார் டைப் வடிவிலான இதில் வழக்கமான ஆல்பா நியூமெரிக் கீ போர்ட் தரப்பட்டுள்ளது. இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் உள்ளது. 

இதன் டச் ஸ்கிரீன் திரையில் மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. 

இதன் மைக்ரோ எஸ்.டி. போர்ட்டில் கார்ட் மூலம் 32 ஜிபி வரை இதன் ஸ்டோரேஜ் திறனை உயர்த்தலாம். இதன் முகவரி ஏட்டில், 1000 முகவரிகள் வரை பதிந்து வைக்கலாம். ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத் ஆகியவை 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி திறனை அளிக்கின்றன

பேஸ்புக் களப் பதிவு நீக்கம்


வெகு வேகமாகத் தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை பேஸ்புக் சமூக இணைய தளம் அதிகரித்து வருகிறது. அடிக்கடி பேஸ்புக் தளத்தினைப் பார்ப்பது ஒருவித மன நோயாகவே, மக்களிடம் அமைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

பேஸ்புக் சமூக இணைய தளத்தில், நாம் நம் உணர்ச்சி உந்துதலில், பல தகவல்களை, செய்திகளை, நம் கருத்தினப் பதிவு செய்துவிடுகிறோம். பின்னரே, சிலவற்றைப் பதியாமல் இருந்திருக்கலாமே என்று எண்ணுகிறோம். 

பதிந்தவற்றை எப்படி நீக்குவது எனத் தெரியாமல் பலர் உள்ளனர். இது மிகவும் எளிதான ஒன்றாகும். நீங்கள் பதிந்தவற்றை எப்போது வேண்டுமானாலும், நீங்கள் மாற்றலாம் அல்லது நீக்கலாம்.


நீங்கள் மாற்ற அல்லது நீக்க விரும்பும் பதிவின் வலது மூலையில், கர்சரைக் கொண்டு சென்று சற்று நகர்த்திப் பார்க்கவும். அப்போது கீழ் நோக்கிய சிறிய அம்புக் குறி ஒன்று காட்டப்படும். 

அதனைக் கிளிக் செய்தால், பதிவினை மாற்ற (edit or delete) அல்லது நீக்க என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும். இதில் உங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து

கூடுதல் வசதிகளுடன் செல்லினம் பதிவு 2





ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் தமிழ் உள்ளீடு செய்வதற்கான, பயன்பாட்டு தொகுப்பான, செல்லினம், தற்போது கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு பதிப்பு 2 ஆகக் கிடைக்கிறது. 

ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், தமிழில் உள்ளீடு செய்வதற்கென, மலேசியா வினைச் சேர்ந்த முத்து நெடுமாறன், செல்லினம் என்ற பயன்பாட்டு தொகுப்பினை பத்து மாதங்களுக்கு முன்பு, தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.

இந்த தொகுப்பினைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள் கொடுத்த பின்னூட்டத்திலும், ஆய்வின் அடிப்படையிலும், இந்த தொகுப்பு மேம்படுத்தப்பட்டு, ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தப்படும் செல்லினம் பதிப்பு 2 ஆக வெளிவந்துள்ளது. 

இதனையும் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று இலவசமாகத் தங்களின் ஆண்ட்ராய்ட்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...