Apr 30, 2012

உடலில் தழும்புகள் மறைவதற்கு

ஒருசிலருக்கு பிறக்கும் போதே முகத்திலும், உடலிலும் தழும்புகள், மச்சம், மரு போன்றவை இருக்கும்.
சிலருக்கு சின்னதாய் அழகாய் இருந்தாலும் ஒரு சிலருக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். இயற்கை முறையிலேயே இந்த தழும்பை போக்க ஆலோசனை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.

ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெய்க்கு சருமத்தை மென்மையாக்கும் தன்மை உள்ளது. இது ஆலிவ் எண்ணெயைக் கொண்டு தினசரி 10 நிமிடங்கள் தழும்பு உள்ள பகுதியில் மசாஜ் செய்யவும். தழும்பு படிப்படியாக மறையும். சருமம் மென்மையாகும்.

ஐஸ் கட்டி ஒத்தடம்: ஐஸ் கட்டியை மெல்லிய துணியில் கட்டி தழும்பு உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுக்கலாம். இதனால்

வேப்பங்காயின் மருத்துவ குணங்கள்

வைரஸ் காய்ச்சலால் தொழுநோய்,​ சிறுநீர் சம்பந்தமான நோய்களுக்கு வேப்பங்காய் நல்ல பலன் தருகின்றது.
வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும், சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும். எல்லா நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

வேப்பிலை உருண்டையைத் தேய்த்துக் குளித்தால் புண்கள் குணமாகும். வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.

வேப்பம் பழத்தை அரைத்து சாற்றை எடுத்து தோல் புண்,​ சொறி,​​ சிரங்குகளில் பூச அவை குணம் பெறும்.

வேப்பங் கொட்டையை உடலில் உள்ள புண்களில் அரைத்து பூசினால் தொற்று நோய்க்கிருமிகள் தாக்காது.

முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு

எல்லா உணவு வகைகளில் உள்ளதை விட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது.

இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.

யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.

ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு

திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி நடவடிக்கை

மாரடைப்பு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது, திடீரென்று தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் கஷ்டம் தான்.

அந்நேரத்தில் நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள், திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது, நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும், ஒவ்வொரு முறை இருமும் போதும், அதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர்

தலைவலிக்கு கருவேப்பிலை தைலம்

பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவர்களே இருக்க முடியாது, அத்துடன் தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேண்டாம்.
இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ,

கறிவேப்பிலை – 200 கிராம்
பச்சை கொத்தமல்லி – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
நல்லெண்ணை – 600 கிராம்
பசுவின் பால் – 200 மில்லி.

கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.

சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலை


துளசி

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

1) வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி

2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)

சூப்பர் மார்க்கெட் மனோதத்துவ தந்திரங்கள் – தொடர்ச்சி

ஆனால் பால் வைக்கப்பட்டிருப்பது சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே வெகுதொலைவில் வைக்கப்பட்டிருப்பதன் காரணம், உங்களை சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே அதிகதூரம் நடக்கவைப்பது.


*



ஏன் நடக்க வைக்கிறார்கள்? ஏதாவது பாதயாத்திரை பயிற்சியா?

இல்லை. அதிக நேரம் உங்களை சூப்பர் மார்க்கெட்டுக்குள் தங்க வைக்க விரும்புகிறார்கள். அப்படிச் செய்தால்தான் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் அதிகநேரம் உங்கள் கண்களில் படும். அதிகநேரம் கண்களில் படும்போது, அந்தப் பொருட்கள் உங்கள் மனதில் பதியும். இதுதான் இலவச விளம்பரம்.

ஒரு புத்திசாலித்தனமான சூப்பர் மார்க்கெட்டில் ஸ்டோர் வாயிலில் இருந்து பால் இருக்கும் இடத்துக்கு நடந்து செய்லும் பாதையின் இருபுறமும் பரொமோஷனல் ஐட்டம்கள், உங்களின் கண்ணைக் கவரும் விதத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.


சூப்பர் மார்க்கெட்டில் பால் வைக்கப்பட்டிருப்பது எங்கே?
ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இந்த புரொமோஷனல் ஐட்டம்கள் குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கின்றன என்று பாவனையாளருக்குத் தெரியப்படுத்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்? விளம்பரம் செய்ய வேண்டும்.

பத்திரிகையிலோ, டிவியிலோ, ரேடியோவிலோ, இணையத்தளத்திலோ அதை விளம்பரம் செய்ய பணம் கொடுக்க வேண்டும். அப்படிப் பணம் கொடுத்து விளம்பரம்

சூப்பர் மார்க்கெட் மனோதத்துவ தந்திரங்கள் – 1


இதைப் படிக்கத் தொடங்கும் நீங்கள் எந்த நாட்டில் இருந்து படிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எந்த நாட்டிலிருந்து படித்தாலும், இதில் கூறப்படும் விஷயம் உங்களுக்குப் பொருந்தும். காரணம், இது உலகின் எந்த நாட்டிலும் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் பற்றியது.

20 வருடங்களுக்குமுன் மேலை நாடுகளில் மாத்திரமே பிரபலமாக இருந்த சூப்பர் மார்க்கட்கள் இப்போது ஆசிய நாடுகளிலும் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் வந்துவிட்டன. ஒருகாலத்தில் இந்தியப் பாவனையாளர்களின் தேவைகளை முழுமையாக கவர் செய்தவை சிறிய மளிகைக் கடைகள்தான். இப்போது அந்த இடத்தைப் பிடித்திருக்கின்றன சூப்பர் மார்க்கெட்கள். சிறிய நகரங்களில்கூட வந்துவிட்டன.


உலகின் பிரபல சூப்பர் மார்க்கெட் செயின்கள் இந்தியாவில் கடைவிரிக்கத் தொடங்குகின்றன. அல்லது, ஒரு இந்தியப் பார்ட்னருடன் சேர்ந்து சூப்பர் மார்க்கெட்

பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் தைராய்டு!

இபெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று. இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை அயோடின் குறைவே இதற்குக் காரணம்.


கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள்

உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.

தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம், குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இன்றுள்ள சூழ்நிலைக்கு 100 க்கு 90 பேருக்கு தைராய்டு

தேவையில்லாத சதைகளைக் குறைக்க சில வழிகள்

ன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்). இது எல்லாம் செய்வதில்லை. உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம். மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் சிக்கல். உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்:-

தவிர்க்க வேண்டியவைகள்:முதலில் அதிக நேரம் தொலைக்காட்சி பெட்டியின் முன்போ அல்லது இப்படி ஏதாவது பதிவு போடணும் என்றோ கம்ப்யூட்டர் முன்பு உட்காராதீங்க.

அதிகமாக நொருக்கு தீனி சாப்பிடாதீங்க.

உங்களுக்கு மிகவும் பிடித்த ஆயில் உணவுகளையும், பொழுப்பு நிறைந்த .. பிட்ஸா, பர்கரையும் மறந்துவிடவும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக......




இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது.
இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சனைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் [பெண்கள்] .......

எப்படி நடந்து கொள்ளவேண்டும்??

பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்?

இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்!

* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. மாடர்ன் ஆக உடுத்தினாலும் நேர்த்தியாக உடுத்துங்கள்.

*முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சனைகள்.

*சொந்த குடும்ப விஷய்ங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள்,

உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் பெண்களின் ஆயுள் குறைய வாய்ப்பு


தினசரி 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் பெண்களின் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களின் பெரும்பான்மையான வேலைகள் உட்கார்ந்த இடத்திலே செய்யும் அளவிற்கு முடங்கிவிட்டது. இவ்வாறாக வேலை செய்பவர்கள் எண்ணிக்கை உலக அளவில் பெருகி வருகிறது.



இது குறித்து, 1.23 லட்சம் பேரை கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி விஞ் ஞானிகள் தொடர்ந்து

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!


பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

வெள்ளை நிற காய்கறிகள் இதயத்தை பலப்படுத்தும்

வெள்ளை நிறத்தில் இருக்கும் காய், கனிகளை தொடர்ந்து உண்பவர்கள் இதய நலத்துடன் இருப்பதாகவும், புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி இவர்கள் உடலில்

அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

வெங்காயத்திலிருந்து கிடைக்கும் அலிசின் என்ற வேதிப்பொருள் கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது.

காலிஃபிளவரில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. பூண்டு, காளான்கள், இஞ்சி, வெள்ளை உருளை, முள்ளங்கி ஆகியவற்றிலும் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி






இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது முந்திரிக் கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம்.

அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரகமாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம்.

ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.

நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மை, அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற்றும் தன்மை மற்றும் உடலில் உள்ள தனிமப்பொருட்கள்

கல்சியம் மாத்திரைகள் யாருக்கு? எவ்வளவு? எப்படி? எந்த நேரத்தில்



“நீங்கள் கல்சியம் குளிசை ஒவ்வொரு நாளும் போட வேண்டும்” என மருத்துவர்கள் ஆலோசனை கூறினால், “நான் ஏற்கனவோ தினமும் போடுகிறேன்” என்று

அல்லது, “மேலதிக கல்சியம் சேர்க்கப்பட்ட பால்மா குடிக்கிறேன்” என்ற மறுமொழிதான் இப்பொழுது கிடைக்கிறது.


ஆம்! இன்று நடுத்தர வயதைத் தாண்டிய பெண்கள் பலரும் உபயோகிக்கும் மருந்து வகைகளில் மிக முக்கியமானது கல்சியம்தான்.



தாமாகவோ அல்லது ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களாலும் தூண்டப்பட்டோ உபயோகிக்கிறார்கள். ஊடகங்களில் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளைத் தொடர்ந்து உபயோகிக்க ஆரம்பிப்பவர்களும் உள்ளனர்.

எவ்வாறெனிலும் மாதவிடாய் நின்றபின் ஹோர்மோன் செயற்பாடுகள் குறைவதன் காரணமாக ஏற்படும் ஒஸ்டியோபொரோசிஸ் (osteoporosis)நோய்க்கு கல்சியம் பற்றாமை ஒரு முக்கியமான காரணமாகும் என்பதை பலரும்

கொலஸ்ட்ரால்(Cholestrol) என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol 80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல்

(Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.



கொலஸ்ட்ராலின் தன்மைகள்

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும்,

கீரை+மரக்கறி+உப்பு - ஆரோக்கியக் குறிப்புகள்

உடல் ஆரோக்கியத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் காக்க கீரைகள் மற்றும் காய்கறிகள் போதும். அவற்றோடு தேவையான உப்பும் சேரும்போது அங்கே ஆரோக்கியத்திற்குக் குறைவே இருக்காது. உங்களுக்கு உதவும் வகையில் சில கீரைகள், காய்கறிகள், மற்றும் உப்பு பற்றிய விளக்கம் இங்கே இடம் பெற்றுள்ளது.

காயசித்தி :
உடல் வளத்தைப் பெருக்கி பொன்நிற மேனியைக் கொடுத்து மன்மதனாக்கவல்ல மகோன்னத சக்தி மறைந்துள்ள கீரை மஞ்சள் பூ கரிசலாங்கண்ணியாகும். விழிக்கு ஒளியைப்பெருக்கிக் கொடுத்து, சிந்திக்கும் திறத்தைக் கூட்டிக் கொடுத்து அறிவாளியாக அரங்கேற்றி அழகு பார்க்கும் அற்புத மூலிகை. மஞ்சள்காமாலை, குன்மக்கட்டி போன்ற நோய்களை விரட்டியடித்து விடும். மொத்தத்தில் இது ஒரு காயகல்பம். எனவேதான் வடலூரார், இந்தக் கீரைக்கு ‘காயசித்தி’ என வாய்மொழிந்தார்.

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீர் கழித்த இடத்தில் நிறைய எறும்புகள்... இது எந்த நோயின் அறிகுறி


நான் ஒரு விவசாயி. வயது 60. சிறுநீர் கழித்த இடத்தில் நிறைய எறும்புகள் மொய்க்கின்றன. "சர்க்கரை நோய் உனக்கு உள்ளது, சிறுநீரகம் பழுதாகிவிட்டது' என்று நண்பர் பயமுறுத்துகிறார். இது எந்த நோயின் அறிகுறி? இதற்கு என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?
வை.தேவராஜன், அடைக்கம்பட்டி.
"மூத்ரஸ்யக்லேதவாஹனம்' என்கிறது ஆயுர்வேதம். சிறுநீரின் வழியாக "க்லேதம்' அதாவது உடல் உட்புறப் பிசுபிசுப்பு திரவம் எடுத்துச் செல்லப்பட்டு வெளியேறுகிறது என்று அதற்கு அர்த்தம் கூறலாம். இந்தத் திரவம் எங்கிருந்து ஏற்படுகிறது? உணவில் இயற்கையாகவே அமைந்துள்ள கொழுப்புப் பொருட்கள், எண்ணெய்ச் சத்துகள், இனிப்புச்

கதிர்ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்


ஆண்களுக்கும் எலும்புத்
தேய்மான நோய் ஏற்படுவது ஏன்?
 தவிடாய் நின்று போன பின்னர் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரப்பது நின்று போய்விடுவதால் ஞநபஉஞடஞதஞநஐந எனும் எலும்புகள் வலுவிழந்து போகும் உபாதை ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஆண்களிலும் பல இளைஞர்களுக்கும் இந்த உபாதை ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. சாதாரணமாகத் தடுக்கி விழுந்தால் கூட கை, கால், எலும்பு முறிவை ஏற்படுத்திவிடும் இந்த உபாதையைப் பற்றி ஆயுர்வேத விஞ்ஞானம் சொல்லும் அபிப்பிராயம் என்ன?
 எஸ்.அனந்தராமன், புட்டபர்த்தி.
 "தத்ராஸ்தினிஸ்திதோ வாயு:' என்கிறது ஆயுர்வேதம். வாயு எலும்பில் இருப்பதாக அதற்கு அர்த்தம்.

வயதானவர்களு‌க்கான உணவு முறை


தானவர்களு‌க்கான உணவு முறை
   
   
0


உலகிலேயே அதிக ஆயுள் உடையவர்கள் ஜப்பானியர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அ‌‌திலு‌ம் தெற்கு ஜப்பானில் உள்ள ஓகினாவன் தீவுகளில் வா‌ழ்பவ‌ர்க‌ள் கூடுத‌ல் ஆயுளுட‌ன் வா‌ழ்‌கி‌ன்றன‌ர்.

இத‌ற்கு‌க் காரண‌ம் அவ‌ர்களது உணவு முறைதா‌ன். அ‌ப்படி எ‌ன்னதா‌ன் அவ‌ர்க‌ள் சா‌ப்‌பிடு‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று பா‌ர்‌த்தா‌ல், நிறைய தானிய வகைகள், சோயா மற்றும் மீன். ௦ஆனால் இறைச்சி மற்றும் பால் பொருட்களை அவர்கள் ‌மிக‌க் குறை‌ந்த அள‌விலேயே எடுத்துக் கொள்கின்றனர்.

வயதாக வயதாக, உடலின் சக்தி குறைகிறது. அத‌ற்கே‌ற்ப ஊட்டச்சத்துகளின் தேவையும் அதிகரிக்கிறது. எனவே அ‌ந்த சமய‌த்‌தி‌ல் இதுபோ‌ன்ற உணவு முறையை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆயுள் அதிகரிப்பதோடு, முதுமை‌யினா‌ல் உட‌லி‌ல் ‌ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ங்க‌ள் தாமதமாக ஏற்படு‌ம்.

கு‌றி‌ப்பாக முதுமை‌யி‌ல் ஏ‌ற்படு‌‌ம் எலும்புத்

மருத்துவ செய்தி உணவில் உப்பை குறைத்தால் மாரடைப்பு ஏற்படும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ தேவையான அளவு இல்லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவுப் பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறுத்துகின்றனர். இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

திடீரென மாரடைப்பு வருவதற்கு உயர்ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்களை சேர்ப்பதும் தான் காரணம்

உடலுக்கு வலிமையை தரும் சிறு தானியங்கள்

உணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவு தான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது.

இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம் தான்.

இன்றைக்கு பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாறவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...