Oct 30, 2013

வட­மேற்கு ஐரோப்­பாவை தாக்­கிய சென் ஜூட் புயல்:

   



வட­மேற்கு ஐரோப்­பாவைத் தாக்­கிய சென் ஜூட் புயல் கார­ண­மாக குறைந்­தது 14 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் பலர் காய­ம­டைந்­துள்­ளனர்.
ஜேர்­ம­னியில் மட்டும் 7 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மேற்கு ஜேர்­ம­னி­யிலுள்ள கெல்ஸென் கிர்சென் நகரில் காரொன்றின் மீது மர­மொன்று சரிந்து விழுந்­ததில் இருவர் பலி­யா­ன­துடன் அக்­கா­ரி­லி­ருந்த இரு சிறுவர்கள் காய­ம­டைந்­துள்­ளனர்.
அதே நகரில் பிறி­தொரு காரின் மீது மரம் சரிந்து விழுந்­ததில் இருவர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
அதேசமயம் அங்கு ஒருவர் நீரில் மூழ்­கியும் 66 வயது பெண்­ம­ணி­யொ­ருவர் இடிந்து வீழ்ந்த சுவரின் கீழ் சிக்­கியும் மர­ண­ம­டைந்­துள்ளார்.
இந்தப் புயலால் பிரித்­தா­னி­யாவில் நால்வர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.
லண்­டனின் வடக்கே வட்போர்ட் எனும் இடத்தில் காரொன் றின் மீது மர­மொன்று சரிந்து விழுந்­ததில் 50 வயது மதிக்­கத்­தக்க நபர் ஒருவர் பலி­யா­கி­யுள்ளார்.
கென்ட் நகரில் வீடொன்றின் மீது மரம் சரிந்து விழுந்­ததில் அங்கு உறங்­கிக்­கொண்­டி­ருந்த 17 வயது யுவதி கொல்­லப்­பட்­டுள்ளார்.
அதே­ச­மயம் மேற்கு லண்­டனில் புயல் காற்றால் மோச­மாக பாதிக்­கப்­பட்ட வீதி­யொன்றில் இடம்­பெற்ற எரிவாயு வெடிப்பில் ஆணொ­ரு­வரும் பெண்­ணொ­ரு­வரும் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்த எரி­வாயு வெடிப்பில் அந்தப் பிராந்­தி­யத்­தி­லுள்ள பல வீடுகள் சேதத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளன.
மணிக்கு 191 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய இந்த புயலால் மர­மொன்று சரிந்து எரி­வாயு குழாய் மீது விழுந்­த­மையே இந்த வெடிப்­புக்கு கார­ண­மென நம்­பப்­ப­டு­கி­றது.
ஏற்­க­னவே புயலால் லண்­டனில் அமைச்­ச­ரவை அலு­வ­ல­கம் அமைந்­தி­ருந்த கட்­ட­டத்தின் மீது பாரம் தூக்கி உப­க­ர­ண­மொன்று உடைந்து விழுந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்தப் புயலால் டென்­மார்க்­கிலும் உயி­ரி­ழப்­புக்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் தக­வல்கள் கூறு­கின்­றன.
மேற்கு பிரான்­ஸி­லுள்ள பிரிட்­டனியில் பெண்­ணொ­ருவர் கடலில் அடித்துச் செல்­லப்­பட்டு உயி­ரி­ழந்­துள்ளார்.
இந்தப் புய­லை­ய­டுத்து லண்­டன் மற்றும் வட­மேற்கு ஜேர்­ம­னிக்­கான பல புகை­யி­ரத சேவைகள் இரத்து செய்­யப்­பட்­டன. நெதர்­லாந்தின் சிபோல் விமான நிலை­யத்தில் குறைந்­தது 50 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஜேர்மனிய விமான சேவைகளும் தாமதத்தை எதிர்கொண்டன.
ஜேர்மனியில் மீனவர் ஒருவரும் மாலுமி ஒருவரும் கடலில் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.


Close

Oct 29, 2013

Raw UK Storm At Least 4Dead, Travel Chaos As Storm St Jude Batters Britain

http://www.youtube.com/v/6lcSGzyhBi8?version=3&autohide=1&feature=share&showinfo=1&autoplay=1&autohide=1&attribution_tag=rR-bsIZ1MVKVLHtsK08bCw

Oct 28, 2013

Google Ads Developer Blog: AdMob on Windows Phone 8

Google Ads Developer Blog: AdMob on Windows Phone 8: Today, we’re excited to announce the launch of a beta version of the AdMob SDK for Windows Phone 8 to help you monetize your Windows Phone...

Google Ads Developer Blog: AdMob on Windows Phone 8

Google Ads Developer Blog: AdMob on Windows Phone 8: Today, we’re excited to announce the launch of a beta version of the AdMob SDK for Windows Phone 8 to help you monetize your Windows Phone...

பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..

 மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

koburamகோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த் திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னா ல் இருக்கும் ஆன்மிகம் பற்றி என க்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவி யல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப் பட்ட கலசங்கள்

Oct 26, 2013

DCM Dark: lorem insum 109

DCM Dark: lorem insum 109: Photo by : Lemongraphic Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolor...

Oct 25, 2013



Oct 23, 2013

அமெரிக்காவில் 500kV மின்சார கம்பத்தை Skycrane உதவியுடன் நிறுவி புதிய தொழில்நுட்ப சாதனை .

">




இறந்த பிறகு பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும்?

 இறந்த பிறகு பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும்?

Posted: 22 Oct 2013 08:07 AM PDT
சில மாதங்களுக்கு முன்னர், ஒருவர் இறந்த பின்னர், அவரின் ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் தொடர்ந்து பாதுகாத்து இயக்குவதற்கு, கூகுள் தரும் வழிகளைக் கண்டோம். அதே போல பேஸ்புக் அக்கவுண்ட்டினையும், தொடர்ந்து உயிர்ப்பில் வைக்க வழிகள் உண்டா?

பேஸ்புக் அக்கவுண்ட் வைத்துள்ள ஒருவர் இறந்த பின்னர், அவரின் அக்கவுண்ட்டிற்கு என்ன நேரிடுகிறது?

பொதுவாக, இறந்தவரின் குடும்பத்தினர், அவரின் பேஸ்புக் அக்கவுண்ட், அவரின் புகைப்படம், அவர் பதித்த புகைப்படங்கள், தெரிவித்த தகவல்கள் என அனைத்தும், தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கவே விரும்புவார்கள்.

Oct 22, 2013

வறட்டு இருமல் குணமாக

tulampalam juice, ginMager juice mixed with an equal, with which to eat honey, chronic cough cured with crude.மாதுளம்பழச் சாறுடன் சமமாக இஞ்சி சாறு கலந்து, இத்துடன் தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும். நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும். சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு ஆப்பிள், அல்லது வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் வாழைத்தண்டு ஜூஸ் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் நல்லதல்ல. 

மழைக்காலங்களில் கால் விரல்களுக்கு இடையே உண்டாகும் சேற்றுப் புண் குணமாக மஞ்சள் தூளுடன் தேனைக் கலந்து களிம்பு போல பூசலாம். இரண்டு டீஸ்பூன் தேனை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் கீழாநெல்லியை வேரோடு பிடுங்கி நன்றாக அரைத்து

கண்களைப் பாதுகாக்கும் முருங்கை பூ

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும்.

கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால்

Oct 20, 2013

நீரிழிவை கட்டுப்படுத்தும் மூலிகைகள்.

நீரிழிவை கட்டுப்படுத்தும் மூலிகைகள்.

இந்தியாவில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

நாவல்பழக் கொட்டை
நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

மாந்தளிர் பொடி
மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து

சருமத்தை அழகாக்க உதவும் உணவுகள்

. . .

அனைவருக்கும் சருமம் நன்கு அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக எத்தனையோ அழகுப் பொருட்களை முயற்சி செய்து பார்த்திருப்போம். அதிலும் ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் என்று பல வழிகளை மேற்கொண்டிருப்போம். இவ்வாறு மேற்கொண்டால் மட்டும் போதாது, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

இதனாலும் நல்ல அழகான சருமத்தை பெறலாம். குறிப்பாக உண்ணும் உணவு முறையில் நல்ல ஆரோக்கியத்தை பின்பற்ற வேண்டும். அதற்கு பச்சை இலைக் காய்கறிகள், வைட்டமின் நிறைந்த உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, நிறைய தண்ணீர் குடித்து, நல்ல உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.

இதனால் தண்ணீரானது உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். உடற்பயிற்சி செய்தால், உடலில் இரத்த ஓட்டம்

பெரும்பலம் தரும் பீட்ரூட் கீரை

. . .

பெரும்பாலான கிழங்கு வகைகளில் நார்சத்துக்கள் அதிகம் காணப்படுவதில்லை. வெறும் கார்போஹைட்ரேட் சத்துகள் மட்டுமே பெருமளவு காணப்படுகின்றன. அதிலும் நாம் சமையலில் பயன்படுத்தும் பெரும்பாலான கிழங்குகள், வெறும் ருசிக்காக மட்டுமே பயன்படுகின்றன.

கார்பாஹைட்ரேட் அதிகம் நிறைந்த கிழங்குகளை சிப்ஸ், வறுவல், பொரியல் என எண்ணெய் சேர்த்து பயன்படுத்துவதால் அதில் தங்கியுள்ள உயிர்சத்துகள் அழிந்து விடுகின்றன. கிழங்கு மற்றும் விதை வகைகளை உணவாக உட்கொள்ளும் பொழுது அத்துடன் அதன் மேல் பாகங்களான இலை, விதை மற்றும் தண்டுகளையும் சேர்த்து உட்கொள்வது நல்லது. நாம் அடிக்கடி சமையலில் பயன்படுத்தும் காரட், முள் ளங்கி, பீட்ரூட், நூல்கோல், வெந்தயம், சீரகம், ஓமம், வெங்காயம்,

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள் . .

.

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.

இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.

இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள்

ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம் . . .


உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக

தொழில் அதிபர் ஒருவர் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளார்.

பஞ்சாபின் புறநகர் பகுதியில் தொழில் அதிபர் ஒருவர் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணிநேரத்தில் கட்டி முடிக்க தொழில் அதிபர் ஹர்பல் சிங் முடிவு செய்தார்.

இதையடுத்து அந்தக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடந்தது.

பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கட்டுமானப் பணியாளர்கள் மளமளவென வேலையைத் துவங்கி குறிப்பிட்ட 48 மணிநேரத்திற்குள் 10 மாடிக் கட்டிடத்தை கட்டி முடித்தனர்.

முதல் 3 மாடிகள் வெறும் 6 மணிநேரத்தில் கட்டி முடிக்கப்பட்டன. இந்த கட்டிடத்தை கட்ட ஏற்கனவே பின்னப்பட்ட செண்டிரிங் மற்றும் தூண்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 200 டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 200 பணியாளர்கள், டெக்னீஷியன்கள், என்ஜினியர்கள் சேர்ந்து இந்த சாதனையை செய்துள்ளனர். இந்த கட்டிடத்திற்கு தேவையான பொருட்கள் அருகில் உள்ள கம்பெனியில் கடந்த 2 மாதங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் சில டிப்ஸ்

பேஸ்புக்கில் சில டிப்ஸ்...பேஸ்புக்கில் சில டிப்ஸ்... Written by: Keerthi Published: Saturday, October 19, 2013, / மாறிவரும் இந்த உலகில் தினமும் இந்த உலகம் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டேதான் இருக்கிறது. இன்றைய உலகில் பேஸ்புக் என்பது மனிதனின் அன்றாட தேவையாகவே மாறி வருகிறது எனலாம் அந்த அளவுக்கு இந்த உலகை இது கவர்ந்து வருகிறது. நம்மில் பெரும்பாலோனோர் இணையத்துக்கு வருவதே பேஸ்புக்கை பயன்படுத்த தான் என்ற அளவுக்கு அனைவருக்கும் அதன் மீது மோகம். நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் பல பேஸ்புக்கில் உள்ளது, இந்த நிலையில் நமது அக்கௌன்ட்டை யாரேனும் ஹாக் செய்து

Oct 19, 2013

Hero Honda Pleasure Price in India Hero Honda Pleasure Price
 Hero Honda Pleasure Features

    New attractive graphics
    Powerful 102 cc, 4 stroke engine
    Wide and comfortable seat
    Large under seat storage space
    Puncture resistant tyre tubes
    Stylish Multi-reflector headlight
    Trendy tail light
    Chic multi-reflector indicators
    Flashy, body colored mirrors
    Ultramodern oval shaped instrument panel
    Available Colors: Orange, Candy Blazing Red, Aqua Green, Excellent Blue Metallic, Monotone Black, Dual Tone Black, Ebony Green, Light Purple, Force Silver



Read more: http://priceinfoworld.com/bike/hero-honda-pleasure-price#ixzz2iCCdiSDP

Oct 18, 2013

சுனாமியைக் கண்டறிவதற்கு கடலுக்கடியில் இன்டர்நெட்: விஞ்ஞானிகள் முயற்சி



சுனாமியைக் கண்டறிவதற்கு கடலுக்கடியில் இன்டர்நெட்: விஞ்ஞானிகள் முயற்சிவாஷிங்டன், அக். 16-

வானளாவிப் பரந்து விரிந்திருக்கும் இணையதளத் தொடர்புகளின் சேவை எல்லையை ஆழ்கடலின் அடியிலும் பயனளிக்கும் வகையில் விரிவுபடுத்த அமெரிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

சுனாமி அறிவிப்பு, மாசுபாடுகள் கண்டறிதல் மற்றும் நிகழ்வுகள் கண்காணிப்பு போன்றவற்றைக் கண்டறிவதற்கும் ஆழ்கடல் இணையதள இணைப்புகளை ஏற்படுத்தும் சோதனை முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலம் சார்ந்த வயர்லெஸ் நெட்வொர்க்குகள், செயற்கைக்கோள் மற்றும் ஆண்டெனா வழியாக வரும் தரவுப் பரிமாற்றத்திற்கு ரேடியோ
 வி.எல்.சி. மீடியா பிளேயர் தரும் சிறப்பு வசதிகள்

Posted: 15 Oct 2013
வீடியோ பைல்களை இயக்க, நம்மில் பலரும் வி.எல்.சி. மீடியா பிளேயர் புரோகிராமினையே பயன்படுத்தி வருகிறோம். ஆனால், வி.எல்.சி. மீடியா பிளேயர் புரோகிராம், வீடியோ பைல்களை மட்டும் இயக்கும் ஒரு புரோகிராம் அல்ல.

இதற்கு மட்டுமே நீங்கள் வி.எல்.சி.மீடியா பிளேயரை இயக்குவதாக இருந்தால், அதன் திறனில் பத்தில் ஒரு பங்கினையே, நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள்.

நீங்கள் இதனை விண்டோஸ், மேக் அல்லதுலினக்ஸ் என எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், வீடியோ பைல்களை மட்டும் இதன் மூலம் இயக்குகிறீர்கள் என்றால், அதன் முழு பயன்பாட்டினை நீங்கள் அனுபவிக்கவில்லை என்றே பொருள். இதன் மூலம் நாம் மேற்கொள்ளக்

Oct 15, 2013

பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: 85 பேர் சாவு

சங்கு பூ கொடியின் மருத்துவ குணங்கள்

சங்கு பூ கொடியின் மருத்துவ குணங்கள்
சங்கு பூ கொடியின் மருத்துவ குணங்கள்

சங்குப்பூக்கொடிக்கு மாமூலி, கன்னிக்கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இலை, வேர், மலர்கள், விதை ஆகியவற்றை மருத்துவத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.

கீழாநெல்லியின் முழுச் செடி, யானை நெருஞ்சில் இலை, அருகம்புல், சங்குப்பூக்கொடியின் வேர் என அனைத்திலும் வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றோடு ஐந்து மிளகையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். 10 நாட்களுக்குத் தினமும் காலையில், இந்தக் கலவையில், ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொண்டு தயிரில் கலக்கி சாப்பிட்டால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் நீர்க்கடுப்பு குணமாகும்.

நன்றாகச் சுத்தம் செய்த சங்குப்பூக்கொடியின் வேர் பத்து கிராம், திப்பிலி பத்து கிராம், சுக்கு பதினைந்து கிராம் மற்றும் விளாம் பிசின் பத்து கிராம் ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொண்டு, அதனை குன்றிமணி அளவு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த மாத்திரைகளை நிழலில் நன்கு உலர்த்தி எடுத்து, குழந்தைகளுக்கு அரை மாத்திரை அளவும் பெரியவர்களுக்கு ஒரு மாத்திரையும் காலையில் வெதுவெதுப்பான வெந்நீருடன் சாப்பிடக் கொடுக்க வேண்டும். இதனால் நன்கு பேதி ஆகி வயிறு சுத்தப்படும். பேதியை நிறுத்த மோர் அல்லது எலுமிச்சைப் பழச் சாறு குடிக்கக் கொடுக்கலாம்.

SRISENPAGA VINAYAGAR TEMPLE 10TH DAY NAVARATHIRI 2013

கூகுள் கடந்து வந்த 15 ஆண்டுகள்

கூகுள் கடந்து வந்த 15 ஆண்டுகள்
Posted: 14 Oct 2013

பதினைந்து ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 27ல், மக்கள் தங்கள் இணைய உலாவில், கூகுள் தேடுதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். அப்போது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இல்லை;

குரோம்புக் பயன்படுத்தி யாரும் வீடியோ பார்க்கவில்லை; கூகுள் கிளாஸ் அணிந்து பாட்டு கேட்கவில்லை; அல்லது ஹாட் பலூன் தரும் இணைய இணைப்பில் தேடலை மேற்கொள்ளவில்லை.

சாதாரண தேடு தளம் தரும் நிறுவனமாக, 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப் பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலகில் மிகச் சிறந்த சக்தியும் தொழில் நுட்பமும் கொண்ட நிறுவனமாக, ஆக்டோபஸ் போல பல திசைகளில் தன் செயல்பாட்டினைக் கொண்டுள்ளது.

உலகின் பல கோடி மக்கள் குறித்த தகவல்களைத் தன்னகத்தே கொண்ட ஒரே நிறுவனம் இதுவாகத்தான் இருக்கும். இந்த உலகம் மட்டுமின்றி,

Sange Muzangu HD Song

Oct 13, 2013

functions-of-all-function-keys-in-computer-keyboardகம்ப்யூட்டரில் எண் வரிசை விசைகளுக்கு மேலே இருப்பது ஃபங்சன் கீ வரிசை. இதில் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் இரண்டு விசைகள் F1 மற்றும் F5. 
இணையத்தைப் பயன்படுத்தும்போது மட்டும் பெரும்பாலும் F5 விசையை மட்டும் பயன்படுத்துவோம். இது வலைப்பக்கத்தை மீள் தொடக்கம் (Refresh) செய்வதற்குப் பயன்படும். 
மற்ற விசைகளும் இதைப்போன்று பயன்மிக்க பயன்பாடுகளைக் கொண்டதுதான்.
ஒவ்வொரு விசையும் எதற்கு எதற்கு பயன்படுகிறது என்பதை தெரிந்துகொண்டால் மிகவும் பயன்மிக்கதாக இருக்கும். எதையும் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தால் அதுவே பழக்கமாகிவிடும்.  
பிறகு உங்களுக்கும் விரைவாக பிரௌசிங் செய்வது, விரைவாக கணினியைக் கையாள்வது

பெட்டகம்: கணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள ...

பெட்டகம்: கணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள ...: புதியதாக கணணி வாங்கியவர்கள் அதில் உள்ள வன்பொருள் சாதனங்களை கண்டு மிரட்சியடைவார்கள். சிபியு, மதர்போர்ட், ராம், கிராப்பிக்ஸ், சவுண...

பெட்டகம்: கணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள ...

பெட்டகம்: கணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள ...: புதியதாக கணணி வாங்கியவர்கள் அதில் உள்ள வன்பொருள் சாதனங்களை கண்டு மிரட்சியடைவார்கள். சிபியு, மதர்போர்ட், ராம், கிராப்பிக்ஸ், சவுண...

இணைய இணைப்பு எப்படி இயங்குகிறது?


எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும்.

தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் -- இன்டர் நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா பயர்பாக்ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக் -- என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இதனை "கிளையண்ட்' என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்' என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது.

அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை

விண்டோஸ் 7 டிப்ஸ்





டாஸ் பார் ட்யூன் அப்: 
ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறியவுடன், நீங்கள் புதிய வடிவிலான டாஸ்க் பாரினைப் பார்த்து வியந்திருப்பீர்கள். 

அது உங்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. செவ்வக வடிவிலான பட்டன்களுக்குப் பதிலாக, சிறிய பட்டன்களைக் காணலாம். இது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. 

ஆனால் ஒரு சிலருக்கு பழைய வடிவிலான டாஸ்க் பார் தான் பிடிக்கிறது. இவர்கள் புதிய வடிவத்தைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணியிருந்த எனக்கு, டாஸ்க் பார் ப்ராப்பர்ட்டீஸ் பார்த்த போது பழைய வகைக்கு மாறிக் கொள்ளலாம் என்று தெரிய வந்தது. நீங்களும் விரும்பினால் கீழ்க்கண்டபடி அதனை செட் செய்திடலாம்.

டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Taskbar buttons என்ற கீழ் விரி மெனுவினைக் காணவும். இதில் Combine when taskbar is full என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அந்த புரோகிராம் பெயருடன் நீளமான சதுரத்தில், முன்பு காட்டப்பட்டது போல காட்சி அளிப்பதனைக் காணலாம்.


டாஸ்க்பார் ஹாட் கீ: 

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பலவிதமான ஷார்ட் கட் கீ மற்றும் ஹாட் கீ தொகுப்புகளைத் தந்துள்ளது. கீழே டாஸ்க்பாரில் நாம் இயக்கக் கூடிய

மின் அஞ்சல் சர் வர் வகைகள்



Posted: 11 Oct 2013 


உங்கள் மின் அஞ்சல் கணக்கினைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்திடுகையில், உங்களுக்கு எந்த வகையான அக்கவுண்ட் வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டு, அவற்றின் வகைகளாக - POP, SMTP மற்றும் IMAP என்பவை காட்டப்படும். இவை எவற்றைக் குறிக்கின்றன? இடையே உள்ள வேறுபாடு என்ன எனப் பார்க்கலாம். 


1. பி.ஓ.பி.3 (POP3 ): 

இதனை Post Office Protocol 3 என விரிக்கலாம். இந்த வகையில் செயல்படும் சர்வரில், உங்களுக்கென வரும் மின் அஞ்சல் செய்திகள் பாதுகாத்து வைக்கப்படும். 

நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில், ஏதேனும் ஒரு (Windows Mail, Outlook அல்லது Thunderbird) இமெயில் கிளையண்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி, இவற்றை உங்கள் கம்ப்யூட்டருக்குள் பதிக்கலாம். பொதுவாக, அவ்வாறு பதித்தவுடன், அந்த மெயில் செய்திகள் சர்வரிலிருந்து அழிக்கப்படும். 

அப்போதுதான் அடுத்து வரும் செய்திகளுக்கு இடம் கிடைக்கும். நீங்கள், எந்தக் கம்ப்யூட்டரில் இந்த மின் அஞ்சல் செய்திகளைப் பதிந்தீர்களோ, அவற்றை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, திறந்து பார்த்து படித்து பதில் அனுப்பலாம். அல்லது நீக்கலாம். 


2. ஐமேப் (IMAP): 

Internet Message Access Protocol என இதனை விரித்துக் கூறலாம். இந்த வகை அஞ்சல்களைக் கொண்டிருக்கும் சர்வர் கம்ப்யூட்டரில் உள்ள அஞ்சல்களை,

Oct 12, 2013

விண்டோஸ் 8 - அவசிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்






விண்டோஸ் 8, அடிப்படையில் தொடு திரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும். இருப்பினும், இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் இயக்கலாம். 

இதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை, விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவை: 


தேடல்

Win + F: மெட்ரோ பைல்ஸ் சர்ச் மெனு வினைப் பெற.
Win + Q: மெட்ரோ அப்ளிகேஷன்கள் சர்ச் மெனுவினைப் பெற.
Win + W: மெட்ரோ செட்டிங்ஸ் சர்ச் மெனு பெற. 
Win + . (முற்றுப் புள்ளி):அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, இடது, வலது மற்றும் முழுமையாக இழுத்து ஓரத்தில் வைக்க.
Win + , (கமா) டெஸ்க்டாப்பில் ஏரோ பீக் (Aero peek) பெற.


சார்ம்ஸ் மெனு

Win + C: உங்கள் திரையின் வலது பக்கம் சார்ம்ஸ் மெனுவினைக் கொண்டு வர.


ஸ்விட்ச் மெனு

Win + Tab: உங்கள் திரையின் இடது போர்டில் இருந்து ஸ்விட்ச் லிஸ்ட் (Switch List) திறக்க.


பேனர்கள்

Win + I (டி எழுத்து) அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான, Settings panel


நெட்வொர்க் மற்றும் ஐ.பி.முகவரி அறிய

இணையத்தைப் பயன்படுத்தும் போது, நம் இணைப்பிற்கென ஓர் ஐ.பி. முகவரி தரப்படுகிறது. நம் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதனை அறிய அனைவருக்கும் ஆவலாய் இருக்கும். 

ஒவ்வொரு நேரமும் ஒரு முகவரி தரப்படுவதால், சில செயல்பாடுகளுக்காக, அந்த நேரத்தில் தரப்படும் ஐ.பி. முகவரி அறியவும் ஆசைப்படுவோம். அதனை எப்படி அறியலாம் என்பதனை இங்கு பார்க்கலாம். இங்கு விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதனை எப்படி அறிவது என்பதனை முதலில் காண்போம்.


முதல் வழி, விண்டோஸ் இயக்க முறையில் கிளிக் செய்து பெறுவது.

1. முதலில் "Network Sharing Center' என்பதனைத் திறந்து கொள்ளவும். உங்களுடைய டாஸ்க் பாரில் உள்ள சிஸ்டம் ட்ரேயில், நெட்வொர்க்கிங் ஐகான் இருந்தால், அதனை கிளிக் செய்து, "Open Network and Sharing Center' என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். 

அல்லது, ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து, கிடைக்கும் தேடல் கட்டத்தில், network and sharing center என டைப் செய்திடவும். இதற்கான லிங்க் கிடைத்தவுடன், அதில் கிளிக் செய்திடவும். 

2. இப்போது "Network and Sharing Center' கிடைக்கும். இங்கு "Local Area Connection' என்பதில் கிளிக் செய்திடவும். அல்லது, உங்கள் இணைய இணைப்பிற்கு ஒரு

இந்திய வரலாற்றிலேயே நெருங்கிவிட்ட மாபெரும் புயல்


இந்தியா வரலாற்றிலேயே மிகப் பெரும் புயலொன்றை எதிர்நோக்கியுள்ள நிலையில், அதன் கிழக்கு கரையோரப் பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய மழை கொட்டிக்கொண்டிருக்கிறது.
வங்காள விரிகுடாவிலிருந்து நகர்ந்துவரும் பைலின் புயல் இன்னும் சில மணிநேரங்களில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் நாலரை லட்சம் மக்கள் ஏற்கனவே தமது இருப்பிடங்களை விட்டு பாதுகாப்புக்காக வெளியேறியுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிக்கொண்டிருக்கிறது.
மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ள இந்திய அதிகாரிகள், புயல் நிலைமைகளை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்

Oct 11, 2013

RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!!


personal computer
கணிணியின் முதன்மை நினைவகமே RAM என்றழைக்கப்படும். இதன் விரிவாக்கம் Random access memoryஎன்பது. இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். Virtual memory தான் நம்முடைய கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி ஆகும்.

பொதுவாக இதன் திறன் அல்லது கொள்ளவு 512 MB, 1GB என இப்போதுள்ள கணினிகளில் பெரும்பாலும் 2GB, 8 GB என்ற வகையில் இருக்கிறது.. இப்போது இன்னும் மேம்படுத்தப்பட்ட RAM களும், சிறப்பு கணிகளுக்கான அதிகபட்ச கொள்ளவு திறன்கொண்ட Ram-ம் வந்துவிட்டது.


Ram -ன் பயன்பாட்டைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். RAM எதற்கு என்றால், நாம் ஒவ்வொரு முறையும் கணினியில் Hard Disc சென்று தகவலைப்பெற நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்கவும், விரைவாக கணினியில் தகவலைப்பெறவுமே இந்த RAM -ஐ கணினியில் இணைக்கிறோம்.
ddr ram

RAM ஆனது Hard disc லிருந்து குறிப்பிட்ட அளவு தகவல்களை பெற்று தன்னுள் இருத்தி நமக்கு விரைவாக தகவல்களை அளிக்கிறது. இதனால்தான் கூடுதலாக நாம் கணினியில் RAM ஒன்றை இணைத்திருப்போம்.. இதனால் கணினியின் வேகம் கூடுவதோடு நமக்குத் தேவையான தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கிறது.

இதையும் மீறி கணினியின் வேகம் குறைந்தால் அதற்கு ஒரு மாற்றுவழியாக இதைச் செய்யலாம். அதாவது நமது ஹார்ட் டிஸ்கின் Space அதிகமாக இருந்தால் அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட நினைவகத்தை RAM போன்றே மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்.

செய்முறை:-

1. முதலில் XP யின் My computer செல்லவும்.
2. properties
3. system properties தேர்வு செய்யுங்கள்.

நீங்கள் விண்டோஸ் விஸ்டா (Windows vista) உபயோகிப்பாளராக இருந்தால்  Control panel==>Properties==> Performance Option ==>Advance system setting==> Setting ==> setting==>Advanced தேர்வு செய்யவேண்டும்.

பிறகு

Virtual memory ==> Automatically manage paging file size for all drives தேர்வு செய்யுங்கள். அங்குள்ள Check box கண்டிப்பாக டிக் செய்யுங்கள்.

பிறகு, எந்த டிரைவில் உங்களுக்கு அதிக ஸ்பேஸ்(sapce) இருக்கிறதோ அந்த டிரைவை தேர்வு செய்யவும். உதாரணமாக நம் கணினியில் C drive, D drive, E drive என்ற நேமிங் இருக்கும். அதில் உங்களுக்கு அதிக காலியிடம் உள்ள டிரைவ்-ஐ தேர்வு செய்யவும். எடுத்துக்காட்டாக C, அல்லது D அல்லது E தேர்வு செய்யவும்.

நீங்கள் C drive தேர்வு செய்திருந்தால் System managed Size தேர்வு செய்யுங்கள் recommended size , currently allocated size போன்றவற்றை காட்டும் . .

அங்கு custom managed size என்பதை செலக்ட் செய்து Initial Size மற்றும் Maximum Size ஆகியவைகளை MB அளவுகளில் கொடுத்துவிட்டு "Set" என்பதை கிளிக் செய்யுங்கள். முடிந்தது.

இனி உங்கள் கணியின் virtual memory அதிகரித்துவிட்டது. என்ன நண்பர்களே செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் கேளுங்கள்..!!

கம்ப்யூட்டர் வார்த்தைகள் (அன்றும்-இன்றும்)



கணினியில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் ஒவ்வொன்றையும், கணினியின் பயன்பாட்டுக்கு முன்பு எப்படி பயன்படுத்தினோம், எதற்காகப் பயன்படுத்தினோம் என்பதை குறிக்கும் வகையில் ஒரு வினோத , வேடிக்கையான பட்டியலை இங்கு கொடுத்திருக்கிறோம். ஒவ்வொரு வார்த்தைக்கும் தனிப்பட்ட விளக்கத்துடன் இந்த பட்டியல் உள்ளது. காலம் மட்டுமல்ல.. கணியியும் நம்மை மாற்றத்தான் செய்கிறது.


 உதாரணமாக அப்ளிகேஷன் என்ற வார்த்தையைக் கேட்டாலே கணினித் தொடர்புடைய தகவல்களைத்தான் சொல்கிறார்கள் என்று எண்ணும் அளவிற்கு இப்போது கணினியின் ஆளுமை உள்ளது. அதே அப்ளிகேஷன் என்ற வார்த்தைக்கு விண்ணப்பம் என்ற பொருளையே கணினி

ஒரே வினாடியில் கம்ப்யூட்டரை ShutDown செய்ய...


how-to-shutdown-computer-with-in-a-second
ஷட்டவுன் கொடுத்தவுடனே கம்ப்யூட்டர் ஆப் ஆகிவிடவேண்டும் என்றுதான்எல்லோரும் நினைப்பார்கள்.. 
சில சமயங்களில் கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்யும்போது அது எடுத்துக்கொள்ளும் நேரம் நம்மை எரிச்சலை ஏற்படும். 
நாள் முழுவதும் கணினியைப் பயன்படுத்திவிட்டு, அதை ஷட்டவுன் செய்தால் கணினி ஆப் ஆக சிறது நேரம் எடுத்துக்கொள்ளும். 
அது அணையும் வரைக்கும் பொறுமையாக காத்திருக்க முடியாது. 
பொதுவாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும் ஷட்டவுன் ஆவதற்கு முன்பு Windows is shutting down என்ற வாக்கியம் தோன்றும். பிண்ணனியில் பிராசஸ் நடைபெறுவதற்கான வட்டம் சுழன்றுகொண்டே இருக்கும். 
இதுதான் பொறுமையை சோதிக்கும் விடயம். ஷட்டவுன் கொடுத்த உடனேயே கம்ப்யூட்டர் ஆப் ஆகாதா? ச்சே..ச்சே...
என்று தொடர்ந்து மனம் எரிச்சலடையும்..என்றால், கண்டிப்பா அதுபோல ஆப் செய்ய முடியும். பவர் பட்டனை அணைக்காமலேயே முறையாக ஷட்டவுன் செய்து உடனடியாக கம்ப்யூட்டரை நிறுத்த முடியும். 
அதற்கு,
  • முதலில் டாஸ்க் மேனேஜரைத் திறக்க வேண்டும். 
  • டாஸ்க் மேனேஜரை திறக்க குறுக்குவிசைகள் (Ctrl+Alt+Delete)
  • மேற்கண்ட விசைகளை ஒருசேர அழுத்தும்போது டாஸ்க் மேனேஜர் திறந்துவிடும். 
  • அதில் Shut Down மெனு இருக்கும். 
  • அதில் Turn off என்றிருப்பதை Ctrl பட்டனை அழுத்திக்கொண்டே அழுத்தினால் உடனடியாக உங்கள் கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆகிவிடும். 

சோதித்துப் பாருங்களேன்..!

Oct 10, 2013

Wrestlemania 24 Full Show

மின்அஞ்சல் பதிவுகள்: மனித உடல் பற்றி அற்புதமான உண்மைகள்

மின்அஞ்சல் பதிவுகள்: மனித உடல் பற்றி அற்புதமான உண்மைகள்: நமது வியற்றில் ஜீரணமாக்கும் அமிலங்கள் நிறைந்தது,இவை துத்தநாகத்தையும் உருகும் வலிமையானது. கவலை படாதீர், வியற்றின் உட்பூச்சு மிக வரைவில் ப...

மின்அஞ்சல் பதிவுகள்: தமிழகத்தின் சிறப்புகள்

மின்அஞ்சல் பதிவுகள்: தமிழகத்தின் சிறப்புகள்: 1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் 2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி 3. தமிழ...

Oct 9, 2013

தக்காளி இரசம்


இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காளிச் சாறு.


தக்காளி இரசம்

நன்கு பழுத்த தக்காளிப் பழத்தையே சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும்.

பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.

Oct 8, 2013


கொழுப்பை குறைக்கும் உணவுகள்

:-

திடீரென்று எடை கூடுகிறதா? களைப்பாக இருக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொலஸ்டிரால் அளவைப் பாருங்கள்.
கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இளம் பெண்களைவிட வயதான பெண்கள் உடற்பயிற்சி செய்வது, ஓடுவது ஆகியவற்றில் ஈடுபடுவதால் இவர்களுக்கு எல்.டி.எல். என்ற கெடுதலான கொலஸ்டிரால் இல்லை. மாறாக, நல்ல கொலஸ்டிராலான ஹெச்.டி.எல். கொலாஸ்டிரால் சரியான அளவில் இருக்கிறது. இதனால் இதயநோய் அபாயம் இன்றி நலமாக இருக்கிறார்கள். அடிக்கடி கோபம் ஏற்பட்டால் நல்ல கொலாஸ்டிராலான HDLன் அளவு குறைகிறது. எனவே, ஆண்களும் பெண்களும் வைட்டமின் E-400 சர்வதேச அலகு சாப்பிடவும். இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர் ஆலோசனைப்படி

Oct 7, 2013

குடல் கேன்சர் குணமாக காலிஃப்ளவர்..!


சமையலில் பயன்படுத்தப்படும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த பூக்களில் மாவுச்சத்து, உயிர்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. இந்த பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காலிஃப்ளவரில் ஆண்ட்டி ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும். இதன் மூலம் மன அழுத்தம், இதய நோய்களும் குணமாகும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன.

இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். ஒபிசிட்டி குணமடையும். இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிற்றுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் கேன்சரையும் கட்டுப்படுத்துகிறது. இந்த பூக்களில் சின்னஞ்சிறு புழுக்கள் காணப்படும்.

எனவே நீரை கொதிக்க வைத்து அதில் மஞ்சத்தூளை போட்டு கொதிக்க வைத்து பின்னர் சமையலில் உபயோகப்படுத்த வேண்டும். இது சூட்டை தணிக்கும் தன்மையுடையது. மூலத்தை கட்டுப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்கும்.

Oct 6, 2013

குலசை: Chinese health secret

குலசை: Chinese health secret: Chinese health secret வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் சீனர்களின் ஆரோக்கிய இரகசியம் – உலகின் மிகச் சிறந்த உணவாக ச...

குலசை: Chinese health secret

குலசை: Chinese health secret: Chinese health secret வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் சீனர்களின் ஆரோக்கிய இரகசியம் – உலகின் மிகச் சிறந்த உணவாக ச...

குலசை: Chinese health secret

குலசை: Chinese health secret: Chinese health secret வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் சீனர்களின் ஆரோக்கிய இரகசியம் – உலகின் மிகச் சிறந்த உணவாக ச...

Sakalakalavalli Maalai

Oct 2, 2013


மனோதத்துவ விதிப்படி, ஒருவன் சுமாராகச் செய்யும் செயலை ஊக்கப்படுத்தினால், அவன் அச்செயலை முன்னிலும் சிறப்பாகச் செய்து வெற்றியடைவான். நன்றாகச் செய்யும் செயலை இகழ்ந்து பழித்தால், அடுத்து அவன் செய்யும் செயல்கள் அனைத்திலும் தடுமாற்றம் ஏற்பட்டு தோல்வியடைவான்.
பாரதப் போர் நடப்பது உறுதியாகி விட்டது. பாரத வம்ஷத்தின் அரசர்கள் அனைவரும் இரு அணிகளுள் ஒன்றில் இணைந்து போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

நெஞ்சில் ஈரமில்லாத துரியோதனன், பாண்டவர் களைக் கருவறுக்கத் துடித்தான். எல்லா அரசர்களையும் தனது பக்கத்தில் கொண்டு வர வேண்டும்; பெரும் படை பலத் தைத் திரட்டி பாண்டவர்களைப் பயமுறுத்த வேண்டும் என்பது அவனது எண்ணம். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல அவன் செய்கைகளுக்குப் பக்கபலமாக கர்ணன், சகுனி, துச்சாதனன் போன்றவர்கள் இருந்தனர். தர்மம், நீதி போதித்த பீஷ்மர், துரோணர், விதுரர் போன்றோர் துரியோதனனின் இகழ்ச்சிக்கு ஆளாயினர்.

பாண்டவர்களும் வலுவான எதிரணியை உருவாக்கினர். அதைவிட பரந்தாமனின் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் அவர் களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.

நாடற்ற பாண்டவர் விராட நாட்டில், உபப்பிலாவியம் நகரில் இருந்து கொண்டு போருக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இரு திறத்தாருக்கும் நாளுக்கு நாள் படைபலம் பெருகிக் கொண்டிருந்தது. பாண்டவர்கள் படையைவிட, துரியோதனனின் படைபலமே அதிகரித்துக் காணப்பட்டது. படை திரட்டு வதிலும் பாண்டவர்கள் நேர்மையான வழியைப் பின்பற்ற, துரியோதனனோ குறுக்கு வழியையே பின்பற்றினான்.

பாண்டவர்களில் தருமன், பீமன், அர்ச்சுனன் இம்மூவரும் பாண்டுவின் மூத்த மனைவியான குந்தியின் புத்திரர்கள். நகுலனும் சகாதேவனும் இளைய மனைவி மாத்ரியின் புத்திரர்கள். மாத்ரி மந்தர தேசத்து அரசன் சல்லியனின் உடன் பிறந்த சகோதரி.

பாண்டவர்கள் தங்களுக்கு வேண்டிய அரசர் களுக்கு தூதர்கள் மூலம் ஓலையனுப்பி ஆதரவு கோரினர். ஆனால் அவர்கள் சல்லியனிடம் மட்டும் உதவி கேட்கவில்லை. தாய்மாமன்தானே, தங்களுக்கல்லாமல் வேறு யாருக்கு அவர் உதவி செய்யப் போகிறார் என்ற அபரிமிதமான நம்பிக்கையில் இருந்து விட்டனர்.

மருமக்கள் உதவி கேட்காவிடினும் மாமன் உதவி செய்யாமலா இருப்பார்? துரியோதனனும் பாண்டவர்களும் படை பலத்தைப் பெருக்கு வதையறிந்த சல்லியன், தன் மருமக்களான பாண்டவர்களுக்கு உதவ பெரும் படையுடன் உபப்பிலாவியம் நோக்கி விரைந்தான்.

அலைகடல்போல் ஆர்ப்பரித்து, கண்ணுக் கெட்டிய தூரம் வரை நால்வகைப் படைகளும் அணிவகுத்து உபப்பிலாவியம் நோக்கி வீறுநடை போட்டுச் சென்றன. பெரும்படையுடன் தேவேந்திரனைப் போன்று சல்லியன் வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட துரியோதனன் புழுவாய்த் துடித்தான். அவனைத் தன் பக்கம் இழுத்துவிட்டால் பாண்டவர்களின் பலம் வெகுவாகக் குறைந்துவிடும்; பின் அவர்களை எளிதில் வென்றுவிடலாம் என நினைத்து வஞ்சகத் திட்டம் தீட்டினான். தன்னை வெளிப் படுத்திக் கொள்ளாமல், உபப்பிலாவியம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சல்லியனையும் அவன் படையினரையும் ஆங்காங்கே பெரும் வரவேற்பளித்து உபசரித்தான். இச்செயலில் தன்னுடைய பணியாளர்களை முழுமையாக ஈடுபடுத்தினான். படையினர் அனைவருக்கும் பருக சுத்தமான தண்ணீர், அறுசுவை உணவு, பானகங்கள், சல்லியனுக்கு சாமரம் வீச பணியாளர்கள் என அமர்க்களப்படுத்தினான்.

இத்தகைய உயரிய வரவேற்பு சல்லியனை பெருமகிழ்ச்சியடையச் செய்தது. இதற்கெல்லாம் காரணம் தனது மருமக்கள் பாண்டவர்களே என நினைத்து, அனைத்தையும் ஏற்றுக் கொண்டான். தனக்கும் தனது பெரும்படைகளுக்கும் சேவை செய்யும் பணியாளர்களின் தன்னலம் கருதா தன்மை கண்டு உள்ளம் பூரித்தான். மருமக்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! பாண்டவர்களுக்கு நிகர் பாண்டவர்கள்தான் என இறும்பூது எய்தினான். தனக்குப் பணிவிடை செய்த பணியாளர்களுக்குப் பரிசுகள் தரவிரும்பி, அவர்கள் எஜமானனின் உத்தரவு வாங்கிவர வேண்டினான். இந்தத் தருணத்தைத்தானே துரியோதனனும் எதிர்பார்த்தான். அவன் சல்லியன் முன்பு சென்று வணங்கி நிற்க, வியப்பும் திகைப்பும் அடைந்தான் சல்லியன்.

தனக்கு மரியாதை செய்த துரியோதனனைப் பாராட்டினான். துரியோதனனைப் பெருமை யாகப் பேசி, ""இந்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்ய வேண்டும்?'' என வினவினான்.

""மந்தர தேசத்து அதிபதியே! நீர் எனக்கும் மாமன் உறவு முறையே... உமது தயவு எனக்குத் தேவை. நீர் எங்கள் பக்கம் சேர்ந்து எனக்கு வலுசேர்த்து பாண்டவர்களை எதிர்க்க வேண்டும்!'' என்று சொன்னான் துரியோதனன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், கொடுத்த வாக்கைக் காக்க சல்லியன் துரியோதனன் பக்கம் நின்று பாண்டவர்களை எதிர்ப்பதாக வாக்களித் தான். இருப்பினும் உபப்பி லாவியம் சென்று தன் மருமக்களை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசிவர துரியோதனனிடம் அனு மதி வேண்டினான். சல்லியனிடம் வாக்குறுதி பெற்றதும் துரியோதனன் தன் சுய உருவத்தைக் காட்டினான்.

""நீர் எனக்கு வாக்கு கொடுத்துவிட்டீர்! அதை மறக்காமல் நிறைவேற்றுவீர்! அதிவிரைவில் சென்று, கண்டு, திரும்பி வருவீர்!'' என்று துரியோதனன் கட்டளையிட்டான்.

மனதில் பெரும் பாரத்துடன் தருமனைச் சந்தித்தான் சல்லியன். தக்க நேரத்தில் பெரும் படையுடன் மாமன் தங்களுக்கு உதவ வந்திருக் கிறான் என நினைத்து பாண்டவர்கள் பெரு மகிழ்ச்சியடைந்தனர். அதிலும் - குறிப்பாக நகுலனுக்கும் சகாதேவனுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. தங்கள் சொந்த தாய்மாமன் ஆயிற்றே!

துரியோதனனால் தான் ஏமாற்றப்பட்ட விவரத்தைக் கவலையுடன் தெரிவித்தான் சல்லியன். தருமபுத்திரன் மிகவும் கவலையடைந்தான். காரணம் சல்லியன் மாவீரன் மட்டுமல்ல; தர்மத்தின் வழிநடப்பவன். நேர்மையும் நீதியும் தவறாதவன். தேரோட்டுவதில் பகவான் கிருஷ்ணனுக்கு நிகரானவன். அப்பேர்ப்பட்ட சல்லியன் ஓட்டும் தேரில் நின்று கர்ணன் போர் புரிந்தால் அர்ச்சுனன் நிலை என்னாகும்?

தர்மனின் மனதைக் குறிப்பால் உணர்ந்த சல்லியன், ""தருமா! எல்லாம் விதிப்படியே நடக் கும். நான் உங்களை முழுமூச்சுடன் எதிர்ப்பேன். ஆனால் வெற்றித் திருமகள் நீதியின் பக்கமே நிற்பாள். நீ தம்பியர் புடைசூழ தேவேந்திரனைப் போல வீற்றிருக்கிறாய்! தேவேந்திரனுக்குக்கூட கிடைக்காத பேறு உனக்குக் கிடைத்துள்ளது. ஆம்! பகவான் பரந்தாமன் பக்கபலமாயுள்ளான்! யாருக்குக் கிடைக்கும் இந்த உயர்ந்த நிலை! தரும தேவதையும் வீரத் திருமகளும் நீ இருக்கும் இடத்தில் வாசம் செய்கிறார்கள். தர்மத்தின் வழி நடக்கும் உன்னை- தர்ம தேவனால் பாதுகாக்கப் படும் உன்னை யாராலும் வெற்றி கொள்ள முடியாது'' என்றான் சல்லியன்.

""மாமா! நான் கவலைப்படுவது அர்ஜுனனைக் குறித்தே! உங்கள் துணைகொண்டு மட்டுமே கர்ணன் அர்ஜுனனை வீழ்த்த முடியும். தாங்கள் நடத்தும் தேரில் நின்று போரிடுபவன் ஒரு நாளும் தோற்க மாட்டான் என்பது எனக்குத் தெரியாதா?''

""தருமா! நீ வீண்பயம் கொள்ளத் தேவையில்லை. என்னால் அர்ஜுனன் உயிர் காப்பாற்றப்படும்! நான் நடத்தும் தேரில் நின்று கர்ணன் போர் புரிவானா னால் அவனது வீரத்துக்குப் பழுது ஏற்படும். இதை நீ பார்க்கத்தான் போகிறாய். உனக்கு மங்களம் உண்டாகட்டும்'' என மருமக்களை ஆசீர்வதித்து, துரியோதனன் இருக்குமிடம் வந்தடைந்தான் சல்லியன்.

பாரதப் போரில் கௌரவ சேனைக்கு முதலில் பீஷ்மரும், அவருக்குப் பிறகு துரோணரும், துரோணருக்குப் பின் கர்ணனும், கர்ணன் மறைவிற்குப் பிறகு சல்லியனும் தலைமை தாங்கினர்.

குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற மாபெரும் போரில், பதினேழாம் நாள் கர்ணனும் அர்ஜுனனும் கடும் போர் புரிந்தனர். கர்ணனின் தேரை சல்லியன் நடத்தினான்.

யுத்தம் தொடங்கும் முன்பே கர்ணன் பேசிய பேச்சுக்களால் சல்லியன் கோபம் கொண்டான். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

""இன்றைய யுத்தத்தில் அர்ஜுனன் என்னிட மிருந்து தப்ப முடியாது! என்னுடைய வீரத்தின் முன்பு காண்டீபன் நிற்கத் தகுதியற்றவன். அவனை இன்று எமனுக்குப் பரிசளித்தே தீருவேன்!'' என்று கர்ணன் கர்ஜனை செய்ததும், சல்லியன் கோபாவேசமானான்.

தேரோட்டியின் மகன் கர்ணன், தன் மருமகன் அர்ஜுனனைப் பழித்ததும் சல்லியன் பொறுக்க முடியாமல், ""ஏ கர்ணா! நீ தகுதிக்கு மீறிய பேச்சு களைப் பேசுகிறாய்! முதலில் பேச்சை நிறுத்தி செயலில் காட்டு. அர்ஜுனனின் காண்டீபம் பொழியும் பாணங்களை உன் பேச்சால் தடுத்து நிறுத்த முடியாது!'' என்று கோபாவேசமாகக் கூறினான்.

""சல்லியனே! எனக்கு நிகரான வில்லாளி எந்த உலகிலும் கிடையாது. தேவாசுரர்கள்கூட என்னைப் பார்த்து நடுங்குகின்றனர்'' என்று ஏளனமாகச் சொன்னான் கர்ணன்.

""கர்ணா! பேசுவது எளிது; வாய்ச் சொல்லில் வீரமில்லை. எந்த மாவீரனும் தன்னைத்தானே புகழ்வதில்லை. உன்னை நம்பி துரியோதனன் கெடப் போகிறான். ஏ கர்ணனே! பாஞ்சாலியின் சுயம்வரத்தில் நடந்த விற்போட்டியில் இலக்கை அடிக்க முடியாமல் தோல்வியுற்றுத் திரும் பினாய். உன்னால் முடியாததை அர்ஜுனன் செய்து காட்டினான். நீ அர்ஜுனனை எள்ளி நகையாடுகிறாய். அவன் ஆலகாலம் உண்ட லோகநாயகன் சிவனையே எதிர்த்துப் போரிட்டவன். சிவனைத் தழுவியதால் அதீத பலத்தைப் பெற்றவன். முக்கண்ணனின் கரங்க ளினால் பாசுபதாஸ்திரம் பெற்றவன். உன்னை ஓடஓட விரட்டிய சித்திரசேனன் என்ற கந்தர் வனிடமிருந்து துரியோதனனை மீட்டவன். உன்னால் காப்பாற்ற முடியாத உன் எஜமானனை அவனால் மட்டுமே அன்று காப்பாற்ற முடிந்தது. விராட நாட்டில் பசுக்கூட்டங்களை மகாவீரர்கள் பலருடன் சேர்ந்து, பெரும் படையெடுத்துச் சென்று வஞ்சகமாகக் கவர நினைத்தீர்கள். அன்று அர்ஜுனன் தனியொருவ னாக நின்று உங்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அன்று அவனுக்குத் தேரோட்டியது பால்மணம் மாறாத பாலகன் உத்தரன். ஆனால் இன்று பார்த்தனுக்குத் தேரோட்டுபவன் பார் போற்றும் பரந்தாமன்! உத்தரன் தேரோட்டியபோதே உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புறமுதுகிட்டு ஓடிய நீ, கண்ணன் நடத்தும் தேரில் நிற்கும் பார்த்தனை என்ன செய்ய முடியும்? யுத்தம் என்பது வஞ்சகமாக சூதாட்டத்தில் பகடை வீசுவதும், குலமகளின் ஆடையை மன்றில் களைவதுமல்ல... கர்ணா! வாய்ச் சொல்லில் வீரம் வேண்டாம்! போர் புரிந்து அர்ஜுனனை வெல்லப் பார். அல்லது யுத்தக்களத்தை விட்டு வெளியேறு!''

சல்லியனின் பேச்சு கர்ணனை நிலைகுலையச் செய்தது. அவன் தன்னிலையிழந்து, மனம் சோர்ந்தான். அடுத்து என்ன செய்யப் போகி றோம் என்பதை மறந்தான். பரசுராமரிடம் கற்ற அஸ்திரங்களை நினைவுக்குக் கொண்டு வர முயன்றான். நினைத்து நினைத்துப் பார்த்தான்; நினைவில் வரவில்லை. இறுதியாக சல்லியன் நடத்திய தேர்கூட ஓட மறுத்து, சக்கரம் மண்ணில் புதையுண்டது. கர்ணனின் அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றன. காண்டீபம் பொழிந்த பாணங்கள் அவன் உயிரைக் குடித்தது.

மனோதத்துவ விதிப்படி, ஒருவன் சுமாராகச் செய்யும் செயலை ஊக்கப்படுத்தினால், அடுத்து அவன் அச்செயலை முன்னிலும் சிறப்பாகச் செய்து வெற்றியடைவான். நன்றாகச் செய்யும் செயலை இகழ்ந்து பழித்தால், அடுத்து அவன் செய்யும் செயல்கள் அனைத்திலும் தடுமாற்றம் ஏற்பட்டு தோல்வியடைவான். இதுவே கர்ணனுக்கும் நடந்தது. கர்ணனின் மனதை நிலைகுலையச் செய்தது சல்லியனின் பேச்சுகளே.

கர்ணனை சல்லியன் புகழ்ந்து பேசி உற்சாகப் படுத்தியிருந்தால், போரின் போக்கே மாறியிருக்கக் கூடுமல்லவா? சல்லியனின் இகழ்ச்சியான- ஏளனமான பேச்சுகள் கர்ணனைப் புண்படுத்தி, அவன் மனதில் எதிர் அலைகளைத் தோற்றுவித்து, போரில் அவன் உயிரிழக்கக் காரணமாயிற்று. இப்படி நடக்க வேண்டும் எனக் கருதியே சல்லியனை எதிரணிக்குக் கொண்டு சென்றார் அந்த பரந்தாமன்! நடப்பதெல்லாம் அவன் செயலன்றி வேறொன்றுமில்லையே!
பாரதப் போர் நடப்பது உறுதியாகி விட்டது. பாரத வம்ஷத்தின் அரசர்கள் அனைவரும் இரு அணிகளுள் ஒன்றில் இணைந்து போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். நெஞ்சில் ஈரமில்லாத துரியோதனன், பாண்டவர் களைக் கருவறுக்கத் துடித்தான். எல்லா அரசர்களையும் தனது பக்கத்தில் கொண்டு வர வேண்டும்; பெரும் படை பலத் தைத் திரட்டி பாண்டவர்களைப் பயமுறுத்த வேண்டும் என்பது அவனது எண்ணம். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல அவன் செய்கைகளுக்குப் பக்கபலமாக கர்ணன், சகுனி, துச்சாதனன் போன்றவர்கள் இருந்தனர். தர்மம், நீதி போதித்த பீஷ்மர், துரோணர், விதுரர் போன்றோர் துரியோதனனின் இகழ்ச்சிக்கு ஆளாயினர். பாண்டவர்களும் வலுவான எதிரணியை உருவாக்கினர். அதைவிட பரந்தாமனின் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் அவர் களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் எனலாம். நாடற்ற பாண்டவர் விராட நாட்டில், உபப்பிலாவியம் நகரில் இருந்து கொண்டு போருக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இரு திறத்தாருக்கும் நாளுக்கு நாள் படைபலம் பெருகிக் கொண்டிருந்தது. பாண்டவர்கள் படையைவிட, துரியோதனனின் படைபலமே அதிகரித்துக் காணப்பட்டது. படை திரட்டு வதிலும் பாண்டவர்கள் நேர்மையான வழியைப் பின்பற்ற, துரியோதனனோ குறுக்கு வழியையே பின்பற்றினான். பாண்டவர்களில் தருமன், பீமன், அர்ச்சுனன் இம்மூவரும் பாண்டுவின் மூத்த மனைவியான குந்தியின் புத்திரர்கள். நகுலனும் சகாதேவனும் இளைய மனைவி மாத்ரியின் புத்திரர்கள். மாத்ரி மந்தர தேசத்து அரசன் சல்லியனின் உடன் பிறந்த சகோதரி. பாண்டவர்கள் தங்களுக்கு வேண்டிய அரசர் களுக்கு தூதர்கள் மூலம் ஓலையனுப்பி ஆதரவு கோரினர். ஆனால் அவர்கள் சல்லியனிடம் மட்டும் உதவி கேட்கவில்லை. தாய்மாமன்தானே, தங்களுக்கல்லாமல் வேறு யாருக்கு அவர் உதவி செய்யப் போகிறார் என்ற அபரிமிதமான நம்பிக்கையில் இருந்து விட்டனர். மருமக்கள் உதவி கேட்காவிடினும் மாமன் உதவி செய்யாமலா இருப்பார்? துரியோதனனும் பாண்டவர்களும் படை பலத்தைப் பெருக்கு வதையறிந்த சல்லியன், தன் மருமக்களான பாண்டவர்களுக்கு உதவ பெரும் படையுடன் உபப்பிலாவியம் நோக்கி விரைந்தான். அலைகடல்போல் ஆர்ப்பரித்து, கண்ணுக் கெட்டிய தூரம் வரை நால்வகைப் படைகளும் அணிவகுத்து உபப்பிலாவியம் நோக்கி வீறுநடை போட்டுச் சென்றன. பெரும்படையுடன் தேவேந்திரனைப் போன்று சல்லியன் வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட துரியோதனன் புழுவாய்த் துடித்தான். அவனைத் தன் பக்கம் இழுத்துவிட்டால் பாண்டவர்களின் பலம் வெகுவாகக் குறைந்துவிடும்; பின் அவர்களை எளிதில் வென்றுவிடலாம் என நினைத்து வஞ்சகத் திட்டம் தீட்டினான். தன்னை வெளிப் படுத்திக் கொள்ளாமல், உபப்பிலாவியம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சல்லியனையும் அவன் படையினரையும் ஆங்காங்கே பெரும் வரவேற்பளித்து உபசரித்தான். இச்செயலில் தன்னுடைய பணியாளர்களை முழுமையாக ஈடுபடுத்தினான். படையினர் அனைவருக்கும் பருக சுத்தமான தண்ணீர், அறுசுவை உணவு, பானகங்கள், சல்லியனுக்கு சாமரம் வீச பணியாளர்கள் என அமர்க்களப்படுத்தினான். இத்தகைய உயரிய வரவேற்பு சல்லியனை பெருமகிழ்ச்சியடையச் செய்தது. இதற்கெல்லாம் காரணம் தனது மருமக்கள் பாண்டவர்களே என நினைத்து, அனைத்தையும் ஏற்றுக் கொண்டான். தனக்கும் தனது பெரும்படைகளுக்கும் சேவை செய்யும் பணியாளர்களின் தன்னலம் கருதா தன்மை கண்டு உள்ளம் பூரித்தான். மருமக்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! பாண்டவர்களுக்கு நிகர் பாண்டவர்கள்தான் என இறும்பூது எய்தினான். தனக்குப் பணிவிடை செய்த பணியாளர்களுக்குப் பரிசுகள் தரவிரும்பி, அவர்கள் எஜமானனின் உத்தரவு வாங்கிவர வேண்டினான். இந்தத் தருணத்தைத்தானே துரியோதனனும் எதிர்பார்த்தான். அவன் சல்லியன் முன்பு சென்று வணங்கி நிற்க, வியப்பும் திகைப்பும் அடைந்தான் சல்லியன். தனக்கு மரியாதை செய்த துரியோதனனைப் பாராட்டினான். துரியோதனனைப் பெருமை யாகப் பேசி, ""இந்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்ய வேண்டும்?'' என வினவினான். ""மந்தர தேசத்து அதிபதியே! நீர் எனக்கும் மாமன் உறவு முறையே... உமது தயவு எனக்குத் தேவை. நீர் எங்கள் பக்கம் சேர்ந்து எனக்கு வலுசேர்த்து பாண்டவர்களை எதிர்க்க வேண்டும்!'' என்று சொன்னான் துரியோதனன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், கொடுத்த வாக்கைக் காக்க சல்லியன் துரியோதனன் பக்கம் நின்று பாண்டவர்களை எதிர்ப்பதாக வாக்களித் தான். இருப்பினும் உபப்பி லாவியம் சென்று தன் மருமக்களை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசிவர துரியோதனனிடம் அனு மதி வேண்டினான். சல்லியனிடம் வாக்குறுதி பெற்றதும் துரியோதனன் தன் சுய உருவத்தைக் காட்டினான். ""நீர் எனக்கு வாக்கு கொடுத்துவிட்டீர்! அதை மறக்காமல் நிறைவேற்றுவீர்! அதிவிரைவில் சென்று, கண்டு, திரும்பி வருவீர்!'' என்று துரியோதனன் கட்டளையிட்டான். மனதில் பெரும் பாரத்துடன் தருமனைச் சந்தித்தான் சல்லியன். தக்க நேரத்தில் பெரும் படையுடன் மாமன் தங்களுக்கு உதவ வந்திருக் கிறான் என நினைத்து பாண்டவர்கள் பெரு மகிழ்ச்சியடைந்தனர். அதிலும் - குறிப்பாக நகுலனுக்கும் சகாதேவனுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. தங்கள் சொந்த தாய்மாமன் ஆயிற்றே! துரியோதனனால் தான் ஏமாற்றப்பட்ட விவரத்தைக் கவலையுடன் தெரிவித்தான் சல்லியன். தருமபுத்திரன் மிகவும் கவலையடைந்தான். காரணம் சல்லியன் மாவீரன் மட்டுமல்ல; தர்மத்தின் வழிநடப்பவன். நேர்மையும் நீதியும் தவறாதவன். தேரோட்டுவதில் பகவான் கிருஷ்ணனுக்கு நிகரானவன். அப்பேர்ப்பட்ட சல்லியன் ஓட்டும் தேரில் நின்று கர்ணன் போர் புரிந்தால் அர்ச்சுனன் நிலை என்னாகும்? தர்மனின் மனதைக் குறிப்பால் உணர்ந்த சல்லியன், ""தருமா! எல்லாம் விதிப்படியே நடக் கும். நான் உங்களை முழுமூச்சுடன் எதிர்ப்பேன். ஆனால் வெற்றித் திருமகள் நீதியின் பக்கமே நிற்பாள். நீ தம்பியர் புடைசூழ தேவேந்திரனைப் போல வீற்றிருக்கிறாய்! தேவேந்திரனுக்குக்கூட கிடைக்காத பேறு உனக்குக் கிடைத்துள்ளது. ஆம்! பகவான் பரந்தாமன் பக்கபலமாயுள்ளான்! யாருக்குக் கிடைக்கும் இந்த உயர்ந்த நிலை! தரும தேவதையும் வீரத் திருமகளும் நீ இருக்கும் இடத்தில் வாசம் செய்கிறார்கள். தர்மத்தின் வழி நடக்கும் உன்னை- தர்ம தேவனால் பாதுகாக்கப் படும் உன்னை யாராலும் வெற்றி கொள்ள முடியாது'' என்றான் சல்லியன். ""மாமா! நான் கவலைப்படுவது அர்ஜுனனைக் குறித்தே! உங்கள் துணைகொண்டு மட்டுமே கர்ணன் அர்ஜுனனை வீழ்த்த முடியும். தாங்கள் நடத்தும் தேரில் நின்று போரிடுபவன் ஒரு நாளும் தோற்க மாட்டான் என்பது எனக்குத் தெரியாதா?'' ""தருமா! நீ வீண்பயம் கொள்ளத் தேவையில்லை. என்னால் அர்ஜுனன் உயிர் காப்பாற்றப்படும்! நான் நடத்தும் தேரில் நின்று கர்ணன் போர் புரிவானா னால் அவனது வீரத்துக்குப் பழுது ஏற்படும். இதை நீ பார்க்கத்தான் போகிறாய். உனக்கு மங்களம் உண்டாகட்டும்'' என மருமக்களை ஆசீர்வதித்து, துரியோதனன் இருக்குமிடம் வந்தடைந்தான் சல்லியன். பாரதப் போரில் கௌரவ சேனைக்கு முதலில் பீஷ்மரும், அவருக்குப் பிறகு துரோணரும், துரோணருக்குப் பின் கர்ணனும், கர்ணன் மறைவிற்குப் பிறகு சல்லியனும் தலைமை தாங்கினர். குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற மாபெரும் போரில், பதினேழாம் நாள் கர்ணனும் அர்ஜுனனும் கடும் போர் புரிந்தனர். கர்ணனின் தேரை சல்லியன் நடத்தினான். யுத்தம் தொடங்கும் முன்பே கர்ணன் பேசிய பேச்சுக்களால் சல்லியன் கோபம் கொண்டான். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ""இன்றைய யுத்தத்தில் அர்ஜுனன் என்னிட மிருந்து தப்ப முடியாது! என்னுடைய வீரத்தின் முன்பு காண்டீபன் நிற்கத் தகுதியற்றவன். அவனை இன்று எமனுக்குப் பரிசளித்தே தீருவேன்!'' என்று கர்ணன் கர்ஜனை செய்ததும், சல்லியன் கோபாவேசமானான். தேரோட்டியின் மகன் கர்ணன், தன் மருமகன் அர்ஜுனனைப் பழித்ததும் சல்லியன் பொறுக்க முடியாமல், ""ஏ கர்ணா! நீ தகுதிக்கு மீறிய பேச்சு களைப் பேசுகிறாய்! முதலில் பேச்சை நிறுத்தி செயலில் காட்டு. அர்ஜுனனின் காண்டீபம் பொழியும் பாணங்களை உன் பேச்சால் தடுத்து நிறுத்த முடியாது!'' என்று கோபாவேசமாகக் கூறினான். ""சல்லியனே! எனக்கு நிகரான வில்லாளி எந்த உலகிலும் கிடையாது. தேவாசுரர்கள்கூட என்னைப் பார்த்து நடுங்குகின்றனர்'' என்று ஏளனமாகச் சொன்னான் கர்ணன். ""கர்ணா! பேசுவது எளிது; வாய்ச் சொல்லில் வீரமில்லை. எந்த மாவீரனும் தன்னைத்தானே புகழ்வதில்லை. உன்னை நம்பி துரியோதனன் கெடப் போகிறான். ஏ கர்ணனே! பாஞ்சாலியின் சுயம்வரத்தில் நடந்த விற்போட்டியில் இலக்கை அடிக்க முடியாமல் தோல்வியுற்றுத் திரும் பினாய். உன்னால் முடியாததை அர்ஜுனன் செய்து காட்டினான். நீ அர்ஜுனனை எள்ளி நகையாடுகிறாய். அவன் ஆலகாலம் உண்ட லோகநாயகன் சிவனையே எதிர்த்துப் போரிட்டவன். சிவனைத் தழுவியதால் அதீத பலத்தைப் பெற்றவன். முக்கண்ணனின் கரங்க ளினால் பாசுபதாஸ்திரம் பெற்றவன். உன்னை ஓடஓட விரட்டிய சித்திரசேனன் என்ற கந்தர் வனிடமிருந்து துரியோதனனை மீட்டவன். உன்னால் காப்பாற்ற முடியாத உன் எஜமானனை அவனால் மட்டுமே அன்று காப்பாற்ற முடிந்தது. விராட நாட்டில் பசுக்கூட்டங்களை மகாவீரர்கள் பலருடன் சேர்ந்து, பெரும் படையெடுத்துச் சென்று வஞ்சகமாகக் கவர நினைத்தீர்கள். அன்று அர்ஜுனன் தனியொருவ னாக நின்று உங்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அன்று அவனுக்குத் தேரோட்டியது பால்மணம் மாறாத பாலகன் உத்தரன். ஆனால் இன்று பார்த்தனுக்குத் தேரோட்டுபவன் பார் போற்றும் பரந்தாமன்! உத்தரன் தேரோட்டியபோதே உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புறமுதுகிட்டு ஓடிய நீ, கண்ணன் நடத்தும் தேரில் நிற்கும் பார்த்தனை என்ன செய்ய முடியும்? யுத்தம் என்பது வஞ்சகமாக சூதாட்டத்தில் பகடை வீசுவதும், குலமகளின் ஆடையை மன்றில் களைவதுமல்ல... கர்ணா! வாய்ச் சொல்லில் வீரம் வேண்டாம்! போர் புரிந்து அர்ஜுனனை வெல்லப் பார். அல்லது யுத்தக்களத்தை விட்டு வெளியேறு!'' சல்லியனின் பேச்சு கர்ணனை நிலைகுலையச் செய்தது. அவன் தன்னிலையிழந்து, மனம் சோர்ந்தான். அடுத்து என்ன செய்யப் போகி றோம் என்பதை மறந்தான். பரசுராமரிடம் கற்ற அஸ்திரங்களை நினைவுக்குக் கொண்டு வர முயன்றான். நினைத்து நினைத்துப் பார்த்தான்; நினைவில் வரவில்லை. இறுதியாக சல்லியன் நடத்திய தேர்கூட ஓட மறுத்து, சக்கரம் மண்ணில் புதையுண்டது. கர்ணனின் அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றன. காண்டீபம் பொழிந்த பாணங்கள் அவன் உயிரைக் குடித்தது. மனோதத்துவ விதிப்படி, ஒருவன் சுமாராகச் செய்யும் செயலை ஊக்கப்படுத்தினால், அடுத்து அவன் அச்செயலை முன்னிலும் சிறப்பாகச் செய்து வெற்றியடைவான். நன்றாகச் செய்யும் செயலை இகழ்ந்து பழித்தால், அடுத்து அவன் செய்யும் செயல்கள் அனைத்திலும் தடுமாற்றம் ஏற்பட்டு தோல்வியடைவான். இதுவே கர்ணனுக்கும் நடந்தது. கர்ணனின் மனதை நிலைகுலையச் செய்தது சல்லியனின் பேச்சுகளே. கர்ணனை சல்லியன் புகழ்ந்து பேசி உற்சாகப் படுத்தியிருந்தால், போரின் போக்கே மாறியிருக்கக் கூடுமல்லவா? சல்லியனின் இகழ்ச்சியான- ஏளனமான பேச்சுகள் கர்ணனைப் புண்படுத்தி, அவன் மனதில் எதிர் அலைகளைத் தோற்றுவித்து, போரில் அவன் உயிரிழக்கக் காரணமாயிற்று. இப்படி நடக்க வேண்டும் எனக் கருதியே சல்லியனை எதிரணிக்குக் கொண்டு சென்றார் அந்த பரந்தாமன்! நடப்பதெல்லாம் அவன் செயலன்றி வேறொன்றுமில்லையே!

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...