Apr 25, 2013


இன்னும் எத்தனை உயிர்களை 'தீ'க்கு கொடுக்கப்போகிறோம். அலட்சியம், லாப வெறி, ஊழல் எல்லாம் சேர்ந்து வாழும் அடிப்படை உரிமையை பறிக்கின்றது.

110கோடி மக்கள் இருப்பதாலோ என்னமோ மனித உயிர்கள் மலிவாகப்போய்விட்டன இங்கே, கும்பகோணம் தீவிபத்து, ஸ்ரீரங்கம் தீவிபத்து என தொடர்ந்து தீவிபத்துகள் என்ற பெயரில் நடப்பவைகள் எல்லாம் அலட்சிய கொலைகளே, இன்று அந்த அலட்சிய கொலைகள் வரிசையில் கோவை வணிக வளாக தீவிபத்து.

கோவையில் இன்று வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பெண்கள் உள்டப 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். கோவை-அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் அருகே 4 மாடி கொண்ட சேரன் பிளாசா என்ற வணிக வளாகம் உள்ளது. இதில் பிடித்த தீயில் பலர் படுகாயம் அடைந்தனர், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் தீயில் கருகி இறந்தனர்.

மேலை நாடுகளிலும் முன்னேறிய நாடுகளிலும் இப்படியான தீவிபத்துகள் நிகழ்ந்தாலும் கூட உயிர்பலி என்பது மிக மிகக்குறைவே, ஏனெனில் கட்டிடத்தை சுற்றிலும் ஃபயர் எஞ்சின் அக்சஸ் ஏரியா என கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும் ஃபயர் எஞ்சின் செல்லக்கூடிய அளவு இடம், கட்டிடத்தினுள் தீயை அணைக்க கூடிய கருவிகள், அவைகள் வேலை செய்கிறதா என்று அடிக்கடி செக்கிங்க, மேலும் ஆண்டுக்கு இரண்டு முறையாவது ஃபயர் டிரில் என பல விசயங்கள் இருக்கும், கட்டிடத்தினுள் கூட வணிக வளாகங்களில்ஃபயர் அக்சஸ் ஏரியாவில் கடை போட்டிருந்தாலோ பொருட்களை அடுக்கி வைத்திருந்தாலோ வணிக வளாகத்தையே சீல் வைத்துவிடுவார்கள் 

ஆனால் தீயணைப்பு வண்டிகள் நிற்கவும் கூட இடமில்லாத அளவுக்கு நெருக்கமான கட்டிடங்கள், தீ என்று வாளியில் எழுதி வாளியில் ஒன்றுமே இல்லாமல் மாட்டி வைத்து இருப்பது, ஃபயர் டிரில் என எதுவுமே செய்யாமல் கிடைக்கும் ஒவ்வொரு அடி இடத்தையும் வாடகைக்கு விட்டு லாப வெறியில் இருப்பதுவும் தீப்பிடித்தால் தப்பிக்க ஏதுவான எந்த வழிகளும் இல்லாத கட்டிடங்களுக்கெல்லாம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி அளிப்பதும் உயிர்வாழ வேண்டிய அடிப்படை உரிமையை பறிக்கின்றன இந்த லாபவெறியும், லஞ்சமும்.

#என்று தணியும் இந்த 'தீ' விபத்துகளின் தாகம்.
இன்னும் எத்தனை உயிர்களை 'தீ'க்கு கொடுக்கப்போகிறோம். அலட்சியம், லாப வெறி, ஊழல் எல்லாம் சேர்ந்து வாழும் அடிப்படை உரிமையை பறிக்கின்றது.
110கோடி மக்கள் இருப்பதாலோ என்னமோ மனித உயிர்கள் மலிவாகப்போய்விட்டன இங்கே, கும்பகோணம் தீவிபத்து, ஸ்ரீரங்கம் தீவிபத்து என தொடர்ந்து தீவிபத்துகள் என்ற பெயரில் நடப்பவைகள் எல்லாம் அலட்சிய கொலைகளே, இன்று அந்த அலட்சிய கொலைகள் வரிசையில் கோவை வணிக வளாக தீவிபத்து.

கோவையில் இன்று வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பெண்கள் உள்டப 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். கோவை-அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் அருகே 4 மாடி கொண்ட சேரன் பிளாசா என்ற வணிக வளாகம் உள்ளது. இதில் பிடித்த தீயில் பலர் படுகாயம் அடைந்தனர், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் தீயில் கருகி இறந்தனர்.

மேலை நாடுகளிலும் முன்னேறிய நாடுகளிலும் இப்படியான தீவிபத்துகள் நிகழ்ந்தாலும் கூட உயிர்பலி என்பது மிக மிகக்குறைவே, ஏனெனில் கட்டிடத்தை சுற்றிலும் ஃபயர் எஞ்சின் அக்சஸ் ஏரியா என கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும் ஃபயர் எஞ்சின் செல்லக்கூடிய அளவு இடம், கட்டிடத்தினுள் தீயை அணைக்க கூடிய கருவிகள், அவைகள் வேலை செய்கிறதா என்று அடிக்கடி செக்கிங்க, மேலும் ஆண்டுக்கு இரண்டு முறையாவது ஃபயர் டிரில் என பல விசயங்கள் இருக்கும், கட்டிடத்தினுள் கூட வணிக வளாகங்களில்ஃபயர் அக்சஸ் ஏரியாவில் கடை போட்டிருந்தாலோ பொருட்களை அடுக்கி வைத்திருந்தாலோ வணிக வளாகத்தையே சீல் வைத்துவிடுவார்கள்

ஆனால் தீயணைப்பு வண்டிகள் நிற்கவும் கூட இடமில்லாத அளவுக்கு நெருக்கமான கட்டிடங்கள், தீ என்று வாளியில் எழுதி வாளியில் ஒன்றுமே இல்லாமல் மாட்டி வைத்து இருப்பது, ஃபயர் டிரில் என எதுவுமே செய்யாமல் கிடைக்கும் ஒவ்வொரு அடி இடத்தையும் வாடகைக்கு விட்டு லாப வெறியில் இருப்பதுவும் தீப்பிடித்தால் தப்பிக்க ஏதுவான எந்த வழிகளும் இல்லாத கட்டிடங்களுக்கெல்லாம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி அளிப்பதும் உயிர்வாழ வேண்டிய அடிப்படை உரிமையை பறிக்கின்றன இந்த லாபவெறியும், லஞ்சமும்.
சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் இணைந்த ஒருநாளில் அன்னை பார்வதிதேவி தன் கைதிறமையால் அழகான குழந்தை ஒவியத்தை வரைந்தார். அந்த ஓவியம் சாதராண ஓவியமாக இல்லாமல் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான், பார்வதியிடம், “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.” என்று கூறி கொண்டே தன் கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சிகாற்றை அந்த ஒவியத்தின் மேல் பதித்தார். ஈசனின் மூச்சி காற்று காற்று சில்லென்று ஓவியத்தில் பட்டஉடன், அந்த ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர் பெற்று சிரிக்க ஆரம்பித்து ஒரு அழகான குழந்தையாக வெளிவந்தது..

இந்த அற்புதத்தை கண்ட பார்வதிதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்து, “நான் வரைந்த குழந்தை ஒவியம், ஒரு நிஜ குழந்தையாக மாறியதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் வரைந்த சித்திரம் குழந்தையாக மாறியதால் இந்த குழந்தைக்கு சித்திர குப்தன் என அழைக்கபடட்டும்” என்று ஆசி வழங்கினார்.

சித்திரகுப்தன் தோன்றிய ஒவ்வொரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா எடுத்து சித்திரகுப்தரை வணங்குகிறோம்.

சித்திர குப்தனுக்கு பதவி ஒருநாள் யமதர்ம ராஜனுக்கு மனகவலை அதிகமாகிக்கொண்டே போனது. தன் மனகவலையை சிவபெருமானிடம் சொன்னார். “இறக்கும் ஜீவராசிகளை அழைத்துவரும் போது அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களையும், தண்டனைகளையும் தர வேண்டும் என்பது நீங்களும் விஷ்ணுபகவானும் எமக்கு கட்டளையிட்டீர்கள். ஆனால் யார் எவ்வளவு பாவ புண்ணியங்கள் செய்தார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது?” என்று தன் மன கவலையை தெரிவித்தார் யமதர்மராஜன்.

“உன் கேள்வியை ஜீவராசிகளை படைக்கும் பிரம்மனிடமே கேள். அவர் இதற்கு தீர்வு சொல்வார்.” என்றார் சிவபெருமான்.
யமதர்மராஜன், பிரம்மனிடம் சென்று தன்னுடைய கவலையை சொன்னார். அதற்கு பிரம்மதேவர், “அட இதுதானா உன் கவலை.? சக்திதேவியின் திருக்கரங்களால் வரையபட்ட ஒரு சித்திரம், சிவபெருமானின் அருளால் உயிர் பெற்று ஒரு ஆண் குழந்தையாக வளர்கிறது. அவன் பெயர் சித்திர குப்தன். சித்திர குப்தனை உன் யமலோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன். அவன் உனக்கு உறுதுணையாக இருந்து, யார் எந்த அளவுக்கு பாவ-புண்ணியங்கள் செய்கிறார்கள் என்பதை சித்திர குப்தன் கவனித்து கணக்கு எழுதுவான். அதனால் உன் மனகவலையை ஒழித்து உன் தர்மபடி பணி செய்.” என்று ஆலோசனை வழங்கினார் பிரம்மன் தேவர்.
அதன்படி சித்திர குப்தனை உடனே அழைத்து, யமதர்மராஜனிடம் அறிமுகப்படுத்தினார் பிரம்ம தேவன். பிரம்மனின் உத்தரவை ஏற்ற சித்திர குப்தன், தன்னுடைய ஒரு கையில் எழுதுகோலும், மறுகையில் எழுதுகோலுக்கு தேவையான மை நிறைந்த கிண்ணமும் ஏந்தி காட்சி தந்தார். அன்றிலிருந்து இன்றுவரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள் செய்யும் ஒவ்வொரு பாவ-புண்ணிய கணக்கை சித்திரகுப்தர் எழுதி வருகிறார்.

நமது பாவ-புண்ணியங்களை பொறுத்து, சித்திர குப்தன் எழுதும் கணக்கின் அடிபடையில்தான் ஒவ்வொரு பிறவியிலும் நாம் அனுபவிக்கும் இன்பமும் – துன்பமும் நிகழ்கிறது. அதனால் பாவம் செய்வதை கனவிலும் நினைக்காமல், இந்த பிறவியில் மட்டுமல்லாமல் எந்த பிறவியிலும் புண்ணியங்களை மட்டுமே செய்து, “இது புண்ணிய ஆத்மா” என்று சித்திர குப்தன், அவரின் கணக்கு புத்தகத்தில் நம்மை பற்றி குறிப்பு எழுதிவிட்டால், அடுத்த பிறவி இல்லை, அல்லது எந்த பிறவியிலும் துன்ப நிலை இல்லாமல் இறைவன் துணை இருப்பார்.

சித்ரா பவுர்ணமி அன்று சிவலிங்கத்தை வில்வஇலைகளால் அர்ச்சனை செய்தால் நம்முடைய புண்ணிய கணக்கு இரட்டிப்பாகும்.
சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தரை ஆலயம் சென்று வணங்க முடியாதவர்கள், அவருடைய படத்தை இல்லத்தில் வைத்து, சர்க்கரை பொங்கல் படைத்து வணங்கி, அத்துடன் அவருடைய கதைளை படித்து, அன்னதானம், விசிறி, குடை, செருப்பு போன்ற உங்களால் முடிந்த தான-தர்மங்களை செய்தால் சித்திரகுப்தர் உங்கள் கணக்கில் நீங்கள் செய்த பாவங்களை குறைத்து, புண்ணியங்களை அதிகப்படுத்துவார். தர்மதேவதையின் அருட்பார்வையை உங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைப்பார். தர்மதேவைதை நம்மை பார்த்தாலே நாம் செய்யும் தான-தர்மங்கள் பலமடங்கு பெருகும். நோய்நொடி இல்லாமல், எந்த பிறவியும் வளமாகும். வாழ்வே இனிதாகும்.

இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி நாள்: 25.04.2013

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...