May 20, 2012

உலக மக்களை அச்சுறுத்தும் கொடூர நோய்கள் எவை?



உலக மக்களை அச்சுறுத்தும் 2 கொடிய நோய்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.அதில் ஒன்று நீரிழிவு, மற்றொன்று உயர் இரத்த அழுத்தம் ஆகும்.
உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் சராசரியாக 3 பேரில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தில் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், நீரிழிவினால் 10 சதவீதம் பேரும் அவதிப்படுகிறார்கள் என்றும் புள்ளி விவரம் கூறுகிறது.
இதன்படி பார்த்தால் தற்போது உலக அளவில் ஏறத்தாழ 50 கோடி பேர்(12 சதவீதம்) உடல் பருமன் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
இதிலும் குறிப்பாக இருதய சம்பந்தப்பட்ட பாதிப்பு குறைந்த வருவாய் மற்றும் மத்திய வருவாய் உள்ள நாடுகளில் 40 சதவீதம் அளவிற்கு இருக்கிறது. 25 வயது இளைஞர்கள் கூட பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே இந்த கொடிய நோய்களில் இருந்து மக்களை காப்பாற்ற பரவலாக மருத்துவ வசதிகள், குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்வது மிகவும் அவசியம் என்று உலக சுகாதார கழக டைரக்டர் ஜெனரல் மார்க்கரெட் ஷான் தெரிவித்துள்ளார்.

40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்




40 வயது ஆபத்தான நோய்கள்
40முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால்

பிரண்டை

பிரண்டை

பிரண்டை
பிரண்டை

மருத்துவக் குணங்கள்:
  1. பொதுவாக பிரண்டை வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான
  2. பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டி அரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.
  3. குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி

அகத்தி

அகத்திஅகத்திஅகத்தி
மருத்துவக் குணங்கள்:
  1. அகத்திக் கீரை இந்தியாவில் எங்கும் ஏராளமாக வளரக் கூடியது. ஏறக்குறைய இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. இருப்பினும் இதன் இருப்பிடம் மலேசியா எனக் குறிப்பிடுகிறார்கள்.
  2. இக் கீரையை அழகுக்காகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் வளர்க்கின்றனர்.
  3. அகத்தியில் சாழை அகத்தி, பேரகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற மூன்று அகத்திகளும் உணவுக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. உண்ணும் அகத்தியில் இரண்டு அகத்திகளே உள்ளன. ஒன்று வெள்ளை

கண் பார்வை தெளிவாக

சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தன்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
அறிகுறிகள்:

புழுங்கலரிசி அன்னம், பச்சரிசி அன்னம் ,நெய் சாதம்

புழுங்கலரிசி அன்னம்பச்சரிசி அன்னம்நெய் சாதம்
அற்ப சுடுகை அன்னம்:
  • சிறிது சூடு உள்ள அன்னமானது நல்லதாகும். இது வாத பித்த கபங்களையும், அரோகசகத்தையும் நீக்கும். உடலுக்கு வன்மையை தரும். அதிக சளியினால் விளையும் நோயையும் குறைக்கும்.
புழுங்கலரிசி அன்னம்:
  • புழுங்கல் அரிசி அன்னத்தை சாப்பிட்டால் வாத கோபமும், பலமும், வலி ரோகங்களும் நீங்கும். இது நோயாளிக்கு உதவும்.
பச்சரிசி அன்னம்:
  • பச்சரிசி சாதமானது பலத்தையும், குழந்தைகளுக்கு மாந்தத்தையும் உண்டாக்கும். பித்த கோபத்தையும், கிரிச்சரத்தையும் நீக்கும். இதில் வாயு உள்ளது என்பர்.
நன்றாக சமைக்காத அன்னம்:
  • நட்டரிசி சாதத்தை சாப்பிட்டால் மலசலம்  சிக்குவது தவிர, மறுநாளும் சீரணம் ஆகாது. அந்த அன்ன ரசம் உடலில் பரவாது.
குழைந்த அன்னம்:
  • அளிந்த அன்னத்தை உண்டால் வாத பிரமேகம், இருமல், அக்கினி மந்தம், பலவீனம், பீனிசம் ஆகியவை உண்டாகும்.
சுத்த அன்னம்:
  • சுத்த அன்னத்தை நல்ல காய்கறிகளோடு சேர்த்து சாப்பிட்டால் வாத பித்த சிலேஷ்மம் என்னும் மூன்று வித நோய்களுக்கும் முக்கியமாக உதவும். பத்தியத்திற்கும், வாதாதி மூவித ரோகங்களுக்கும் ஆகும். அதி தவிர குடல் நோய்கள் முழுமையும் விலகும்.
குறிப்பு:
  • சுத்த அன்னம் என்பது பழைய அரிசியை தவிடு, நொய் நீங்கும் படி நன்றாக தீட்டி , முழு அரிசியாக புடைத்து எடுத்து இள வெந்நீரால் கழுவி துணியில் கொட்டி சிறிது ஆற வைத்து ஒரு பாண்டத்தில் அரிசிக்கு மூன்று பங்கு நீர் விட்டு அடுப்பில் ஏற்றி அது நுரைகட்டி கொதிக்கும் போது அரிசியை அதில் போட்டு முக்கால் பாகமாக வெந்தவுடன் கரண்டியால் துழாவி வடித்து கொண்டு மறுபடியும் தணலில் வைத்து பக்குவப்படுத்தி இறக்கி கொள்வதாகும்.
பொங்கல் சாதம்:
  • பச்சரிசி பொங்கல் சாதம் சகல அலசரோக வயிற்றுப்பிசம், அங்கலக வாதம், வெப்பம் ஆகியவற்றை உண்டாக்கும். சம்பா பச்சரிசி பொங்கல் சாதம் விந்துவை வளர்க்கும்.
பாலும் சாதமும்:
  • பாலுஞ்சோறும் உண்டால் பித்த கோபமும், தாகமும் விலகும். கொஞ்சம் மந்தம், உடல் வலிமை, வீரிய விருத்தி உண்டாகும்.
பசும்பால் பத்தியம்:
  • பசும்பாலை சாப்பிட வேண்டுமானால் புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு என்னும் ஆறுசுவையில் முதலாவதும் இரண்டாவதுமாகிய நான்கு சுவையுள்ள பொருள்கள் எதனையும் அனுபானமாக சேர்த்து கொண்டு உண்ணலாகாது. சுக்கிலத்தை விருத்தி செய்யும் படியாக கடைசியில் சொல்லிய இரண்டு சுவையுள்ள பொருள்களை அனுபானமாக சேர்த்து கொண்டு உண்ணும் படி மருத்துவர் கூறிவர்.
குறிப்பு:
  • பாலை தனியே அருந்த வேண்டில் அதற்கு அனுபானம் கற்கண்டு பொருந்தும், எட்டு வகை குற்றங்கள் நீங்கிய அன்னத்துடன் உண்ண்ட வேண்டில் மதுரமுள்ள பழம் அனுபானமாக பொருந்தும். ஆதலால் இவ்வாறு முறைப்படி உண்ண வேண்டும்.
நெய் சாதம்:
  • நெய்யும் சாதமும் கலந்து சாப்பிட்டால் வன்மை, விழிக்குளிர்ச்சி, சீரணம் ஆகியவை உண்டாகும். பித்த விகாரம் விலகும். இது பத்திய உணவாகும். இந்த கிருத உணவு சிகிச்சை வயதானவர்களுக்கே முக்கியமாகும்.
மாமிசம் சேர்த்து சமைத்த அன்னம்:
  • மாமிசம் சேர்த்து சமைத்த அன்னத்தை சாப்பிட்டால் மிகு பலமும், விர்த்தி, மேதோதாதுவும், அதிக மந்தமும் உண்டாகும். இரத்தம் சாந்தம் ஆகும்.
அன்னத்தின் எட்டு வகை தோஷங்கள்:
அன்னத்திற்கு எப்பொழுதும் குற்றமே இல்லையானாலும் பாக பேதங்களினால் எட்டு வகை தோஷங்கள் உண்டாகின்றன்.
  • அசனத்தோஷம் என்பது கஞ்சி சிக்கி கொள்வதாகும்.
  • பிச்சில் தோஷம் என்பது அதாவது அன்னம் குழைந்து போவதாம். இதனால் ஜடராக்கினி அணைந்து விடும்.
  • அசுச தோஷம், அதாவது மயிர் கிருமி, உமி முதலியவைகளோடு சமைப்பதாகும். இதனால் அரோக ரோகம் உண்டாகும்.
  • கொதித்தோஷம், அதாவது நருக்கரிசி அன்னம். இதனால் அசைரோகம் உண்டாகும்.
  • சுஷ்கில தோஷம், அதாவது ஆறி உலர்ந்த அன்னம் ஆகும். இதனால் விதூமரோகம் உண்டாகும்.
  • தத்ததோஷம், அதாவது காந்தின அன்னம், இதனால் ரணரோகம் உண்டாகும்.
  • விருப தோஷம், அதாவது கொழியலரிசி அன்னம். இதனால் ஆயுல் முதலானவை கெடும்.
  • அனர்த்துஜ ரோகம். அதாவது நொந்து ஜலம் பிறந்து நூல் இழந்த அன்னம். இதனால் அதிக நித்திரையும், சீதாதி தோஷங்களும் உண்டாகும்.
அதிக சுடுகை அன்னம்:
  • தினமும் சாப்பிடக்கூடிய அதிக சூடுள்ள அன்னமானது உதிரபித்தம், தாக பிரமை, மதரோகம் ஆகியவற்றை உண்டாக்கும்.
தயிரும் உப்பும்:
  • உணவின் இறுதியில் புளித்த தயிரும், உப்பும் சேர்த்து சாப்பிட்டால் தயிருக்கும், நெய்க்கும் நடுவாக தீனிப்பையில் இறங்கியுள்ள சகல பதார்த்தங்களும் உள்ள உணவில் திரி தோஷங்களையும் நீக்குவதோடு

கோடைக்கு குளிர்ச்சி

கோடைக்கு குளிர்ச்சி



வெந்தயத்தை தயிரில் ஊறவைத்து, சர்க்கரை போட்டுச் சாப்பிட்டால் வயிற்றுச்சூட்டைத் தணிக்கும்.


வெட்டிவேரை இரவில் கொதிக்க வைத்து காலையில் வடிகட்டி சூடான சர்க்கரைப் பாகில் கலந்து பன்னீர் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

சித்தரத்தை வேரை இரவு தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் வேர் ஊறிய தண்ணீரைக் குடித்தால் தொண்டைக்கட்டுக்கு நல்லது.


சோற்றுக்
கற்றாழையை தோலை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கிற சதையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சாப்பிட்டால் உடலுக்கு ஏகக் குளிர்ச்சி.

  
கொத்துமல்லியுடன் வெல்லம் சேர்த்து அரைத்துக் குடிக்கலாம்.

அகலமான பாத்திரத்தில் நீரைக் கொதிக்கவிட்டு அதில் நன்னாரி வேர் முழுவதும் மூழ்கும்படி 5 நிமிடம் அப்படியே அடுப்பை எரியவிடவும்.

நீரை வடிகட்டி எடுத்து, தேவையான அளவு சர்க்கரைப் பாகை கம்பிப்பதம் வந்தவுடன் கலந்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். தேவையானபோது நீருடன் 1:4 வீதத்தில் கலந்து கொள்ளவும்.


இஞ்சியை சின்னச்சின்னதாக வெட்டி மிக்ஸியில் அடித்து ஒரு டம்ளர் ஜூஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்


எலுமிச்சை சாறு 2 டம்ளர் எடுத்துக்கொண்டு, சர்க்கரை 3 டம்ளர் எடுத்து பாகு காய்ச்சி, ஜூஸ் விட்டுக் கிளறி 5 நிமிடம் கொதித்தபின் பாட்டிலில் பதப்படுத்தலாம். தேவைப்படும் போது 2 தேக்கரண்டியுடன் 1 டம்ளர் நீர் கலந்து பயன்படுத்தலாம்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...