Apr 19, 2013

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய 30 வழிகள்

nurseநீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்தி விட முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் நம்மால் இயலும்.
உடல் எடை பராமரிப்பு
கட்டுக்கோப்பான உடல் எடை, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது மட்டுமல்லாமல், உடலின் ஒட்டு மொத்த நலனையும் பராமரிக்கிறது.
உடற்பயிற்சி
முறையான உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி செய்வதால் ஜீவத்துவ பரிணாமம் மேம்படுகிறது என்றும் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது என்றும் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
டிரான்ஸ் கொழுப்பு தவிர்க்க
டிரான்ஸ் கொழுப்பு உடலின் புரதம் உறிஞ்சும் தன்மையை பாதிப்பதால், இன்சுலின் சுரப்பை நிறுத்தி, இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. ஆகவே டிரான்ஸ் கொழுப்பு அடங்கிய பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து

லண்டனில் பிக்பென் கடிகாரத்தின் மணியோசை நிறுத்தி வைக்கப்பட்டு இரும்புப் பெண்மணிக்கு இறுதி மரியாதை! லண்டனில் பிக்பென் கடிகாரத்தின் மணியோசை நிறுத்தி வைக்கப்பட்டு இரும்புப் பெண்மணிக்கு இறுதி மரியாதை!

  
News Service இங்கிலாந்து முன்னாள் பிரதமரும், இரும்பு பெண்மணி என்று பாராட்டப்பட்டவருமான மார்கரெட் தாட்சரின் உடல் நேற்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் மார்கரெட் தாட்சர் (89). தன்னுடைய உறுதியான நடவடிக்கைகள் மூலம் அவர் இரும்பு பெண்மணி என்று போற்றப்பட்டார். அவர் பதவி விலகிய பின்னர் கடந்த 23 ஆண்டுகளாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 8ம் தேதி அவர் இறந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் தேவாலய கல்லறை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
  
கல்லறை வளாகத்தில், 700 வீரர்கள் அணிவகுத்து நின்று அவரது உடலுக்கு மரியாதை செய்தனர். இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், ராணி இரண்டாம் எலிசபெத், அவரது கணவர் இளவரசர் பிலிப், 11 நாட்டு பிரதமர்கள், அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் ஹென்ரி கிஸ்சிங்கர், ஜார்ஜ் ஸ்கல்ட்ஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். லண்டன் பிஷப் ரிச்சர்டு சார்ட்ரஸ் இறுதிச்சடங்குகளை செய்து வைத்தார்.
தாட்சருக்கு மரியாதை செய்யும் விதமாக நேற்று இங்கிலாந்து முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கிவிடப்பட்டிருந்தன. மேலும், உடல் அடக்கம் நடந்தபோது, பிக்பென் கடிகாரத்தின் மணியோசை நிறுத்திவைக்கப்பட்டது. முன்னதாக, தாட்சரின் எதிர்ப்பாளர்கள், அவரது சவப்பெட்டி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட பாதையில் திரண்டு எதிர்ப்பு கோஷங்கள் மற்றும் கைகளை தட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பூமியைப் போல மனிதன் வாழ்வதற்கேற்ற இரு கிரகங்களை கண்டுபிடித்தது நாசா!


News Service பூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2 புதிய கோள்களை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த இரண்டு கோள்களும் பார்ப்பதற்கு பூமியைப் போலவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு அருகில் உள்ள 5 கோள்களில் பூமியைப் போலவே இருக்கும் 2 கோள்களில் அதிக வெப்பமோ, அதிக குளிரோ இல்லாமல் இருப்பதாகவும், நீர் ஆதாரம் போதிய அளவு இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது பூமியை விட சுற்றளவில் பெரியதாகும். இருப்பினும் இந்த கோள்களில் நிலப்பரப்பு பாறை அமைப்பை கொண்டதா அல்லது நீர் அமைப்பை கொண்டதா என்பது குறித்து விஞ்ஞானிகள் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் இந்த கோள்கள் மனிதன் வாழ ஏற்ற சூழலை கொண்டதாக இருக்கும் என மட்டும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
  
கெப்லர் 62 ( சூரியனை சுற்றி வரும் நட்சத்திரம் போன்ற கோள்கள்) க்கு அருகே சிறிய புள்ளி போன்ற ஒரு அமைப்பு காணப்படுவதை நாசா விஞ்ஞானிகள் கடந்த ஓராண்டுக்கு முன் கண்டறிந்தனர். அந்த புள்ளி போன்ற அமைப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய 2 கோள்களின் தன்மை கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த புள்ளி போன்ற நட்சத்திரம் போன்ற அமைப்பை சுற்றி 5 கோள்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு கெப்லர் 22பி சுற்றி உள்ள 600 ஒலி ஆண்டு தொலைவில் உள்ள சில கோள்கள் குறித்த ஆய்வை நாசா துவக்கியது. அப்போது பூமியை விட 2.4 மடங்கு பெரிய கோள்கள் கண்டறியப்பட்டது.

அதிகபட்ச பாதுகாப்புடன் இணையத்தை பயன்படுத்த உதவும் பயர்பாக்ஸ்



http://tamilmedia24.com/images/technology/medium/1366108785tech3.jpg
இணைய உலாவிகள் (பிரவுசர்) வழியே இணையத்தை பயன்படுத்துகையில் நாம் செல்லும் தடங்கள் அனைத்தும் பதியப்படுகின்றன. அவை நம் கணனியில், நமக்கு இணைய சேவை வழங்கும் நிறுவன சர்வர்களில் இருப்பதால் மற்றவர்களும் அதனைக் காணும் வாய்ப்பு உள்ளது.
இதனைத் தடுத்து நம் இணையத் தேடல்களை நாம் மட்டுமே கொள்ளும் வகையில் அந்தரங்கமாக இருக்கவே பல வழிகளைப் உலாவிகள் தருகின்றன. பிரைவேட் பிரவுசிங், இன் காக்னிடோ, டோன்ட் ட்ரேக் மி என இந்த வழிகள் அழைக்கப்படுகின்றன.

இருந்தாலும் நமக்கு நம் வழிகளை யாரும் அறிந்து கொள்ளாமல் இருக்க இன்னும் சில பாதுகாப்பு வழிகளை அமைக்கலாமே என்று தோன்றும். அந்த வகையில், பயர்பாக்ஸ் உலாவி தரும் வழிகளை இங்கு காணலாம்.
பயர்பாக்ஸ் உலாவியில் கூடுதல் பாதுகாப்பு வழிகள் இருந்தாலும் அவை தானாக அமையாமல், நாம் தேடி அமைக்கும் வகையில் உள்ளன. பயர்பாக்ஸ் உலாவியிலும், நாம் தரும் தகவல்கள், மொஸில்லா மற்றும் கூகுள் நிறுவன உலாவிகளுக்குச் செல்லும்

VLC மீடியா பிளேயரின் புதிய பதிப்பு வெளியானது



http://tamilmedia24.com/images/technology/medium/1366365320tech3.jpgஅனேக வகையான வீடியோ மற்றும் ஆடியோ கோப்புக்களை இயக்கக்கூடிய வசதியைத் தரும் VLC மீடியா பிளேயரின் புத்தம் புதிய பதிப்பான VLC 2.0.6 Twoflower வெளியாகியுள்ளது.
விண்டோஸ் மற்றும் அப்பிளின் Mac இயங்குதளங்களிற்காக வெளியிடப்பட்ட இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் Matroska v4 கோப்புக்களுக்கு ஒத்திசைதல், D-Bus மற்றும் MPRIS2 இடைமுகங்கள் உள்ளடங்கலாக மேலும் சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நமது கணினியில் RAM இல்லாமலே வேகத்தை அதிகரிப்பது எப்படி?



http://tamilmedia24.com/images/technology/medium/1366282761tech3.jpgகணிணியின் முதன்மை நினைவகமே RAM என்றழைக்கப்படும். இதன் விரிவாக்கம் Random Access Memoryஎன்பது. இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். Virtual memory தான் நம்முடைய கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி ஆகும்.
பொதுவாக இதன் திறன் அல்லது கொள்ளவு 512 MB, 1GB என இப்போதுள்ள கணினிகளில் பெரும்பாலும் 2GB, 8 GB என்ற வகையில் இருக்கிறது.
இப்போது இன்னும் மேம்படுத்தப்பட்ட RAM களும், சிறப்பு கணிகளுக்கான அதிகபட்ச கொள்ளவு திறன்கொண்ட Ram-ம் வந்துவிட்டது.
Ram -ன் பயன்பாட்டைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். RAM எதற்கு என்றால், நாம் ஒவ்வொரு முறையும் கணினியில் Hard Disc சென்று தகவலைப்பெற நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்கவும், விரைவாக கணினியில் தகவலைப்பெறவுமே இந்த RAM -ஐ கணினியில் இணைக்கிறோம். RAM ஆனது Hard disc லிருந்து குறிப்பிட்ட அளவு தகவல்களை பெற்று தன்னுள் இருத்தி

ஜப்பான்-ரஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான்-ரஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ, ஏப். 19-

ஜப்பானில் அடிக்கடி லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியான நெமுரோ பகுதியிலும், அதனை யொட்டியுள்ள ரஷியாவின் கிழக்கு-வட கிழக்குப் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பசிபிக் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு தாக்கியது. இது தலைநகர் டோக்கியோவில் இருந்து 1500 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. ஆனால் சேத விவரங்கள் மற்றும் சுனாமி எச்சரிக்கை பற்றி தகவல் வெளியாக வில்லை.

நிலநடுக்கம் நள்ளிரவுக்குப் பின் அதிகாலையில் ஏற்பட்டது. அப்போது மக்கள் வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்தனர். வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்தபடி பீதியில் வெளியே ஓடி வந்தனர்

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் அச்சம்



ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் அச்சம்

டெக்ரான், ஏப்.19-

ஈரானில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கி 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஈரானில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள வடமேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் உருவானது. இது 5.2. ரிக்டர் அளவில் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அப்பகுதியில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர் ஆனால், இந்த தடவை நடந்த நிலநடுக்கம் குறித்த சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

பூமிக்கு அடியில் 2.கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக டெக்ரான் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இதே பகுதியில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் உருவானதால் மக்கள் அச்சத்துடன் உள்ளன.

ஈரானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்: பீதியில் மக்கள்



ஈரானில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதினால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஈரானில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.
அதை தொடர்ந்து அப்பகுதியில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் இந்த முறை நடந்த நிலநடுக்கம் குறித்த சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
பூமிக்கு அடியில் 2.கி.மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக டெக்ரான் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இதே பகுதியில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் உருவானதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...