Apr 26, 2012

பழம்பாசி

மருத்துவக் குணங்கள்:

    பழம்பாசி ஒருசிறிய செடியாகும். இதன் இலைகள் இதய வடிவமாக
    பச்சையாக இருக்கும்.  இதன் பூக்கள்  கரு மஞ்சளாகவும் 5 இதழ்களைக் கொண்டதாக  இருக்கும். இதன் மேல் பாகத்தில் மொசு மொசுப்பான  முடிகள் இருக்கும்.
    இது 50-200  செண்டி மீட்டர் உயரம் வளரக்கூடியது.  இதன்  தண்டு பசுமை கலந்த மஞ்சள்  நிறத்தில் இருக்கும். இதன் தாயகம் வட கிழக்கு பிரேசில், இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமரிக்கா, அவாய்தீவுகள், புது கினியா, பிரான்ஸ் மற்றும் இலங்கைக்குப் பரவிற்று.
    இது எல்லா வகை நிலங்களிலும் வளரக்கூடியது. தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும்,  சாலையோரங்களிலும் தானே வளரக்கூடியது.
    இதை நிலத்துத்தி என்றும் சொல்வார்கள்.

நீர்முள்ளி

மருத்துவக் குணங்கள்:

    நீர்முள்ளி என்ற பெயருக்கேற்ப இது நீர் நிலைகளில் காணப்படும் மூலிகையாகும். இதில் முட்கள் இருக்கும். ஊதா நிறத்தில் பூக்களை கொண்டிருக்கும்.
    இதனை நிதகம், இக்குரம், காகன்டம், முண்டகம், என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
    நம்மில் பலருக்கு சிறுநீரக கல் அடைப்பு நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
    இவற்றை எடுத்து 2 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து எட்டில் ஒரு பங்காக நன்கு வற்ற காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என இரு வேளையும் அருந்தி வந்தால் சிறு நீரக கல் கரைந்து சிறு நீருடன் வெளியேறும்.
    நீர் முள்ளி சமூலத்தை கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். மேலும் தாது விருத்தி அடையும். மல சிக்கலை போக்கும்.
    நீர்முள்ளி விதை ஆண்மைக்குறைவை போக்குகிறது. மேலும் மூல நோய்க்கு கைகண்ட மருந்தாகும்.

நிலக்கடலைப்பால்








தேவையான பொருட்கள்:

    நிலக்கடலை-1கப்
    முந்திரி-5
    ஏலக்காய்-சிறிதளவு

செய்முறை:

    நிலக்கடலைப் பருப்பை ஒரு நாள் தண்ணீரில் ஊற வைக்கவும்,
    பின் துணியில் சுற்றி வைத்தால் முளை விட்டிருக்கும்.
    இத்துடன் ஊறிய முந்திரிப் பருப்பை சேர்க்கவும்.
    பின்பு   இவைகளுடன்  சிறிதளவு ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில்  அரைக்க வேண்டும்.
    இப்பொழுது சுவையான நிலக்கடலைப்பால் தயார். இதை உணவாகப் பருகலாம்.

மருத்துவக் குணங்கள்:

    மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு மற்றும் பற்கள், எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.
    எல்லாவிதமான ரத்தப்போக்கை

முளைக்கீரை


மருத்துவக் குணங்கள்:

    முளைக்கீரை சாதாரணமாக இந்தியாவில் எங்கும் பயிரிடப்படும் ஒரு சிறந்த கீரையாகும். இந்தியாவிலும் இலங்கையிலும் இக்கீரை இதன் சுவைக்காகவும், மருத்துவச் சிறப்புக்காகவும் பயிரிடப்படுகிறது. மிதமண்டல மற்றும் வெப்ப மண்டல நாடுகளில் இக்கீரை நன்றாக வளர்கிறது. உழுது பயிரிடப்பட்ட நிலங்களிலும், தாரிசு நிலங்களிலும் இக்கீரை சிறப்பாக வளரும் ஆற்றல் பெற்றது.
    முளைக்கீரையும் தண்டுக்கீரையும் ஒன்றுதான் எனக் குறிப்பிடுகிறார்கள். இளம் நாற்றுக்களை முளைக்கீரை எனவும் வளர்ந்தனவற்றைத் தண்டுக்கீரை எனவும் குறிப்பிடப்படுகிறது.
    முளைக்கீரை ஓர் குறுகிய காலப்பயிர். 45 நாட்கள் வரை வளரக் கூடிய கீரை. அதற்கு மேல் விட்டால்

சிறுகீரை

சிறுகீரைச்சாறால் கண்களைப் பற்றி கவலைப் படாமல் வாழலாம்.
சிறுகீரைக்குச் சில்லி, சாகினி, மோகநாதம் என்னும் பெயர்களும் உண்டு. சாதாரணமாக இந்தியாவெங்கும் தோட்டங்களிலோ, வீட்டுத் தோட்டங்களிலோ பயிர் செய்யப்படும் கீரை வகைகளில் இக்கீரையும் ஒன்றாகும். இக்கீரையானது வட இந்திய மலைப் பகுதிகளில் ஏராளமாக விளையக்கூடியது.
இந்தக் கீரையானது முளைக்கீரை, தண்டுக் கீரை ஆகிய கீரைகளின் இனத்தைச் சார்ந்த சிறிய கீரை வகையாகும். சுமார் இருபது செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது செங்குத்தாக வளரும். நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இச்செடி மிக மெல்லிய

சுண்ணாம்பு

மருத்துவக் குணங்கள்:

    சுண்ணாம்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல் சுண்ணாம்பு. மற்றொன்று கிளிஞ்சல் சுண்ணாம்பு. இவை இரண்டும் பயனுள்ளதே.
    விஷ ஜந்துக்கள் நம்மைக் கடித்து விட்டால் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.
    இரவில் படுக்கும் முன் தேனும், சுண்ணாம்பும் சம அளவு எடுத்து கலக்கவும். சூடாகும் இந்தப் பசையை தொண்டையில் பூசினால் நன்கு பிடித்துக் கொள்ளும். காலையில் தொண்டை வலி குறைந்துவிடும்.
    மஞ்சள் காமாலைக்கு தயிருடன் சிறிதளவு சுண்ணாம்பைச் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம். கட்டிகள் பழுத்து உடைய சுண்ணாம்பு, மாவிலங்கம் பட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்துப் போட்டால் கட்டி பழுத்து உடைந்து விடும்.

பேரிக்காய்

மருத்துவக் குணங்கள்:

    பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சார்ந்தது. எனினும் ஆப்பிளில் அறவே இல்லாத விட்டமின் ஏ இப்பழத்தில் உள்ளது. ஆப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் ஆப்பிளைவிட பல மருத்துவக் குணங்கள் உடையது. பேரிக்காய் கிடைக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கிடைக்கும்.
    எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...