Nov 17, 2012

சீரற்ற இதயத் துடிப்பு 'அரித்மியா' நோய்க்கான அறிகுறி..

News Service மனிதர்களுக்கு இதயத்துடிப்பு சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 113 முறை ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். இதயத்துடிப்பு குறைந்தாலோ, அது அதிகமானாலோ ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள். இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhythmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய்.
  
மாரடைப்பு மட்டுமே இதயநோய் இல்லை, மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப்பாகத் துடித்துக்கொண்டு இருக்கும் இதயத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை நிறுத்தி

பூமியை விட 7 மடங்கு பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு


விண்வெளியில் எச்.டி. 40307 என்ற நட்சத்திரத்தை சுற்றி ஏற்கனவே 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அவை பூமியை போன்று மனிதர்கள் வாழ தகுதியுடையவை என அறிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது அங்கு மேலும் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இது பூமியை விட 7 மடங்கு பெரியது. சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவில்தான் இந்த புதிய கிரகமும் எச்.டி. 40307 நட்சத்திரத்தில் இருந்து உள்ளது.
பூமியில் உள்ளது போன்ற தட்பவெப்பநிலை இங்கு நிலவுகிறது. திரவ நிலையிலான தண்ணீரும், நிலையான சுற்றுச்சூழலும் உள்ளது. இதனால் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என ஹெட்பேர்க்குஷயர் பல்கலைக்கழக விஞ்ஞானி மிக்கோ துயோன தெரிவித்துள்ளார்.
மேலும், எச்.டி. 40307 நட்சத்திரத்தை சுற்றி மேலும் 2 புதிய கிரகங்கள் உள்ளன. அது குறித்த ஆய்வு நடந்து வருகிறது.

விண்வெளியில் புதிய பால்வெளி மண்டலம் கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தில் மிகத் தொலைவில் உள்ள பால்வெளி மண்டலத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு MACS0647-JD என்று பெயரிட்டுள்ளனர்.
நமது சூரியக் குடும்பத்தின் பால்வெளி மண்டலத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் இருக்கின்றன. பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியிலிருந்து 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியன் அமைந்துள்ளது.

இதைப் போன்று பிரபஞ்சத்தில் சிறியதும், பெரியதுமாக எண்ணற்ற பால்வெளி மண்டலங்கள் காணப்படுகின்றன. இந்த மண்டலங்களை வான்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள்

செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு


செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரியக் குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தை விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர்.

அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடந்து வருகின்றது.
இந்நிலையில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தண்ணீர் 50 முதல் 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்கிப்பிங்கை ஸ்கிப் பண்ணாதீங்க!

''ஸ்கிப்பிங்கா? அட அதெல்லாம் சின்னப் பசங்க சமாச்சாரம்''னு நெனைச்சுப் பக்கத்தைப் புரட்டாதீங்க... சும்மா ஜாலியா 10 நிமிஷம் ஸ்கிப்பிங் செய்தாலே 100 கலோரிகள் வரை எரிக்க முடியும். கயிறாட்டம் எனத் தமிழில் சொல்லப்படும், செலவே இல்லாத இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை முறையாக எப்படிச் செய்வது? விரிவாகச் சொல்கிறார் ஃபிட்னஸ் பயிற்சியாளர் மகேந்திரன்.
''நமக்கு ஏற்ற ஸ்கிப்பிங் கயிறை எப்படித் தேர்ந்தெடுப்பது?''

''ஒரு ஸ்கிப்பிங் கயிறை எடுத்து அதைத் தரையில் நீள வாக்கில் கிடத்தி, பாதி அளவு நீளம் இருக்கும் இடத்தில் கயிற்றின் மீது நின்றுகொண்டு, கயிற்றின் இருமுனைகளையும் இரு கரங்களாலும் மேல்நோக்கி உயர்த்த வேண்டும்.

பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்---காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,


.  பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். 

•  பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். 

• பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். 

• கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த

பெண்களை அதிகம் பாதிக்கும் கணுக்கால் வலி


தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும்.

உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும். பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள்கடந்த மாதவிலக்கு, ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வாயு நீரானது வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற்படுத்தும்.

இப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்காலில் தங்கும் நீரானது உப்புப் படிவமாக மாறி கட்டிபோல் உருவாகின்றது. இதை சிலர் எலும்பு வளர்ந்திருப்பதாகக் கூறுவார்கள். உப்பும் சுண்ணாம்புச் சத்தும்

பலன்களை அள்ளித் தரும் எலுமிச்சம்பழம்!


மனிதன் ஆரோக்கியமாக நோயின்றி நீண்ட நாள் வாழ இயற்கை நமக்கு ஏராளமான செல்வங்களைத் தந்திருக்கிறது. அதிலும் எல்லாப் பருவங்களிலும் கிடைக்கக்கூடிய நிறைய பலன்களைத் தரக்கூடிய எலுமிச்சம்பழம் மிகச் சிறந்தது. உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளாக எலுமிச்சம் பழத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
உடலுக்குத் தேவையான சக்தியை இதன் மூலம் எளிதில் பெறலாம். இதில் 17.7 கலோரி அடங்கி உள்ளது. உடல் சூட்டைத் தணிக்கவும், பித்தக் கிறுகிறுப்பைப் போக்கவும் இந்தப் பழரசம் அருந்திய உடனேயே உடலில் கலந்து, புதுத் தெம்பை ஏற்படுத்துகிறது. தாது

தொப்பை குறைய...அன்னாசி பழம்.


இன்றைய காலகட்டத்தில் தொப்பை ஒரு பிரச்னையாக இருக்கிறது. அதை கரைக்கும் சக்தி ஒரு பழத்திற்கு உண்டு. அது என்ன பழம் தெரியுமா?
அந்த பழம் அன்னாசி பழம். ஓர் அன்னாசி பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து, அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இதை முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசி பழத்தில் கொழுப்பு குறைவு; நார்ச்சத்து அதிகம்; அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால், ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவற்றை நீக்குகிறது.

ஹமாஸ் தலைமையகம் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் : கட்டிடங்கள் தரைமட்டம்: 8 பேர் பலி



காசா: இஸ்ரேல் நேற்று நடத்திய வான் வழி தாக்குதலில் பாலஸ்தீனத்தில் காசா நகரில் ஹமாஸ் அரசு தலைமையகம் முழுமையாக சேதமடைந்தது. 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் இஸ்ரேல் 180 முறை வான் வழி தாக்குதல்களை நடத்தியது. இதுவரை காசா பகுதியிலிருந்து தீவிரவாதிகள் 580 முறை ராக்கெட்களை ஏவி தாக்குதல்களை நடத்தினர். இவற்றில் 367 ராக்கெட்டுகள் தெற்கு இஸ்ரேலை தாக்கின. 222 ராக்கெட்டுகள் வானிலேயே

ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு



டோக்கியோ,நவ.18 -  ஜப்பான் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையை கலைத்தார்  அந்நாட்டு பிரதமர் யோஷிஹிகோநோடா. அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து,இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரவைக்  கூட்டம் நடைபெற்றதை முன்னிட்டு,நோடா பிரதமர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது பிரதிநிதிகள் அவை கலைக்கப்பட்டுள்ளது குறித்து அவர் கருத்து தெரிவித்தார். ஆட்சி குறித்து மக்களின் கருத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.
முன்னதாக பிரதிநிதிகள் அவையைக் கலைப்பதற்கானஅறிக்கையை பிரதமர்

காசாவில் மேலும் நூற்றுக்கணக்கான இலக்குகளைத் தாக்குவோம்: இஸ்ரேல்

நான்காவது நாளாக வான் தாக்குதல்கள் நீடிக்கின்றன

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 நவம்பர், 2012 - 11:48 ஜிஎம்டி

நான்காவது நாளாக வான் தாக்குதல்கள் நீடிக்கின்றன
மத்தியகிழக்கின் காசாவில் ஹமாஸையும் அதன் ஆயுததாரிகளையும் இலக்குவைத்து நான்கு நாட்களாக தொடர்ந்து குண்டுத் தாக்குதல்களை நடத்திவரும் இஸ்ரேலிய படைகள் காசாவுக்குள் தாங்கள் மேலும் நூற்றுக்கணக்கான இலக்குகளைத் தாக்கவேண்டியிருப்பதாகக்

இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: பாலஸ்தீனியர்கள் 10 பேர் பலி

இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: பாலஸ்தீனியர்கள் 10 பேர் பலிகாசா, நவ. 17-

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே 100 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியை ஆளுவதில் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக அமைதியாக இருந்த இப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கி இப்போது ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். இன்று பாலஸ்தீன ஹமாஸ் அரசுத் தலைமையகம் மீது இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பாலஸ்தீனியர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

நேற்று இரவு ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் முக்கியப் பகுதிகள் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்த பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. கடந்த புதன் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் சினிமாவை போன்ற இந்த விமானத் தாக்குதலுக்கு இதுவரை 40 பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீன மக்கள் தெரிவித்து உள்ளனர்.

மீண்டும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க எகிப்து மற்றும் இத்தாலி முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

கொலஸ்டிரால் பிரச்சனைக்கு இயற்கை மருந்து சப்போட்டா பழம்

News Serviceஉடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும் சப்போட்டா பழம். சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.
   100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால்

உடல் சூட்டை தணிக்கும் விளக்கெண்ணெய் பல்வேறு நோய்களையும் தீர்க்கும் சக்தி வாய்ந்தது


News Service கிராமப்புறங்களில் பரவலாகப் பயிரிடப்படும் தாவரம் ஆமணக்கு. கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும். குத்துச் செடியாக வளரும் இதன் இலைகள் முரடாகவும் சற்று அகலமாகவும் இருக்கும். இலைகளின் விளிம்பு சற்றுக் கூர்மையாக இருக்கும். வளமற்ற மண்ணிலும் வளர்ந்து பலன் கொடுக்கும் ஆமணக்கின் தண்டுப்பகுதி கூரை வேயவும், எரி பொருளாகவும் பயன்படுகின்றது.   
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
விதைகளில் ஆவியாகாத எண்ணெய் உள்ளது. இதில் கிளைசைரைடுகள், புரதம் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன. ஆமணக்கு இலைகள், வேர்ப்பட்டை மற்றும் விதைகள் மருத்துவ பயன் உடையவை.
ஆமணக்கு வேலி
மிளகாய்ப் பயிரின் பாத்திகளிலும் ஆமணக்குச் செடியை வளர்ப்பர். ஆமணக்குச் செடியின் இலைகள் தரும் நிழல், கடும் வெயிலிலிருந்து மிளகாய்ச் செடியைப் பாதுகாக்கும் என்பதன் அடிப்படையில் கத்தரிக்காய்,

பூமியைப் போல் தண்ணீர் உடைய, உயிரினங்கள் வசிக்கத் தக்க Super earth எனும் புதிய கிரகம் வானியலாளர்களால் கண்டுபிடிப்பு



News Service பூமியில் இருந்து 42 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் 'HD 40307' எனப்பெயரிடப்பட்ட நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வரும் பூமியைப் போல் தண்ணீர் உடையதும் உயிரினங்கள் வசிக்கத் தக்கதும் ஆன Super earth எனப்படும் புதிய கிரகம் ஒன்றை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர். இந்த Super earth உடன் சேர்த்து மேலும் இரு தண்ணீர் உடைய கிரகங்களும் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் சக்தி வாய்ந்தது அத்திப்பழம்



News Service அத்திப்பழம் ஆரோக்கியமான அழகை தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது.
  
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன. அத்திப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதற்குக் காரணம் அதில் உள்ள பொட்டாசிய சத்துதான்.
பரபரப்பான இன்றைய சூழ்நிலையில் சமைத்து உண்பதை விட ரெடி மேட்

தலைச்சுற்றலில் இருந்து நிவாரணம் பெற சீரகம் சிறந்த மருந்து

தலைச்சுற்றலில் இருந்து நிவாரணம் பெற சீரகம் சிறந்த மருந்து

News Service சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.
  
மந்தத்தைப் போக்கும். நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல

குளிர் காலங்களில் ஏற்படும் உதடு வெடிப்பை நீக்க சில வழிகள்..

குளிர் காலங்களில் ஏற்படும் உதடு வெடிப்பை நீக்க சில வழிகள்..

News Service பொதுவாக வறட்சி, வெடிப்பு போன்றவை உதட்டில் வந்தால், மிகவும் வலியுடன், முக அழகையே அது கெடுத்துவிடும். இத்தகைய வெடிப்பு வருவதற்கு பருவநிலை மாறுபாடான கோடை, குளிர், காற்று போன்றவை காரணங்களாகும்.
  
அதிலும் வெடிப்புகள் வந்தால், இரத்தம் வடிதல், தோல் உரிதல், அதிகமாக சிவப்பு நிறத்துடன் காணப்படுவது, தொட்டால் வலிப்பது என்று இருக்கும். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் உதட்டை சரியாக பராமரிக்க இயற்கை முறையில் ஒரு சில ஈஸியான வீட்டு மருந்துகள் இருக்கின்றன. அவை..
* எப்போதும் போதிய தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, உதடு நன்கு ஈரப்பசையுடன் இருக்கும்.
* வெண்ணெய் அல்லது நெய்யை உதட்டில் தடவினால், வறட்சி ஏற்படாமல்

உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் சில..

உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் சில..

News Service நிறைய மக்கள் அதிகம் நடப்பதற்கு உடல் எடையை குறைப்பதற்கு இல்லாமல், உடல் எடையை கட்டுப்பட்டுவதற்குத் தான். ஆகவே உடல் எடை அதிகரித்து அசிங்கமான தோற்றத்தைப் பெறுவதற்கு முன்பு, நடைப்பயிற்சியை ஆரம்பியுங்கள். உடல் எடை எளிதில் குறைய வேண்டுமென்றால், தினமும் நடந்தால் மட்டும் முடியாது என்பதற்காக, சிலர் அவற்றை ஒரு பெரிய விஷயமாக எண்ணாமல் நடைப்பயிற்சியை தவிர்த்து, ரன்னிங், நீச்சல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
  
ஆனால் அந்த பயிற்சிகளை அனைவருமே செய்ய முடியாது. ஆகவே மக்களுள் பலர் நடைப்பயிற்சியைத் தான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் அந்த நடைப்பயிற்சியை ஒரு சீரியஸ் இல்லாமல் சாதாரணமாக செய்கின்றனர். எனவே அவர்களால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. ஏனெனில் சாதாரணமாக செய்தால், எந்த பயனும் இல்லை. ஆனால் அதையே நன்கு சுறுசுறுப்போடு, தினமும் அரை மணிநேரம் செய்தால் உடலில் இருந்து 150 கலோரிகள் கரையும். அதிலும்

முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்தும் கருவளையத்தை நீக்க இலகு வழி

முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்தும் கருவளையத்தை நீக்க இலகு வழி

News Service இன்றைய பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். இந்த கருவளையம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் வருவதில்லை, அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. அதிலும் தற்போது நிறைய க்ரீம்கள் கடைகளில் விற்கப்படுகின்றன.
  
மேலும் அவற்றை பயன்படுத்துவதால், சில சமயங்களில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆகவே அத்தகைய பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க, வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே சிறந்தது. இப்போது அந்த கருவளைத்தை போக்குவதற்கான இயற்கைப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!
* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில்

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சக்தி வாய்ந்தது மிளகு

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சக்தி வாய்ந்தது மிளகு

News Service சளியோ இருமலோ வீட்டில் மிளகு இருந்தால் போதும் நோயை போக்கிவிடலாம் என்பார்கள். பாட்டி வைத்தியத்தில் மிளகுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நறுமணப்பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம்வீட்டில் சமைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக்கொண்டால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.
  
இன்றைக்கு நாம் உண்ணும் உணவில் அதிக அளவில் ரசாயன உரங்கள் சேர்க்கப்படுகின்றன. நாகரீகம் என்ற பெயரில் நஞ்சை உண்கிறோம் என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிவார். அதைப்போல எவ்வளவுக்கு எவ்வளவு செயற்கை உணவுகளை உட்கொள்கிறோமோ அந்த அளவிற்கு

உடல் எடையை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்..

உடல் எடையை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்..

News Service இன்றைய மக்களுள் சிலர் எடை அதிகமாக உள்ளது என்பதற்காக அதை குறைக்க நிறைய முயற்சிகளை எடுக்கின்றனர். அதே சமயம், சிலர் எடை அதிகமாகவில்லை என்று அதற்காக பல முயற்சிகளை எடுக்கின்றனர். அவ்வாறு முயற்சி செய்யும் போது, எல்லா உணவுகளையுமே சாப்பிடக் கூடாது. உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் உணவுகளை சாப்பிட்டால் தான், உடல் எடை அதிகமாவது, குறைவது போன்றவை ஏற்படுவதோடு, உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் இருக்கும்.
  
இப்போது எந்த உணவுகளை எப்போது, எப்படி சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்பதைப் பார்ப்போமா!!!
வேர்க்கடலை வெண்ணெய்
வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன், தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள்

முழங்கால் கறுப்பை நீக்குவதற்கு சில நுட்பங்கள்..

முழங்கால் கறுப்பை நீக்குவதற்கு சில நுட்பங்கள்..
[Saturday, 2012-11-17
News Service உடலை எவ்வளவு தான் அழகாக வைத்திருந்தாலும், அவற்றின் அழகை முழங்கால் மற்றும் முழங்கை கெடுத்துவிடுகின்றன. ஏனெனில் மற்ற பகுதியை விட இந்த பகுதியானது கருப்பாக காணப்படும். மேலும் உடல் அழகாக காணப்பட வேண்டும் என்பதற்காக எத்தனை பராமரிப்புகளை மேற்கொண்டாலும், அதிலும் கால்களை கவனமாக பராமரித்தாலும் மென்மையாக, முடி இல்லாமல் அழகாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் முழங்கால் மட்டும் கருப்பாக இருந்தால், நாம் செய்யும் அனைத்தும் வீணாகிவிட்டது போல் இருக்கும். ஆகவே அத்தகைய அழகைக் கெடுக்கும் முழங்கால் மற்றும் முழங்கை கருப்பை எளிதில் நீக்க சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது.
  
இயற்கையான முறையில் முழங்கால் கருப்பை நீக்க சில டிப்ஸ்....

40 வயசுக்கு முன் சிகரெட் பழக்கத்தை கைவிட்டால் ஆயுளை அதிகரிக்கலாம்

40 வயசுக்கு முன் சிகரெட் பழக்கத்தை கைவிட்டால் ஆயுளை அதிகரிக்கலாம்
[Saturday, 2012-11-17
News Service புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாற்பது வயதிற்கு முன்பாக அதனை கைவிட்டு விட்டால் நீண்டநாள் வாழலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனை ஆதாரப்பூர்வமாக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் பெட்டோ தலைமையில் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த புகைப் பழக்கத்திற்கு

தியானம் செய்தால் மாரடைப்பு, பக்கவாதம் வராது - சமீபத்திய ஆய்வில் தகவல்


தியானம் செய்தால் மாரடைப்பு, பக்கவாதம் வராது - சமீபத்திய ஆய்வில் தகவல்
[Saturday, 2012-11-17
News Service தினசரி இரண்டுமுறை மந்திரம் ஜெபித்து மெடிடேசன் செய்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் தடுக்கப்படுகிறது என்ற ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மந்திரத்தை உச்சரித்தபடி தியானம், மெடிடேசன் செய்வது முனிவர்கள், சித்தர்களின் நடைமுறை. இந்தமுறைப்படி மெடிடேசன் செய்தால் இதயநோய், பக்கவாதம் ஏற்படாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
  
தினசரி இருவேளை இருபது நிமிடங்கள் வரை மெடிடேசன் செய்பவர்களுக்கு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...