Jun 22, 2012

வாஷிங் மெஷின்’ செயல்படும் விதம்!--உபயோகமான தகவல்கள்




இன்று நடுத்தர வர்க்க வீடுகளிலும் அதிகமாக இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது, `வாஷிங் மெஷின்’ எனப்படும் துணி துவைக்கும் எந்திரம். இது எவ்வாறு செயல்படுகிறது என்று தெரியுமா?
வாஷிங் மெஷினில் துவைக்க வேண்டிய துணி, பல துளைகள் கொண்ட இரும்பு உருளைக்குள் போடப்படும். இது சுமார் நாலே கால் கிலோ எடையைத் தாங்கக்கூடியது.
இந்த இரும்பு உருளைக்கு வெளியே மற்றொரு பாத்திரம் உருளையைத் தாங்கும். கதவை மூடிவிட்டு, எலக்ட்ரோ மெக்கானிக்கல் நேரங்காட்டியில் தேவையான நேரத்தை `செட்’ செய்து வைத்துவிட வேண்டும்.
இந்த எலக்ட்ரோ மெக்கானிக்கல் நேரங்காட்டி, பல்வேறு வேலைகளைச் செய்யும். அதாவது, துணியை நனைப்பது, நீரின் சூட்டை நிலைநிறுத்துவது, அலசப்பட வேண்டிய, பிழியப்பட வேண்டிய அளவு, துணியின் தரத்தைப்

அருகம்புல் கஷாயம்---சமையல் குறிப்புகள்



தேவையான பொருட்கள்...
 
அருகம்புல் - 1 கப்
மிளகு - 1 ஸ்பூன்
 மஞ்சள், இஞ்சி - சிறிதளவு
 
செய்முறை....
 
• அருகம்புல்லை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
 
• மேலே சொன்ன பொருட்களை எல்லாம் நன்கு இடித்து மண்சட்டியில் போட்டு அதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
 
• தண்ணீர் நன்கு வற்றி ஒரு பங்காக வற்ற வைத்து பருகவும். இந்த கஷாயத்தை சூடாகவும் பருகலாம், ஆற வைத்தும் பருகலாம்.
 
பலன்:

இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். நாம் அன்றாடம் உணவு உண்கிறோம். ஒருசில உணவுகளால் உடலுக்கு நல்லது மட்டுமின்றி சில கெடுதல்களும் நேரும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அருகம்புல் கஷாயம் பருகினால் அந்த கெடுதல்கள் உடலில் தங்காது. ரத்தம் சுத்தம் செய்யப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தோல் நோய்கள் வருவதையும் இந்த கஷாயம் தடுக்கும். 

கர்ப்பிணிகளுக்கு உதவும் குங்குமப்பூ



• 20 கிராம் குங்குமப்பூவைத் தண்ணீரில் அரைத்து, உருண்டை செய்து உள்ளுக்குள் கொடுக்க வயிற்றுக்குள் இறந்துபோன குழந்தை வெளிப்படும். மாதவிலக்கை தாராளமாகப் பிரியச் செய்ய உள் மற்றும் வெளிப்பூச்சு மருந்தாகப் குங்குமப்பூ பயன்படுகிறது.    
 
* குங்குமப் பூவானது கர்ப்ப சூடு எனும் உடல் சூட்டை சமப்படுத்தும் எனவே கர்ப்பிணிகள் 5 ஆம் மாதம் முதல் இரவில் நாள் தோறும் பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர, பிறக்கப்போகும் குழந்தை கர்ப்ப சூடும், நோயும் இன்றி அழகுடன் விளங்கும். பா‌லை‌க் கா‌ய்‌ச்சு‌ம்போதே ஒரு ‌சி‌ட்டிகை கு‌ங்கும‌ப் பூவை போ‌ட்டு ந‌ன்கு கா‌ய்‌ச்‌சி‌க் குடி‌‌ப்பது க‌ர்‌ப்‌பி‌ணிகளு‌க்கு ந‌ல்லது.
 
கர்ப்பிணி பெண்கள் சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும்.

இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே மாத்திரைக்கு பதில் அதற்கு ஈடான காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம். 

பிரஸ் அப்ஸ் பயிற்சி



நாற்காலியின் இரு கைப்பிடிகளையும். படத்தில் காட்டியவாறு பிடித்துக் கொண்டு மாறி மாறி அமர்ந்து எழ வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் நாற்காலியில் அமர்ந்து விடக்கூடாது.
 
இந்தப்பயிற்சியால் கைகளின் பின் பக்கத்தசைப் பகுதிகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்தப்பயிற்சியைச் செய்ய வயது வரம்பு எதுவும் இல்லை.

மற்ற பயிற்சிகளைப்போல அல்லாமல் ஒரு முறைக்கு 15

இடுப்பு வலியை உண்டு பண்ணும் நோய்கள்



இடுப்பைக் கழட்டி வச்சுடணும் போல இருக்கு'' `இரண்டு பக்கமும் இடுப்புல தாங்க முடியாத வலியா இருக்கு. உட்காரவும் முடியல, நிக்கவும் முடியல. என்ன பண்றதுன்னே தெரியலே'' ``குறுக்கு வலி கொல்லுது''- இப்படி இடுப்பு வலி தாங்க முடியாமல் பலரின் வேதனை வார்த்தைகளில் ஒரு சில இவை...
 
இடுப்பு வலி தொண்ணூறு சதவீத மக்களை பாதிப்புக்குள்ளாக்கவே செய்கிறது. இதில் ஐம்பது சதவீத மக்களுக்கு ஒரு தடவைக்கு மேல், பல தடவை இடுப்பு வலி, வந்து வந்து போகிறது. ரோட்டில் நடந்து போகும் பத்துப் பேரில், எட்டுப் பேருக்கு இடுப்பு வலி இருக்கத்தான் செய்கிறது.
 
எல்லோரும் நன்றாக நடந்து போகிறார்கள் என்பதால், அவர்களுக்கெல்லாம் இடுப்பு வலி இல்லை என்று அர்த்தமில்லை. சுமார் ஐம்பது மில்லியன் டாலர்

ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு… சில செய்திகளும் காட்சிகளும்

ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு… சில செய்திகளும் காட்சிகளும்




இந்நாட்களில் அதிகமாக பேசப்படுவது ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு பற்றியே.

ஆகையால் அதை பற்றிய சிறு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.




ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து லாவா எனும் நெருப்புக் குழம்பை கக்கி வருகிறது. இந்த எரிமலையிலிருந்து பீச்சியடிக்கப்படும் சாம்பல் ஐரோப்பாவின் வான் மண்டலம் முழுவதும் பரவி உள்ளது.

வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி



http://jayabarathan.files.wordpress.com/2010/12/giovanni-cassini-1.jpg“காஸ்ஸினி அறிவு ஆர்வத்தில் இச்சை கொண்டவர்.  குறிப்பாகக் கவிதை, கணிதம், வானியலில் ஈடுபாடு மிக்கவர்.  அவர் வெறும் விஞ்ஞானக் கோட்பாட்டில் மட்டும் விரும்பம் உள்ளவர் அல்லர்.  தொலை நோக்கிகள் மூலம் உளவும் கூர்மையான விண்ணோக்காளர். மறுக்க முடியாத அவரது கண்டுபிடிப்புகள் மட்டுமே நியூட்டனுக்கு முன் தோன்றிய வானியல் விஞ்ஞானிகள் வரிசையில் அவருக்கு ஓர் உன்னத இடத்தை அளிக்கப் போதுமானவை.”
டேடன் (Taton)
“கடந்த நூற்றாண்டுகளில் மறைந்திருந்த மகத்தான சில வானியல் காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு எனது அளவு கடந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்”.

விக்கல்



யாரோ தம்மை நினைப்பதால் வருகிறது என்று நம் முன்னோர்கள் கூறுவர், இன்றளவும் அனைவரும் அதையே தான் நினைக்கிறார்கள்.

நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றானது மூச்சுப் பாதையின் மிகக் குறுகிய இடைவெளியில்செல்வதால் ஒருவித விநோத ஒலி உண்டாகும். அந்த ஒலி தான் விக்கல். இந்த விக்கல் வருவது இயல்பு.


ஒரு சிலருக்கு விக்கலானது அடிக்கடி வரும். இதற்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

 ஏனென்றால் சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், மூளைக் காய்ச்சல்,நீரிழிவு நோய், குடல் அடைப்பு போன்றவற்றின் அறிகுறியாகவும் விக்கல் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக காரம் உள்ள உணவுகள் சாப்பிடும் போது விக்கல் வரும். அளவுக்கு மீறி அல்லது அவசர அவசரமாக உணவு உட்கொண்டாலும் விக்கல் வரும். மேலும் தேவையான அளவிற்குத் தண்ணீர் குடிக்காத போதும் விக்கல் வருவதுண்டு.


விக்கல் தொடர்ந்து வரும் போது கண் வறண்டு போதல் மற்றும் மயக்கம் ஏற்படலாம்.


இப்படி பிரச்சனை உள்ளவர்கள் எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளாக சாப்பிட வேண்டும்.


காய்கறி, பழங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம். தினமும் 4 முதல் 8 லிட்டர் தண்ணீர் வரை அருந்தவும். வைட்டமின்கள் அதிகம் நிறைந்த உணவுகள், எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.


நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்கவும். வறட்சியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சூடான உணவுகள் தவிர்த்து எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளுக்கு முக்கியத்துவம் தரவும்.

விநோத நீலநிற நண்டு: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு (Pictures)







அமெரிக்காவில் அரிதான நீல நிற நண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந் நண்டானது ஆய்வுக்காக அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந் நண்டின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் மரபணுக் குறைபாடு மூலம் அந் நண்டு இவ் விநோத நிறத்தை பெற்றதாக அறியப்பட்டது.
மேற்கொண்டு நடைபெற்ற ஆய்வின் மூலம், விசேடவகை புரதம்,மற்றும் astaxanthin எனப்படும் சிவப்பு caratenoid மூலக்கூறு என்பவற்றின் சிக்கல் பிணைப்பு மூலம் நண்டு இவ் பிரத்தியோக நிறத்தை பெற்றதாக

ஹலோ அம்மா நான் விமானத்துக்குள்ள இருந்துதான் பேசுறன் –

இனி விமானத்தில் போவோருக்கு எந்த விதக் கவலையும் இல்லை. காரணம் தங்களின் உறவுகளோடு எப்போதும் தொலைபேசித் தொடர்பில் இருக்கலாம். ஆம், முதன் முறையாக இதனை Virgin Atlantic என்ற பிரித்தானிய விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வணிகப் பிரமுகர்கள், அரசியல் வாதிகள் போன்றோர் மிகவும் பயனடைவார்கள்.
உலகின் முதன் முறையாக A330 என்ற லண்டனிலிருந்து நியூயோர்க் செல்லும் விமானத்தில் இருந்து தொலைபேசியில் பேசலாம், குறுந் தகவல் அனுப்பலாம், ஈ. மெயில் அனுப்பலாம். போன்ற எல்லா விதமான சேவைகளையும் அனுபவிக்க முடியும். இந்த வருட இறுதிக்குள் 20 விமானங்களில் இத்தகைய சேவையைப் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சேவையைப் பெற்று ஒரு நிமிடத்துக்கு தொலைபேசியில் பேச ஒரு ஸ்டேர்லிங் பவுண்கள் செலவாகின்றது.இதே நேரம் ஒரு குறுந்தகவல் அனுப்ப 20 சதமும் செலவாகின்றது. 

மனிதனை கண்காணித்து நோய்களை கண்டறியும் சிமார்ட் போன்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...